Jump to content

நாய் பிடிகாரர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பொறுத்த வரை கிராமப்புறங்களில் நாய் இல்லாத வீடே கிடையாது என்றெ சொல்லலாம்.நகர் புறங்களில் வளவுகளுடன் வீடுள்ளவர்களில் கணிசமானவர்களின் வீட்டிலும் நாய் வளர்பை பார்க்கலாம்.மாநகர் என்று பார்த்தால் அங்கு நாய்கள் வளர்க்கக் கூடிய சூழ்நிலைகள் இல்லாததால் ஓரிரு வீடுகளைத் தவிர மற்றைய வீடுகளில் நாய் வளர்க்க மாட்டார்கள்.

ஒரு சில வீடுகளில் வெளிநாட்டு நாய்களை வெளிநாடுகளில் பாணியில் வளர்ப்பார்கள்.எமது ஆட்களுக்கு ஒன்றுக்கு இரண்டுக்கு போறதை கழுவுறது துடைக்கிறதென்றால் மூஞ்சையை சுழிப்பார்கள்.

வெளிநாடுகளில் பலரும் நாய்கள் வளர்க்கிறார்கள்.அந்த அந்த நேரத்திற்கு வெளியே கொண்டு போய் ஒன்றுக்கு இரண்டுக்கு விடுவார்கள்.ஆட்கள் நடமாட்டமாக இருந்தால் சுடச்சுட எடுத்துக் கொண்டு போவார்கள்.எவருடைய நடமாட்டமும் இல்லை என்றால் அங்குமிங்கும் பார்த்துவிட்டு கொற கொறவென இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.அத்தோடு தடுப்பூசிகள் போட வேண்டும்.மயிர் வெட்ட வேண்டும் ஏகப்பட்ட செலவு.

வெளிநாட்டில் மிருக வைத்தியருக்கும் நல்ல உழைப்பும் மரியாதையும்.இதுவே ஊரில் என்றால் ஏழனமாகவே பார்ப்பார்கள்.அலுவலகத்திலும் இலையான் கலைச்சுக் கொண்டு தான் இருப்பார்.

நான் யாழ் இந்துவில் சேர்ந்த புதிதில் இடைவேளையின் போது மைதானத்தில் தான் பொழுதைக் கழிப்பது.

ஒரு நாள் இரண்டு சில்லுள்ள தள்ளுவண்டியை இருவர் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.அந்த வண்டியினுள் 5 ,6 நாய்கள்அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன.ஒருவர் வண்டியை தள்ளிக் கொண்டு வர மற்றவர் ஒரு கையை வண்டியிலும் மற்ற கையில் ஒரு அளவான தடியின் நுனியில் வயரினால் செய்த உருவுதடம் ஒன்றும் இருந்தது.

என்ன தான் செய்கிறார்கள் என்று பின் தொடர்ந்து பார்த்தா கட்டாகாலி நாய்களை பிடித்து வண்டியினுள் போட்டு கொண்டு போகிறார்கள்.

இப்படி பிடிபடும் நாய்களை என்ன செய்கிறார்கள் என்று பலரையும் விசாரித்தால் எவருக்கும் அதற்கு பின்னால் என்ன தான் நடக்கிறதென்பது தெரியவில்லை.எனக்கோ ஏதாவதொரு தெரியவில்லை என்றால் அதை அறியுமட்டும் அதே சிந்தனை தான்.

கொஞ்சகாலம் கடந்த பின் மீண்டும் அதே மாதிரி வண்டியில் கட்டாகாலி நாய்களை பிடித்து ஏற்றிக் கொண்டு போகிறார்கள்.அந்த வண்டி பின்னாடியே எனது நண்பனும் நானுமாக பின் தொடர்கின்றோம்.கொஞ்ச தூரம் போக ஒருவர் ஓடி வந்து அவர்களுடன் சண்டை பிடிக்கிற மாதிரி கதைத்து பின்னர் சிறிது பணம் கொடுத்து அவரின் நாயை மீட்டு செல்கிறார்.

