Jump to content

கடந்த ஏழு வருடங்கள் (2010 °முதல்)


Recommended Posts

இந்த திரியில் எனது ஆஃப்கானிஸ்தான் பயணத்திற்க்குப் பிறகு நடந்த விந்தையான, விசித்திரமான, புரிந்தததுமாய், புரியாததுமாய் உள்ள அனுபவங்களை எனக்கு பறிச்சையுமான தமிழில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 

நான் எழுதும் தமிழை சற்று பெரிய மனது கொண்டு பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக  பகிறப் படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது மியாவ். படிக்க ஆவலாக உள்ளோம்.

மகாபாரதத்தில் வரும் காந்தாரியும் சகுனியும் காந்தார நாட்டவர்கள். அது தற்போதைய கண்டகார் என்று சொல்கின்றார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் மிகவும் பாதுகாப்பற்ற இடம். எப்படி போகத் துணிந்தீர்கள் என்பதையும் அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

சரி மியாவ்.. தொடருங்கள்.

1 hour ago, மியாவ் said:

 

 

 

என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக  பகிறப் படும்.

 

தமிழை அக்குவேறு ஆணிவேறாக்காமல் விட்டுவிடுங்கள்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதிக் கொண்டு வாருங்கள் பூனையாரே, நாங்கள் ஆவலாக வாசிக்க காத்திருக்கின்றோம்.படங்களும் இருந்தால் இணையுங்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் கூறியது போல படத்துடன் இணையுங்கள், ஆவலாக இருக்கின்றோம்

ஆமா இது ஏன் “பேசாப் பொருள்” என்ற பகுதிக்குள்???

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

சுவியர் கூறியது போல படத்துடன் இணையுங்கள், ஆவலாக இருக்கின்றோம்

ஆமா இது ஏன் “பேசாப் பொருள்” என்ற பகுதிக்குள்???

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மியாவ் said:

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

நல்லது, ஆனால் இங்கு நீங்கள் “முழுங்காமல்” எழுதலாம்......

Link to comment
Share on other sites

 

20 hours ago, கிருபன் said:

நல்லது மியாவ். படிக்க ஆவலாக உள்ளோம்.

மகாபாரதத்தில் வரும் காந்தாரியும் சகுனியும் காந்தார நாட்டவர்கள். அது தற்போதைய கண்டகார் என்று சொல்கின்றார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் மிகவும் பாதுகாப்பற்ற இடம். எப்படி போகத் துணிந்தீர்கள் என்பதையும் அறிய ஆவல்.

போனதென்னவோ "அமேரிக்கன் மிலிட்டரி பேசில் (Military Base) வேலை செய்வதற்க்கு "தான். அதனால் பாதுகாப்பை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.

வாட்டி எடுத்தது பனிப் பொழிவும் (Snow Fall), வெயிலும் தான். 

20 hours ago, நவீனன் said:

சரி மியாவ்.. தொடருங்கள்.

 

தமிழை அக்குவேறு ஆணிவேறாக்காமல் விட்டுவிடுங்கள்..:grin:

முயற்ச்சிக்கிறேன்.:cool:

Link to comment
Share on other sites

எழுதுங்கள் மியாவ்.

எனது நண்பன் ஒருவன் தமிழ்நாடு வழியாக தரைப் பாதையூடாக ஆப்கானிஸ்தான் வரை பயணித்து ஐரோப்பா வந்தவன். தமிழ்நாட்டை விட்டு  மேல் நோக்கிச் செல்லச் செல்ல மனிதாபிமானம் படிப்படியாகக் குறைந்து பாகிஸ்தான் வந்ததும் மனித நேயம் என்பதையே முற்றாகக் காண முடியாது என்பான். உண்மையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மியாவ் said:

நல்ல கேள்வி.

இந்த அனுபவத்தில் சிலவற்றை எங்கு கூறினாலும் மேலும் கீழுமாக பார்க்கின்றனர்.  நம்ப மறுக்கின்றனர். (Looking me like that im crazy) எனது குடும்பத்தினர் உட்பட. நெறுங்கிய நண்பர்கள் கூட.

பலவற்றை மென்று முழுங்கி "பேசாப் பொருளாக" மௌனப் படுத்துவதாக உள்ளது.

ஆகவே தான்.

விளங்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் நீங்கள் நேட்டோ படையில் சேர்ந்து யோயிருக்கிறீங்க  போல.

