Jump to content

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!


Recommended Posts

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

 

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

வடக்கிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் நாம் அக்கறையாக செயற்படவில்லை, இது துரதிஸ்ரவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்கள் எமக்கு அநீதி இழைப்பதாக தமிழர் தரப்பு தெரிவித்துக் கொள்ளும் நிலையில் எம்மை விட சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்திருப்பதுடன் அந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றையதினம்(10); இடம்பெற்ற தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர்கள் வட்டம் ஏற்பாடு செய்த தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாடு இன்று(10) யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடக்கின் மக்களாக எழுவோம் எனும் தொனிப்பொருளில் இந்த தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாடு வட மாகாணசபை உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தின் தலைவருமான அயூப் அஸ்மின் தலைமையில் இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தில்  தமிழ் முஸ்லிம்  மக்களிற்கிடையில் இன ஐக்கியத்தினை வலியுறுத்தும் விதமாகவும் நல்லுறவை பேணுவதற்கு அடையாளமாகவும் இம்மாநாடு இடம்பெற்றது.

முஸ்லிம் மக்கள் யாழ் மாவட்டத்தல் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளால் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் விதமான கொள்கைப்பிரகடனம் ஒன்றையும் வட மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் வாசித்து உரையாற்றினார்.

அத்துடன் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையினை வலியுறுத்தி அரசியல் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை எதிர்க் கட்சித்தலைவர் சின்னத்துரை தவராசா, மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, இம்மானுவல் ஆர்லல்ட், அரியகுட்டி பரம்சோதி, சிவாஜிலிங்கம்,சயந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-sumanthiran-speach-today

Link to comment
Share on other sites

23 minutes ago, நவீனன் said:

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

 

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

இந்நிகழ்வில் வடமாகாணசபை எதிர்க் கட்சித்தலைவர் சின்னத்துரை தவராசா, மாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, இம்மானுவல் ஆர்லல்ட், அரியகுட்டி பரம்சோதி, சிவாஜிலிங்கம்,சயந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-sumanthiran-speach-today

சரியான திசையில் பயணிக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி... கூடவே... கிழக்கு தமிழர் பிரச்சனைகள் குறித்து, சுமன தேரர் கரிசனையையும் சொல்லி வையுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்தான்  அய்கியம் ...அவயின்டை கதை முழுக்க வேறை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை நாங்கள் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை நிரூபிக்க நீங்கள் முதல் ஆளாக நின்று முஸ்லீமாக மதம் மாறி முஸ்தபா என்று உங்கள் பெயரை மாற்றி, எங்கள் அன்பை வெளிப்படுத்தலாமே சுமந்திரன்?

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!

 

"நாங்கள் செய்த தவறுகளுக்கான தண்டனையே எங்களுக்குக் கிடைத்தது" என்று முசுலீம்களே சொன்னாலும் உந்தாள் விடாது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்திற்கு அரசியல் தலைவர் என்ற முகமூடிக்குள் ஒரு சகுனி எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தன் மக்களின் பிரச்சனைகளை   தீர்க்கத்தெரியாதவர், உப்பிடி ஏதாவது கதைத்து  கைதட்டல் வாங்கி தன் இயலாமையையும், துரோகத்தனத்தையும் மூடி மறைக்கப் பாக்கிறார்.

Link to comment
Share on other sites

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது

 

 
 
 
வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென்று கூவித்திரிபவர்களினால், அதனைச் செய்ய முடியுமா என நான் சவாலாக கேட்கின்றேன், கூவித்திரிபவர்கள் இணைப்பதற்குரிய உண்மைக் காரணங்களை சொல்வதற்கு தயாரா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிரசு கட்சியின் முஸ்லீம் ஆதரவாளர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில், வடக்கின் மக்களாக எழுவோம் எனும் தொனிப்பொருளிலான தமிழ், முஸ்லீம் ஐக்கிய மாநாடு நேற்று (10) யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்ற கட்சி தமிழரசு கட்சி என பெருமையாக கூறுவேன். போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற காலகட்டத்திற்குள் வரும் போது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்று நாங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு நிகராக முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தினைக் குறித்தும் கவனம் செலுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை என்பதனை இங்கு வெளிப்படுத்தியாக வேண்டும்.

நீண்டகாலமாக இங்கிருந்து அநியாயமாக அகற்றப்பட்ட மக்கள் மீளவும் இங்கு வந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான ஆர்வத்தினைக் காட்டி இருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அவ்வாறான செயற்பாடு அமைந்திருக்கவில்லை. இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மை இனமாக இருப்பவர்கள் பலவிதமான பாரபட்சங்களுக்குள்ளாக்கப்பட்டு தமக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென உலகம் முழுவதிலும் தெரிவிக்கும் தமிழ் மக்கள், எண்ணிக்கையில் சிறுபான்மையாக சிறு சிறு இடங்களில் வாழும் மற்ற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது துரதிஸ்டவசமான விடயம்.

முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்படும், அநீதிகள், அழுத்தங்கள் எமக்குத் தான் அதிகமாக தெரிந்திருக்க வேண்டும். எமது அரசியல் ஜனநாயக அரசியலாக இருப்பது துரதஸ்டவசமானது, பெரும்பான்மை இன மக்களை சந்தோசமாக வைத்திருப்பதே அரசியல் தலைவர்களின் போக்காக இருக்கின்றது.

