Jump to content

விமலின் முக்கிய சகாக்கள் சுதந்திரக்கட்சியில் இணைவு


Recommended Posts

விமலின் முக்கிய சகாக்கள் சுதந்திரக்கட்சியில் இணைவு

 

விமல் வீரவன்சவின் முக்கிய சகாக்களான மூவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

wimal.jpg

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பி.பீ. குமார ஆகியோர் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர்.

1__1_.jpg

இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளதுடன், எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்தனர்.

2__1_.jpg

3.jpg

 

http://www.virakesari.lk/article/28111

Link to comment
Share on other sites

சு.க. பக்கம் தாவும் எதிரணி எம்.பி.க்கள்

Sp18-70b24b44b64ac7d0b71261f5bf582e26af93c63d.jpg

 

சித­றி­யது விமலின் தேசிய சுதந்­திர முன்­னணி

(ரொபட் அன்­டனி)

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்­கல்கள் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான கட்சித் தாவல்கள் தொடங்­கி­யுள்­ளன. அந்த வகை­யில் நேற்­றைய தினம் கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்­சவின் கட்­சி­யான தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் மூன்று முக்­கி­யஸ்­தர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கொண்­டனர்.

 தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வீரக்­கு­மார திஸா­நா­யக்க, முன்னாள் தேசிய அமைப்­பாளர் பிய­சிறி விஜ­ய­நா­யக்க மற்றும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் வட மத்­திய மாகாண சபை உறுப்­பினர் பீ.பி. குமார ஆகியோர் நேற்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கொண்­ட­துடன் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பு­ரி­மையை பெற்றுக் கொண்­டனர்.  

அத்­துடன் நேற்­று­முன்­தினம் இரவு அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மஹிந்த அணி­யி­லி­ருந்­த­வ­ரு­மான சிரி­யாணி விஜ­ய­சே­க­ரவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் அணியில் இணைந்து கொண்டார். அந்த வகையில் இவர்கள் அனை­வரும் தற்­போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பு­ரி­மையை பெற்றுக் கொண்­டுள்­ளனர்.

இதற்கு முன்னர் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தி­நிதி ஜயந்த வீர­சே­க­ரவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைந்து கொண்­ட­துடன் உறுப்­பு­ரி­மையை பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பில் அறிக்­கை­யொன்றை வெ ளியிட்­டுள்ள ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் சுதந்­திரக் கட்­சிக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்க தேசிய சுதந்­திரக் முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் உறுதி வழங்­கி­ய­தாக தெரி­வித்­துள்­ளது.

தேர்தல் அறி­விக்­கப்­பட்டு வேட்பு மனு தாக்­கல்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் அர­சியல் கட்­சி­களும் கூட்டு அணி­களும் எதிர்த்­த­ரப்­பி­லி­ருந்து உறுப்­பி­னர்­களை வளைத்துப் போடும் செயற்­பா­டு­களில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளதை காண முடி­கி­றது. அந்த வகையில் தற்­போ­தைய நிலை­மையில் கூட்டு எதி­ர­ணி­யி­லி­ருந்து பல்­வேறு உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பக்கம் தாவிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

இதே­வேளை மேலும் கட்­சி­க­ளி­லி­ருந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளையும் வழைத்துப் போடும் நகர்­வு­களில் பிர­தான அர­சியல் கட்­சிகள் முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றன . குறிப்­பாக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து உறுப்­பி­னர்­களை வலைத்துப் போடும் நோக்கில் மஹிந்த அணியும் மஹிந்த தரப்­பி­லி­ருந்து உறுப்­பி­னர்­களை வலைத்துப் போடும் நோக்கில் மைத்­திரி அணியும் செயற்­பட்டு வரு­கின்­ற­மையை காண முடி­கி­றது.

அதன்­படி தற்­போது தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து நான்கு முக்­கி­யஸ்­தர்கள் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்­து­கொண்­டுள்­ள­தை­ய­டுத்து அக்­கட்சி கடும் நெருக்­க­டி­களை சந்­தித்­துள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதர்­வரும் பெப்­ர­வரி மாதம் 17 ஆம் திக­திக்கு முன்னர் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 93 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்பு மனுத்­தாக்கல் நேற்று ஆரம்­ப­மா­ன­துடன் ஏனைய 248 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கு­மான வேட்­பு­ம­னுத்­தாக்கல் எதிர்­வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் பிரதான கட்சிகளாக போட்டியிடுகின்றன.

இம்முறை உள்ளூராட்சி முறை தேர்தலானது 60 வீத தொகுதி முறைமையிலும் 40 வீத விகிதாசார முறைமையிலும் நடைபெறவுள்ளதுடன் 8000 மேற்பட்ட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-12#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.