Jump to content

அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி!


Recommended Posts

அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி!

 

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு மரியாதை வழங்காத வயதான காவலாளி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவமானகரமான சம்பவமொன்று யாழ். மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் யாழ். மேலதிக செயலாளரின் அலுவலகத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அங்கிருந்த காவலாளி அனந்தியைக் கவனிக்காததுபோல் கதிரையில் அமர்ந்திருந்தார்.

இதனை அவதானித்த அனந்தி, காவலாளியைப் பார்த்து , ‘ஐயா என்னை உங்களுக்குத் தெரிகிறதா என வினவியுள்ளார்’. அதற்கு அந்தக் காவலாளி ‘இல்லைப்பிள்ளை, எனக்குத் தெரியாது. நீ யாரம்மா? என வினவியுள்ளார்.

அதற்கு அனந்தி இவ்வாறான இடங்களில் வேலைசெய்யும் நீங்கள் பத்திரிகைகள் வாசித்து உங்களதுபொது அறிவினை வளர்த்துக்கொள்ளவேண்டுமெனத் தெரிவித்துவிட்டு அலுவலகத்திற்குள்ளே சென்றுவிட்டார்.

குறித்த காவலாளி தொடர்பாக அனந்தி பிரதம செயலாளரிடம் முறையிட்டதையடுத்து குறித்த காவலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அனந்தி கருத்துத் தெரிவிக்கையில், குறித்த காவலாளி மரியாதையில்லாமல் என்னுடன் நீயெனக் கதைத்தார் . ஆகையால் நான் குறித்த பிரச்சனை தொடர்பாக பிரதம செயலாளரின் கவனத்திற்குக் கொண்டுசென்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு இன்னொருவர் மரியாதை செலுத்துவது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. அனந்தி அமைச்சர் என்ற காரணத்திற்காக காவலாளி எழுந்துநின்று மரியாதை செலுத்தவேண்டுமென்ற தேவையெதுவுமில்லை. அனந்திக்காக காவலாளியை வேலையை விட்டு நீக்கியது பிரதம செயலாளரின் தவறே.

http://inioru.com/அனந்திக்கு-மரியாதை-செலுத/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையாயின்!!!!!  ஆனந்தி சசிதரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

செய்தி உண்மையாயின்!!!!!  ஆனந்தி சசிதரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அனந்தி சசிதரன் தவறு செய்தால் எதற்காக ஆனந்தி சசிதரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்....?? மப்புறுப்பினராக இருக்கலாம் ஆனால் மப்பில் எழுதக்கூடாது சாமி அவர்களே.!! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை வயதில் உள்ள ஒருவர் நீயென்று அழைத்தால் அது மரியாதை குறைவான வார்த்தை அல்ல, மகளென்ற நினைப்பில் அழைத்த வார்த்தையாவும் இருக்கலாம். அதுக்குமுதல் இந்த செய்தி எனக்கென்னமோ உண்மைமாதிரி தெரியல்ல, உறவுகளையும், துணைவனையும் இழந்து துணிச்சலுடன் ஒரு இராணுவத்துக்கு எதிராகவே நடுரோட்டில் இறங்கிபோராடிய அனந்தி, தன்னினத்தை சேர்ந்த ஒரு முதியவரை தரகுறைவாக நடத்தியிருப்பாரோ தெரியவில்லை!

உண்மையா இருந்தால் தண்டனைக்குரிய பழக்கவழக்கம்,, ஒருவேளை பொய் செய்தியாக இருந்தால் அது, அதனை பரப்பியவர்களின் தரங்கெட்ட பழக்கவழக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும்   கடந்து  போகும்...

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

உண்மையா இருந்தால் தண்டனைக்குரிய பழக்கவழக்கம்,, ஒருவேளை பொய் செய்தியாக இருந்தால் அது, அதனை பரப்பியவர்களின் தரங்கெட்ட பழக்கவழக்கம்!

தமிழின ஆயுதப் போராட்டம் பின்னடைவு ஏற்பட்டதற்குச் சில ஊடகங்களும் துணைபோயுள்ளதை மறுக்க முடியாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில ஊடகங்களின் பொறுப்பு அற்ற தன்மை எங்களை கோமணத்துடன்  திரிய வைக்குது.

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

குப்பை,   கோபுரம் என்பன எப்படி சிலருக்கு மூளையில் உதிக்கின்றன என தெரியவில்லை(may be by defaulttw_blush:). கூட்டமைப்புடன் இருக்கும் போது (பல உறுப்பினர்கள்)  அவர்களை விமர்சிக்காதவர்கள் அவர்கள் கூட்டமைப்பை விட்டு விலகியதும் வாய்க்கு வந்தபடி திட்டுவது எப்படி தகும். கூட்டமைப்பில் உள்ளவர்கள் கண்கூடாக பிழை விடும் போதும் அவர்களை விமர்சிக்காது அமசடக்காக இருப்பது எத்தகைய ஜனநாயகம் என  தொப்பிக்கு உரியவர்கள்  விளக்கமளித்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.