Jump to content

ஐ.தே.க. விரித்த வலைக்­குள் கூட்­ட­மைப்பு சிக்கி விடுமா?


Recommended Posts

  • ஐ.தே.க. விரித்த வலைக்­குள் கூட்­ட­மைப்பு சிக்கி விடுமா?
ஐ.தே.க. விரித்த வலைக்­குள் கூட்­ட­மைப்பு சிக்கி விடுமா?
 
 

ஐ.தே.க. விரித்த வலைக்­குள் கூட்­ட­மைப்பு சிக்கி விடுமா?

 
 

அமைச்­ச­ர­வைக்­குள் கூட்­ட­மைப்பை உள்­ளீர்ப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி பகீ­ர­தப் பிர­யத்­த­ னம் செய்­வ­தா­கச் செய்­தி­யொன்று தெரி­விக்­கின்­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறீ­லங்கா சதந்­தி­ரக்­கட்சி மகிந்த தரப்­பு­டன் இணைந்து கொள்­வ­தற்­கான பேச்­சு­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ள குழப்­ப­மா­ன­தொரு நிலை­யில், அமைச்­ச­ரவையில் இணைந்து கொள்­ளு­மாறு கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

சிறீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் இரண்டு அணி­க­ளும் இணைந்து கொள்­ளும் பட்­சத்­தில் இன்­றைய கூட்டு அர­சில் பிளவு ஏற்­ப­டு­வது நிச்­ச­ய­ மா­கி­வி­டும்.

இந்த நிலை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்க வேண்­டு­மா­னால் கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு அதற்கு அவ­சி­யம் தேவைப்­ப­டும். இதன் கார­ண­மா­கவே இந்த அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

உள்ளூ­ராட்­சித் தேர்­தல்­கள் இடம் பெறப்­போ­கும் நிலை­யில் இன்­றைய கூட்டு அர­சில் பிளவு ஏற்­ப­டு­வது பெரும் குழப்­ப­நி­லை­ யைத் தோற்­று­வித்து விடும்.

மக்­க­ளும் குழம்­பிப்­போய் விடு­வார்­கள். மேலும் அர­சு­டன் ஒட்டி உற­வா­டு­வ­தாக கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் தொடர்ந்து கூட்­ட­மைப்­பைக் குற்­றம் சாட்டி வரு­கின்­ற­னர். இத­னால் நிலை­மை­யை­மி­குந்த அவ­தா­னத்­து­டன் கையா­ள­வேண்­டிய தேவை கூட்­ட­மைப்­புக்கு எழுந்­துள்­ளது.

அரச தலை­வ­ருக்கு  ஆத­ர­வான சுதந்­தி­ரக்  கட்­சி­யி­ன­ரது தய­வால் அரசை நிறு­வினார் ரணில்

 

கடந்த 2015ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் இடம்­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி அதிக நாட­ளு­மன்ற ஆச­னங்­க­ளைப் பெற்ற போதி­லும், அத­னால் தனித்து ஆட்சி அமைக்க முடி­ய­வில்லை.

மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யைச் சேர்ந்த நாட­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வு­ட­னேயே ஆட்­சியை அமைக்க முடிந்­தது.

அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­த­லின்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யின் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு முழு ஆத­ர­வை­யும் வழங்­கி­னார்.

அவ­ரது ஆத­ரவு கிடைக்­கா­மல் போயி­ருந்­தால் தற்­போ­தைய அரச தலை­வ­ரால் அந்­தப் பத­வி­யில் அமர்ந்­தி­ருக்க முடி­யாது. ஆனால் அதை­யெல்­லாம் மறந்து விட்டு மகிந்­த­வு­டன் உற­வைப் பேண அவர் முயற்சி செய்­வதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக் கொள்ள முடி­யாது.

ஐ.தே.கட்­சியை  தமிழ் மக்­கள் நம்ப  இய­லா­தென்­பதே  கள நில­வ­ரம்

இதே­வேளை கூட்டு அரசு தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு எதை­யும் காண­வில்லை. காலத்தை இழுத்­த­டிக்­கின்ற செயற்­பா­டு­களே இடம்­பெற்று வரு­கின்­றன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறீ­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் இணைந்து செய்ய முடி­யா­ததை ஐக்­கிய தேசி­யக்­கட்சி தனித்து நிறை­வேற்றி வைக்­கு­மென்­பதை ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

 

இந்த நிலை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ரணி­லின் தலை­மை­யி­லான அர­சு­டன் இணைந்து, அமைச்­சுப் பொறுப்­புக்­க­ளை­யும் ஏற்­றுக்­கொள்­வ­தால் நன்மை எது­வும் கிடைக்­கப்­போ­வ­ தில்லை.