Link to comment
Share on other sites

7 minutes ago, இணையவன் said:

எழுதுங்கள் மியாவ்.

எனது நண்பன் ஒருவன் தமிழ்நாடு வழியாக தரைப் பாதையூடாக ஆப்கானிஸ்தான் வரை பயணித்து ஐரோப்பா வந்தவன். தமிழ்நாட்டை விட்டு  மேல் நோக்கிச் செல்லச் செல்ல மனிதாபிமானம் படிப்படியாகக் குறைந்து பாகிஸ்தான் வந்ததும் மனித நேயம் என்பதையே முற்றாகக் காண முடியாது என்பான். உண்மையா ?

தமிழ்நாட்டை தாண்டி கேராளவிற்க்கு போனாலே மனிதாபிமானம் என்ன விலை என்று கேட்ப்பார்கள்.

ஆப்கானிஸ்தான் மலிட்டரி பேசில் பல நாட்டு மக்களான போஸ்னியன்ஸ், இத்தாலி போன்ற மக்களை காண நேர்ந்தது.

அங்கு இரண்டாவதாக எங்களுக்கு மேலாளராக வந்த அமெரிக்க கறுப்பரினத்தை (நம்மினம் தான்) சேர்ந்தவர் " (Stephen Fears)ஆஸ் ஹோல்ஸ் ஆர் எவ்ரிவேர்" என்றார். அதுவும் கூட உண்மை தானே.

இதில் ஒரு இத்தாலி பெண் (Daniela Scordia) தான் மிக உதவியாக இருந்தார். அவரும் நானும் அடிக்கடி புகைத்துக் கொண்டு பேசிக் கொள்வோம். அங்கு சக ஊழியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்பொழுது டெக்சாசில் இருக்கிறார்.

அவர் இருப்பு தனித் தமிழனாக வலம் வந்த சமையத்தில் சற்று ஆருதலாக இருந்தது.

I'm going out of my mind என்ற பொழுது Norbert (Philippino settled in america) and Daniela Scordia அதற்க்கு காரணமானவரான முதலாம் மேலாளரை (Jason Anderson....(வெள்ளைகாரன் "ஜார்ஜியா")..) இடமாற்றம் செய்ய வைத்தார்கள் என்பதை "ஆஸ் ஹோல்ஸ் ஆர் எவ்ரிவேர்" என்ற பொழுது யூகித்தேன்.

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

எழுதிக் கொண்டு வாருங்கள் பூனையாரே, நாங்கள் ஆவலாக வாசிக்க காத்திருக்கின்றோம்.படங்களும் இருந்தால் இணையுங்கள்.....!  tw_blush:

படங்களை இணைக்க இயல வில்லை. Upload failed என்று வருகிறது. அங்கு ஒரு வருடம் மட்டும் தான் இருந்தேன். 

மேலும் புகை படம் எடுப்பவதற்க்கு அங்கு தடை என்பதால் சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது..

Link to comment
Share on other sites

14 minutes ago, ஈழப்பிரியன் said:

மியாவ் நீங்கள் நேட்டோ படையில் சேர்ந்து யோயிருக்கிறீங்க  போல.

உண்மை என்னமோ அது தான். ஆனால் நேட்டோவுடன் சேர்ந்து போகவில்லை.

அவர்களுக்கு வேலை செய்ய சென்றோம். அங்கு குவாலிட்டி கன்ட்ரோல் டிப்பார்ட்மென்ட்டில்லை வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு மியாவ், உங்களின் அனுபவங்களை பகிருங்கள் படிப்பதற்கு ஆவலாக உள்ளோம். 
 

Link to comment
Share on other sites

ஒரு செயலை ஆரம்பித்தற்க்கு பிறகு தான் அதன் நிறை குறைகளை உணர முடிகிறது. 

இந்த அளவிற்க்கு வரவேற்ப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை. 

இதை ஆரமபிப்பதற்க்கு என்னை தயார்படுத்திக் கொண்டு பகிர்ந்து கொள்கிறேன்.

இரண்டு வருட காண்ட்ராக்டில் சென்று மிலிட்டரி போலிசால் கைது செய்யப் பட்டு ஒரு வருட முடிவிலேயே தமிழ் நாட்டிற்க்கு அனுப்பப் பட்டேன்.

