Jump to content

யாழ். மாந­கர மேயர் ஆர்­னோல்ட் போட்டி!


Recommended Posts

  • யாழ். மாந­கர மேயர் ஆர்­னோல்ட் போட்டி!
யாழ். மாந­கர மேயர் ஆர்­னோல்ட் போட்டி!
 
 

யாழ். மாந­கர மேயர் ஆர்­னோல்ட் போட்டி!

 
 

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­கான மேயர் வேட்­பா­ள­ராக இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இம்­மா­னு­வேல் ஆர்னோல்ட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதை­ய­டுத்து அவர் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கும் கடி­தத்தை, அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னத்­தி­டம் நேற்­றுக் கைய­ளித்தார்.

வடக்­கில் உள்ள ஒரே ஒரு மாந­கர சபை­யான யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் தலை­வர் பதவி இரா­ஜ­தந்­திர மதிப்­புள்ள ஒரு பதவி. யாழ். மாவட்­டத்­தி­ன் அடை­ யா­ள­மா­க­வும் விளங்­கக்­கூ­டி­யது. இத்­த­கைய பெருமை மிகு பத­வியை அடை­வ­தற்­கான முயற்­சி­யில் பல­ரும் போட்­டி­யிட்டு வந்­த­னர்.

தமிழ் அர­சுக் கட்­சிக்­குள்­ளும் பலத்த போட்டி நில­வி­யது. யாழ்ப்­பா­ணம் வணி­கர் கழக முன்­னாள் தலை­வ­ரும் தற்­போது மாகாண சபை உறுப்­பி­ன­ராக உள்­ள­வ­ரு­மான இ.ஜெய­சே­க­ரம், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சொல­மன் சூ.சிறில், முன்­னாள் மாந­கர சபை உறுப்­பி­னர் இரா­ஜ­கு­ரு­தே­வன், ஊட­க­வி­ய­லா­ளர் ந.வித்­தி­யா­த­ரன் ஆகி­யோர் இந்­தப் போட்­டி­யில் இருந்­த­னர்.

எனி­னும் யாழ். மாந­கர சபைக்­குள் வாழக்­கூ­டிய மக்­க­ளின் பகுப்­பாய்வு அடிப்­ப­டை­யில் ஆர்­னோல்ட் தெரிவு செய்­யப்­பட்­டார் என்று கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

 

யாழ். மாந­கர சபைத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு வச­தி­யாக வடக்கு மாகாண உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து வில­கும் கடி­தத்தை ஆர்­னோல்ட் நேற்று இரவு கைய­ளித்­தார்.

http://newuthayan.com/story/55690.html

Link to comment
Share on other sites

யாழ்.மாந­கர மேயர் வேட்­பாளர் இறுதிக்கட்ட பரி­சீ­ல­னையில் ஆர்னோல்ட், சொலமன் சிறில்

 

(ஆர்.ராம்)

யாழ்.மாந­கர மேயர் வேட்­பா­ள­ருக்­கான இறு­திக்­கட்ட பெயர் பரி­சீ­ல­னையில் வட­மா­காண சபை உறுப்­பினர் ஆர்னோல்ட் மற்றும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்பி னர் சொலமன் சிறில் ஆகி­யோரின் பெயர் கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

முன்­ன­தாக யாழ்.மாநகர சபைக்­கான மேயர் வேட்­பா­ள­ராக யாரைக் கள­மி­றக்­கு­வது என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­போது வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளான இ.ஜெய­சே­கரம், ஆர்னோல்ட், முன் னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சொலமன் சிறில், சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் என்.வித்தியாதரன் ஆகி­யோரின் பெயர்கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு வந்­த­தோடு மறு­பக்­கத்தில் முன்னாள் மாந­க­ர­ சபை உறுப்­பினர் ராஜ­தேவன் மற்றும் வட­மா­காண சபையின் தவி­சாளர் சி.வி.கே.சிவ­ஞானம் ஆகி­யோ ரின் பெயர்கள் தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­பட்டு வந்­தது.

இருப்­பினும் வட­மா­காண சபையின் தவி­சாளர் சி.வி.கே.சிவ­ஞானம் தற்­போது தனக்கு மேயர் பத­வியில் அதி­க­ளவு ஈடு­பாடு இல்லை என பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்ளார். இந்­நி­லையில் கட்­சி­யினுள் மேயர் வேட்­பா­ள­ராக யாரைக் கள­மி­றக்­கு­வது என்­பது தொடர்பில் மந்­தி­ரா­லோ­சனை நடத்­தப்­பட்டு வந்­தது.

