Jump to content

கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்!


Recommended Posts

கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்!

 

white_spacer.jpg

கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! white_spacer.jpg
title_horline.jpg
 
ம.காமுத்துரை
white_spacer.jpg
‘‘நா ப்பது வயசுல ரெண்டாங் கல்யாணம்கறது, அவன் முடிவு செஞ்சது சாமி! அதுதே நடக்கணும்னு எழுதி இருந்தா நாம என்னா செய்ய முடியும்... என்னா?’’

புது மாப்பிள்ளை மினுமினுப்பில் இருந்தான் குருசாமி. சிவப்புத் தோலும், இழுத்துச் சீவி ஒட்ட வெட்டிய கிராப்பும், வெள்ளை முடி வெளிக்கிளம்பா வண்ணம் நாளரு தரம் சவரஞ் செய்து செய்து பச்சை படர்ந்த முகமும், முன் உதட்டில் ஒதுக்கிய வாசனைப் புகையிலையின் வீச்சும், பேச்சின் ஒவ்வொரு வரியின் முடிப்பிலும் ‘என்னா?’ என்கிற கேள்வியில் இயல்பாக விரிந்த சிரிப்பும், அந்தச் சமயம் வெளிப்படுகிற முன்னித்திப் பல்லின் பழுப்பு நிறமும்கூட கூடுதல் வசீகரம் தந்தது அவனுக்கு.

p140d.jpg

‘‘பொம்பளைக்காக காசு செலவழிசாத்தே தப்பு! உள்ளதச் சொன்னா, எனக்கு அவகள்ல செலவழிக்கறாக..!’’

குருசாமி புகையிலையை ஒதுக்குவதே அலாதியாய் இருக்கும். அந்த பாக்கெட்டைக்கூட சேப்பிலிருந்து எடுக்க மாட்டான். இடுப்பு வேட்டியைச் சரிசெய்வது போல இருக்கும்... கையில் புகையிலைப் பை வந்து நிற்கும். பையை விரித்து, ஆள்காட்டி - பெருவிரலால் ஒரு பிடி எடுத்து, இடது உள்ளங் கையில் போடுவான். உடனே பை மடிக்கப்பட்டு இடுப் புச் சொருகலில் மறையும். உள்ளங்கைப் புகையிலையை விரித்துப் பார்ப்பான். ஏதாவது ஒரு இணுக்கை எடுத்துக் கீழே போடுவான். அது கட்டையா, தூசா தெரியாது - சுத்தமாகப் போடுகிறானாம்.

எதிராளியிடம் இயல்பாகப் பேசிக்கொண்டே, பின்புறம் திரும்பி எச்சிலைத் துப்பிவிட்டு, கீழுதட்டை இழுத்து புகையிலை உருண்டையை ஒதுக்கிக் கொள்வான். அருகில் யாராவது பெண்மணி வெற்றிலை போட்டுக் கொண்டு இருந்தால், சுண்ணாம்பு தீட்டுகையில் அவள் விரலில் ஒட்டியிருக்கும் கொஞ்சூண்டு சுண்ணாம்பை தன் விரலால் சுரண்டி எடுத்துச் சேர்த்துக்கொள்வான்.

அப்படி சுண்ணாம்பு வாங்கியதில் தான், எல்லம்மா ரெண்டாந்தாரமாக வந்தாள். எஸ்.எம்.கே. மில்லில் உண் டான பழக்கம். இவன் ஃபிட்டராக இருந்தான். எல்லம்மா கோன் வைண்டிங்கில் சைடர். மெஷினில் ஏற்படுகிற அத்தனை கோளாறுகளையும் குருசாமி தான் சரி செய்ய வேண்டும். எல்லம் மாவும் வெத்திலை பார்ட்டி. சுண்ணாம்பு நீட்டிய கை, சோத்து சட்டி யையும் நீட்டியது.

அவளது சமையல் ருசியாக இருப் பதற்குப் பலப்பல காரணங்களைக் கண்டுபிடித்துச் சொன்னான். அந்தக் கண்டுபிடிப்புகள் அவளுக்குள் ஒரு சுரப்பை உண்டுபண்ணின. உணவுப் பதார்த்தங்களோடு தன்னைச் சார்ந்திருக்கும் உறவுகள் பற்றியும் பகிர்ந்து கொண்டாள். தாயும், தானும், தன் அக்காளும், தன்னை விட்டுப்போன புருசனும்... இன்ன பிற கொடுக்கல் வாங்கல் உறவுகள்...

