Jump to content

அகரமுதல்வனின் ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ -நூல் அறிமுகம் -விமர்சகர் த.ராஜன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகரமுதல்வனின் ‘முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு’ -நூல் அறிமுகம் -விமர்சகர் த.ராஜன்

 

16265997_1210406315732920_4391637946900858457_n.jpg

 

"கண்ணீர்வலியைஇழிவுபடுத்திவிடும்என்றொருகடவுள்நம்பிக்கைஎனக்குண்டு."

   - அகரமுதல்வன்

 

 

ஈழத்தின் தற்கால சூழலையும் அதன் வரலாற்றையும் அறிந்து கொள்ள இலக்கியம்மட்டுமே நம்பத்தகுந்த ஒரே வழியாக இருக்கின்றது.கொடூர சம்பவங்கள்வன்கொடுமைகள்குண்டுகளின் சப்தங்கள்சிதைந்த உடல்கள்இயலாதோரின்ஓலம்வலி என துயர் நிரம்பிய பக்கங்கள் தான் அடங்கியிருக்கும் என்பதைமுன்னமே வாசகர்கள் அறிந்திருப்பதால் ஈழம் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதில்பெரும் தயக்கம் காட்டுவதைக் காண முடிகிறது.இயலாமையினால் வரும்குற்றவுணர்வு மட்டுமல்லாமல் தற்போதைய 'ஃபேஸ்புக்மனநிலை'யினால் ஏற்படும்அதிருப்தியும் ஒரு வகையில் காரணம்எனலாம்.எல்லாவற்றையும் மேம்போக்காகபோலியாக அணுகும் மனநிலைஃபேஸ்புக்கில்கோர சம்பவம் ஒன்றினைக் காணும்மனம் வருந்துகிறதுசிறிது கீழிறங்கினால் காண நேரும் அரசியல் பகடியைக்கண்டு நகைக்கிறதுஇன்னும் சற்று இறங்கி சினிமா நாயகன் நாயகியின்படங்களைக் கண்டு உருகுகிறதுஇப்படி நொடிக்கு நொடி மாறும் போலியானஃபேஸ்புக் மனம்இயல்பாகிக் போன இக்காலத்தில் இது போன்ற படைப்புகளைவாசிக்க நேர்பவர் குற்றவுணர்ச்சியில் உழல்வது நிதர்சனம்.

 

 

 தீவிரமாக வாசிக்கும் பழக்கமுள்ளவர்களும் கூட  ஈழப் படைப்புகளைத்தவிர்க்கிறார்கள்அவ்வலியைத் தாங்கிக்கொள்ளும் திராணி இல்லை என்பது ஒருசாராரின் கருத்து.  ஈழப்படைப்புகள் சில சமரசங்கள் எதிர்பார்க்கின்றன என்பதுஇன்னொரு புறம்அதாவது இது போன்ற படைப்புகள் கையாளும் விஷயங்கள் மிகவும் முக்கியமானது என்பதற்காகவே  சிலவற்றை நாம் கண்டுக்கொள்ளத்தேவையில்லை என்பதாகச்சொல்வது.
 

இந்த இருசாராரின் கருத்திற்கும் காரணமாக இருப்பது அனுதாபத்தை மட்டும் கோரிநிற்கும் படைப்புகள் என்பது என் அனுமானம். இத்தகையஇலக்கியப்படைப்புகள் தொடர்ந்து வெளியாவதே அவை வாசிக்கப்படாமல்இருப்பதற்கான காரணமாக இருக்க முடியும்கதை சுவாரசியமோ நளினங்களோநறுக்குகளோ அவசியமில்லை தான்ஆனால்வெறுமனே உள்ளதை உள்ளபடி(ஒரு செய்தித்தாளில் வெளியாகும் பத்தியின் முடிவில் அடையும் உணர்விற்கும் ஒரு இலக்கிய பிரதிதரும் உணர்விற்கும் பெரியதாக வித்தியாசமிருப்பதில்லைபதிவு செய்வதைத் தவிர்க்கவேண்டுமென்றே தோன்றுகிறது.