ஏன் எதற்க்கு என்பதை ஆஃப்கானிஸ்தான் எப்படி சென்றேன், ஒரு வருடம் என்ன நடந்தது என்ற பதிவுகளுக்குப் பிறகு தெரிய வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

மியாவ்... பூனை மாதிரி  இருந்து கொண்டு,  பெரிய..... கதையுடன் வந்து இருக்கின்றீர்கள். :grin:
உங்களது,  அமெரிக்க இராணுவத் தள வேலை  அனுபவங்கள்...
அதுகும், ஆப்கானிஸ்தானில் எனும் போது... வாசிக்கும் ஆவலை தூண்டி விட்டது.

இது போன்ற,  அனுபவங்களை.... வேறு  எந்த இடத்திலும் வாசிக்கவில்லை என்பதால்,
ஆவலுடன்... உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

அடியேனும் வந்துவிட்டேன் ..........

மியாவ் தான் ...
சுணக்கம்!

Link to comment
Share on other sites

21 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

மியாவ்... பூனை மாதிரி  இருந்து கொண்டு,  பெரிய..... கதையுடன் வந்து இருக்கின்றீர்கள். :grin:
உங்களது,  அமெரிக்க இராணுவத் தள வேலை  அனுபவங்கள்...
அதுகும், ஆப்கானிஸ்தானில் எனும் போது... வாசிக்கும் ஆவலை தூண்டி விட்டது.

இது போன்ற,  அனுபவங்களை.... வேறு  எந்த இடத்திலும் வாசிக்கவில்லை என்பதால்,
ஆவலுடன்... உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றேன். :)

 

16 hours ago, குமாரசாமி said:

மியாவ் இன்னும் எழுத தொடங்கவேயில்லை........அதுக்கிடையிலை  கருவாட்டுக்கு முன்னாலை பூனையள் குந்தின மாதிரி எல்லாச்சனமும் வரிசையில நிக்கினம்......சரி நானும் அந்த வரிசையிலை நிக்கிறம் மியாவ்.....
கொஞ்சம் வித்தியாசமான கட்டுரையாய் இருக்குமெண்டு நினைக்கிறன்.
வெல் கம்.:grin:

 

9 hours ago, Maruthankerny said:

அடியேனும் வந்துவிட்டேன் ..........

மியாவ் தான் ...
சுணக்கம்!

இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்றும், முறையான தமிழெழுத்தறிவு இல்லாமலும் உணர்வுகளால் மட்டுமே கடந்த ஏழு வருடங்களில் அறிந்துணர்ந்ததை எப்படி வார்த்தைகளால் வடிவுபடுத்துவது என்ற குழப்பத்தில் நேற்றே மன்னிப்பு கேட்டு திரிக்கு முற்றுப்பள்ளி வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.

ஆனால் நேற்று நடந்தது வேறாகிவிட்டது.

இத்தனை பேர் எதிபார்ப்பை எப்படி என் தமிழைக் கொண்டு பூர்த்தி செய்வது என்ற ஐயம் வருகிது.

ஈசன் மேல் பாரத்தை போட்டு ஆரம்பித்து தொடர்கிகிறேன். 

என்னுடைய பதிவு இந்திய நேரப்படி 8 மணிக்கு மேல் பதியப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு பூனையாரே நாங்கள் 5ம் வகுப்பில் இருந்தே கோடிட்ட இடங்களை நிரப்பி வாசித்தும், விகடகவி போன்ற சொற்களை மாத்தி மாத்தி வாசித்தும், பழைய காணி உறுதிகளை குத்துக்கள் இட்டு வாசித்தும், எழுத்து பிழையான வாக்கியங்களை நேராக்கி வாசித்தும்,இவை எல்லாவற்றையும் விட அர்த்தமே இல்லாமல் பெட்டையள் எழுதிய கேவலமான காதல் கடிதங்களை எல்லாம் ஆவலோடு படித்து அதில் பல அர்த்தங்கள் கண்டு பிடித்து அந்த வாரம் முழுதும் புளகாங்கிதம் அடைந்து கடந்து வந்திருக்கின்றோம், ஆகவே அஞ்சற்க.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

படிப்பில் சராசரியான மாணவனுக்கும் கீழ் தான். வெளிநாடு போகும் ஆசையில் BSC Catering and Hotel Management படித்தேன். படிக்கும் பொழுதே ஹோட்டல் இன்டஸ்ட்ரி பிடிக்காமல் போய்விட்டது. 

