Jump to content

#LiveUpdates 100க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை! #GujaratResults


Recommended Posts

#LiveUpdates  100க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை! #GujaratResults

 
 

குஜராத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை வகித்துவந்த நிலையில் தற்போது  பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.

gujarat

 

குஜராத் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க முன்னிலையில் இருந்த பல்வேறு தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைவுடனே இன்றைய பங்குச்சந்தை ஆரம்பித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 663.83 புள்ளிகள் குறைந்து 32,799 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 201.35 புள்ளிகள் குறைந்து 10,131 புள்ளிகளில் வர்த்தகமாவதாகக் கூறப்படுகிறது.   

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில்  பா.ஜ.க முன்னிலை வகித்தாலும், காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க-104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 76 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலை வகிக்கிறார். குஜராத் மேசானா தொகுதியில் துணை முதல்வர் நிதின் பட்டேல் முன்னிலை வகிக்கிறார்.

 

குஜராத் 

182 சட்டசபை உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. இதனால், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

modi

 

68 உறுப்பினர்களைக்கொண்ட இமாசலப் பிரதேசத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரு மாநிலத் தேர்தல் முடிவுகளும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/india/111090-updates-on-gujaratresults-and-himachalresults.html

Link to comment
Share on other sites

மோடியின் ஆயுதமும் குஜராத் தேர்தல் முடிவும்!

 
 

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், பா.ஜ.க 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

modi
 

 

182 சட்டசபை உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டசபைக்கு, கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில், தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. இதனால், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்

rahul
 

 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களால் குஜராத் மக்களுக்கு பா.ஜ.க மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி, இன்றைய தேர்தல் முடிவுகளில் அப்பட்டமாக வெளியாகியுள்ளது.  வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பா.ஜ.க, காங்கிரஸ்  மாறி மாறி முன்னிலை வகித்தன. ஒருகட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க-வைவிட பத்து தொகுதிகளில் முன்னிலை வகித்தது.  இது, பா.ஜ.க-வுக்கு கண்டிப்பாக கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

'குஜராத் மண்ணின் மைந்தன்' என்று அழைக்கப்படும் பிரதமர் மோடி, குஜராத்தில் இரண்டாம் கட்ட பிரசாரத்தின்போது மக்கள் மத்தியில் கண்ணீர்விட்டு அழுதார். ”ஏன் என்னை வெறுக்கிறார்கள்?  குஜராத்தில் நான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதாலா” என்று வேதனைப்பட்டார். ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு ஆகியவற்றைத் தாண்டி, மோடியின் அன்று சிந்திய கண்ணீர்தான் இன்று வெற்றியை தேடித் தந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

குஜராத்தைத் தொடர்ந்து, இமாசலப் பிரதேசத்திலும் பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகியுள்ளது. 68 சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட இமாசலப் பிரதேசத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதன்படி, பா.ஜ.க இரு மாநிலங்களையும் கைப்பற்ற உள்ளது. இருப்பினும் காங்கிரஸ், இரு மாநிலத் தேர்தலிலும் பா.ஜா.க-வுக்கு கடுமையான போட்டியாளராகத் திகழ்ந்து, இனிவரும் காலங்களில் பா.ஜ.க மிகவும் கவனமாகக் காய் நகர்த்த வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. 

https://www.vikatan.com/news/india/111097-gujarat-election-battle-for-narendra-modi.html

Link to comment
Share on other sites

மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

குஜராத் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பிறந்த மெஹ்சானா மாவட்டம், உன்ஜா தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெண் வேட்பாளர் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி கண்டுள்ளார்.

 
மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்
 
அகமதாபாத்:
 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அந்நாள் பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், பிறந்த மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது.
 
நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்டேல்(74) நிறுத்தப்பட்டார். அதே தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2012-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 19 ஆயிரத்து 529 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்(40) என்பவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
 
கடந்த 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாராயண் பட்டேலை எதிர்த்து போட்டியிட்ட ஆஷா பட்டேல் அப்போது தோல்வி அடைந்தார். அந்த நஷ்டக் கணக்கை தற்போதையை வெற்றியின் மூலம் லாபக் கணக்காக ஆஷா பட்டேல் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/18195928/1135355/BJP-loses-Narendra-Modi-s-hometown-to-Congress.vpf

Link to comment
Share on other sites

குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் மோடிக்கும் கூறுவதென்ன? 5 முக்கிய அம்சங்கள்

 
பாஜக தொண்டர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் குஜராத் தேர்தலில் களமிறங்கிய பாரதீய ஜனதா கட்சியின் நூலிழை வெற்றி அக்கட்சிக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் இருப்பதால், இங்கே மோசமான செயல்பாட்டையோ அல்லது தோல்வியையோ கண்டிருந்தால் அது மாநிலத்திற்கு வெளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் குஜராத்தில் எளிதாக வெற்றி பெற்ற பாஜக, இம்முறை உள்ளூர் அரசாங்கத்தின் மந்தமான செயல்பாட்டினாலும் மற்றும் தொடர்ந்து 22 ஆண்டுகளாக பாஜகவை தேர்தெடுத்த வாக்காளர்கள் மத்தியிலும் சோர்வு நிலவிய சூழலில் தேர்தலை எதிர்கொண்டது.

தலித்துகள் மற்றும் மற்ற சாதியினரை தவிர்த்து தங்களுக்கென வேலைகளில் தனி இடஒதுக்கீடு கோரிய படிதார்கள் சமூகத்தின் அதிருப்தி அக்கட்சிக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது.