அந்த நாயைக் கொண்டு வந்தவரிடம் விபரம் கேட்கலாம் என்று

அண்ணை அண்ணை கொஞ்சம் நில்லுங்கோ!இந்த நாய்களை ஏன் பிடிக்கிறார்கள?எங்கே கொண்டு போகிறார்கள்?

அது தம்பியவை இவங்கள் மாநகரசபையால் வாறாங்கள்.கட்டாகாலி நாய்களை பிடித்து கொண்டு போறாங்கள்.

சரி அண்ணை எங்கை கொண்டு போறாங்கள்?

இப்பிடியே கொண்டு போய் பண்ணை கடலினுள் இறக்கிவிடுவாங்கள் அதுகள் வாலை வெட்டிக் கொண்டு போய் மாநகரசபையில் கொடுத்தால் வாலுக்கு ஒரு ருபா கொடுப்பாங்களாம் இது மட்டும் தான் எனக்கு தெரியும்.

அந்த சிறு வயதிலேயே பிடிபட்ட நாய்களுக்காக மனம் ரொம்பவே அழுதது.இப்படியான சம்பவம் நடக்கிறதை மாநகரசபையில் வசிப்பவர்களைத் தவிர மற்றவர்கள் அறிந்திருக்க வாய்ப்புகளே குறைவு.

உண்மையில் அந்த அண்ணன் சொன்ன மாதிரி நாய்களைக் கொன்று வாலை கொடுத்து பணம் பெறுகிறார்களா? அல்லது இந்த நாய்களுக்கு என்ன நடக்கின்றன என்று இன்று வரை சரியான தகவல்கள் தெரியாது.

Link to comment
Share on other sites

வாலை கொடுத்து(காட்டி) பணம் பெறுவதாகவே நானும் அறிந்துள்ளேன். நாய்களை கொன்று கடலில் வீசி  விடுவார்களாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nunavilan said:

வாலை கொடுத்து(காட்டி) பணம் பெறுவதாகவே நானும் அறிந்துள்ளேன். நாய்களை கொன்று கடலில் வீசி  விடுவார்களாம். 

1966,67 களில் வாலுக்கு ஒரே ஒரு ருபா தான் என்று கூறினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறையாக   வளர்த்தால் அந்த நன்றி உள்ள பிராணி  வீட்டுக்கும் காவல் எசமானுக்கும் தோழன்நல்ல    காவல் காரன் வீட்டுக்கு வருபவர்களை" விசாரித்து" தான்  உள்ளே அனுப்பும் .  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையை பொறுத்த வரை கிராமப்புறங்களில் நாய் இல்லாத வீடே கிடையாது என்றெ சொல்லலாம்.

என்ரை வீட்டிலை இரண்டு நாய்கள்.....நாய் எண்டு சொல்லுறதை விட வீட்டுக்கு காவலன் எண்டே சொல்லலாம்.

பெயர் வீமன்,அர்ச்சுனன்.

சாப்பாடு புழிஞ்சதேங்காய்ப்பூவும்  பழைய சோறும் தான்....

எசமானுக்கு கட்டுப்பட்டதுகள்.  நன்றியான பிராணிகள்.

ஈழப்பிரியன்! புதியகோணத்தில் ஒரு சுயசரிதை. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடும் வெக்கை நிலவும் மதிய நேரம்களில் குட்டித்தூக்கம் போடும் நேரம் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள பழைய உலக்கையில் சாரைப்பாம்பு ஏறி தான் வளர்ந்து விட்டனோ என்று நீள் வாக்கில் அளந்து பார்த்து கொண்டு இருக்கும் அது மட்டும்தான் அதன் எல்லை அதன் பின் ஒரடி வீட்டுப்பக்கம் வந்தால் சூரன் போர் தொடங்கிடும் கருப்பனும்,வீமனும் போடும் சத்தத்தில் பக்கத்து வீட்டு கிழவி கத்தும் நாய் இரண்டுக்கும் கூட சாப்பாடு போடுறம் என்று . நாய்கள் கள்வர்களுக்கு மட்டும் அல்ல விஷ ஐந்துகளுக்கும் எமன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für நாய் பிடி வண்டி  Bildergebnis für நாய் பிடி வண்டி  