பிறகு எனது கரியரை சிட்டி பேங்கில் தொடங்கி ஐசிஐசிஐ எச்டிஎஃப்சி என்று 2009 டிசம்பர் மாதம் வரை சென்னையில் வேலை.

ஐசிஐசிஐ ல் வேலை செய்த பொழுது அலுவலக நண்பர் ஏழு பேர் உல்லாச பயணமாக ஒரு வாரம் கேரளா சென்றிருந்தோம். அதில் ஒரு நாள் ஒன்பது மணி அளவில் இரவு உணவிற்காக வெளியில் ஒரு சிறிய ஹோட்டலலுக்கு சென்று 

அண்ணா ஒரு இருபது தோசை தேவை

தோசைலாம் இல்ல போ

இதோ இருக்கேனா

அது எல்லாத்தையும் உங்க கிட்ட குடுத்துட்டா வரவங்களுக்கு என்ன சொல்றது 

எனது நண்பன் ஒருவன், நாங்க சும்மா ஒண்ணும் கேக்கல

தரமுடியாது போ

சரி பக்கத்துல வேர ஏதாவது ஹோட்டல் இருக்கா

இடது கையை வீசிய படி அங்க இருக்கு போ

சிறிது தூரம் நடந்தோம், இரண்டு நபர் பேசிக் கொண்டிருந்தார்கள். அண்ணா இங்க பக்கத்துல ஏதாவது ஹொட்டல் இருக்கா

அங்க இருக்கு போ

எங்கணா

பேச்சு தொடர்கிறது

அண்ணா  

அண்ணா

அங்க இருக்கு போ

அன்று என்ன சாப்பிட்டோம் என்பது நியாபகம் இல்லை.

மறு நாள் வீகா லேண்டிர்க்கு (Amusement park) செல்வதற்க்கு பேருந்து நிறுத்தத்தில்

பேருந்து வந்த உடன் 

என் நண்பன் ஒருவன்,  இந்த பஸ் வீகாலேண்ட் போகுமா?

நடத்துனர் சொல்கிறார், போடா பட்டி

Gods Own Land ஐ மிகவும் ரசித்தோம்.

மக்கள் தான் அப்பாவிகளாக இருக்கின்றனர். அன்பானவர்களாகவும் இருக்கின்றனர்

பிறகு எச்டிஎஃப்சி யில் வேலை, ஒன்றரை ஆண்டிற்கு பிறகு என் நண்பன் (சுதாகர்) மூலம் ஒரு ஏஜன்சியின் மூலம் நானும் என் நண்பனும் (செந்தமிழ் செல்வன்) துபாயில் இறங்கினோம். அங்கிருந்து கள்ள ஃப்ளைட்டில் (ராணுவ விமானம்)ஆஃப்கானிஸ்தானில் பக்ராம் தலைமை தளத்தில் இறங்கினேன். என் நண்பன் ஈராக்கிற்க்கு அனுப்பப்பட்டான்.

ஆஃப்கானிஸ்தானில் இறங்கிய சமையத்திலேயே குளிரை உணர துடங்கியாகி விட்டது. நடைபாதையின் ஓரத்தில் பனி வெள்ள வெளீர் என்று படர்ந்து கிடந்ததை அதிசையமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஃபிலிப்பினோஸ், வட இந்தியர்கள், நைஜுரியன்ஸ் என்று வரிசையாக கணக்கெடுப்பதற்க்காக நின்று கொண்டிருந்தோம்....

..........

Link to comment
Share on other sites

39 minutes ago, suvy said:

மாண்புமிகு பூனையாரே நாங்கள் 5ம் வகுப்பில் இருந்தே கோடிட்ட இடங்களை நிரப்பி வாசித்தும், விகடகவி போன்ற சொற்களை மாத்தி மாத்தி வாசித்தும், பழைய காணி உறுதிகளை குத்துக்கள் இட்டு வாசித்தும், எழுத்து பிழையான வாக்கியங்களை நேராக்கி வாசித்தும்,இவை எல்லாவற்றையும் விட அர்த்தமே இல்லாமல் பெட்டையள் எழுதிய கேவலமான காதல் கடிதங்களை எல்லாம் ஆவலோடு படித்து அதில் பல அர்த்தங்கள் கண்டு பிடித்து அந்த வாரம் முழுதும் புளகாங்கிதம் அடைந்து கடந்து வந்திருக்கின்றோம், ஆகவே அஞ்சற்க.....!  tw_blush: 

