Jump to content

மஹிந்­த­வுக்கு அஞ்­ச­வில்லை


Recommended Posts

மஹிந்­த­வுக்கு அஞ்­ச­வில்லை

Sp11-fffcfed52715b82d08965872486f2c2e7ce549ec.jpg

 

ஐ.தே.க. வெற்­றி­ந­டை­போடும்; சுதந்­திரக் கட்­சியினருக்கே அச்சம் என்­கிறார் ரணில்

(லியோ நிரோஷ தர்ஷன்)

 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அச்­சப்­ப­டலாம். ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு இந்த இரண்டு கட்­சிகள் தொடர்­பிலும் எவ்­வி­த­மான அச்­சமும் கிடை­யாது. ஆகவே மக்­க­ளிடம் சென்று தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் உண்­மை­யான பங்­க­ளிப்பை கூறுங்கள். மக்­களின் ஆத­ரவு கிடைக்கும் என பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

உத்­தேச உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் கட்­சியை எவ்­வாறு ஒழுங்­க­மைப்­பது  என்பது குறித்து சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பு ஒன்று அலரி மாளி­கையில் அண்­மையில் நடை­பெற்­றது. அதன்போதே பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இந்த சந்­திப்­பின்­போது தேர்­தலை எவ்­வாறு  எதிர்­கொள்­வது என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.  

இதே­வேளை போட்­டி­யிடும் எதிர் தரப்­புகள் எவ்­வா­றான நிலை­மை­களில் உள்­ளனர் , அவர்கள் யார் என்­பது தொடர்பில் அறிய வேண்டி இருந்­தது. ஆனால் இன்று அந்த தக­வல்கள் வெளி­வந்து விட்­டன. இனி ஐக்­கிய தேசிய கட்சி எவ்­வாறு மக்கள் மத்­தியில் செல்ல வேண்டும் என்­ப­தையே சிந்­திக்க வேண்டும் என பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

வாழ்க்கை செலவு விவ­காரம் மக்கள் மத்­தியில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் உள்ள பொது­வான சவா­லாகும். மேலும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் இரண்டு முக்­கி­யஸ்­தர்கள் கட்சி தாவு­வ­தற்­கான பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் ஐக்­கிய தேசிய கட்­சியில் வாய்ப்பு அளிக்­கப்­ப­டாத இருவர் சுதந்­திர கட்­சியில் இணைந்­துக்­கொண்­டுள்­ள­தாக பிர­த­ம­ரிடம் இதன் போது தெரி­விக்­கப்­பட்­டது .

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை கண்டு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அச்­சப்­ப­டலாம். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு அந்த அச்­சப்­பாடு கடு­க­ளவும் இல்லை. தனி­ந­ப­ருக்­குள்ள குறிப்­பிட்­ட­ளவு வாக்கு வங்கி ஒரு போதும் அதி­க­ரிக்­காது. ஆகவே புதிய கூட்­ட­ணிகள் எவ்­வி­த­மான சவா­லையும் எமக்கு ஏற்­ப­டுத்­தாது என பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது இவ்­வாறு இருக்க கிராம மட்­டத்­தி­லான கூட்­டங்கள் மற்றும் வீடு வீடாக சென்று மக்­களை சந்­தித்தல் உள்­ளிட்ட பல்­வேறு பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க ஐக்­கிய தேசிய கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என அனைத்து தரப்­பு­களும் அனைத்து உள்­ளு­ராட்­சி­மன்­றங்­க­ளிலும் கட்­சியின் வெற்­றிக்­காக செயற்­பட வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அறி­வித்­துள்ளார். அதே போன்று மாவட்­டத்­திற்கு ஒன்று அல்­லது இரண்டு கூட்­டங்­களில் பிர­தமர் கலந்­துக்­கொள்ள உள்ளார்.

நாட­ளா­விய ரீதியில் இடம்­பெ­ற­வுள்ள உள்­ளு­ராட்­சி­மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 8 ஆயிரம் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளது. பங்காளி கட்சிகளுடனான இணக்கப்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் உட்சாகமாக தேர்தலில் போட்டியிட முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-11#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.