ஆகா.....  ஈழப்பிரியனின் நினைவு மீட்டல்,  நாய் பிடி வண்டிலைப்  பற்றி  வந்தது மகிழ்ச்சி. :)
யாழ்ப்பாணத்தில்... அப்போ  நாய் பிடி வண்டில் இரண்டு மீற்றர் நீளமும், ஒன்றரை மீற்றர் அகலமும் இருக்கும்.
அதன் சுற்றுப் புறம் படத்தில் உள்ளபடி, நீளக்  கம்பிகளால் அடைக்கப் பட்டிருக்கும்.
அதன் சக்கரம், பழைய காரின்  சக்கரத்தால்... செய்யப் பட்டிருக்கும்.

நாய் பிடிப்பவர்கள் மாநகர சபை ஊழியர்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைத்தாலும்,
ஒரு நாயை பிடித்தால்.... ஒரு ரூபாய் என்பது, விசேட ஊக்குவிப்பு ஊதியம்.
ஒரு ரூபாய் குறைவான காசு என்று நினைக்காதீர்கள்.
அந்தக் காலத்தில்... ஒரு ரூபாய்க்கு, ஒன்றரை போத்தில் கள்ளு  வாங்கலாம். :D:

யாழ்ப்பாணத்தில்... நாய் பிடிகாரர் ஒரு பகுதிக்கு  வந்தால்,
கைத்தொலைபேசி இல்லாத காலத்தில்....
"நாய்பிடி காரன் வந்திட்டான்.... உங்கடை நாயை கட்டி வையுங்கோ..."  என்ற செய்தியை,
வேலிக்குள்ளாலை சொல்ல....   அது, அரை மணித்தியாலத்தில
நல்லூரில் இருந்து, கோண்டாவில் மட்டும் போய் சேர்ந்திடும். :grin:

அதுக்குப் பிறகு... அவனுக்கு அம்பிடுறது எல்லாம், குட்டை  பிடித்த  நாய்கள் தான்.  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிலாமதி said:

முறையாக   வளர்த்தால் அந்த நன்றி உள்ள பிராணி  வீட்டுக்கும் காவல் எசமானுக்கும் தோழன்நல்ல    காவல் காரன் வீட்டுக்கு வருபவர்களை" விசாரித்து" தான்  உள்ளே அனுப்பும் .  tw_blush:

ஊரில் கிராமங்களில் நாய் இல்லாத வீடே இருக்காது.இன்னும் கொஞ்ச காலத்தில் ஊர் நாய்கள் எல்லாம் அழிந்துவிடும்.

எல்லோருமே நாய்க்கு குடும்பகட்டுப்பாடு செய்கிறார்கள்.இது ஒரு சோகமான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

என்ரை வீட்டிலை இரண்டு நாய்கள்.....நாய் எண்டு சொல்லுறதை விட வீட்டுக்கு காவலன் எண்டே சொல்லலாம்.

பெயர் வீமன்,அர்ச்சுனன்.

சாப்பாடு புழிஞ்சதேங்காய்ப்பூவும்  பழைய சோறும் தான்....

எசமானுக்கு கட்டுப்பட்டதுகள்.  நன்றியான பிராணிகள்.

ஈழப்பிரியன்! புதியகோணத்தில் ஒரு சுயசரிதை. நன்றி

அனேகமான வீடுகளில் இரண்டு நாய் தான் வளர்ப்பார்கள்.சில வேளைகளில் அதுகள் விளையாடும் போது பார்த்தால் உண்மையிலேயே கடிபடுவது போலவே இருக்கும்.

