Jump to content

பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்!


Recommended Posts

  • பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்!
பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும்  ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்!
 
 

பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்!

 
 

பாலி­யல் தவறு செய்­யும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஆண்மை நீக்க செய்­ய­ வேண்­டும் என்று சபை­யில் நேற்­றுக் கொந்­த­ளித்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம்.

விடு­த­லைப் புலி­கள் இருந்­தி­ருந்­தால் இத்­த­கைய ஆசி­ரி­யர்­க­ளுக்கு உட­ன­டி­யா­கவே சாவுத் தண்­டனை வழங்­கப்­பட்­டு­வி­டும் என்று சக உறுப்­பி­னர் புவ­னேஸ்­வ­ர­னும் அதனை ஆமோ­தித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீதான விவா­தம் நேற்று இடம்­பெற்­ற­போது, மாணவ, மாண­வி­க­ளைக் குறிப்­பிட்ட சில ஆசி­ரி­யர்­கள் பாலி­யல் ரீதி­யில் துன்­பு­றுத்­து­வது குறித்­துப் பேசப்­பட்­டது. அதன்­போதே இந்­தக் கருத்­துக்­கள் முன்­வைக்­கப் பட்­டன.

உறுப்­பி­னர் புவ­னேஸ்­வ­ரன் இது தொடர்­பில் கருத்­து­ரைக்­கை­யில் தெரி­வித்­த­தா­வது:

ஆசி­ரி­யர்­க­ளால் மேற்­கொள்­ளப்­ப­டும் பாலி­யல் தவ­று­கள் குற்­றங்­க­ளுக்கு அதி­யுச்ச தண்­டனை வழங்க மாகாண கல்வி அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். வடக்கு மாகா­ணத்­தில் பாட­சாலை ஒன்­றில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வர் மீது 11 தட­வை­கள் குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­ட­போ­தும் அவர் மீது எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலை­யி­லேயே எமது கல்­விச் சூழல் இருக்­கின்­றது. மாணவ, மாண­வி­க­ளின் பாது­காப்பு இந்த விட­யத்­தில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும். ஒரு ஆசி­ரி­யர் பாலி­யல் குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­னால் அவர் மீது தற்­போது எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்கை இட­மாற்­றம் மட்­டுமே. ஆனால் இதன் ஊடாக மட்­டும் இந்­தக் குற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. அவர்­கள் மீது சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டும். குற்­றம் நிரு­பிக்­கப்­பட்­டால் அவ­ரைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­க­வேண்­டும். அத்­து­டன் நீதி­மன்ற நட­வ­டிக்­கைக்­கும் அவரை உட்­ப­டுத்த வேண்­டும் – என்­றார்.

 

உறுப்­பி­னர் அரி­ய­ரட்­ணம் தனது உரை­யில்,“நாம் எமது அமைச்­ச­ரையோ செய­ல­ரையோ அதி­கா­ரி­க­ளையோ குறை­கூ­றிக்­கொண்டு இருப்­பது சரி­யல்ல. அவர்­க­ளுக்­குக் கீழ் பணி­யாற்­றும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் நேர்­மை­யா­கச் செயற்­ப­ட­வேண்­டும். ஏனெ­னில் அதிக விமர்­ச­னத்­துக்கு ஆளா­கின்­ற­துறை கல்வி. பளை மத்­திய கல்­லூ­ரி­யில் 12 மாண­வர்­க­ளுக்கு ஒரு ஆசி­ரி­யர்­கள் இருக்­கின்­ற­போ­தும் பாட­சா­லைக்கு மதி­யம் 1.30 மணிக்கு சென்­றால் அங்கு ஒரு ஆசி­ரி­யர்­க­ளை­யும் சந்­திக்க முடி­யாது. இந்த நிலை­யில்­தான் பாட­சாலை காணப்­ப­டு­கின்­றது. சில பாட­சா­லை­க­ளின் அதி­பர்­கள் மாகா­ணக் கல்வி திணைக்­க­ளத்­துக்­குத் தவ­றான தக­வல்­களை வழங்­கு­கின்­ற­னர்” என்­றார்.

“இரா­ணு­வத்­தின் முன்­பள்­ளி­யில் 600க்கும் மேற்­பட்ட முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். அவர்­க­ளும் படை­யி­னர்­தான். இரா­னு­வத்­தின் நடை­மு­றை­யின்­படி போர் ஏற்­பட்­டால் அந்த முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளும் துப்­பாக்கி ஏந்­திப் போருக்­குப் போக­வேண்­டி­ய­வர்­கள்­தான். அவர்­களை நாம் அதி­லி­ருந்து மீட்­டெ­டுக்க ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை” என்று முன்­னாள் கல்வி அமைச்­ச­ரும் தற்­போ­தைய உறுப்­பி­ன­ரு­மான த.குரு­கு­ல­ராஜா தெரி­வித்­தார்.

“பாட­சாலை நேரம் காலை 7.30 ஆக இருப்­ப­தால் மாண­வர்­கள் பலர் துன்­பங்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். காலை­யில் சாப்­பி­டா­மல் செல்­கின்­ற­னர். இத­னால் பாட­சாலை சென்று சில மனித்­தி­யா­ல­யத்­தி­லேயே சோர்­வ­டை­கின்­ற­னர்.

 

இத­னால் அவர்­கள் கல்­வி­யில் அக்­கறை செலுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. ஆகவே பாட­சாலை நேரத்தை மாற்­றம் செய்­வது தொடர்­பில் பரீ­சீ­லனை செய்ய வேண்­டும். பெற்­றோ­ருக்கு அடுத்த படி­யாக ஆசி­ரி­யர்­கள்­தான் பிள்­ளை­க­ளுக்கு துணை­யாக இருக்­கின்­ற­னர். ஆனால் சில சம்­ப­வங்­கள் ஊடாக வேலியே பயிரை மேய்­வ­து­போ­லக் காணப்­ப­டு­கின்­றது.

மாண­வி­கள் மீது ஆசி­ரி­யர்­கள் குற்­ற­மி­ழைத்­தால் அவர்­கள் மீது கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்” என்று மாகா­ண­சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/55072.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்!

நல்ல விசயம்...... ஆண்மையை எடுக்க உடனை சட்டத்தை பாஸ் பண்ண வேணும். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.