Jump to content

வார இறுதி ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டி செய்திகள்


Recommended Posts

மிலன் – ஜுவென்டஸ் போட்டி சமநிலை
 

image_d44f391e8a.jpg

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள இன்டர் மிலன், நடப்பு சீரி ஏ சம்பின்களான ஜுவென்டஸுக்கிடையே நேற்று இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெற்றிருக்கவில்லை.

இப்போட்டியில் ஜுவென்டஸின் மரியோ மண்டுஸிக்கின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டிருந்ததுடன், இவரின் பல உதைகளை இன்டர் மிலனின் கோல் காப்பாளர் சமிர் ஹன்டனோவிக் தடுத்திருந்தார்.

இந்நிலையில், நடப்பு பருவகாலத்தில் அதிக கோல்களைப் பெற்றவரான இன்டர் மிலனின் அணித்தலைவர் மெளரோ இகார்டியின் உதையொன்றை ஜுவென்டஸின் கோல் காப்பாளர் தடுத்திருந்ததுடன், வேறு எந்த கோல் பெறும் சந்தர்ப்பங்களை அவர் உருவாக்கியிருக்கவில்லை.

 
 
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்
 

image_6e60bd179e.jpg

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் லில்லி அணியை பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.

இப்போட்டியின் 28ஆவது நிமிடத்தில், கிலியான் மப்பே கொடுத்த பந்தை அஞ்சல் டி மரியா கோலாக்க முன்னிலை பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைன், 49ஆவது நிமிடத்தில் அஞ்சல் டி மரியா கொடுத்த பந்தை ஸ்கேவியர் பஸ்டோரே கோலாக்க 2-0 என முன்னிலை பெற்றது.

பின்னர், 86ஆவது நிமிடத்தில் லில்லி அணியின் அன்வர் எல் காஸி கோலொன்றைப் பெற்றபோதும் போட்டியின் இறுதிக் கணத்தில் கிலியான் மப்பே பெற்ற கோல் காரணமாக, இறுதியில், 3-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.

 
 
வெஸ்ட் ஹாமிடம் தோற்றது செல்சி
 

image_d98e08c4b7.jpg

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக்கில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சி வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டிடம் தோல்வியுற்றது.

இப்போட்டியின் ஆறாவது நிமிடத்தில், மனுவல் லன்ஸினியுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்த மார்கோ அர்னாடூவிச் பெற்ற கோல் காரணமாகவே 0-1 என்ற கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்தது.

குறித்த கோலுக்கு பதிலளிப்பதற்கு செல்சி முயன்றபோதும் ஒழுங்கமைக்கப்பட்ட வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் பின்களத்தாலும் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் அட்ரியனின் அபாரமான இரண்டு தடுப்புகளாலும் செல்சியால் கோல் பெற முடியவில்லை. போட்டியின் இரண்டாவது பாதியில் செல்சியின் முன்கள வீரர் அல்வரோ மொராட்டாவுக்கு தனித்து வாய்ப்பு கிடைத்தபோதும் அவர் அவ்வாய்ப்பை வீணாக்கி, கோல் கம்பத்துக்கு வெளியே பந்தை உதைத்திருந்தார்.

இதேவேளை, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிற்றியை வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் சார்பாக, ஹரி கேன் 2 கோல்களையும் சொன் ஹியூங் மின், கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் றயான் ஷோக்ரூஸ் பெற்றுக் கொடுத்த நிலையில், அவரே ஸ்டோக் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலையும் பெற்றிருந்தார்.

 
 
செவில்லாவை வென்றது றியல் மட்ரிட்
 

image_e64b52e7f4.jpg

ஸ்பானியக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், செவில்லாவை றியல் மட்ரிட் வென்றது.

இப்போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே, கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து நாச்சோ மொன்றியல் பெற்ற கோல் காரணமாக ஆரம்பத்திலேயே றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது. இதன்பின்னர், உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பலூன் டோர் விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, மார்கோ அஸென்ஸியோவிடம் பெற்ற பந்தை போட்டியின் 23ஆவது நிமிடத்தில் கோலாக்கியதுடன், 31ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டியையும் கோலாக்க, 3-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, போட்டியின் 38ஆவது நிமிடத்தில் டொனி க்ரூஸ் பெற்ற கோலுடனும் அச்ரப் ஹகிமி போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பெற்ற கோலுடனும் 5-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

மென். யுனைடடின் சொந்த மைதானத்தில் அவ்வணியை வீழ்த்திய மென். சிடி

MAN-U-vs-MAN-CITY-696x464.jpg
 

பிரீமியர் லீக் சுற்றுத் தொடரின் நேற்றைய போட்டியில் மென்சஸ்டர் யுனைடட் அணியை எதிர்கொண்ட மென்சஸ்டர் சிடி அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

இப்போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் தனது சொந்த அரங்கில் நடைபெற்ற கடந்த 40 போட்டிகளின் பின்னரான முதல் தோல்வியை மென்சஸ்டர் யுனைடட் அணி சந்தித்தது.  