‘இத்தனை சடவுகளையும் தாங்கிக் கொண்டு வேலைக்கும் நீ சளைக்காமல் வந்து சம்பாதிச்சுக் கொட்டு வதற்குப் பின்னால், உனக்கு ஏதோ ஒரு பெரிய நல்லது கெடைக்க இருக்குங் கறதுதான் என் கணிப்பு’ என்று அவள் மனசை ஈரப்படுத்தினான்.

ஒரு நாள் அவனது சம்சாரத்தைப் பார்க்க அவளுக்கு வாய்த்தது. மில்லுக்குச் சோறு கொண்டுவந்திருந் தாள். ஏதோ ஒரு காரணத்துக்காக ‘கேட்’டுக்கு வந்த இவளிடம் அந்தச் சோத்து வாளியைக் குடுத்துவிட்டார் வாட்ச்மேன். ‘‘இத பிட்டர் குருசாமி கிட்ட குடுத்திரும்மா!’’

‘‘வெரசா குடுத்துரு தாயி! காலம்பற கஞ்சி குடிக்காம வந்திருச்சு. பசி பொறுக்காத யெம!’’ என்றாள் அந்தம்மா. பின் கொசுவம் வைத்துச் சேலை கட்டியிருந்தாள். சாதாரண நூல் சேலை. கரையெல்லாம் சுருங்கிக் கிடந்தது. தலையில் முடியை அள்ளிச் சொருகி இருந்தாள். தலைக்கு பின்பாரம் ஏற்றியது போல முடி ‘பொம்’மென இழுத்துத் தொங்கியது. கழுத்திலோ, காதிலோ எதுவுமில்லை. தாலியைக் கூடக் காணோம். வளத்தியான ஒடம்பு. பாசம் பிடித்த தண்ணித் தொட்டி போல சோபை இழந்த முகம்.

‘‘இவுகதே அவுக பொஞ்சாதியா?’’ -வாட்ச்மேனிடம் வியந்து கேட்டாள் எல்லம்மா. ‘‘பொருத்தமே இல்ல!’’

‘‘அவன் மைனருமா. கேளு, இத அவன் அக்காம்பான். விட்டா ஆத்தான்னும் சொல்லுவான்!’’ - கிண்டல் செய்தார்.

அந்த வார சம்பளத்தில், சன்ன கரை வைத்த சேலை ஒன்றை முதன்முதலாக எல்லம்மாளுக்கு எடுத்துத் தந்தான் குருசாமி. வாங்கிக் கொள்ள மனம் ஒப்பவில்லை.

‘‘உன் வீட்டுக்காரிக்குக் குடு!’’ - அந்தம்மாளின் கரை சுருங்கிய நூல் சேலை மனசைப் பிசைந்தது.

‘‘இத அவளுக்குதே எடுத்தே! வேணாண்ட்டா!’’ என்றான்.

‘பயங்கர ஃபிராடுப் பய..! வெந்த சோறயே அரிசியாக்கிடுவானே!’ - வாட்ச்மேனின் குரல் அசரீரி வாக் காகக் கேட்டது.

‘‘ஏனாம்?’’ என்றாள் எல்லம்மா.

‘‘உனக்குக் குடுக்கச் சொல் லிட்டா!’’

‘‘எனக்கு எதுக்கு?’’ - இமைகள் சிறகடித்தன.

‘‘ம்... ஒன்னிய வச்சிருக்கனாம்!’’

இன்னதென்று உணர முடியாத ஒரு இறுக்கத்தில் சிக்கிக்கொண்டாள் எல்லம்மா. வாய் பேச வரவில்லை.

‘‘ஒரு அஞ்சாயிரம் ரூவா, பொரட்ட முடியுமா எல்சா..?’’ அவளை வேறு யோசனைக்குள் விழுந்துவிடாமல் இழுத்தான். ‘‘வேற ஒண்ணுமில்ல... பெரிய பிள்ளைக்கி ஒரு களுப்பு கழிச்சிடலாம்னு பாக்குறேன். அது வேற உறுத்தலா இருக்கு. ஆயிரந்தே அள்ளிக் குடுத்தாலும், அப்பன்கிற கடமைக்கி அது ஒண்ணக் கழிச்சிட்டா, பெரிய பாரந் தொலையும்! ஆரும் நம்மள கை நீட்டிக் குத்தஞ் சொல்லிரக் கூடாது பாரு..!’’