நீங்கள் சொன்னது போல் ஆட்டுக்கு மாட்டுக்கு நாய்க்கு என்று புழிந்த தேங்காய்ப் பூ புறித்து வைக்கப்பட்டிருக்கும்.

மீனில்லாத முள்ளு இறைச்சி இல்லாத எலும்பு மிஞ்சுற கொஞ்ச சோறு பிசைந்து வைக்க அவருக்கென ஒரு கோப்பை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

கடும் வெக்கை நிலவும் மதிய நேரம்களில் குட்டித்தூக்கம் போடும் நேரம் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள பழைய உலக்கையில் சாரைப்பாம்பு ஏறி தான் வளர்ந்து விட்டனோ என்று நீள் வாக்கில் அளந்து பார்த்து கொண்டு இருக்கும் அது மட்டும்தான் அதன் எல்லை அதன் பின் ஒரடி வீட்டுப்பக்கம் வந்தால் சூரன் போர் தொடங்கிடும் கருப்பனும்,வீமனும் போடும் சத்தத்தில் பக்கத்து வீட்டு கிழவி கத்தும் நாய் இரண்டுக்கும் கூட சாப்பாடு போடுறம் என்று . நாய்கள் கள்வர்களுக்கு மட்டும் அல்ல விஷ ஐந்துகளுக்கும் எமன் .

பெருமாள் நீங்கள் பாம்பை பற்றி எழுதும் போது தான் எனக்கு நடந்தது ஞாபகம் வருகிறது!

8ம் வகுப்பு படிக்கும் போது என்று எண்ணுகிறேன் எமது நாய் பெரிய ஒரு சாரைப் பாம்பை கடித்து ஏறத்தாழ அரைவாசியாக்கி விட்டது.பாம்பு புற்றை நோக்கி நகர அதன் வாலில் பிடித்து வெளியே இழுத்துவிட்டு கொண்டிருந்தேன்.கடைசியில் ஒரு மாதிரியாக புற்றுக்குள் போய்விட்டது.

அன்று இரவு படிப்பு முடிந்து சாப்பிட குசினிக்கு போகும் வழியில் எனக்கு பாம்பு கடித்துவிட்டது.அந்த காலங்களில் வீட்டில் மின்சாரம் பொருத்தப்படவில்லை.அதனால் ஏதோ கடித்து போட்டுது என்று குளறி அழுதேன்.உடனே மூன்று இடத்தில் கட்டு போட்டுவிட்டு கொட்டடிடியில் இருந்த விஷகடி வைத்தியரிடம் கொண்டு போய் அடுத்த நாள் விடியும் வரை இருந்தேன்.அவர் தான் இது பாம்பு கடி என்று சொன்னார்.

Link to comment
Share on other sites

சென்ற வருடம் இலங்கைக்குச் சென்றபோது, யாழ்ப்பாணத்தில் சில ஒழுங்கைகளில் நாய்த்தொல்லை தாங்க முடியவில்லை. மாலை நேரங்களில் போக முடியாது. சைக்கிளில் சென்றால் அந்தத் தெருக்களில் வேகமாகச் சைக்கிளை மிதிப்பதுண்டு. நாய் துரத்தினால் கால்கள் இரண்டையும் மேலே தூக்கினாலும் சைக்கிள் அடுத்த சந்தி வரைக்கும் தானாக உருளும் என்ற நம்பிக்கை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für நாய் பிடி வண்டி  Bildergebnis für நாய் பிடி வண்டி  

ஆகா.....  ஈழப்பிரியனின் நினைவு மீட்டல்,  நாய் பிடி வண்டிலைப்  பற்றி  வந்தது மகிழ்ச்சி. :)
யாழ்ப்பாணத்தில்... அப்போ  நாய் பிடி வண்டில் இரண்டு மீற்றர் நீளமும், ஒன்றரை மீற்றர் அகலமும் இருக்கும்.
அதன் சுற்றுப் புறம் படத்தில் உள்ளபடி, நீளக்  கம்பிகளால் அடைக்கப் பட்டிருக்கும்.
அதன் சக்கரம், பழைய காரின்  சக்கரத்தால்... செய்யப் பட்டிருக்கும்.

