Jump to content

ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறிவிட்டது!


Recommended Posts

ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறிவிட்டது!

 

ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறிவிட்டது!

உள்ளுராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீறிவிட்டது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்  குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி இடையில் அண்மையில் இடம்பெற்ற  முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

கலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த  பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்திருந்தனர்.அன்றை கூட்டத்தில் ஆசனப்பங்கீடுகள் குறித்தும் கலந்துiராயடப்பட்டிருந்தது.

குறிப்பாக அதில் வலி மேற்கு பிரதேச சபை, முதல் இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் இறுதி இரண்டு வருடங்கள் தமிழரசுக்கட்சிக்கும் என இணக்கம் காணப்பட்டதுடன், மானிப்பாய் பிரதேச சபை முதல் இரண்டு வருடம் தமிழரசுக்கட்சிக்கும் இறுதி இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் என இணக்கம் காணப்பட்டு 3 கட்சி தவைர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இது குறித்து மீண்டும் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில்  கூட்டம் கூட்டபட்டது. அதில் தமிழரசுக்கட்சி வலி மேற்கு பிரதேச சபையை முழுமையாக தாம் எடுத்துக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் ஏமாற்றம் அடைந்த புளொட் அமைப்பு தாம் இதற்கு இணங்க முடியாது எனவும், தமிழருசுக்கட்சியின் அதிகாரத்தை வைத்தே இதை எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என தெரிவித்து கூட்டத்தில் இருந்து முறுகல் நிலையில் வெளியேறியுள்ளனர்.  

இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமக்கு சபைகள் பிரித்து கொடுப்பது தொடர்பில் முன்னர் கலந்துரையாடப்பட்ட போது  இணக்கம் தெரிவித்திருந்தனர்.  பின்னர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி அதை மீண்டும் பறித்துக்கொண்டுள்ளனர். இதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை உறுதிமொழி வழங்கி ஏமாற்றி விட்டனர்

https://news.ibctamil.com/ta/internal-affairs/sitharthan-speeach-in-jaffna

Link to comment
Share on other sites

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இருந்து புளொட் ஒதுங்கும்?
 

எஸ்.நிதர்ஷன் 

தேர்தல் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்களில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்படுவது தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ள புளொட் அமைப்பு, தேர்தலில் இருந்தே ஒதுங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாகத் தெரியவருகின்றது. 

இதேவேளை, கூட்டமைப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை மீறி, தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதால், இத்தேர்தலில் இருந்தே ஒதுங்கியிருக்கும் நிலையை எடுக்க வேண்டும் என, கட்சியின் உயர் மட்டத்தினர் கட்சித் தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அறியமுடிகிறது.   

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/உள்ளூராட்சிமன்றத்-தேர்தலில்-இருந்து-புளொட்-ஒதுங்கும்/71-208903

Link to comment
Share on other sites

தமி­ழ­ர­சுக்­கட்சி மீறி­விட்­டது புளொட் கடும் அதி­ருப்தி

 

(ஆர்.ராம்)

உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக வீட்டுச் சின்­னத்தில்   கள­மி­றங்­கு­வ­தற்கு கூட்­ட­மைப்பின் பங்­கா­ளி­கட்­சி­க­ளுக்­கி­டையில் செய்து கொள்­ளப்­பட்ட ஆச­னப்­பங்­கீடு குறித்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்த்­தினை தமி­ழ­ர­சுக்­கட்சி மீறி­விட்­ட­தாக தமி­ழீழ மக்கள் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) கடும் அதி­ருப்தி வௌியிட்­டுள்­ளது. 

உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் எதிர்­வரும் பெப்­ர­வரி 17ஆம் திக­திக்கு முன்­ன­தாக நடை­பெறும் என தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்ள நிலையில் தற்­போது வேட்பு மனுக்­களை தாக்கல் செய்யும் செயற்­பா­டுகள் சூடு­பி­டித்­துள்­ளன.

இவ்­வா­றி­ருக்­கையில் முன்­ன­தாக வடக்­கி­ழக்கில் மட்டும் தனித்துப் போட்­டி­யிடும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் சர்ச்­சைகள் எழுந்­தி­ருந்­தன. மூன்று சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு பின்­னரும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டாத நிலை­மையே நீடித்து வந்­தி­ருந்­தது.

இத்­த­கைய நிலையில் குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தங்­போது இருக்கும் பங்­கா­ளிக்­கட்­சி­களில் ஒன்­றான தமிழிழ விடு­தலை இயக்கம் (ரெலோ) தமிழர் விடு­தலை கூட்­ட­ணி­யின்­ உ­தய சூரியன் சின்­னத்தில் உத­ய­மா­கி­யி­ருக்கும் புதிய கூட்­ட­ணியில் இணைந்து கொள்­வது தொடர்­பான பேச்­சுக்­க­ளையும் முன்­னெ­டுக்­கின்ற அள­விற்கு நிலைமை சென்­றி­ருந்­தது.

