Jump to content

கனடாவில் தமிழ்ப் பெண் அடித்து கொலை- கணவன் கைது! 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழ்ப் பெண் அடித்துக் கொலை- கணவன் கைது!  
[Friday 2017-12-15 08:00]

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Scarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டொறாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளார்.
 

   
பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கதிர்காமநாதன் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=195674&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கறுப்பி said:

கனடாவில் தமிழ்ப் பெண் அடித்து கொலை- கணவன் கைது! 
[வெள்ளிக்கிழமை 2017-12-15 08:00]

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த பெண் பெண் ஒருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதான ஜெயந்தி சிவர்தனத்தைச் சேர்ந்த ஸ்கார்பாரோ பகுதியை சேர்ந்த பெண் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த பெண் பெண் ஒருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதான ஜெயந்தி சிவர்தனத்தைச் சேர்ந்த ஸ்கார்பாரோ பகுதியை சேர்ந்த பெண் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளது.

   பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் இறந்துவிட்டார் மரண விசாரணின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கதிர்காமநாதன் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=195674&category=TamilNews&language=tamil

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jeyanthy-murder-151217-seithy.jpg

ஜெயந்தி சீவரத்னம் 46

Link to comment
Share on other sites

கொலை செய்யப்பட இப் பெண்மணி அருகில் உள்ள பாடசாலையில்  மதிய உணவு வழங்கும் போது மேற்பார்வை செய்கிறவராக இருந்துள்ளார். மிகவும் கனிவான பொறுப்பான பெண்மணி என்று அப் பாடசாலை பிள்ளைகளும், அதிபரும் சொல்லியிருக்கினம். அயலவர்களும் அதே போன்றே மிகவும் கனிவான பெண்மணி என்று கூறியிருக்கினம்.

கணவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். ஆள் எந்த நேரமும் மதுவுக்குள் மூழ்கி கிடப்பவர் என்றும் சண்டை பிடித்து சத்தம் கேப்பது வழக்கம் என்றும் அயலவர்கள் சொல்லினம். குடும்ப பிரச்சனைகள் தொடர்பாக  போலீசார் இதுக்கு முதல் பல தடவை வந்து சென்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இரண்டு பிள்ளைகள் இருக்கினம். ஒரு பிள்ளை உயர் கல்வியும் மற்றவர் சிறியவர்.

 

https://toronto.ctvnews.ca/victim-of-malvern-townhouse-murder-was-popular-school-lunchroom-supervisor-1.3721509

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

ஆள் எந்த நேரமும் மதுவுக்குள் மூழ்கி கிடப்பவர் என்றும் சண்டை பிடித்து சத்தம் கேப்பது வழக்கம் என்றும் அயலவர்கள் சொல்லினம். 

 

https://toronto.ctvnews.ca/victim-of-malvern-townhouse-murder-was-popular-school-lunchroom-supervisor-1.3721509

வெளிநாடுகளின் குடிகாரர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பல அப்பாவி பெண்களின் நிலை நானும் இங்கு இங்கிலாந்திலும் பார்த்திருக்கின்றேன் இவர்களின் ஒரே நோக்கம் குடி குடி வீட்டில் அடி உதை கொடிய வார்த்தை பிரயோகம் இப்படியானவர்களுக்கு வாழ்க்கை பட்ட அப்பாவிகள் ஊருலகத்துக்கு பயந்து கொடுமையை தினம்தினம் அனுபவிக்கின்றார்கள் அதில் சிலர் விவகாரத்துவங்கி வாழ்கின்றார்கள் ..... இந்த பெண் குடிகாரனின் கொலைவெறி தாக்குதலுக்கு இரையாகி இருக்கின்றார். ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

இரண்டு பிள்ளைகள் இருக்கினம். ஒரு பிள்ளை உயர் கல்வியும் மற்றவர் சிறியவர்.

வெளி நாடு வந்தும் திருந்தாத ஜென்மன்கள்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழரசு said:

வெளிநாடுகளின் குடிகாரர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பல அப்பாவி பெண்களின் நிலை நானும் இங்கு இங்கிலாந்திலும் பார்த்திருக்கின்றேன் இவர்களின் ஒரே நோக்கம் குடி குடி வீட்டில் அடி உதை கொடிய வார்த்தை பிரயோகம் இப்படியானவர்களுக்கு வாழ்க்கை பட்ட அப்பாவிகள் ஊருலகத்துக்கு பயந்து கொடுமையை தினம்தினம் அனுபவிக்கின்றார்கள் அதில் சிலர் விவகாரத்துவங்கி வாழ்கின்றார்கள் ..... இந்த பெண் குடிகாரனின் கொலைவெறி தாக்குதலுக்கு இரையாகி இருக்கின்றார். ஆழ்ந்த அனுதாபங்கள். 