மூவாயிரம் கொடுத்தாள். சடங்குக்கு அம்மாவோடு வந்து 1,001 மொய்ப் பணம் எழுதினாள். அப்பவே அம்மா தடுத்தது. ‘‘இது நல்லதுக்கு இல்ல... ஒம் போக்கு பெரும்போக்கா இருக்கு...’’ என்றது.

‘‘யேன்... ஒம் மூத்த மகளுக்குச் செஞ்சிருந்தா நல்லதா இருக்குமோ?’’ - சுரீரெனக் கேட்டுவிட்டாள் எல்லம்மா. வந்த இடத்தில் சச்சரவு வேண்டாமென அடங்கிப்போனது அம்மா. வீட்டுக்கு வந்த பிறகும்கூட ஒரே வரியில் முடித்துக்கொண்டது... ‘‘ஆயிரந்தா அடிச்சுக்கிட்டாலும், அவ ஒன்னோட உடம்பொறப்பு. இன்னிக்கி வெதச்சா, நாளக்கில்லே நாளன்னிக்கிப் பயிராகும்..!’’

‘‘நானும் வெதச்சுதா விட்ருக்கேன். இது மொய்யி!’’

சடங்குக்கு வாங்கிய பணத்தை மதுரையில் வந்து அவளிடம் ஒப்படைத்தான் குருசாமி. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா பார்க்க வந்த கூட்டம் கங்கு கணக்கில்லாமல் இருந்தது. கல் பாலத்தருகே அழகர் இறங்கினார். போலீசும், பெரிய ஆபீசர்களும், பெண்களும் அந்த அதிகாலைப் பொழுதிலேயே கூடி இருந்தனர்.

இவர்கள் இருவரும் முதல் நாள் இரவு தேனியில் கூடிப் புறப்பட்டு வந்தனர். வீதியெல்லாம் பாட்டும், கூத்தும் கேட்டுவிட்டு, சாமி புறப்பாடான சமயம் ஒரு கட்டணக் குளியலறையில் குளித்துப் பெரிய பாலத்தில் நின்றுகொண்டனர். பாலமே நொறுங்கிப்போகுமோ என்கிற மாதிரி சனக்காடு. எல்லம்மாளுக்குப் பின்னால் நின்று தாய்க் கோழியாக அவளைத் தன்னுள் பொதித்துக்கொண்டான். அவள் இன்னும் ஒடுங்கி அவனுள் இறுகிக்கொண்டாள்.

தரிசனம் முடிந்ததும், உறக்கச் சடவாக இருப்பதாகச் சொன்னவன், ஏதாவது ஒரு லாட்ஜில் தூங்கி எழுந்து போனால், மில்லில் நைட் ஷிப்ட் பார்க்க தோதுவாக இருக்கும் என்றான். லாட்ஜ் வாசலில் ஒரு பீர் பாட்டிலும், சின்னதாக ஒரு பிராந்திப் பாட்டிலும் வாங்கிச் சொருகிக்கொண்டான். அறைக்குள் நுழைந்ததும் குமுறிக் குமுறி அழுதான். ‘‘எம்புட்டுதேஞ் சம்பாரிச்சுப் போட்டாலும் வீட்ல நல்ல பேர் கெடையாது. சின்னப்பிள்ள கிட்டக்கூட மருவாதி கெடைக்கல. சுருக்கமாச் சொன்னா எந்த வகை யிலயும் எனக்குப் பொருத்தமான புள்ள அமையல, பொண்டாட்டி அமையல!’’

அன்றைக்கு அவளும் கொஞ்சம் பீர் குடித்தாள். அதே லாட்ஜில் மூன்று நாட்கள் களித்தனர். திருச்செந்தூர், கன்னியாகுமரி, குருவாயூர், சென்னை என்று கைப் பணம் தீருமட்டும் சுற்றிவிட்டு 26 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்தனர். அதற்குள் ஊருக்குள் எத்தனையோ நடந்துவிட்டது. எல்லம்மாளின் தாயும், குருசாமியின் சம்சாரமும் சண்டை போட்டு குடுமிப் பிடி நடத்தி, பின் இருவரும் சேர்ந்து தேடி, ஓய்ந்துபோயினர்.

‘ரெண்டு பேரையும் ஒண்ணா வச்சுக்கறேன்... அக்கா தங்கச்சியா இருந்தா சம்மதிக்க மாட்டியா..?’ - சற்றும் சங்கடப்படாமல் சம்சாரம் காலில் விழுந்தான் குருசாமி.

