Jump to content

தமிழ் அர­சுக் கட்­சிக்­குள் பங்­கீடு குறித்து அதி­ருப்தி


Recommended Posts

  • தமிழ் அர­சுக் கட்­சிக்­குள் பங்­கீடு குறித்து அதி­ருப்தி
தமிழ் அர­சுக் கட்­சிக்­குள்  பங்­கீடு குறித்து அதி­ருப்தி
 
 

தமிழ் அர­சுக் கட்­சிக்­குள் பங்­கீடு குறித்து அதி­ருப்தி

 

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில், முதன்­மைப் பங்­கா­ளிக் கட்­சி­யான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இரண்­டாம் நிலைத் தலை­வர்­கள், மாவட்ட நிர்­வா­கி­கள் மட்­டத்­தில் பெரும் அதி­ருப்தி நில­வு­கின்­றது.

ஒற்­றுமை என்ற பெய­ரில், பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு அதி­க­ள­வான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை, கூட்­ட­மைப்­பின் தலைமை மற்­றும் தமிழ் அர­சுக் கட்­சி­யின் உயர் பீடத்­தி­னர் தாரை­வார்த்­துள்­ள­தாக அவர்­கள் குற்­றஞ் சுமத்­தி­யுள்­ள­னர்.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லுக்­கான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீட்­டில் முதல் சுற்­றில் 80 சத­வீத இணக்­கம் எட்­டப்­பட்­டி­ருந்­தது. இரண்­டாம் சுற்­றில் ஏற்­க­னவே எட்­டப்­பட்ட இணக்­க­மும் இல்­லா­மல்­போ­னது.

இத­னை­ய­டுத்து பங்­கா­ளிக் கட்­சி­க­ளுள் ஒன்­றான ரெலோ, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து தேர்­தலை எதிர்­கொள்ள முடி­யாது என்று அறி­வித்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து ஏற்­பட்ட பிணக்கை சரி­செய்­யும் நோக்­கு­டன், கொழும்­பில்
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கூட்­டம் நடத்­தப்­பட்­டது.

எதிர்­கட்­சித் தலை­வ­ரும், கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளும் பங்­கேற்­றி­ருந்­த­னர்

 

அந்­தக் கூட்­டத்­தில் பங்­கா­ளிக் கட்­சி­கள் கோரி­ய­தற்­கும் அதி­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­னால் விட்­டுக் கொடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக உள்­ளுர் தலை­வர்­க­ளால் விச­னம் தெரி­விக்­கப்­பட்­டது. இத­னால் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இரண்­டாம் நிலைத் தலை­வர்­கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­னர்.

மாவட்ட நிர்­வா­கி­க­ளு­டன் கலந்­தா­லோ­சிக்­கா­மல், கட்­சித் தலைமை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளைத் தாரை­வார்த்­துள்­ள­தாக அவர்­கள் குற்­றஞ்­சு­மத்­தி­யுள்­ள­னர்.

மன்­னார் நகர சபை ரெலோ­வுக்கு முன்­னர் வழங்­கப்­பட்­டது. கடும் எதிர்ப்பை அடுத்து பின்­னர், இரண்டு ஆண்­டு­கள் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும், எஞ்­சிய இரண்டு ஆண்­டு­கள் ரெலோ­வுக்கு என்று மாற்­றப்­பட்­டது.

ஆனால் இந்­தத் தீர்­மா­னத்­தை­யும் ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாது என்று தமிழ் அர­சுக் கட்­சி­யின் மன்­னார் மாவட்­டக் கிளை­யி­னர் போர்க் கொடி தூக்­கி­யுள்­ள­னர். கட்­சித் தலை­மைக்கு எழுத்து மூல­மான கடி­த­மும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆச­னப்­பங்­கீட்டை ஏற்­க­மு­டி­யாது என்­றும், இதனை மாற்­றி­ய­மைக்க வேண்­டும் என்­றும் அந்­தக் கடி­தத்­தில் கோரப்­பட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/54404.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.