நாமும் பகிடியாக குடியை புகழ்ந்து இங்கே எழுதுவது உண்டு 
ஒன்றுக்கு அடிமை ஆகுவது என்பது எப்போது எந்த இடத்தில் 
தொடங்குகிறது ? என்பது அறியப்படாத விடையாக இருக்கிறது.

ஓரளவு குடிக்கு அடிமை ஆக தொடங்கியபின் 
மூளை கொஞ்சம் கொஞ்சமாக வேலை இழந்துகொண்டே போகும். 
பின்பு ஒரு கட்டிடத்தில் குடித்தான் வாழ்க்கை என்று ஆகிவிடும்.

ஆரம்பத்திலேயே நிறுத்தி விட வேண்டும்.  

12 hours ago, பெருமாள் said:

வெளி நாடு வந்தும் திருந்தாத ஜென்மன்கள்................

என்னை கேட்டால் 
தமிழனாக பிறந்தும் ..... சைவர்களாக எமது முன்னையோர் இருந்தும் 
இப்படி சீரழிந்து போனார்கள் என்றுதான் யோசிப்பேன்! 

பலவற்றில் நல்லது கெட்டது கலந்துதான் 
இருக்கிறது அதில் கெட்டதை விட்டு நல்லதை எடுக்கலாம் 
பாழாய்ப்போன இந்து மதம் என்ற சாக்கடையில் 
நல்லது என்று எடுத்துக்கொள்ள என்ன இருக்கிறது ?
ஒரு மனிதனுக்கு எந்த அறிவு வளர்ச்சியையும் கொடுக்காத 
ஒரு மதத்தை ஏன் தொடர்கிறோம் என்பதுதான் முதன்மை கேள்வி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பாவம் அந்த பெண் மணி ...கணவன்  எந்நேரமும் குடி ,அடி தடி  போலீஸ் வரவு என்று இருந்தால் பிரித்து வைத்திருக்கலாம் தானே.. ..தாயற்ற   பிள்ளைகள் ..குடிகார  தந்தை ...இன்னும் மோசமான நிலை....

Link to comment
Share on other sites

22 hours ago, Maruthankerny said:

நாமும் பகிடியாக குடியை புகழ்ந்து இங்கே எழுதுவது உண்டு 
ஒன்றுக்கு அடிமை ஆகுவது என்பது எப்போது எந்த இடத்தில் 
தொடங்குகிறது ? என்பது அறியப்படாத விடையாக இருக்கிறது.

ஓரளவு குடிக்கு அடிமை ஆக தொடங்கியபின் 
மூளை கொஞ்சம் கொஞ்சமாக வேலை இழந்துகொண்டே போகும். 
பின்பு ஒரு கட்டிடத்தில் குடித்தான் வாழ்க்கை என்று ஆகிவிடும்.

ஆரம்பத்திலேயே நிறுத்தி விட வேண்டும்.  

என்னை கேட்டால் 
தமிழனாக பிறந்தும் ..... சைவர்களாக எமது முன்னையோர் இருந்தும் 
இப்படி சீரழிந்து போனார்கள் என்றுதான் யோசிப்பேன்! 

பலவற்றில் நல்லது கெட்டது கலந்துதான் 
இருக்கிறது அதில் கெட்டதை விட்டு நல்லதை எடுக்கலாம் 
பாழாய்ப்போன இந்து மதம் என்ற சாக்கடையில் 
நல்லது என்று எடுத்துக்கொள்ள என்ன இருக்கிறது ?
ஒரு மனிதனுக்கு எந்த அறிவு வளர்ச்சியையும் கொடுக்காத 
ஒரு மதத்தை ஏன் தொடர்கிறோம் என்பதுதான் முதன்மை கேள்வி. 

சைவ சமயத்துக்கும் இதுக்கும் என்ன தொடர்பு மருது? ஏன் கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் குடிப்பது இல்லையா?  ஷரியா சட்டம் இல்லாத ஆனால் முஸ்லிம்களை அதிகம் கொண்ட நாடுகளில் முஸ்லிம்களும் குடிக்கின்றனர்.  Domestic violence எல்லா இடத்திலும் எல்லா சமூகத்திலும் எல்லா மதத்தினர் மத்தியிலும் புற்றுநோய் போன்று பரவிக் கிடக்கு.  குடியை தொடாதவர்களும் மனைவியை அடித்து துன்புறுத்துவதை அறியவில்லையா?