 

ஈழத்தின் வரலாற்றைப் புனைவாக பதிவு செய்வதால் இதைக்கருத்தில் கொள்ளவேண்டுமெனத் தோன்றுகிறதுவருங்காலச் சந்ததிகளுக்குஇப்புனைவுகள் தான் வரலாற்றை அறிய உதவும் மிகப்பெரும் சாட்சிஆகசரியானமொழியில் சரியான உணர்வினை சரியான கதாப்பாத்திரச் சித்தரிப்போடு கதைகள்படைப்பது அவசியமாகின்றதுமண்டோ தனது படைப்புகளில் வன்முறையைமனிதமற்ற செயல்களைக் கலையாக மாற்றினார்இன்றளவும் மண்டோவாசிக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்க முடியும்.

 

அகரமுதல்வனின் கதைகள் வெறுமனே அனுதாபத்தை மட்டும் கோரி நிற்பவைஅல்லபோர் நிலத்தின் யதார்த்தங்களைபோராளிகளின் மனதினைஅவர்களதுஅரசியல் நிலைப்பாட்டைபோராளிகளின் காதலைகாமத்தைசாமானியர்களின்வாழ்வியலை அற்புதமான மொழியில் கச்சிதமான வாக்கியங்களில்மிகைஉணர்ச்சியற்ற தொனியில் கதைகளாகப் புனைகிறார்.               அகரமுதல்வனின் எழுத்துகள் எட்ட நின்று வேடிக்கை பார்ப்பவையாக அல்லாமல்நமது அனுபவமாக மாறுகின்றனஅதற்கு அகரமுதல்வனின் சொற்பிரயோகங்களும்மொழி ஆளுமையும் பிரதான காரணம்.

 

அகரமுதல்வனின் உவமைகள் குறிப்பிடத்தகுந்ததுதுருத்தாமல்கதையோடு ஓர் அங்கமாக வலுசேர்க்கின்றன. 'தேங்கிய மழை நீரை காலால் தூக்கி மீண்டும் துளியாக்கும் குழந்தைகளின் பாதத்தைப் போல குழலி சிவந்தாள்' –

 

வீடு வாழ்க்கையைப் போல எரிந்து கொண்டிருந்தது’ 

 

15241945_1131639970223886_196923013434818816_n.jpg

 

 

நீர் வற்றிப் போன ஆற்றின் சரீரம் வெடித்தோடும் ஈரம் பிறழ்ந்த கோடுகளைப் போல மனம் பிறழ்ந்த வெடிப்புகள் எனக்குள் நதிபோல ஓடுகிறது’.

 

 தாய் தகப்பனை இழந்த இளம் மகள் குறித்த வரியொன்று வருகின்றதுஇவ்விடத்தில் அச்சூழலின் துயரத்தை பத்தி பத்தியாக எழுதி வாசகனைக் கண்ணீர் உகுக்கச் செய்திருக்கமுடியும்அவை நீலிக்கண்ணீராக சொற்ப நிமிடங்களில் வடிந்துவிடக்கூடியது.  அவ்விடத்தில் 'பூமியின் மிக இளமையான துயரம் குயிலினியிடம் இருந்ததுஎனும் வாக்கியத்தால் மனதின் அடியாழத்தை தொட்டுச்செல்கிறார் அகரமுதல்வன்.

 

நாம் வாழும் நிலத்தில் இறப்பதற்கு அஞ்சுவது வாழ்வதற்கு சலிப்பதுபோல' - 'பூமியின் நித்திரைக்கு எமது மரணங்கள் கனவு' - 'இந்த நிலத்தில் மட்டும் தான் மரணித்த உயிருக்கு நிவாரணமாய் பரவசம் திரும்புகிறதுவிடுதலையின் பரவசமாய் நாம் அனைவரும் மரணிப்போம்போன்ற வரிகள் மனதில் இருந்து அகல மறுக்கின்றன.

 

'மரணத்தின் சுற்றிவளைப்புஎனும் கதையில் ஒரு பத்தி:

 

 'நித்திலா... வேப்பமரத்தின் குயில் இந்த இரவிலும் கூவிக்கொண்டே இருக்கிறதுஅதன் குரலில் பல்லாயிரம் தொண்டைகளின் துயர் கிளைக்கிறதுஅந்தக் குயிலைநீ என்று அழைப்பதாநான் என்று அழைப்பதாநமது துயரத்தின் கூவல் இதற்குமுன் இப்படிக் கேட்டதாகுயிலின் குரலும் கூவலும் துயரமும் எம்மைஒத்திருந்தாலும் குயில் மானமில்லாததுஅதற்கென சொந்தக் கூடேஇருப்பதில்லைஅது எமது நாட்டை ஆக்கிரமித்து குடியேறும்சிங்களர்களைப்போல காகத்தின் கூட்டில் அல்லவா முட்டையிடும்நாம் எப்போதுபிறர் நாட்டை விரும்பினோம்அந்தக் குயிலாய் நீயோ நானோ நாமோ இருக்கவேமுடியாது.'