 

 

பிரீமியர் லீக் சுற்றுத் தொடரின் ஆரம்பம் முதலே புள்ளிப் பட்டியலில் முதல் இரு நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் இவ்விரு அணிகளுக்குமிடையிலான போட்டி, மென்சஸ்டர் யுனைடட் அணியின் அரங்கமான ஓல்ட் ட்ரவுட் அரங்கில் (Old Trafford) நடைபெற்றது.

மென்சஸ்டர் யுனைடட் அணியின் மத்தியகள வீரர் பொவ்ல் போக்பா (Paul Pogba) மற்றும் மென்சஸ்டர் சிடி அணியின் முன்கள வீரர் ஸர்ஜீயோ அக்வேரோ (Sergio Aguero) ஆகியோர் போட்டித்தடை காரணமாக இந்த மோதலில் விளையாடவில்லை.

போட்டியை ஆரம்பித்த மென்சஸ்டர் யுனைடட் அணியால் இறுதிவரை அதிகமான நேரம் எதிரணியிடமிருந்து பந்தை தடுத்தாடக் கூடிய நிலைமையே காணப்பட்டது. இரு அணிகளுக்கும் கிடைத்த வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதில் இரு அணி வீரர்களும் தோல்வி கண்டனர்.   

போட்டியில் அதிக நேரம் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மென்சஸ்டர் சிடி அணியால் 44ஆம் நிமிடத்தில் முதல் கோல் பெறப்பட்டது. கோணர் வாய்ப்பின் போது எதிரணி வீரர்களால் தடுத்தாடப்பட்ட பந்து தன்னையடைந்ததும் மென்சஸ்டர் சிடியின் டேவிட் சில்வா (David Silva) வேகமாக உதைந்து கோலாக்கினார்.

 

அதனைத் தொடர்ந்து போட்டியின் 45 நிமிடங்கள் கடந்த நிலையில், மென்சஸ்டர் யுனைடட் அணியின் மத்திய களத்தின் வலது பக்கத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை, மென்சஸ்டர் சிடியின் பின்கள வீரர்கள் தடுத்தாடுவதில் தோல்வியுற்றனர். இதன்போது பின்களத்தில் விடப்பட்ட தவறைப் பயன்படுத்திய மென்சஸ்டர் யுனைடட் அணியின் முன்கள வீரர் மார்கஸ் ரஸ்வுட் (Marcus Rashford), தன்னையடைந்த பந்தை கோல் கம்பத்தின் இடதுபக்க மூலையினால் கோலினுள் உட்செலுத்தி ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.  

எனவே, முதல் பாதி ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது.

முதல் பாதி: மென்சஸ்டர் யுனைடட் 1 – 1 மென்சஸ்டர் சிடி

இரண்டாம் பாதியை துவங்கிய மென்சஸ்டர் சிடி அணி, போட்டியின் 54ஆம் நிமிடத்தில் இரண்டாவது கோலைப் பெற்றது. எதிரணியின் மத்திய களத்தின் வலது பக்கத்திலிருந்து மென்சஸ்டர் சிடி அணிக்கு கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற டேவிட் சில்வா, பந்தை பெனால்டி எல்லையின் வலதுபக்க மூலைக்கு உட்செலுத்தினார். உள்வந்த பந்தை மென்சஸ்டர் யுனைடட் அணியின் வீரர் ரோமீயா லுகாகு (Romeo Lukaku) தடுத்தாடும்போது விட்ட தவறைப் பயன்படுத்திய ஒடமன்டி (Otamendi), தனது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ரோமியோ லுகாகு மூலம் போட்டியின் 68ஆம் நிமிடத்தில் கோலை நோக்கி எடுக்கப்பட்ட முயற்சி கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது. சிறந்த தூரப்பந்து பரிமாற்றத்தின் பின்னர் மென்சஸ்டர் யுனைடட் அணியால் எடுக்கப்பட்ட இம்முயற்சியை அவ்வணியின் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

மீண்டும் போட்டியின் 84ஆம் நிமிடத்தில் மென்சஸ்டர் யுனைடட் அணியின் சிறந்த பந்துப் பரிமாற்றத்தை அவதானிக்க முடிந்தது.

மாற்று வீரராக களமிறங்கிய ஸல்டன் இப்ராஹீமோவிக் (Zlatan Ibrahimovic) மற்றும் ஜுவான் மாடா (Juan Mata) மற்றும் லுகாகு ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின்னர் அவர்களால் கோலுக்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டது.