கனடாவுக்கு வந்து நான் 11 வருடங்களாகின்றது. இப்படியான ஒரு கொலையை தமிழர்கள் மத்தியில் கேள்விப்படுவது இது தான் முதல் முறை.  இங்கு குடித்து விட்டு மனைவிக்கு அடிப்பது பற்றி பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரிந்தால் கூட அடித்த கணவரை தூக்கிக் கொண்டு போய்விடும் பொலிஸ். நிலாமதி அக்கா குறிப்பிட்டு இருப்பது போல, கணவரை பிரித்து வைத்து இருக்கலாம் பொலிஸ்
 

என்ன சொல்லி என்ன.... தாயை தன் அப்பாவால் இழந்த அந்த  பிள்ளைகளின் மீதுதான் என் எண்ணம் குவிகின்றது. அதுகள் இனி ஆருட்ட போய் அழும்? ஆர் இனி அவர்களை பொறுப்பேற்பார்கள்?

 

5 hours ago, நிலாமதி said:

..கணவன்  எந்நேரமும் குடி ,அடி தடி  போலீஸ் வரவு என்று இருந்தால் பிரித்து வைத்திருக்கலாம் தானே.. ..

இந்த கேள்வி தானக்கா என்னையும் குடைகின்றது

Link to comment
Share on other sites

குடும்பத்துக்குள் மனைவியையோ பிள்ளைகளையோ அடிக்கும் அல்லது அடிக்க முயற்சிக்கும் கணவனுடன் தொடர்ந்து வாழ முயச்சிக்க கூடாது. எம்மவர்கள் குடும்பங்கள் பிரிவது என்பதுக்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும் தெரிந்தவன் சொந்தக்காரன் அயலவன் என்ன சொல்வானோ என்று பிறருக்காக வாழும் நிலையே அதிகம். இதனால் விழைவுகள் ஏராளம். பொதுவாக ஒருவர் என்னுமொரு உடலையோ மனதையோ துன்புறுத்துவதற்கு உரிமை இல்லை அந்த உரிமையை எடுப்பதும் அனுமதிப்பதும் மிக மோசமான நிலை. கனடாவில் சிறிலங்கனாக வாழுவதற்கு நிறைய விலைகொடுக்க வேண்டும் . அடிக்கிற கைதான் அணைக்கும் என்று பழக்கப்பட்ட பண்பாட்டை  காப்பாற்றுவதானாலும் சரி கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற சகிப்புத்தன்மையை காப்பாற்றுவதானாலும் சரி நிறை விலை கொடுக்க வேண்டும். கடந்த இருபத்தைந்து வருடத்தில் எவ்வளவோ மாறிவிட்டது.. இக்காலத்தில் நாம் உணர்ச்சிவசப்பட்டால். கோபப்ட்டால் ஊரில் சாப்பிட்டதுபோல் சாப்பிட்டால் , தேத்தண்ணிக்கு சீனி தூக்கலாக போட்டால் இரத்த அழுத்தம் சலரோகம் மூட்டுவலி தலைமுடிகொட்டுவது முதல் உடல் பருமன் வரை நோயாளியாகிவிடுவோம். இதை அடுத்தவனுக்கு திணித்தாலும் அடுத்தவனும் நோயாளியாகிவிடுவான். தின்பது குடிப்பது முதல் எதையும் இயல்பாக செய்வதில் இருந்து அவதானமாக கவனமாக செய்யும் நிலைக்கு காலம் நகர்த்திவிட்ட நிலையில் மனைவிக்கு அடிப்பது என்பதை என்னவென்று சொல்வது !! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

சைவ சமயத்துக்கும் இதுக்கும் என்ன தொடர்பு மருது? ஏன் கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் குடிப்பது இல்லையா?  ஷரியா சட்டம் இல்லாத ஆனால் முஸ்லிம்களை அதிகம் கொண்ட நாடுகளில் முஸ்லிம்களும் குடிக்கின்றனர்.  Domestic violence எல்லா இடத்திலும் எல்லா சமூகத்திலும் எல்லா மதத்தினர் மத்தியிலும் புற்றுநோய் போன்று பரவிக் கிடக்கு.  குடியை தொடாதவர்களும் மனைவியை அடித்து துன்புறுத்துவதை அறியவில்லையா?