நாய் பிடிப்பவர்கள் மாநகர சபை ஊழியர்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைத்தாலும்,
ஒரு நாயை பிடித்தால்.... ஒரு ரூபாய் என்பது, விசேட ஊக்குவிப்பு ஊதியம்.
ஒரு ரூபாய் குறைவான காசு என்று நினைக்காதீர்கள்.
அந்தக் காலத்தில்... ஒரு ரூபாய்க்கு, ஒன்றரை போத்தில் கள்ளு  வாங்கலாம். :D:

யாழ்ப்பாணத்தில்... நாய் பிடிகாரர் ஒரு பகுதிக்கு  வந்தால்,
கைத்தொலைபேசி இல்லாத காலத்தில்....
"நாய்பிடி காரன் வந்திட்டான்.... உங்கடை நாயை கட்டி வையுங்கோ..."  என்ற செய்தியை,
வேலிக்குள்ளாலை சொல்ல....   அது, அரை மணித்தியாலத்தில
நல்லூரில் இருந்து, கோண்டாவில் மட்டும் போய் சேர்ந்திடும். :grin:

அதுக்குப் பிறகு... அவனுக்கு அம்பிடுறது எல்லாம், குட்டை  பிடித்த  நாய்கள் தான்.  :unsure:

சிறி நாய்பிடி வண்டில் படம் போட்டு கலக்கிவிட்டீர்கள்.

நன்றி நன்றி.

நானும் இந்த நாய்பிடிகாரரைக் கண்டால் முடிந்தளவு நாய்களை துரத்திவிடுவேன்.அடைத்து வைத்திருக்கும் நாய்களையும் திறந்துவிடவே விருப்பம்.நாய் பிடிக்கிற மாதிரி உன்னையும் பிடித்து கொண்டு போடுவாங்கள் என்று சினேகிதர் பயப்படுத்துவார்கள்.அத்தோடு நின்றுவிடுவது.

8 minutes ago, இணையவன் said:

சென்ற வருடம் இலங்கைக்குச் சென்றபோது, யாழ்ப்பாணத்தில் சில ஒழுங்கைகளில் நாய்த்தொல்லை தாங்க முடியவில்லை. மாலை நேரங்களில் போக முடியாது. சைக்கிளில் சென்றால் அந்தத் தெருக்களில் வேகமாகச் சைக்கிளை மிதிப்பதுண்டு. நாய் துரத்தினால் கால்கள் இரண்டையும் மேலே தூக்கினாலும் சைக்கிள் அடுத்த சந்தி வரைக்கும் தானாக உருளும் என்ற நம்பிக்கை. 

இணையவன் இந்த நாய்கள் துரத்துவதை நன்கு கவனித்து பார்த்தால் எல்லோரையும் துரத்துவது கிடையாது.ஏதும் வித்தியாசம் தெரிந்தால்த் தான் துரத்தும் என எண்ணுகிறேன்.

சில பேர் நாய் துரத்த போய் சைக்கிளுடன் வேலிவழிய விழுந்தவர்களும் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய் பிடி நல்லாத்தான் இருக்கு 

அந்த காலம்  நாய்க்கடிக்கான மருந்து செலவும் ஊசி செலவும் அதிகம் கட்டாக்காலிகளுக்கு  நோய் வருவது அதிகம் விசர் இதனால் மக்கள் பாதிப்படைவார்கள் என்பதற்க்காக வண்டிகளில் வருவது வழமை கிழக்கில் நஞ்சு கலந்த இறைச்சியை எறிவார்கள் கவ்வியவர்கள் காலி பிறகு அள்ளி சென்றுவிடுவார்கள்  தற்போது வலைகள் வீசுகிறார்கள் ஆனால் அதற்க்காக காசு கொடுத்ததாக நான் கேள்விப்படவில்லை 

