Jump to content

யாழில் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!!


Recommended Posts

 
 

யாழில் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!!

 

யாழ் நகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டின் அலுமாரி ஒன்றிலிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, வாள்கள் இரண்டு, வோக்கி டோக்கி இரண்டு, மகஸின் ஆறு, பொஞ்ச் இரண்டு,பிஸ்டல் ஒன்று, 394 ரவைகள் போன்ற ஆயுதங்களே மீட்கப்பட்டன.

சந்தேகத்தின்பேரில் வீட்டில் வசித்த ஒருவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் உரிமையாளர் லண்டனில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

v-1.jpg

v1.jpg

http://newuthayan.com/story/56010.html

 

 

புளொட் அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள்மீட்பு : ஒருவர் கைது

( ரி.விரூஷன் )

 

யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் உள்ள புளொட் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

polet.jpg

குறித்த வீடானது முன்னர் புளொட் அமைப்பின் அலுவலகமாக செயற்பட்டு வந்த நிலையில் பின்னர் நீதிமன்றில் வீட்டின் உரிமையாளரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

25497515_1018083631676339_1819042011_n.j

இதனை தொடர்ந்து இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவுக்கமைய வீட்டினை மீட்பதற்காக பொலிஸார் சென்ற போதே வீட்டின் அலுமாரிகளில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

இதன்படி வீட்டில் இருந்து ரீ.56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படும் மகசீன் 6 உம், பிஸ்டல் 1, இராணுவம் பயன்படுத்தும் தண்ணீர் போத்தல் ஒன்று, வோக்கி டோக்கி ஒன்று, மற்றும் வாள் இரண்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

25519707_1018083618343007_1836454767_n.j

மேலும் குறித்த வீட்டில் இதுவரை காலமும் வசிந்து வந்த முன்னாள் புளொட் அமைப்பைச் சேர்ந்த 69 வயதான முதியவர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25519713_1018083338343035_1009438842_n.j

குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

25555700_1018089055009130_2016040394_n.j

25497439_1018089048342464_349364573_n.jp

http://www.virakesari.lk/article/28412

Link to comment
Share on other sites

புளொட்டின் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
 

image_ccc9d471bf.jpgபுளொட்டின் முன்னாள் உறுப்பினர்  ஒருவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து  துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள், ரவைகள் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவரது வீட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வசித்து வருவதாகவும், அவர் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளமையை அடுத்து   வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

 நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற பொலிஸார் சென்று, அங்குள்ள பொருள்களை அகற்றும் போது  அலுமாரி ஒன்றுக்குள் ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2 396 ரவைகள், கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

  அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டு, . அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் மேலும் கூறினர்.

image_9a6ff6842b.jpg

image_dce10da253.jpg

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/புளொட்டின்-முன்னாள்-உறுப்பினர்-வீட்டிலிருந்து-ஆயுதங்கள்-மீட்பு/71-209111

Link to comment
Share on other sites

மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது- சித்தார்தன்

 
 
 

மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது- சித்தார்தன்

எமது அமைப்பின் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என புளோட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நேற்று (செவ்வாக்கிழமை) கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற தர்மலிங்கம் சித்தார்தன் நிலைமைகளை ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.இந்த வீட்டை முன்பு அலுவலகமாகப் பாவித்தோம் கடந்த 2011 உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் குறித்த வீட்டில் இருந்தவர் எங்களிடம் இருந்து ஒதுங்கியிருந்திருக்கின்றார்இப்போது எடுக்கப்பட்ட ஆயுதங்கள் இங்கு எவ்வாறு வந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என குறிப்பிட்டுள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/மீட்கப்பட்ட-ஆயுதங்கள்-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் இயக்கம் ஆரம்பித்து...  40 வருடங்களில், 
இது வரை, ஒரு இராணுவத்தையும்....  சுட்டுக் கொன்றதில்லை.
மாறாக... இயக்கத்தில் சேர்ந்த, அப்பாவி இளைஞர்களையும், பொதுமக்களையும் தான், 
அந்த ஆயுதத்தால் சுட்டுக் கொன்றார்கள்.

சில வேளை....  மால தீவை,  பிடிக்கப் போகும் போது... கொண்டு போன ஆயுதமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல சிறியண்ண, இவர்கள் மாலைதீவு பிடிக்க போகும்போது. இவ்வாயுதங்கள் ( T-81,T82) பயன்பாட்டுக்கு வந்திட்டுதோ தெரியல்ல :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T-81
ஆமியின் கொள்சர் 

தாங்கள் கொடுத்ததை 
இப்போ எதோ பூமியில் இதுவரை 
இல்லாததை எடுக்கிற மாதிரி படம் போடுகிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.