கனடாவுக்கு வந்து நான் 11 வருடங்களாகின்றது. இப்படியான ஒரு கொலையை தமிழர்கள் மத்தியில் கேள்விப்படுவது இது தான் முதல் முறை.  இங்கு குடித்து விட்டு மனைவிக்கு அடிப்பது பற்றி பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரிந்தால் கூட அடித்த கணவரை தூக்கிக் கொண்டு போய்விடும் பொலிஸ். நிலாமதி அக்கா குறிப்பிட்டு இருப்பது போல, கணவரை பிரித்து வைத்து இருக்கலாம் பொலிஸ்
 

என்ன சொல்லி என்ன.... தாயை தன் அப்பாவால் இழந்த அந்த  பிள்ளைகளின் மீதுதான் என் எண்ணம் குவிகின்றது. அதுகள் இனி ஆருட்ட போய் அழும்? ஆர் இனி அவர்களை பொறுப்பேற்பார்கள்?

 

இந்த கேள்வி தானக்கா என்னையும் குடைகின்றது

இதுக்கும் சைவ மதத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

எமக்கும் சைவர்களுக்கும் நிறைய சம்மந்தம் இருந்தது 
இப்போது இல்லாமல் போய்விட்டது  என்பதைத்தான் சொன்னேன்.

சைவர்கள் 
பெண்களை ஆணுக்கு சமமாகவே பார்த்திருக்கிறார்கள் 
சக்தியும் சிவனும் பாதி பாதி எனும் கோட்ப்பாடு கொண்டவர்கள் 
தவிர பல விசேஷங்கள் விழாக்கள் என 
பெண்களை நேசித்தும் முன்னிலை ப்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

நீங்கள் நம்புவீர்களோ தெரியவில்லை ....
ஆதாரம் என்று ஒரு ஆய்வாளரின் யூடுப் வீடியோ ஒன்றுதான் 
என்னால் இணைக்க கூடியதாக இருக்கின்றது .... (இங்கிலாந்தை சேர்ந்தவர்)
அது ராஜ சோழன் பற்றிய டாக்குமெண்டரி 
வெள்ளைக்காரர்கள் குளிப்பது என்பதை முதன் முதலில் இந்தியா வந்துதான் 
கண்டிருக்கிறார்கள். சைவர்களின் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான 
புத்தகங்களே குளித்து கோவிலுக்கு செல்வது பற்றி சொல்லிவருகிறது.


நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் .......
கீழ் இருந்து மேல் போவது என்பது வேறு 
நாம் மேல் இருந்து கீழ் இறங்கினோம் என்பதுதான் 
வருத்தம் ஆனது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த நண்பர். கணக்காளர்....

அழகியமனைவி, இரு பெண்பிள்ளைகள்.. 

குடி.... குடி.... குடி...

வேலையில்.... பிளாஸ்கில் கொண்டு போய் குடித்து, மாட்டி.... வேலை போனது...

ஈரல் மாத்தப் பட்டது... அதற்கு அரசு செலவு £1 மில்லியன். (அதே வைத்தியசாலையில், அதே வருத்தத்துக்கு வந்த, அரபி செல்வந்தரின் மகனுக்கு அந்த கட்டணம் அறவிடப் பட்டது)

இரண்டு மாதம் இருந்தார் அமைதியாக...

மீண்டும் ஆரம்பித்தார்... 

சரியாக இரண்டு மாதத்தில் போய் சேர்ந்தார்.....

ஏன்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

சைவ சமயத்துக்கும் இதுக்கும் என்ன தொடர்பு மருது? ஏன் கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் குடிப்பது இல்லையா?  ஷரியா சட்டம் இல்லாத ஆனால் முஸ்லிம்களை அதிகம் கொண்ட நாடுகளில் முஸ்லிம்களும் குடிக்கின்றனர்.  Domestic violence எல்லா இடத்திலும் எல்லா சமூகத்திலும் எல்லா மதத்தினர் மத்தியிலும் புற்றுநோய் போன்று பரவிக் கிடக்கு.  குடியை தொடாதவர்களும் மனைவியை அடித்து துன்புறுத்துவதை அறியவில்லையா?

கனடாவுக்கு வந்து நான் 11 வருடங்களாகின்றது. இப்படியான ஒரு கொலையை தமிழர்கள் மத்தியில் கேள்விப்படுவது இது தான் முதல் முறை.  இங்கு குடித்து விட்டு மனைவிக்கு அடிப்பது பற்றி பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரிந்தால் கூட அடித்த கணவரை தூக்கிக் கொண்டு போய்விடும் பொலிஸ். நிலாமதி அக்கா குறிப்பிட்டு இருப்பது போல, கணவரை பிரித்து வைத்து இருக்கலாம் பொலிஸ்
 

என்ன சொல்லி என்ன.... தாயை தன் அப்பாவால் இழந்த அந்த  பிள்ளைகளின் மீதுதான் என் எண்ணம் குவிகின்றது. அதுகள் இனி ஆருட்ட போய் அழும்? ஆர் இனி அவர்களை பொறுப்பேற்பார்கள்?