இச்­ச­ம­யத்தில் யாழ்.வணிகர் சங்­கத்தின் பிர­தி­நி­திகள் மற்றும் சிலர் யாழ்.மார்டீன் வீதியிலுள்ள தமி­ழ­ர­சு­க் கட்­சியின் தலை­மை­ய­கத்திற்குச் சென்று தலைவர் மாவை.சேனா­தி­ரா­ஜா­வி­டத்தில் இ.ஜெய­சே­க­ரத்தை மேயர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­குமாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளனர். அதேபோன்று சட்­டத்­த­ர­ணி­யான ஆர்­னோல்ட்டைக் கள­மி­றங்­கு­மாறு சில சட்­டத்­துறை சார்ந்­த­வர்­களும், இளை­ய­வர்­களும் கூட்­டாகச் சென்று தலை­மை­யி­டத்தில் நேர­டி­யாக வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இவ்­வாறு நெருக்­க­டிகள் அதி­க­ரித்­த­மை யால் தமி­ழ­ர­சுக்­ கட்­சியின் தலை­வர்­ மேயர் வேட்­பாளர் யார் என அறி­விக்­காது தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தென்ற தீர்­மா­னத்­தினை எடுப்­ப­தற்கு விளைந்­தி­ருந்தார். இருப்­பினும் கட்­சியின் மூத்த உறுப்­பினர் அது பொருத்­த­மற்ற ஒரு நகர்வு என்று வழங்­கிய ஆலோ­ச­னைக்கு அமை­வாக மீண்டும் மேயர் வேட்­பா­ளர்­க­ளுக்­கான பெயர்கள் பரி­சீ­லிக்­கப்­பட ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் தான் தற்­போது சொலமன் சிறில் மற்றும் ஆர்னோல்ட் ஆகி­யோரின் பெயர்கள் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இந்தப் பரி­சீ­ல­னைகள் மிகவும் இர­க­சி­ய­மாக தலை­மை­யினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தோடு இரு­வ­ருமே பொருத்­த­மா­ன­வர்­க­ளாக இருப்­பார்கள் என கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் குறிப்­பி­டு­வார்­க­ளாயின் ஒரு­வ­ரை மேயர் வேட்­பா­ள­ரா­கவும், மற்­றை­ய­வரை பிரதி மேயர் வேட்­பா­ள­ரா­கவும் கள­மி­றக்­கு­வ­தென்­பது குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத் தில் இம்முறை மேயர் வேட்பாளர் யார் என்பதை குறித்துரைத்து போட்டியிடுவதை தவிர்ப்பது குறித்து தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அறிய முடிகின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-18#page-3

Link to comment
Share on other sites

ஆர்னோல்டின் பதவி விலகலுக்கான காரணத்தை வெளியிட்டார் சுமந்திரன்

 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

MA-Sumanthiran.jpg

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

உள்ளூராட்சி சபைகளின் தலைமை பதவிகள் யார் யாருக்கு வழங்கப்படும் என்பதை  தற்போது அறிவிப்பதில்லை என்று தீர்மானித்து இருந்த போதும் இந்த விடயத்தில் அவர் மாகாண சபை உறுப்பினராக இருந்த காரணத்தினால் அதிலிருந்து அவர் தகுந்த நேரத்துக்கு ராஜினாமா செய்யவேண்டிய தேவை இருந்த காரணத்தினாலேயே அவரை மேயர் பதவிக்கு பிரேரித்து மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கின்றார். 

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர மேயர் வேட்பாளராகதான் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடுவார் என அவர் மேலும்தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/28382

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தனது சகாவை மேயர் வேட்பாளர் ஆக்கியதன் மூலம் தமிழரசுக்கட்சிக்குள் முடிவெடுக்கும் ஆள் என்பதை நிருபித்துள்ளார். தமிழரசுக்கட்சிக்குள் மேலும் பிளவுகளுக்கு இடமுண்டு.

Link to comment
Share on other sites



உண்மைக்கு புறம்பான செய்தி

anald.jpg?resize=648%2C1024
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இமானுவேல் ஆனொல்ட் களமிறங்குவார் என வெளியாகிய பத்திரிகைச் செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவித்துள்ளார்.

 

 

 

யாழ்.மாநகர மேயர் யார்? தொடரும் சர்ச்சை

sumanthiran2.jpg?resize=968%2C768
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளராக இமானுவேல் ஆனொல்ட் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் பிரேரிக்கப்பட்டுள்ளார் என கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘உள்ளூராட்சி சபைக்கான தலைமைப் பதவிகளுக்கு யார் யார்? என அறிவிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.

எனினும் இந்த விடயத்தில் அவர் ஒரு மாகாண சபை உறுப்பினர். அதனால் அந்தப் பதவியிலிருந்து அவர் உரிய நேரத்தில் விலகவேண்டியிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை வேட்பாளராக ஆனொல்ட் பிரேரிக்கப்பட்டுள்ளார்.

எனவே அவர் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை விலகியுள்ளார்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த சர்ச்சையால், தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் இன்று மாலை அவசர அவசரமாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வழங்கினார்.

அதில்’ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மூன்றும் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் வடக்கு- கிழக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தலைமைப் பதவிகளை தேர்தல் முடிவின் பின்பே அறிவிக்கப்படும். யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இமானுவேல் ஆனொல்ட் களமிறங்குகிறார் என வெளியாகிய செய்தி உண்மைக்குப் புறம்பானது என அந்த அறிக்கையில் அவர் தெரிவத்திருந்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரின் அறிக்கை ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கட்சியின் அறிவிப்புப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘ மாகாண சபை உறுப்பினராக உள்ள ஒருவர் அந்தப் பதவியிலிருந்து விலகுவதனால்தான் அவருடை பெயர் யாழ்ப்பாண மாநகர மேயர் வேட்பாளராகப் பிரேரிக்கப்பட்டது என  நான் தெளிவாக்க் குறிப்பிட்டேன்.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்தால் ஏனைய சபைகளில் போட்டியிடுவோர் மற்றும் எல்லோரும் யார் தலைமை வேட்பாளர் என சர்ச்சையை ஏற்படுத்துவார்கள்.

எனவே இந்த விடயத்தில் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்றுதான் தமிழ் அரசுக் கட்சி கேட்டுள்ளது. செயலாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையை நானும் இணைந்தே தயாரித்தேன்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.

http://globaltamilnews.net/2017/55934/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.