விடு­த­லைப்­பு­லி­கள் பிள­வு­ப­டு ­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே கார­ண­மாக இருந்­துள்­ளார். இதைத் தமி­ழர்­கள் இன்­ன­மும் மறந்து விட­வில்லை.

அத்­து­டன் இம்­முறை புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னின் பிறந்த நாள் நிகழ்­வை­யும், மாவீ­ரர்­தின நிகழ்­வை­யும் தமிழ் மக்­கள் சிறப்­பாக கொண்­டா­டி­யுள்­ள­னர்.

இவை புலி­கள் மீதான அவர்­க­ளின் ஈடு­பாடு மங்­கி­வி­ட­வில்லை என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றன. இந்த நிலை­யில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் கூட்­ட­மைப்­பி­னர் உற­வைப் பேணு­வது சரி­யா­ன­தொரு செய­லாக அமை­ய­மாட்­டாது.

இன்­றைய நிலை­யில் அர­சில் இணை­வது கூட்­ட­மைப்­புக்கு பாத­க­மா­கவே அமை­யும்

மேலும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் இடம்­பெ­று­கின்ற வேளை­யில் கூட்­ட­மைப்­பி­னர் அமைச்­சர் பொறுப்­புக்­களை ஏற்­ப­தும் சரி­யா­ன­தா­கத் தெரி­ய­வில்லை.

தவ­றான பரப்­பு­ரை­க­ளில் ஈடு­ப­டு­வ­தற்கு எதி­ர­ணி­யி­ன­ருக்கு இது வாய்ப்பு வழங்­கு­வ­தாக அமைந்­து­வி­டும். ஆகவே கூட்­ட­மைப்­பி­ னர் பங்­கா­ளி­க­ளு­டன் இது தொடர்­பாக நன்கு பேசி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்­டும்.

ஏற்­க­னவே எதிர்க்­கட்­சித் தலை­மைப்­பொ­றுப்பை ஏற்­றுக்­கொண்ட நிலை­யி­லும், கூட்­ட­மைப்பு இன்­றைய அர­சுக்கு வெளியி­லி­ருந்து தனது ஆத­ர­வைத் தெரி­வித்து வரு­கின்­றது.

 

வர­வுச்­செ­ல­வுத்­திட்­டத்­தின் மீதான வாக்­கெ­டுப்­பின்­போ­தும் அர­சுக்கு ஆத­ர­வா­கவே செயற்­ப­டு­கின்­றது.இதையே ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சி­லும் தொடர முடி­யும்.

தமி­ழ் அரசுக்­கட்சி தனித்­துச் செயற்­பட்ட போது அன்­றைய ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சில் எம்.திருச்­செல்­வம் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரா­கப் பதவி வகித்­தமை நினைவுக்கு வரு­கின்­றது ஆனால் அன்­றைய சூழ்­நிலை வேறு இன்­றைய சூழ்­நிலை வேறு என்­று­தான் கூற வேண்­டும்.

இன்று தமிழ் மக்­கள் தமது பிரச்­சி­னை ­க­ளுக்­குத் தீர்­வைக் காண முடி­யாது திண்­டா­டிக் கொண்­டி­ருக்­கின்ற வேளை­யில் கூட்­ட­மைப்­பி­னர் அமைச்­சுப் ப­தவி போன்ற வரப்­பி­ர­சா­தங்­க­ளைப் பெற்று அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருப்­பது நல்­ல­தா­கத் தெரி­ய­வில்லை.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் ஒரு பழுத்த அர­சி­யல்­வாதி. தமி­ழர்­க­ளின் நல் வாழ்­வுக்­காக அல்­லும் பக­லும் உழைப்­ப­வர். இவர் தவ­றான முடிவு எதை­யும் எடுக்­க­மாட்­டா­ரென உறு­தி­யாக நம்­ப­லாம்.

அந்த நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­று­வது கூட்­ட­மைப்­பி­ன­ரின் தலை­யாய கட­மை­யா­கும்.

http://newuthayan.com/story/54440.html

Link to comment
Share on other sites

தமிழரிடம் அரிசியை வாங்கிவிட்டுப் பதிலாக உமி கொடுக்கும் சுதந்திரக் கட்சியை விடவும்.... நெல்லுக் கொடுக்கும் ஐ.தே.க. சிறந்ததே. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.