Jump to content

தமி­ழீழம் உரு­வாக முன்னர் ஆட்சி மாற்றம் வேண்டும் : புலி­க­ளுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­துவம் இரா­ணு­வத்­திற்கு இல்லை என்­கிறார் விமல் வீர­வன்ச


Recommended Posts

தமி­ழீழம் உரு­வாக முன்னர் ஆட்சி மாற்றம் வேண்டும் : புலி­க­ளுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­துவம் இரா­ணு­வத்­திற்கு இல்லை என்­கிறார் விமல் வீர­வன்ச

Vimal55-66622b8acf5767f0fd994a5698088765f12a3fe1.jpg

 

(ஆர்.யசி)

விடு­தலைப் புலி­க­ளுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­துவம் இரா­ணு­வத்­திற்கு கொடுக்­கப்­ப­ட­வில்லை. இரா­ணு ­வத்தை தண்­டித்து புலி­களை நியா­யப்­ப­டுத்­தவே அர­சாங்­கமும் சர்­வ­தேச தரப்பும் முயற்­சித்து வரு­வ­தாக தேசிய சுதந்­திர முன்­ன­ ணியின் தலைவர் விமல் வீர­வன்ச எம்.பி. தெரி­வித்தார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூல­மாக தமி­ழீழம் உரு­வாகும். ஆகவே அதற்கு முன்னர் ஆட்­சி­யினை மாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.  

புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்­டினை பிள­வு­ப­டுத்தும் என்ற தொனிப்­பொ­ருளில் தேசிய சுதந்­திர முன்­னணி நாட­ளா­விய ரீதியில் நடத்­தி­வரும் மக்கள் கூட்­டத்தின் ஒன்று நேற்று பத்­த­ர­முல்லை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

 அவர் மேலும் கூறு­கையில்.

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததில் இருந்து நாட்டு மக்கள் மகிழ்ச்­சி­யாக உள்­ள­னரா இல்­லையா என்­பது தெரி­யாது, ஆனால் புலி­களும் புலம்­பெயர் அமைப்­பி­னரும் வடக்கின் புலி அர­சியல் வாதி­களும் மகிழ்ச்­சி­யாக உள்­ளனர். அவர்­களின் நோக்­கங்கள் நிறை­வேற்­றப்­படும் வகையில் இந்த அர­சாங்­கமும் பிரி­வி­னை­வாத கொள்­கை­களை கைவி­டப்­போ­வ­தில்லை. சர்­வ­தேச பிர­தி­நி­தி­களால், தமி­ழீழ விடு­தலைப் புலிகள் ஆகியோர் குறித்து இந்த அர­சாங்கம் அதிக கவனம் செலுத்தி வரு­கின்­றது . புலி­க­ளுக்கும் புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்கும் கொடுக்கும் முக்­கி­யத்­துவம் இன்று இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கொடுக்­கப்­ப­டு­வ­தில்லை.

 அண்­மையில் இலங்­கைக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த ஐக்­கிய நாடு­களின் அதி­கா­ரிகள், இலங்­கையில் இன்­னமும் சித்­தி­ர­வ­தைகள் தொடர்­வ­தாக கூறி­யுள்­ளனர். தமிழ் மக்கள் இன்றும் துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­வ­தாக தெரி­வித்து வரு­கின்­றனர். பொறுப்புக் கூறல் விட­யத்தில் அர­சாங்கம் முன்­வ­ர­வில்லை என கூறு­கின்­றனர், ஆனால் இவை எதையும் அர­சாங்கம் மறுப்­ப­தா­கவோ அல்­லது இலங்­கையில் நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவோ தெரி­விக்­க­வில்லை. மாறாக சர்­வ­தேசம் எதைக் கூறு­கின்­றதோ அதை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். கொமாண்டர் தஸ­நா­யக்­கவின் மகள் தனது தந்­தையின் மனித உரிமை மீறல் குறித்து அண்­மையில் இலங்­கைக்கு வருகை தந்த சர்­வ­தேச பிர­தி­நி­தி­க­ளிடம் முறை­யிடச் சென்­றுள்ளார். எனினும் அதனை ஏற்க தமக்கு அதி­கா­ர­மில்லை என ஐக்­கிய நாடுகள் அதி­கா­ரிகள் கூறி­யுள்­ளனர். ஆனால் புலிகள் குறித்து அவர்­களின் உற­வி­னர்கள் முன்­வைக்கும் கோரிக்­கை­களை உட­ன­டி­யாக பெற்­றுக்­கொண்டு அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க தயா­ராக உள்­ளனர். ஆகவே புலி­க­ளுக்கே இந்த அர­சாங்கம் முன்­னு­ரிமை கொடுத்து வரு­கின்­றது.

மறு­புறம் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக சகல முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். வடக்கு கிழக்கு இணைப்பு, அதி­காரப் பகிர்வு, புலி­க­ளையும் புலம்­பெயர் அமைப்­பு­க­ளையும் பலப்­ப­டுத்தும் அதி­கா­ரங்கள் என சகல முயற்­சி­களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைமை தொடருமாயின் விரைவில் தமிழீழம் உருவாவதையும் தடுக்க முடியாது. ஆகவே இவை இடம்பெற முன்னர் உடனடியாக ஆட்சி மாற்றம் ஒன்றை மக்கள் ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் இந்த நாடு மீண்டும் இரத்த ஆற்றால் நனைக்கப்படுவதை தடுக்கவும் முடியாது என அவர் குறிப்பிட்டார்.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-18#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.