 

இதெல்லாம் சர்வசாதாரணமப்பா என்ற உங்கள் சமன்பாடு எனக்கு மிகவும்  பிடித்திருக்கின்றது. 

அந்த தாய்க்கு அனுதாபங்கள் தெரிவிப்பதை விட......அவர் விட்டுச்சென்ற அந்த பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை நினைக்கும் போதுதான் வேதனை அதிகமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எனக்குத் தெரிந்த நண்பர். கணக்காளர்....

அழகியமனைவி, இரு பெண்பிள்ளைகள்.. 

குடி.... குடி.... குடி...

வேலையில்.... பிளாஸ்கில் கொண்டு போய் குடித்து, மாட்டி.... வேலை போனது...

ஈரல் மாத்தப் பட்டது... அதற்கு அரசு செலவு £1 மில்லியன். (அதே வைத்தியசாலையில், அதே வருத்தத்துக்கு வந்த, அரபி செல்வந்தரின் மகனுக்கு அந்த கட்டணம் அறவிடப் பட்டது)

இரண்டு மாதம் இருந்தார் அமைதியாக...

மீண்டும் ஆரம்பித்தார்... 

சரியாக இரண்டு மாதத்தில் போய் சேர்ந்தார்.....

ஏன்???

ஜேர்மனியில் குடியால் சீரழிந்த தமிழ்க்குடும்பங்கள் அளவிற்க்கதிகம்.

இருந்தும் அந்த தாய்கள்.....


அவர்கள் கணவனை விவாகரத்து செய்யாமல்....பொலிஸ்..கோர்ட்டு என்று அலைந்து திரியாமல் இருப்பதற்கு காரணம்....

பிள்ளைகளுக்கு தகப்பன் வேண்டும். பாடசாலை பள்ளிக்கூடம் சம்பந்தமாக அப்பா ஸ்தானத்திற்கு ஒருவர் அவசியம்.....

பாடசாலைகளில் நடக்கும் ஒருசில விடயங்களுக்கு அப்பா இல்லையென்றால் அதன் தாக்கம் பிள்ளைகளளுக்கு ஒரு சிலகணம் பல சங்கடங்களை கொண்டுவந்து விடும்.


என்னதான் இருந்தாலும் வீட்டுக்கு ஒரு ஆண் தலைமை இருக்க வேண்டும் விரும்பியிருப்பார்கள்.

கணவனை இழந்த பெண்கள் படும் பாட்டை ஒருகணம் சிந்தித்திருப்பார்கள்.

குடிகாரனாக இருந்தாலும்....பூவும் போட்டோடும் வாழ்ந்தாலே சந்தோசம் என்று பல பெண்கள் வாழும் உலகை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களில் பொதுவாகவே ஊறி விட்ட ஒரு குணம் பெண் பிள்ளைகளை நீ முத்த பிள்ளை அந்தப் பிள்ளை.இந்தப் பிள்ளை என்று சொல்லி சொல்லியே பயந்தாங் கொள்ளிளாக வளர்ப்பது..சிறு வயது முதல் அப்படியே வளர்ந்து பளக்கப் பட்டதனால் இயல்பிலயே தங்களது பிரச்சனைகளை வெளியில் சொல்ல தயங்குவார்கள்...
அனேகமான குடும்பங்களில் அன்றாடம் இது தான்நடக்கிறது...அப்படியான குடும்ப சூழலில் வளர்ந்த பெண் பிள்ளை தான் இவரும் என அறிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது..முக்கியமாக பிரசனையோடு வாழும் பிள்ளையை  கதைக்காமல் பேசாமல் தள்ளி வைப்பது இன்று இப்படியான உறவகள் தான் அதிகம்...இவருக்கு முதல் ஆண் 18 வயது நிரம்பியவர் எனவும் மற்றயவர் பெண் 16 வயதுடையவர் எனவும்: பெண் பிள்ளையை பார்க்கும் போது தான் மிகுந்த கவலையாக இருப்பதாக அறிந்து கொண்டேன்...வேற்று இனத்து மக்களோடு பாடாசாலையோடு எல்லாம் தொடா;பிலிருந்தும் இந்தப் பெண் எதற்காக இவ்வளவு பிரச்சனைகள் வரும் வரை காத்திருந்தார் என்று தெரியவில்லை..அந்த சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

Image result for domestic violence

நாதம்,

எமது சமுதாயத்தின் சூழ்நிலையில் வளர்ந்தவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது கொஞ்சம் கடினமானது!