 

இதன்போது அஸ்லீ யன்க் (Ashley Young) மூலம் பெனால்டி எல்லையின் இடது பக்கத்திலிருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை பெற்ற லுகாகு வேகமாக கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்தானது கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டு மீண்டும் ஜுவான் மாடாவை அடைந்தது. மீண்டும் தொடர்ந்து ஜீவான் மாடாவால் கோலை நோக்கி உதையப்பட்ட பந்தையும் மென்சஸ்டர் சிடி அணியின் கோல் காப்பாளர் இரண்டாவது முறையாகவும் குறுகிய நேரத்திற்குள் தடுத்தார்.

போட்டியின் நிறைவில் ஒரு கோல் வித்தியாசத்தால் பெற்ற வெற்றி மூலம் மென்சஸ்டர் சிடி அணி பிரீமியர் லீக் சுற்றுத் தொடரில் இதுவரை நடைபெற்ற எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாமல் 16 போட்டிகளில் 15 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முழு நேரம்: மென்சஸ்டர் யுனைடட் 1 – 2 மென்சஸ்டர் சிடி

மேலும் சில போட்டி முடிவுகள்

வெஸ்ட் ஹாம் 1 – செல்சி 0

ஹடர்ஸ்பீய்ல்ட் 2 – பரய்டன்0

ஸீவஸேனா சிடி 1 – வெஸ்ட் பூரும் 0

லியஸ்டர் சிடி 3 – நீயுகாஸ்ல் 2

டொடன்ஹாம் 5 – ஸ்டோக் சிடி 1

ஸவுதம்டன் 1 – ஆர்சனல் 1

கிரிஸ்டல் பெலஸ் 2 – பர்னமவுத் 2

லீவர்பூல் 1 – எவர்டன் 1

பர்ன்லீ 1 – வொர்ட்புர்ட் 0

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

போட்டியின் பின்னர் வீரர்கள் மோதல்?
 

image_f1f1f57bc0.jpg

மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிகளுக்கிடையிலான போட்டி முடிந்த பின்னர் இரண்டு அணிகளின் வீரர்களும் கைகலப்பொன்றில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெற்றிபெற்ற மன்செஸ்டர் சிற்றியின் வீரர்கள் கொண்டாடிய விதம் மரியாதைக் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு யுனைட்டெட்டின் அறைக்கு கேட்குமளவுக்கு சத்தமாக இருந்ததாக கூறப்படுகிறது இதனையடுத்தே இரண்டு அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கிடையே சிற்றியின் அறைக்கு வெளியே கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுனைட்டெட்டின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ மீது பாலும் நீரும் எறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவதுடன், சிற்றியின் கோல் காப்பாளர் எடேர்சனுடன் கைகலப்பில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் மிக்கேல் அர்டிட்டுக்கு தலையில் காயமேற்பட்டதாகவும் முகத்திலிருந்து இரத்தம் வழிந்தோடியதாகவும் கூறப்படுகிறது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/போட்டியின்-பின்னர்-வீரர்கள்-மோதல்/44-208726

Link to comment
Share on other sites

பிரிமீயர் லீக்கில் தொடர்ச்சியாக 15 வெற்றிகள்: மான்செஸ்டர் சிட்டி சாதனை நீடிப்பு

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்று மான்செஸ்டர் சிட்டி அணியின் சாதனை நீடித்துக் கொண்டிருக்கிறது.

 
பிரிமீயர் லீக்கில் தொடர்ச்சியாக 15 வெற்றிகள்: மான்செஸ்டர் சிட்டி சாதனை நீடிப்பு
 
இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தொடர் பிரிமீயர் லீக். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர்களில் இதுவும் ஒன்று.

நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி அணியான மான்செஸ்டர் சிட்டி அணி ஸ்வான்சி அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்று சாதனைப் படைத்துள்ளது.

201712141652203130_1_10City001-s._L_styvpf.jpg

இதற்கு முன் எந்தவொரு அணியும் தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்றது கிடையாது. கடந்த வாரம் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-1 என வீழ்த்தியதன் மூலம் தொடர்ந்து 14 வெற்றிகள் பெற்று சாதனைப் படைத்திருந்தது. தற்போது அந்த சாதனை நீண்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 1888-ம் ஆண்டுகளில் இருந்து தற்போது வரை எந்வொரு அணியும் தொடர்ந்து இத்தனை வெற்றிகளை பெற்றது கிடையாது.

201712141652203130_2_10pep-s._L_styvpf.jpg

மேலும், இந்த சீசனில் தோல்வியடையாமல் 16 வெற்றி ஒரு டிராவுடன் வீறுநடை போடுகிறது. இதற்கு முன் டோட்டன்ஹாம் அணி 1960-61 சீசனில் 15 வெற்றி ஒரு டிரா என தோல்வியை சந்திக்காமல் சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளர் குவார்டியோலா, ஜெர்மனி கிளப் அணியான பேயர்ன் முனிச் அணிக்கு 2013-14-ல் பயிற்சியாளராக இருந்தபோது, அந்த அணி தொடர்ந்து 19 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/14165207/1134604/Manchester-City-smash-all-time-Football-League-record.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.