எல்லம்மாளும், ‘‘எனக்கு இனிமே புள்ளைக வாண்டாம். ஒங்க புள்ளைக எம் புள்ளைக!’’ என்றாள். ஆனால், குருசாமியின் சம்சாரம் கடைசிவரை மசியவில்லை.

வேறு வழி இல்லாமல், எல்லம்மா வீட்டில்தான் அவன் தங்க வேண்டி வந்தது. எல்லம்மாளின் தாய் கிளப்பிய எதிர்ப்பு பலிக்கவில்லை. அடுப்படி தான் அவளுக்கு மிஞ்சியது. ஆனா லும், மருமகப் பிள்ளையை அவளால் மறுக்க முடியவில்லை. பிள்ளை இல்லை என்பதற்காக மலடி என்று ஒதுக்கி வைக்கப்பட்டவளுக்கு மறு வாழ்வு தந்திருப்பவன். இருந்தாலும், வயசுப் பிள்ளைக்குத் தகப்பனானவன் என்பதைத்தான் பெத்த மனசு புரட்டிப் புரட்டிப் பார்த்தது.

‘‘என்ன செய்ய... இந்த மட்டுல யாச்சும் அவளுக்கு மாலப் பொருத்தம் வாச்சுதே!’’ என்று சமாதானப்படுத் திக்கொண்டாள்.

எஸ்.எம்.கே. மில்லிலிருந்து குருசாமி, எல்லம்மா இருவரையும் வேலையைவிட்டு விலக்கினார்கள். அடுத்த வாரமே எல்லம்மா சாப் டெக்ஸ் மில்லில் சேர்ந்துவிட்டாள். இவனுக்கு தான் எதுவும் அமையவில்லை.

எஸ்.எம்.கே. மில்லில் மூத்தாளுக்கு வேலை கிடைத்தது. அதில் பிரச்னை இல்லை. ஆனால், சடங்கான தன் மகளுக்கும் அதே மில்லில் வேலை போட்டுத் தந்ததுதான் குருசாமிக்குத் தாங்க முடியாத துயரமாக இருந்தது. அன்றிலிருந்துதான் குடித்துவிட்டு வீதியில் சலம்பலானான். எஸ்.எம்.கே. மில் கேட்டில் வந்து நின்று முதலாளியை ஏசினான். ‘பொம்பளைகள வேலைக்கு வச்சுருக்கீகளா, வேல பாக்கறீகளாடா?’ என்றபடி, முதலாளியின் காரை மறித்தான். போலீஸ் வந்து பிடித்துப்போனது.

எல்லம்மாளோடு அவள் தாயார், மூத்தாள், மகள் என நான்கு பெண்களும் பதறிக்கொண்டு காவல் நிலையம் வந்தனர். உடுப்புகளைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு இருளடைந்த ஒரு மூலையில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தான் குருசாமி. முகத்தில் கண்ணீர்த் தாரையும் உடம்பில் நடுக்க ரேகையும் ஓடிக்கொண்டு இருந்தது.

‘‘யாரென்ற கேள்விக்கு, மூத்தா ளும் எல்லம்மாவும் ‘பொஞ்சாதிங்க’ என்று சொன்ன தோரணை காவலரைத் திடுக்கிடச் செய்தது. ‘‘நாலு பேருமா!’’ என்றார் அதிர்ந்து. பின், அங்கிருக்கும் அதிகாரிகளை எண்ணி, எல்லாருக்கும் வடை, டீ வாங்கித் தந்துவிட்டு கூட்டிப் போகச் சொன் னார். ரைட்டரோ, ‘பேப்பரும் கார்பன் ஷீட்டும் சேர்த்துக்க’ என்றார்.

‘ஊர் எல்லை வரைக்கும் உடுப்ப உடுத்திக்கக் கூடாது. இப்பிடியேதே நடந்து போகணும்’ என்ற நிபந்தனை யோடு அனுப்பினார்.

‘‘எங் கைரேகையப் பாத்தீல்ல... கிருஷ்ண பரமாத்மாவோட அம்ச ரேகை என்னுது. என்னா..?’’ - நாலு பெண்களுக்கு நடுவில், ரெண்டு பக்கமும் சேப்பு வைத்த ஜட்டியோடு அவன் நடந்து வந்ததைப் பார்த்த வர்களிடமெல்லாம் தாளம் மாறாமல் சொல்லித் திரிகிறான் குருசாமி, இன்னிக்கும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெத்து வேட்டு.... இப்படி பந்தா காட்டும் ஆசாமிகள் நிறையவே உண்டு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.