எனினும்...எமது அடுத்த தலைமுறைகளில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு!

எமது சமூகத்தில் மட்டுமல்ல....கிழக்காசிய மத்திய கிழக்கு நாடுகளில்..இது மிகப் பெரிய பிரச்சனை!

மாதவி மீது மையல் கொண்ட கோவலனை...அவனால் நடக்க முடியாத கட்டத்திலும்...கூடை ஒன்றினுள் வைத்துக் கண்ணகி தலை மீது சுமந்து கொண்டு மாதவியின் வீடு நோக்கிப் போகின்றாள் என ஒரு கதை உண்டு!

வள்ளுவன் அலுவல் எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வரும் வரை...சமைத்து விட்டுக் காவளிருக்கிறாள் மனைவி வாசுகி!

அந்தச சூழ்நிலையில் வளர்ந்த நானும் ஒரு காலத்தில் இப்படி ஒரு மனைவி கிடைத்தால் எப்படியிருக்கும் என்று ஏங்கியதும் உண்டு!

ஒரு காலத்தின் பரிணாம வளர்ச்சி என்று நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி.....அல்லது புங்கை ஒரு பேய்க்குஞ்சு என்று நினைத்தாலும் சரி...எனக்குக் கவலையில்லை!

சனம் பச்சை மட்டும் போட்டு விட்டு....நகர்ந்து போகாமல் ...நல்லதோ கெட்டதோ தங்கள் கருத்தையும் எழுதி விட்டுப் போவார்கள் எனில் நிச்சயம்....கண்டதும் கேட்டதும் என்று ஒரு திரி திறந்து எழுதலாம் என நினைக்கிறேன்! மகாத்மா காந்தியின் சத்திய சோதனையைக் கொஞ்சம் எடிட் பண்ணின மாதிரி இருக்கும்! முழுவதையு ம் எழுத நான் ஒன்றும் மகாத்மா அல்லவே.

அது சரி பின்வரும் வீடியோவைப் பாருங்கள்!

எங்கே...இந்தப் பிரச்சனை தொடங்குகின்றது என்று தெரியும்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கண்டதும் கேட்டதும்" எழுதுங்கள் எதிர்பார்க்கிறோம்.....! tw_blush:

 --- கூடையில் கணவனை தூக்கி கொண்டு போனது நளாயினி என்று நினைக்கிறேன்.....!

--- வள்ளுவன் வாசுகி தம்பதியர் உடுத்தும் ஆடைகளில் கூட ஆசைகளை துறந்து வாழ்ந்தவர்கள். சமைத்து விட்டு காத்திருப்பது யாருடைய நிர்பந்தத்தினாலும் அல்ல. அது அவர்களது அன்பின் மேன்மை. எங்கள் வீடுகளிலும் இது சாதாரணமாய் நடக்கும் ஒன்றுதான். பஞ்சபூதங்களும் அவர்களுக்கு கட்டுபட்டதாக இருந்தது. இன்றும் திருமணங்களில் "வள்ளுவன் வாசுகி" போல் என்று வாழ்த்துகின்றோம் என்றால் .... அவர்கள் எல்லாம் விதிவிலக்குகள்.....!  tw_blush: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓர் கேள்வி கேட்கின்றேன். கடும் குளிரில் இரவிரவாக வேலை செய்துவிட்டு வருகின்றீர்கள். உடலெல்லாம் வலிக்கிறது. மேலதிகாரியும் கூட இரக்கமின்றி நடந்துகின்றார். இருக்கின்ற வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. மனம் சோர்ந்து வருகின்றீர்கள். வீட்டை வந்தவுடன் மனைவி போனில் யாரிடமோ கூறுகின்றது உங்களுக்கு கேட்கின்றது.

இந்த வந்துட்டார் வெத்து வேட்டு, பக்கத்து வீட்டுகாரன் 5 மணித்தியாலம்தான் வேலை செய்கின்றார் மெர்சடீச் பென்ஸ் வைதிருக்கின்றான், இவர் 10, 12 மணித்தியாலம் வேலைசெய்கிறேன் என்கின்றார் ஒன்றும் மிச்சமிலை. இவரை கட்டி 5 சதத்திற்கும் பிரயோஜனமில்ல்லை என்ர வாழ்க்கை.

இப்பொழுது உங்கள் ரியக்கஷன் எப்படி இருக்கும்?

