Jump to content

இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம்


Recommended Posts

இயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்! - மாயவன் விமர்சனம்

 
 

சாகா வரத்துக்காக கூடு விட்டு கூடு பாயும் விட்டலாச்சார்யா கான்செப்டை, நியூரோ சயின்ஸ், பிரெய்ன் நியூரான் இன்ஜெக்‌ஷன் என அல்ட்ரா மாடர்னாக்கினால் கிடைப்பவனே மாயவன்! 

மாயவன்

 

போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் (சந்தீப் கிஷன்) ஒரு திருடனைத் துரத்தும்போது எதேச்சையாக ஒரு கொலையைப் பார்க்கிறார். கொலையாளியைப் பிடிக்கும்  முயற்சியில் இவரும் சாவின் விளிம்புவரை சென்று திரும்புகிறார். நான்கு மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் வேலைக்குச் சேர முடிவெடுக்கும் சந்தீப்பை, மனநல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதற்குப் பின் பணியைத் தொடருமாறு உத்தரவிடுகிறார் டி.ஜி.பி. மனநல மருத்துவராக வரும் ஆதிரை (லாவண்யா திரிபாதி) "உங்கள் மனநிலை இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை, ரெஸ்ட் எடுக்குறது நல்லது" என்று அறிவுரை சொல்கிறார். அவர் பேச்சையும் மீறி தன் பணியைத் தொடங்குகிறார் குமரன். மீண்டும் அதே சாயலில் ஒரு கொலை நடக்கிறது. புலன்விசாரணைக்குச் செல்லும் குமரனுக்கு சிறு வயதில் தனக்கு நிகழ்ந்த விபத்து ஞாபகம் வர, மன அழுத்தத்துக்கு ஆளாகிறார். கட்டுப்பாட்டை இழந்த குமரனுக்கு லாவண்யா ட்ரீட்மென்ட் அளிக்கிறார். இதற்கிடையில் மீண்டும் ஒரு கொலை நடக்க, அங்கே போய்ப் பார்த்தால், ஏற்கெனவே நிகழ்ந்த கொலையின் சாயல். அடுத்தடுத்து இப்படியான சம்பவங்கள் நடக்க, யார் கொலையாளி என்பதை சந்தீப் கண்டுபிடித்தாரா, கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை அறிவியல் உண்மைகளுடன் கற்பனை கலந்து, விறுவிறுப்பாகக் கதை சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநரும் தயாரிப்பாளருமான சி.வி.குமார்

படத்தில் பாராட்டக்கூடிய முதல் விஷயம் இயக்குநர் சி.வி.குமாரின் டீட்டெய்லிங் ஒர்க். `நினைவுகளின் தொகுப்புதான் நாம்', நம் நியூரான் செல்களில் இருக்கும் நினைவுகளை மொத்தமாக சேகரித்து வேறொரு உடலுக்கு அதைக் கடத்த முடியுமென்றும், அதன்மூலம் ஒருவர் நினைத்தால் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வெவ்வேறு உடல்களில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ முடியும் என்றும் பல அறிவியல் தகவல்களைத் தொகுத்து த்ரில்லர் கதையாக்கியுள்ளார்.

Sundeep Kishan

கொஞ்சம் ஏமாந்தால் குழப்பிவிடும் இடியாப்பச் சிக்கல் கதையையும்கூட நம்பும்படி அறிவியல் ஆராய்ச்சிகள், போலீஸின் புலன் விசாரணை என பக்காவாக ஸ்கிரிப்ட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் திரைக்கதை எழுதியிருக்கும் நலன் குமரசாமி. மூளை ஆராய்ச்சி தொடர்பான காட்சிகள் அல்டிமேட் ரகம். இன்ஸ்பெக்டராக வரும் சந்தீப் கிஷன் பக்கா போலீஸாகவே தன்னை உருமாற்றியிருக்கிறார். சண்டைக் காட்சிகள், இன்வெஸ்டிகேஷன் சீன் எல்லாவற்றிலும் போலீஸாகவே மாறி நடித்திருக்கிறார். வழக்கமான ஹீரோயினாக இல்லாமல், லாவண்யாவுக்கு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம். இக்கட்டில் மாட்டிக்கொள்ளும் சந்தீப்பை மீட்டெடுக்க, அவருக்கு கொடுக்கும் சிகிச்சை ரகங்கள் ரசிக்க வைக்கின்றன. ஹீரோ சந்திப்பின் ஒட்டு மீசையும் ஹீரோயின் லாவண்யாவின் ஒட்டாத வாயசைவும் பாதி இடங்களில் உறுத்தல். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பகவதி பெருமாளுக்கு (பக்ஸ்) இந்தப் படத்தில் பேர் சொல்லும்படியான ரோல், நன்றாக நடித்திருக்கிறார் . ’மெல்ல மெல்ல’ பாடலில் மென்மை காட்டும் ஜிப்ரான், பின்னணி இசையில் அதிரடிக்கிறார். 