 

மிகச்சாதாரண விஷயத்தைக் குறிப்பிட்டு பெரும் அரசியலை பேசிக்செல்கின்றன இது போன்ற வரிகள்.

 

சுட்டுக் கொல்லப்படுவர்களின் வரிசையில் முதல் ஆளாகக்கூட தான் இருக்கலாம்என போராளி எண்ணுகிறான்அப்போது எழுதுகிறார்

 

'அப்படி வாய்க்கும் ஒரு மரணத்தை நான் மறுக்கேன்அசையாமல் என் நெற்றியைகுறிபார்க்கும் துவக்கின் குழலையே எனது கண்களும் குறி பார்க்கும்.' போராளியின்தீரத்தை பெருமைபோற்றும் வாக்கியங்களாலால் அல்லாமல் எளிமையான ஒற்றைவரியில் அவனது மனத்திட்பத்தையும் வீரத்தையும் சொல்லிச்செல்கிறார்அசையாமல் என் நெற்றியை குறிபார்க்கும் துவக்கின் குழலையே எனது கண்களும்குறி பார்க்கும்!

 

 

நாட்டுக்கு கௌவரமாய் இரத்தம் சிந்திய எம்மக்களை  கேவலமாக தண்ணீருக்காக சண்டையிட பழக்கிவிட்டது இந்த அகதி முகாம் வாழ்க்கை என்று எழுதுகிறார்.

 

சமகாலத்தில் போராளிகள் மீதான மற்றவர்களின் பார்வையும்தற்போதைய சூழலில் மக்களின் மனப் போக்கும் இவரது கதைகளில் ஆங்காங்கே பதிவாகின்றன

 

'தூயவள் சொன்னது சரியானதுவேஏழ்மையில் மூழ்கி தெருவில் அலைந்துதிரிபவர்களாய் காலம் ஆக்கிய போராளிகளை வெளிநாட்டில் இருந்து வருகிறசனங்களில் சிலர் விநோதமாய் பார்த்துக் கடந்து செல்வது கீரனுக்கேநிகழ்ந்ததுதான்அந்தக் காட்சி மிக மோசமானதுநேற்றைக்கு தெய்வங்களாய்வழிபட்ட சிலைகளை இன்றைக்கு கால்களால் தட்டிவிட்டு செல்வதைப்போலானகாட்சி.'

 

நந்திதனுக்காக ரொட்டி சுடுகிறான்நேரமின்மையால் சம்பல் இடிக்கமுடியாதெனஇருப்பதைச் சாப்பிடுகிறார்கள்பார்வையை வெளியில் செலுத்தியபடிஉணவருந்தும்போது நந்திதன் சொல்கிறார்,

 

“விதிகளுக்கு இசைந்தவாழ்வு ரசிப்பதற்கு பிரபஞ்சத்தின் அழகுபோதாது.' தனதுவாழ்வினைவலியினை இயல்பாகபறைசாற்றும் வரி!இன்னொருவரி

 

'தன்னை அவள் தனியாகவிட்டு இறந்துபோவாளாவாழ்வதையே தீர்மானிக்கஇயலாத வாழ்வில் இறப்பது யாரோடுவென தீர்மானம் கொள்வது எவ்வளவுவிசர்த்தனம்.'

 

கீரனுக்கும் தூயவளுக்குமிடையே உடலுறவு நடைபெறுவதாக 'பிரேதங்கள் களைத்து அழுகின்றனஎனும் கதைதொடங்குகின்றது.

 பாதி கதை கடந்த பின்பே அவர்கள் கைகளை இழந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்இதுவேஅகரமுதல்வனின்சிறப்பம்சம்

 

முதலிலே இப்படியொரு வர்ணனையைத் தந்திருந்தது உடலுறவு கொள்வதாக எழுதியிருந்தால் அது வாசகனின் அனுதாபத்தை கோரிநிற்கும் .கண்ணீர் வடித்திருப்போம். அதை அகரமுதல்வனின் கதைகள் எதிர்பார்ப்பதில்லை.

 

சதத் ஹசன் மண்டோவை அகரமுதல்வன் எட்டும் தூரம் வெகு தொலைவில்   இல்லை.

 

http://akaramuthalvan.blogspot.co.uk/2017/12/blog-post_8.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.