உண்மையா மனதில் இருந்து பதிலெழுதுங்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

"கண்டதும் கேட்டதும்" எழுதுங்கள் எதிர்பார்க்கிறோம்.....! tw_blush:

 --- கூடையில் கணவனை தூக்கி கொண்டு போனது நளாயினி என்று நினைக்கிறேன்.....!

--- வள்ளுவன் வாசுகி தம்பதியர் உடுத்தும் ஆடைகளில் கூட ஆசைகளை துறந்து வாழ்ந்தவர்கள். சமைத்து விட்டு காத்திருப்பது யாருடைய நிர்பந்தத்தினாலும் அல்ல. அது அவர்களது அன்பின் மேன்மை. எங்கள் வீடுகளிலும் இது சாதாரணமாய் நடக்கும் ஒன்றுதான். பஞ்சபூதங்களும் அவர்களுக்கு கட்டுபட்டதாக இருந்தது. இன்றும் திருமணங்களில் "வள்ளுவன் வாசுகி" போல் என்று வாழ்த்துகின்றோம் என்றால் .... அவர்கள் எல்லாம் விதிவிலக்குகள்.....!  tw_blush: 

 

தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...சுவியர்!

எழுதும் போதே....தவறு என்று ஓரளவுக்குத் தெரிந்திருந்தது! கோவலன் நொண்டி இல்லை என்றும் தெரியும்! இருந்தாலும் ...எழுதி விட்டேன்!

Link to comment
Share on other sites

56 minutes ago, colomban said:

நான் ஓர் கேள்வி கேட்கின்றேன். கடும் குளிரில் இரவிரவாக வேலை செய்துவிட்டு வருகின்றீர்கள். உடலெல்லாம் வலிக்கிறது. மேலதிகாரியும் கூட இரக்கமின்றி நடந்துகின்றார். இருக்கின்ற வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. மனம் சோர்ந்து வருகின்றீர்கள். வீட்டை வந்தவுடன் மனைவி போனில் யாரிடமோ கூறுகின்றது உங்களுக்கு கேட்கின்றது.

இந்த வந்துட்டார் வெத்து வேட்டு, பக்கத்து வீட்டுகாரன் 5 மணித்தியாலம்தான் வேலை செய்கின்றார் மெர்சடீச் பென்ஸ் வைதிருக்கின்றான், இவர் 10, 12 மணித்தியாலம் வேலைசெய்கிறேன் என்கின்றார் ஒன்றும் மிச்சமிலை. இவரை கட்டி 5 சதத்திற்கும் பிரயோஜனமில்ல்லை என்ர வாழ்க்கை.

இப்பொழுது உங்கள் ரியக்கஷன் எப்படி இருக்கும்?

உண்மையா மனதில் இருந்து பதிலெழுதுங்கள்?

 

கொழும்பான்,
நாம் வாழ்வது 21ஆம் நூற்றாண்டில். ஆணோ பெண்ணோ ஒருவரோடு வாழ இயலாத பட்சத்தில் தமது வாழ்க்கையைத் தீர்மானிக்க வேறு வழிகள் உள்ளன. ஒருவரை வெத்து வேட்டு என்று இன்னொருவரிடம் கூறும் அளவுவுக்கு அப்பாவியாக இதுவரை அப்பெண்ணுடன் வாழ்ந்தது அவரின் தவறு.

கணவன் மனைவிக்குள் ஆயிரம் இருக்கும். துன்பத்தையே இன்பமாக மாற்றி வாழ்வதுதான் எமது கலாச்சாரம் என்று நீங்களும் சொல்ல வராதீர்கள். இங்கே துன்பத்தை இன்பமாக மாற்ற முடியாத அளவுக்கு மனைவி இறந்து விட்டாள். மனைவியில் ஆயிரம் குறை இருந்தாலும் கொல்வதற்குக் கணவனுக்கு உரிமை இல்லை. மனைவியைக் கௌரவக் கொலை செய்துகொண்டிருந்த முஸ்லிம் நாடுகளிலேயே அதற்கெதிராகச் சட்டங்கள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதைவிடக் கேவலமாக எமது கலாச்சாரத்தைத் தரப்படுத்த வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நான் ஓர் கேள்வி கேட்கின்றேன். கடும் குளிரில் இரவிரவாக வேலை செய்துவிட்டு வருகின்றீர்கள். உடலெல்லாம் வலிக்கிறது. மேலதிகாரியும் கூட இரக்கமின்றி நடந்துகின்றார். இருக்கின்ற வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. மனம் சோர்ந்து வருகின்றீர்கள். வீட்டை வந்தவுடன் மனைவி போனில் யாரிடமோ கூறுகின்றது உங்களுக்கு கேட்கின்றது.