எவ்­வா­றா­யினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை தற்­போ­தைய சூழலில் அவ­சியம் எனவும் ஆசனப் பங்­கீட்­டுக்­கான பிரிந்­து­செல்­வ­தென்­பது பொருத்­த­மற்­ற­தெ­னவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் விடுத்த அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக கடந்த 9ஆம் திகதி சனிக்­கி­ழமை அவ­ரு­டைய தலை­மையில் கொழுப்பில் உள்ள எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான நீண்ட கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்தக் கலந்­து­ரை­யா­டலின் ஈற்றில் மூன்று கட்­சி­களும் தனித்­த­னி­யாக எத்­தனை உள்­ளு­ராட்சி மன்­றங்கள், பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்ற மன்­றங்­களில் 50சத­வீதம் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும், பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்கு தலா 25சத­வீதம் என்றும் தலைவர், பிரதி தலைவர் பத­வி­களில் பிரச்­சினை காணப்­படும் மன்­றங்­களில் தலா இரண்­டரை ஆண்­டுகள் வீதம் பதவி வகிப்­ப­தெ­னவும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்டு ஈற்றில் பங்­கா­ளி­கட்­சி­களின் தலை­வர்­களான மாவை.சோ.சேனா­தி­ராஜா, செல்வம் அடைக்­க­ல­நாதன், சித்­தார்த்தன் ஆகியோர் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்­றிலும் கைச்­சாத்­திட்­டனர்.

இருப்­பினும் யாழ்ப்­பா­ணத்தில் புளொட்­டுக்கு இரண்டு உள்­ளு­ராட்சி மன்­றங்­களும் மூன்­றா­வதில் விகி­தா­சார அடிப்­ப­டையில் பங்­கீடு அளிப்­ப­தென்றும் எனினும் அவை எந்த மன்­றங்கள் என்­பது தொடர்­பிலும் பின்னர் கலந்­து­ரை­யா­டு­வ­தென்றும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் நேற்று முன்­தினம் இரவு இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யி­ன­ருக்கும், புளொட்­டிற்கும் இடை­யி­லான சந்­திப்­பொன்று நடை­பெற்­றி­ருந்­தது. இச்­சந்­திப்பின் போது புளொட் தரப்பில் அதன் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி தலை­மை­யி­லான குழ­வினர் கலந்து கொண்­டி­ருந்­தனர். அதே­போன்று தமி­ழ­ர­சுக்­கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா எம்.பி தலை­மை­யி­லான குழ­வினர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது புளொட், தமக்கு வாக்­கு­றதி அளித்­ததன் பிர­காரம் மானிப்பாய், உடுவில் ஆகி­ய­வற்றை முழு­மை­யா­கவும் மற்றும் வலி மேற்கில் தமக்­கான விகி­தா­சா­ரத்­தி­னையும் வழங்க வேண்டும் என்று கோரி­ய­தோடு ஏற்­க­னவே சாவ­கச்­சே­ரிக்­கான வேட்­பு­ம­னுவில் தமது கட்சி உறுப்­பி­னர்­களின் பெயர்கள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வில்லை அதே­போன்று தான் திரு­கோ­ண­ம­லையில் உள்ள நான்கு சபை­க­ளிலும் தமது கட்­சியின் உறுப்­பி­னர்கள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அது தொடர்பில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது முழு­மை­யான எவ்­வித பதில்­க­ளையும் வழங்­கா­த­தோடு வலி.மேற்கில் பங்­கீட்­டினை வழங்­கு­வ­தற்கு தாம் தயா­ராக இல்­லை­யென்றும் அது தமது கட்­சிக்கு முழு­மை­யா­கவே வேண்டும் என்றும் அழுத்­த­மாக கூறி­யது. இதனால் இரு­த­ரப்­பி­ன­ரி­டை­யேயும் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் ஏற்­பட்ட நிலையில் ஏற்­க­னவே கைச்­சாத்­தான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் மீறப்­ப­டு­கின்­றது என புளொட் சுட்­டிக்­காட்­டி­யது.

எனினும் இரு தரப்­பி­ன­ரி­டை­யேயும் எவ்­வி­த­மான இணக்­கப்­பா­டு­களும் எட்­டாப்­ப­டா­த­தோடு புளொட் தலைமை தமி­ழ­ர­சுக்­கட்சி மீது அதி­ருப்­தியை வௌிட்ட நிலையில் கூட்டம் நிறை­வுக்கு வந்­தி­ருந்­தது.

இது­கு­றித்து புளொட் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி தெரி­விக்­கையில், நாம் ஏற்­க­னவே ஆசனப் பங்­கீடு தொடர்பில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­திட்­டுள்ளோம். தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சின்­னத்­தினை நாம் பயன்­ப­டுத்­து­வதால் அந்த அதி­கா­ரத்தின் நிமித்தம் அவர்கள் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தினை மீறிச் செயற்­ப­டு­கின்­றார்கள். இதன் கார­ண­மாக எட்­டப்­பட்ட இணக்­கப்­பா­டுகள் உடைக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வி­டயம் குறித்து எமது மத்­திய குழு கூடி ஆராய்ந்த பின்னர் நாம் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்த அறி­விப்போம் என்றார்.

இதேவேளை, இலங்கை தமிழரசுக்கட்சியுடன் ஆசனப்பங்கீடு தொடர்பில் புளொட் அமைப்பு முரண்பட்டுள்ள நிலையில் அந்த அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாது விலகியிருக்குமாறு அவ்வமைப்பின் தலைமைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. மேலும் புளொட் என்பது கட்டமைக்கப்பட்ட அமைப்பாகவே செயற்பட்டு வந்துள்ள நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் விட்டுக்கொடுப்புக்களைச் செய்வது பொருத்தமற்ற அரசியல் நகர்வாக அமையும் எனவும் குறித்த சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமைக்கு அறிவுத்தல் விடுத்து வருவதாக புளொட்டின் உள்ளடகத் தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-15#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.