வீட்டு நாய் தெருநாய் ஆகி தெரு நாய் சொறி நாய் ஆகி சொறி நாய் நாய் விசர் நாய் ஆவது வழமை இதை தடுப்பதற்கும் மக்களை விசர் நாய் கடியில் இருந்து காப்பாற்றவும் எடுக்கும் நடவடிக்கை  தான் அது 

எங்கள் வீட்டு நாயை அதிரடிப்படை சுட்டுக்கொன்றது அவனை வளவுக்குள் விடல அதனால் சுட்டுக்கொன்றான் 

Link to comment
Share on other sites

2 மாதங்களுக்கு முன்னர் பிரான்சிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற குடும்பத்தில் ஒரு சிறுவனுக்குக் கடற்கரையில் வைத்து ஒரு நாய் கடித்து விட்டது. உடனடியாகச் சிகிச்சை செய்துள்ளனர். ஆனாலும் பிரான்ஸ் திரும்பியதும் சிறுவனுக்கு விசர் பிடித்து இறந்துவிட்டான். குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. விசர் நாய் உள்ள முக்கிய நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, கவனமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கள் வீட்டு நாயை அதிரடிப்படை சுட்டுக்கொன்றது அவனை வளவுக்குள் விடல அதனால் சுட்டுக்கொன்றான் 

நல்ல நாய் என்றால் வாயை சுற்றி கறுப்பாக இருக்கும்.ரொம்பவும் கடியனாக இருக்கும்.

வீட்டில் வளர்த்த நாய் இறந்தால் ஏதோ எமது குடும்ப இழப்பாகவே இருக்கும்.

தனி பிடிபட்ட நாய்களை என்ன செய்கிறார்கள் என்று இது வரை எவரும் சரியான தகவல் சொல்லவில்லை.

கடலில் தள்ளிவிட்டால் சரியா?கரை ஒதுங்கும் போது முறைப்பாடு செய்வார்களே?

3 minutes ago, இணையவன் said:

2 மாதங்களுக்கு முன்னர் பிரான்சிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற குடும்பத்தில் ஒரு சிறுவனுக்குக் கடற்கரையில் வைத்து ஒரு நாய் கடித்து விட்டது. உடனடியாகச் சிகிச்சை செய்துள்ளனர். ஆனாலும் பிரான்ஸ் திரும்பியதும் சிறுவனுக்கு விசர் பிடித்து இறந்துவிட்டான். குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. விசர் நாய் உள்ள முக்கிய நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, கவனமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உண்மை தான் இணையவன்

மாநகர வசதிகள் கிராமங்களில் இல்லை.

உண்ணி தெள்ளு குட்டை என்று கடைசியில் விசர் பிடித்து யாரையும் கடிக்கும் போது தான் கண் விழிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்ல நாய் என்றால் வாயை சுற்றி கறுப்பாக இருக்கும்.ரொம்பவும் கடியனாக இருக்கும்.

வீட்டில் வளர்த்த நாய் இறந்தால் ஏதோ எமது குடும்ப இழப்பாகவே இருக்கும்.

தனி பிடிபட்ட நாய்களை என்ன செய்கிறார்கள் என்று இது வரை எவரும் சரியான தகவல் சொல்லவில்லை.

கடலில் தள்ளிவிட்டால் சரியா?கரை ஒதுங்கும் போது முறைப்பாடு செய்வார்களே?