காங்கிரஸ் கட்சி பாஜகவை அதன் மிகப்பெரிய கோட்டையில் எதிர்கொள்வதற்காக ஒரு வித்தியாசமான கூட்டணியை அமைத்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜகவின் கவசத்தில் நிலவும் குறைபாடுகள் மீது கவனம் செலுத்தி ஒரு முக்கிய பிரசாரத்தை நடத்தினார் ராகுல் காந்தி. இதில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் நிலவிய கோபம் மற்றும் வர்த்தகர்கள் இடையே சரக்கு மற்றும் சேவை வரி குறித்து நிலவும் பிரச்சனைகளை முன்னிறுத்தினார்.

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைREUTERS

தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் பாஜக தனது வாக்கு வீதத்தை இழந்து வருவதை காட்டியது.

தற்போது எழும் மிகப்பெரிய கேள்வியே பாஜக தோல்வியடைவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில் அது எவ்வாறு ஒரு சுமாரான வெற்றியை பதிவு செய்தது என்பதேயாகும்.

பாஜக கடைசி கட்ட பிரசாரத்தின்போது அதை களைவதற்கான அனைத்து வழிவகைகளையும் கையாண்டது. குஜராத் பெருமை மற்றும் தேர்தலில் பாகிஸ்தான் பாதிப்பை உண்டாக்கவுள்ளதாக கூறி இந்துக்களின் வாக்குகளை மோடி கவர நினைத்தார்.

இது காங்கிரஸ் தலைவர்களான கபில் சிபல் மற்றும் மணிசங்கர் ஐயர் போன்றோரை எதிர்வினையாற்ற வைத்தது.

காங்கிரசை பொறுத்தவரை இது ஒரு கசப்பும் இனிப்பும் கலந்த முடிவாகவே அமைந்தது. அதாவது சிங்கத்தை அதன் சொந்த குகையிலேயே எதிர்கொண்டாலும், இறுதிக் கட்டத்தில் தோல்வியுற்றது. காங்கிரஸ் உள்ளூரில் சிறந்த தலைவரை கொண்டிராத சூழலில், ராகுல் காந்தி தேவையான அனைத்து செயல்களையும் செய்து தனது கட்சி தேர்தலில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு உதவினார்.

ஆனால், குஜராத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டது அத்தேர்தலில் சிறிதளவு ஏமாற்றத்தையே பதிவு செய்துள்ளது.

இவரது "பெரும்பான்மை" வெற்றி என்ற வாக்குறுதி தவறானதாகிவிட்டது. இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மையான வாக்குகளை பெறவில்லை.

எனவே, இத்தேர்தல் முடிவுகள் மோடிக்கும் பாஜகவுக்கும் கூறுவதென்ன?

ஐந்து முக்கியமான விடயங்கள் உள்ளன.

அமித் ஷாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முதலாவதாக, விவசாயிகள் மற்றும் சிறுதொழில் வர்த்தகர்கள் ஆகியோர் இதுவரை நிலவி வந்த பொருளாதார சூழல் குறித்து மகிழ்ச்சிகரமாக இல்லை.

வேலைவாய்ப்பின்மையே ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பாஜகவின் திட்டங்களுக்கு அபாயத்தை உண்டாக்கும் கட்டத்தை நெருங்கிய படிதார்கள் வேலைகள் குறித்து தங்களது முணுமுணுப்பை தெரிவித்தனர்.

சரக்கு மற்றும் சேவை வரி சிறு மற்றும் முறைசாரா வர்த்தகங்களை பாதித்தது. சரக்கு மற்றும் சேவை வரியின் தற்போதைய வடிவம் கண்டிப்பாக தொடர்ந்து நீடிக்க முடியாது.

இரண்டாவதாக, ராகுல் காந்தியின் தலைமையின் கீழுள்ள காங்கிரஸிடம் பா.ஜ.க அதன் முக்கிய இந்து வாக்குகளின் ஒரு பகுதியை இழந்து விட்டது. தற்போது காங்கிரஸிடம் சென்றுள்ள தனது முக்கிய வாக்குகளின் ஒரு பகுதியை பாஜக வென்றாக வேண்டுமென்பதே இங்கு முக்கியமான விடயமாகும்.

மூன்றாவதாக, 2019ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு மோடி அரசாங்கம் அதன் பொருளாதார மற்றும் அரசியல் செயல்பாடுகளை மாற்றுவதற்கான வாய்ப்புள்ளது. சாமானியர்களுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது அதிக ஆதரவை எதிர்பார்க்கலாம்.

நான்காவதாக, இதுவரை எதிர்பார்க்காத அரசியல் சார்ந்த பாதிப்பை குஜராத் தேர்தல் முடிகள் ஏற்படுத்தியுள்ளதால் மோடி மற்றும் அமித் ஷா தங்களது 2019ம் ஆண்டு தேர்தல் கூட்டணி குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. இதற்கு முன்னர் அவர்கள் செயல்படாத வகையில், தங்களது கூட்டணி கட்சிகளை சாந்தப்படுத்தவும் மற்றும் கவரவும் வேண்டும்.

ஐந்தாவதாக, கர்நாடகா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் 2018ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல் பாஜகவுக்கு பெரும் சவாலானதாக உள்ளது. குஜராத் போன்றல்லாமல் உள்ளூர் தலைவர் இன்றி மோடியை மட்டுமே சார்ந்து இந்த மாநிலங்களில் செயல்பட முடியாது. பாஜகவின் அதிகாரத்திற்கு தற்போதுதான் சவால்கள் உருவாகத் தொடங்கியுள்ளன.

http://www.bbc.com/tamil/india-42402310

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.