இந்த வந்துட்டார் வெத்து வேட்டு, பக்கத்து வீட்டுகாரன் 5 மணித்தியாலம்தான் வேலை செய்கின்றார் மெர்சடீச் பென்ஸ் வைதிருக்கின்றான், இவர் 10, 12 மணித்தியாலம் வேலைசெய்கிறேன் என்கின்றார் ஒன்றும் மிச்சமிலை. இவரை கட்டி 5 சதத்திற்கும் பிரயோஜனமில்ல்லை என்ர வாழ்க்கை.

இப்பொழுது உங்கள் ரியக்கஷன் எப்படி இருக்கும்?

உண்மையா மனதில் இருந்து பதிலெழுதுங்கள்?

 

அதிலென்ன தவறு கொழும்பான்?

அப்படி நாலு கிளியல் விழுவதால் தான், உழைக்காமல் சோம்பிக்கிடவாது, ஆம்பிளை எழும்பி ஓடுகிறான். இல்லாவிடில் பிரித்தானியா போன்ற நாடுகளில், அரசு தரும் பிச்சை காசை வாங்கிக் கொண்டு, விஜய் டிவி உடன், பீர் கானுடன் மடங்கி விடுவார்கள்.

உத்தியோகம் புருஷ லட்ச்சணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுநேர குடியும், குடும்பத்தையே கவனிக்காத தன்மையும், வீட்டுப்பக்கமே வாரக்கணக்காக போகாமலும், அளவுக்குமீறிய கடன்படலும் என்று வாழும் பல குடும்ப தலைவர்களிடம் சிக்கிகொண்டு அடி,உதை,கண்ணீர் என்று அனைத்தையும் தாங்கிகொண்டு  வீட்டுக்குள்ளும் மனசுக்குள்ளும் தமது துயரங்களை சுமந்து வாழும் எமது பெண்கள் ஏராளம்!

விவாகரத்து, பிரிந்து வாழுதல், வேறு துணை தேடுதல் என்று பல ஆலோசனைகள் சொல்லும் இந்த சமூகம், அதன்படியே வாழ தலைப்படும் பெண்களுக்கு முதலில் கொடுக்கும் பட்டம், அவள் ஓடி போயிட்டாளாம், முதலே வேற யாரோடையோ லிங்க்’காம், இவ இப்படி இருந்ததாலதான் அவன் முழு குடிகாரன் ஆனானாம் என்பது!

மரணம்வரை பல பெண்கள்  தமக்கு ஏற்படும் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ்வதற்கு, அவர்களின் வீட்டு ஆண்கள் மட்டும் காரணமல்ல, விஷயம் அறிந்தமாதிரி தமது பொழுதுபோக்கு ருசிக்கு பெண்களின் துயரங்களை,அவர்களின் நடத்தமீதான கண்ணோட்டத்துடன் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் வெளியில் இருக்கும் ஆண்கள் சமூகமும் பிரதான காரணம்!

அதுவே வெளியுலகத்துக்கு அஞ்சி துன்பங்களை தாங்கிவாழ்ந்து முடிவில் ஒருநாள் ரோட்டோரமாய் அனைத்தையும் இழந்து அந்த ஆத்மாக்கள் பூமியைவிட்டு கிளம்பி சென்றுவிடுகின்றன!

Link to comment
Share on other sites

On 12/16/2017 at 5:33 PM, நிலாமதி said:

 பாவம் அந்த பெண் மணி ...கணவன்  எந்நேரமும் குடி ,அடி தடி  போலீஸ் வரவு என்று இருந்தால் பிரித்து வைத்திருக்கலாம் தானே.. ..தாயற்ற   பிள்ளைகள் ..குடிகார  தந்தை ...இன்னும் மோசமான நிலை....

இப்படியான நிலமையில் உள்ள பெண்களுக்கு உள்ள பொதுவான பிரச்சனை பிள்ளைகளுக்காக குடித்துவிட்டு பிரச்சனை பண்ணும் கணவனுடன் குடும்பம் நடத்தவேண்டிய தேவை. பிள்ளைகள் இல்லை என்றால் பரவாயில்லை, ஆனால் பிள்ளைகள் உள்ள தாய்மார் பிரிந்துவாழ்வது இடர்மிகுந்த பயணம். திருமணம் செய்யமுன்னமே ஆளை நல்லாய் அறிந்துசெய்யவேண்டும் இல்லாவிட்டால் கஸ்டம்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
    • புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும். என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும். இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும். உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும். திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல். @பெருமாள் # எரியுதடி மாலா
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.