படத்தின் சர்ப்ரைஸ் மெட்டீரியல் ஜாக்கி ஷெராப்! ஆனால், அவரை முழுமையாகப் பயன்படுத்தாமல், சிறப்புத் தோற்றம் லெவலிலேயே டீல் செய்திருப்பதால் அந்த கதாபாத்திரம் டல்லடிக்கிறது. இவரைத் தவிர ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, பாக்ஸர் தீனா போன்றோர் கொடுத்த ரோலை சரியாகச் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் + கலை இயக்குநர் கோபி ஆனந்த் கூட்டணி, ஆய்வுக் கூட காட்சிகளை நேர்த்தியாகக் காட்டியிருக்கிறது. படத்துக்குரிய பரபர உணர்வை முடிந்தவரைக் கொடுக்கிறது லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு. 2037-லும் இளையராஜா பாடல்களுக்கு அழிவில்லை என்ற படத்தின் துவக்கமும் க்ளைமாக்ஸிலும் காட்டப்படும் குறியீடும் செம. 

Jackie Shroff

படத்தில் காமெடிக்கும் ரொமான்ஸ்க்கும் ஸ்கோப் இருந்தும் அதைத் தவிர்த்துவிட்டு, த்ரிலுக்கே முதலிடம் கொடுத்திருக்கிறார்கள். பாராட்டத்தக்கது என்றாலும் மொத்தப் படமும் மூளை மற்றும் மூளை சார்ந்த இடத்துக்குள்ளேயே சுற்றுவதால் ஒரு கட்டத்தில் நம் மூளையும் டயர்டாகி விடுகிறது. ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ப்ரேக் இல்லாமல் த்ரில்லர் பாணியில் பரபரப்பை புகுத்த முயற்சித்ததால் 2 மணி நேரப் படம், 3 மணி நேரம் பார்த்த எஃபெக்டைக் கொடுக்கிறது. தோற்றத்திலும், பாடி லாங்குவேஜிலும் போலீஸாக மிரட்டிய சந்தீப், சீரியஸான சில சீன்களில் எக்ஸ்ப்ரெஷன்களை தவறவிடுகிறார். அவரை இன்னமும் பயன்படுத்தி இருக்கலாம். அதேபோல மிரட்டல் வில்லன் டேனியல் பாலாஜி கதாபாத்திரத்துக்கும் இன்னும் வெயிட் கூட்டி இருக்கலாம். மூளை சம்மந்தப்பட்ட ஆராய்ச்சி, விசாரணை எனப் படத்தில் வசனங்களில் இறங்கி அடிக்கும் வாய்ப்பு மிஸ்ஸிங். வசன ஏரியாவில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிலும் நிறைய இடங்களில் லிப்ஸிங்க் ஆகாமல் வசனங்கள் துருத்தியபடி இருக்கின்றன. இடைவேளை வரைக்கும் சஸ்பென்ஸை தக்கவைப்பதற்காக இயக்குநர் எடுத்த முயற்சி ஓகேதான் என்றாலும் இடைவேளைக்குப் பின் அவர் கதை சொல்ல எடுத்துக்கொண்ட நேரம் சற்று நீளமே. 

 

விஞ்ஞானி பிரமோத், பலரைத் தூக்கிச்சென்று தன் 'ஆராய்ச்சி'க்குப் பயன்படுத்துவதில் நம்பகத்தன்மை போதவில்லை. அவர் 'சாகாவரம்' பெற நினைப்பது தன் மேதைமையைக் காட்டுவதற்கா, பணத்துக்கா, அதிகாரத்துக்கா என்ற நோக்கம் தெளிவாக இல்லாததும் முக்கியமான பலவீனம். ஆனால் 'சாகவே கூடாது' என்ற மனிதர்களின் ஆசையையும் மூளையின் அபாரமான ஆற்றல் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகளையும் இணைத்து ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் தந்த விதத்தில் இந்த 'மாயவன் புராஜெக்ட்' கவர்கிறது. எண்ட் கார்டில் இந்த புராஜெக்ட் குறித்த பகீர் ரியல்டைம் அப்டேட்களை காட்டுகிறார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் இவர்கள் சொல்வதுபோன்ற விபரீதங்கள் நிகழ்ந்தால் 'மாயவன்' மறக்க முடியாத சினிமாவாகிவிடும். 

https://cinema.vikatan.com/movie-review/110842-maayavan-movie-review.html

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நண்பர் சிபாரிசு செய்து 'நல்ல திரில்லர் படம்' அவசியம் பாருங்களென சொன்னார்.

சரி, விடுமுறை நாள் தானே பார்க்கலாமென சாய்வாக உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தேன்.

முதல் பத்து நிமிடங்களுக்கு வழக்கமான கொலைப் படம்தானென முடிவுகட்டினேன்..

படம் செல்லச் செல்ல நம்மை முழுதாக உள்ளிழுத்துவிடுகிறது கதையின் கருவும், படமாக்கப்பட்டுள்ள விதமும்..

நல்ல கிராபிக்ஸ், சயன்ஸ் ஃபிக்ஸன் கதை..

தமிழில் இம்மாதிரி ஒரு சில படங்களும் வருவது அறுதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான மரத்தை சுத்தி கதாநாயகனும் நாயகியும் ஓடி பாட்டு பாடாமல் இப்படியான கதைகளில் திரும்புவது நல்ல விடயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.