வீசிய காற்றில் உங்கள் நெல்லையும் தூற்றி விட்டுள்ளீர்கள். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாப்பொருளுக்குள் எழுதுவது என்பது மிக நடுக்கமான விடயங்களாக இருக்கும். இந்த மியாவ் என்ன எழுதப் போறார் என்று எதேதோ எல்லாம் கற்பனையில் வந்து போகுது.... இதில் மியாவின் பதிவுகள் பூர்த்தி அடையும்போது மியாவ் மியாவ்வாக இருக்கோணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

கடல் தாண்டி பணமீட்ட

அடிமைப் பட்டம் பெற்று

அடிமையை விலக்கி 

பட்டத்தை வைத்து

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டி

பெருநிறுவன முதலைகளின் வாய்க்கு

தீனி போட முடியாமல், மண்டை

வெடிக்கும் அழுத்தத்தில் உத்யோகத்தை

விட்டொழித்து, வல்லரசை ஆட்டிப் பார்த்த

பெருந்தாடியின் மசுறை வளிக்க

ட்ரில்லியன் கணக்கில் முதலீடு செய்து

போர் தொடுக்க சகல சௌகரியத்துடன்

ஏற்படுத்திய தளத்திற்க்கு பணம் காண சென்று

தரம் பார்க்கும் துறையில் அமர்ந்து

பூவோடு நாரும் மணக்கும் என்பதாக

ராணுவ வீரர்களுக்கு ஏற்படுத்திய

உணவு வசதிக்கான இடத்தில்

காணுமிடமெங்கும் உலகிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர தீனிகளைக் கண்டு

பூரித்து மலைத்து சுயநினைவுக்கு வருவதற்க்கு வினாடிகள் தாண்டி

கரும்புக் காட்டுக்குள் யானை பகுந்ததது போல் புகுந்து

அனைத்தைதையும் ருசித்து கபளீகரம் செய்து

12/7 வேலையில் தினம் ஒரு மணி நேர அலுவலில் மிச்சம் 11 மணி நேரத்தில் புகைப்பதும், களத்தில் கருத்துக்கள் பதிவதுமாய் நகர்ந்த பொழுது

உணவு வசதிக்கான இடத்தில் தினமும் காலை "ஃபோர் எக் ஸ்க்ராம்பில்ட் வித் ஆனியன், பெப்பர், அலப்பீனியோஸ் ஆன்ட் ச்சீஸ்" என்பதையே வாடிக்கையாக கொண்டு தின்ற

சில நாட்கள் கழித்து உணவின் அளவு குறைய துடங்க, கவனிக்க சில நாள் படித்து, உத்தரவை பின்பற்றி உணவை தயார் செய்து தரும் வெள்ளை இனத்தை சேர்ந்த போஸ்னியன் இரண்டு முட்டைகளை மட்டுமே உடைத்ததை பார்த்து "ஐ செட் ஃபோர் எக்ஸ், yeah ஃபோர் எக்ஸ், எஸ் எஸ் போர் எக்ஸ் என்று சிறிது கடினமாக சொல்லிய பொழுது பின் நின்று பலமாக சிரித்து கொண்டிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை கவனிக்க முடிந்தது. எனது உணவை பெற்றுக்கொண்டு "ஃபக்கர்" என்று சொல்லி விட்டு திரும்பிய பொழுது வலது புறம் ஒரு வெள்ளையின ராணுவ வீரன் முறைத்து பார்த்த படி நின்று கொண்டு இருந்ததை காண நேர்ந்தது.

கருத்து களத்தில்

நேர்மறையான கருத்துக்களை பதியும் நேரம், ராணுவ வீரர்களிடமிருந்து நேர்மறையான அசைவுகளை உணர

எதிர்மறையான கருத்துக்களை பதியும் நேரம், எதிர்மறையான அசைவுகளை உணர முடிந்தது.........................

2 hours ago, வல்வை சகாறா said:

பேசாப்பொருளுக்குள் எழுதுவது என்பது மிக நடுக்கமான விடயங்களாக இருக்கும். இந்த மியாவ் என்ன எழுதப் போறார் என்று எதேதோ எல்லாம் கற்பனையில் வந்து போகுது.... இதில் மியாவின் பதிவுகள் பூர்த்தி அடையும்போது மியாவ் மியாவ்வாக இருக்கோணும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

நானும் வேண்டிக் கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.