Jump to content

புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐ.நா கரிசனை கொண்டுள்ளது – சரத் வீரசேகர


Recommended Posts

புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐ.நா கரிசனை கொண்டுள்ளது – சரத் வீரசேகர

 

sarath-weerasekara.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பு கரிசனை கொண்டுள்ளதாக அட்மிரால் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் செய்யும் போது அநேக சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் மற்றும் முகாம்களை மட்டுமே பார்வையிடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

படைத்தரப்பினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடற்படை உயர் அதிகாரிகளான கமாண்டர்கள் தசநாயக்க மற்றும் சுமித் ரணசிங்க ஆகியோர் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும்  சில அரசியல்வாதிகள் எவ்வித கொள்கையும் இன்றி பணத்திற்காக கட்சி மாறி வருவதாகவும்  சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/54770

Link to comment
Share on other sites

மிகக் கொடிய மிருகம் என்றாலும் அது தன் குட்டிகளை அணைத்துப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும். தன் இனமின்றி வேறு இனமென்றால் கடித்துக் குதறிவிடும் என்பதுகூடத் தெரியாமலா ஐக்கிய நாடுகள் அமைப்பு இயங்குகிறது..... ??
 
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களைச் சிறையில் தடுத்து வைத்திருப்பது சிங்களம்.! :shocked:
 
கடற்படை உயர் அதிகாரிகளான கமாண்டர்களைத்  தடுத்து வைத்திருப்பதும் சிங்களம்.!! :)
  •  
  •  
 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.