முதலில் நஞ்சு கலந்த இறைச்சி தற்போது ஊசி போட்டு கொன்று விடுவார்கள் ( வருடங்கள் அதிகமானதை )  சிலதை ஊசி போட்ட பின்பு விட்டு விடுறார்கள். கொல்வதில்லை 

 

8 minutes ago, இணையவன் said:

2 மாதங்களுக்கு முன்னர் பிரான்சிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற குடும்பத்தில் ஒரு சிறுவனுக்குக் கடற்கரையில் வைத்து ஒரு நாய் கடித்து விட்டது. உடனடியாகச் சிகிச்சை செய்துள்ளனர். ஆனாலும் பிரான்ஸ் திரும்பியதும் சிறுவனுக்கு விசர் பிடித்து இறந்துவிட்டான். குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. விசர் நாய் உள்ள முக்கிய நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, கவனமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ம்ம் தெருநாய்கள் அதிகம் இலங்கையில்  தற்போது காயத்தை சுற்றி சுற்றி கணகெடுக்க முடியாத ஊசி போடுறார்கள் கிட்ட தட்ட 50 ஊசிகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் நீங்கள் பாம்பை பற்றி எழுதும் போது தான் எனக்கு நடந்தது ஞாபகம் வருகிறது!

8ம் வகுப்பு படிக்கும் போது என்று எண்ணுகிறேன் எமது நாய் பெரிய ஒரு சாரைப் பாம்பை கடித்து ஏறத்தாழ அரைவாசியாக்கி விட்டது.பாம்பு புற்றை நோக்கி நகர அதன் வாலில் பிடித்து வெளியே இழுத்துவிட்டு கொண்டிருந்தேன்.கடைசியில் ஒரு மாதிரியாக புற்றுக்குள் போய்விட்டது.

அன்று இரவு படிப்பு முடிந்து சாப்பிட குசினிக்கு போகும் வழியில் எனக்கு பாம்பு கடித்துவிட்டது.அந்த காலங்களில் வீட்டில் மின்சாரம் பொருத்தப்படவில்லை.அதனால் ஏதோ கடித்து போட்டுது என்று குளறி அழுதேன்.உடனே மூன்று இடத்தில் கட்டு போட்டுவிட்டு கொட்டடிடியில் இருந்த விஷகடி வைத்தியரிடம் கொண்டு போய் அடுத்த நாள் விடியும் வரை இருந்தேன்.அவர் தான் இது பாம்பு கடி என்று சொன்னார்.

அந்த இரவிலை உங்கடை பெரியவர் (உங்கள் நாய் ) அதான் எங்கை போனவர் ? 

விஷ ஐந்துகளில் இருந்து வரும் வாடை நாய்களுக்கு எச்சரிக்கை பண்ணும் என்பார்கள் . வீட்டுக்குள் களவு எடுக்க வரும் பூனையை கூட பூவரச மரத்தில் ஏத்தி விட்டு காகங்களிடம் கொத்து வேண்ட வைக்கும்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

முதலில் நஞ்சு கலந்த இறைச்சி தற்போது ஊசி போட்டு கொன்று விடுவார்கள் ( வருடங்கள் அதிகமானதை )  சிலதை ஊசி போட்ட பின்பு விட்டு விடுறார்கள். கொல்வதில்லை 

இல்லையே இங்கே கருத்தெழுதிய நுணா சிறி நான் அறிந்த வரை நாயைக் கொன்று வாலைக் கொடுத்து ஒவ்வொரு ருபாவாக வாங்குகிறார்கள்.

மிகுதி பகுதியை என்ன செய்கிறார்கள்?இது எனது நீண்ட கால கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

 

கடலில் தள்ளிவிட்டால் சரியா?கரை ஒதுங்கும் போது முறைப்பாடு செய்வார்களே?

 

 

 

 

 

1 minute ago, ஈழப்பிரியன் said:

இல்லையே இங்கே கருத்தெழுதிய நுணா சிறி நான் அறிந்த வரை நாயைக் கொன்று வாலைக் கொடுத்து ஒவ்வொரு ருபாவாக வாங்குகிறார்கள்.

மிகுதி பகுதியை என்ன செய்கிறார்கள்?இது எனது நீண்ட கால கேள்வி.

கொத்துரொட்டிக்கடைப்பக்கம் அனுப்பியிருக்கமாட்டார்கள்?????? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லையே இங்கே கருத்தெழுதிய நுணா சிறி நான் அறிந்த வரை நாயைக் கொன்று வாலைக் கொடுத்து ஒவ்வொரு ருபாவாக வாங்குகிறார்கள்.

மிகுதி பகுதியை என்ன செய்கிறார்கள்?இது எனது நீண்ட கால கேள்வி.

அது என்னவோ தெரியாது கிழக்கில் ஒரு பெரிய குழி வெட்டி புதைத்து விடுவார்கள் மாநகரசபையுடன் வருபவர்கள் பொது சுகாதார பரிசோதகர் (PHI) அவர்கள் முன்னிலையில் ஆனால் வடக்கில் இது பல வருடங்களுக்கு முன்பு நடந்த்ருக்கலாம் என நினைக்கிறன் அண்ண

11 minutes ago, குமாரசாமி said:

 

கொத்துரொட்டிக்கடைப்பக்கம் அனுப்பியிருக்கமாட்டார்கள்?????? :grin:

உவர சீனா பக்கம் நாய் சந்தை அனுப்பி எடுத்தால் தெரியும் வரைட்றி வரைட்றி நாய்கறியை வைத்திருபார்கள் தெரியாதோ என்னவோ  பாருங்கோவன் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

அந்த இரவிலை உங்கடை பெரியவர் (உங்கள் நாய் ) அதான் எங்கை போனவர் ? 

விஷ ஐந்துகளில் இருந்து வரும் வாடை நாய்களுக்கு எச்சரிக்கை பண்ணும் என்பார்கள் . வீட்டுக்குள் களவு எடுக்க வரும் பூனையை கூட பூவரச மரத்தில் ஏத்தி விட்டு காகங்களிடம் கொத்து வேண்ட வைக்கும்கள் .

பெருமாள் ஊரில் நாய்களை வீட்டுக்குள் விடுவதில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அது என்னவோ தெரியாது கிழக்கில் ஒரு பெரிய குழி வெட்டி புதைத்து விடுவார்கள் மாநகரசபையுடன் வருபவர்கள் பொது சுகாதார பரிசோதகர் (PHI) அவர்கள் முன்னிலையில் ஆனால் வடக்கில் இது பல வருடங்களுக்கு முன்பு நடந்த்ருக்கலாம் என நினைக்கிறன் அண்ண

உவர சீனா பக்கம் நாய் சந்தைப்பகம் அனுப்பி எடுத்தால் தெரியும் வரைட்றி வரைட்றி நாய்கறியை வைத்திருபார்கள் தெரியாதோ என்னவோ சிறியர் படம் இணைப்பார் பாருங்கோவன் 

Hundefleisch-Festival in China

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்பார்க்க அருவருப்பாக இருக்கும் என்பதால் நான் இணைத்த படத்தை எடுத்து விடுகிறேன்  கு.சாமி அண்ண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் ஊரில் நாய்களை வீட்டுக்குள் விடுவதில்லையே.

பொதுவாகவே நாயின் குரைப்பு சத்தம் கேட்டு அரவம்கள் வீடுகளுக்குள் இறங்குவதில்லை வீட்டின் பகுதி எங்கயாவது மரத்தில் முட்டிக்கொண்டு நிக்க விடுவதில்லை காரணம் கொடுக்கான் பூரான் அந்த வழியே வீட்டுக்குள் இறங்குவதுண்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

 

கொத்துரொட்டிக்கடைப்பக்கம் அனுப்பியிருக்கமாட்டார்கள்?????? :grin:

தொங்குமான் இறைச்சி கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் நாய் இறைச்சி என்று கேள்விப்படவில்லை.

ஒரே ஒரு முறை காங்கேசந்துறை வந்த பிலிப்பைன்ஸ் கப்பல்காரர் அங்கிருந்த கட்டாக்காலி நாய்களை பிடித்து சாப்பிடுகிறார்கள் என்று பலரும் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.