ஏனெனில், பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியிருக்கின்றோம் என்ற காரணத்திற்காகவே, அதனால் தான் எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களுக்கு ஜனநாயகத்தில் நியாயம் கிடைப்பது அரிது. வாக்குகளில் தங்கியிருக்கும் தலைவர்களுக்கு சிறுபான்மையினரின் குரல் கேட்காது. எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களின் குரல் கேட்காது.

இந்த நிலமை மாற வேண்டும். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், அநீதி யாருக்கு இழைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் இருந்து எழுந்த ஒரு கட்சி.

அண்மைக் காலமாக, தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் குறைந்துள்ளதென்பது உண்மை. இடைக்கால அறிக்கை ஏகமனதாக வழிநடத்தல் குழுவினால் செய்யப்பட்டது. இந்த அறிக்கை இவ்வாறு தான் இருக்க வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்த ஒரு விடயம்.

அரசியலமைப்பில் எடுக்கப்பட்ட அத்தனை தீர்மானங்களும் ஏகமனதாக எடுக்கப்பட்டவை. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதிலும், பௌத்த மதத்தினை உடைய பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் சட்டமாக இருக்க வேண்டும்.

இல்லாவிடின், அது பிரியோசனம் இல்லை. ஆனால், அது மட்டும் போதாது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் கூட, உண்மையான மன நிறைவுடன் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் அமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும். அது இலகுவான விடயம் அல்ல. மிகவும் கடினமான ஒரு விடயம்.

இருந்தாலும், இரண்டு வருடங்களாக ஏகமனதான தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றோம். இது மக்களுக்குத் தெரிய வேண்டும். வழிநடத்தல் குழு ஏதோ அறிக்கைகளை வெளியிடுகின்றதென மக்கள் நினைப்பது தவறு. இனி மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மக்களும் இணைந்து செயற்படுகின்ற போது தான் வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

வட, கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசப்படுகின்றது. வட, கிழக்கு இணைப்பு பற்றி பேசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம், அது வேறு விடயம். ஆனால், அது ஏற்படுத்தப்படுவதாக இருந்தால், வடக்கில் வாழும் மக்களின் விருப்பப்படி செய்ய முடியாது. கிழக்கில் வாழும் மக்களின் விருப்பத்துடனும் செய்யப்பட வேண்டும்.

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமானதென யாராவது சொல்ல முடியுமா? நான் சவாலாக கூட கேட்கின்றேன். எமக்கு வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென கூவித்திரியும் எவராவது அதைச் செய்து முடிப்பார்களா? வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது. அது உண்மை, அந்த உண்மையைச் சொல்ல அரசியல்வாதிகள் பயப்படுகின்றார்கள்.

வட, கிழக்கு இணைப்பு என்றுமே சாத்தியமற்றதென சொல்லக் கூடாது. நாங்கள் இணைந்து வாழ்வதாக இருப்பதென்றால், அது நடக்கும், இணைய வேண்டுமென்று கூறும் ஆட்கள் தான், அவர்களே சூழ்நிலைகளை இல்லாமல் செய்கின்றார்கள்.

ஏற்படக் கூடிய சூழ்நிலையையும் கட்டுப்படுத்துவதற்காக, முஸ்லீம் மக்களையும் அன்னியப்படுத்துகின்றார்கள். முஸ்லீம் மக்களையும் இணைத்து செயற்படுத்தாமல், இது தான் நடக்க வேண்டும். வட, கிழக்கு இணைய வேண்டுமென்று நினைக்கும் நாம் செய்வது வித்தியாசமான செயல்கள்.

ஆகையினால், மத்திய அரசின் இணக்கத்துடன் செய்ய வேண்டுமென்று சொல்கின்றோம். அதில் உறுதியாக இருக்கின்றோம். மக்களாட்சியாக முடிவுறுகின்ற போது, அந்தந்த பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு மாகாணங்களில் உள்ள மக்கள் வட, கிழக்கு இணைப்பதற்கு இணங்க வேண்டும். அவற்றினை நிவர்த்தி செய்யாது. வெறுமனவே கோசமாக வடகிழக்கு இணைப்பினைச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்றார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=98295

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்திமார்கள் சிலபேர் வந்து போவது போல தெரியுது .. கூத்தமைப்பு வெட்டியடுவதை பார்த்து புல்லரிக்கினமப்பா 
அண்ண சும்மு வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று வடக்கிற்கு புரியுதோ இல்லையோ கிழக்கிற்கு நன்றாகவே புரியும் 
ஆகவே சும்மா பழைய பானைக்குள்ள கையை விட்டு கிண்டாமல்  கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு என்ன வகையான அரசியலை கைவசம் வைத்திருகிறீர்கள் என்று ஒருக்கால் சொல்லுறீங்களோ .....?
போற போக்கைப்பார்த்தால் கிழக்கு மாகாண தமிழர்கள் தமிழ் தேசியத்திலிருந்து விடுபட்டு தங்களது தப்பிப்பிழைத்தலுக்கான அரசியலை கையிலெடுக்க வேண்டியநிலைக்கு தள்ளபட்டுவிட்டார்கள் 
நீங்கள் இப்படி வடக்கையே பிடித்து வைத்து சொறிஞ்சு  கொண்டிருங்கோ  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

வாத்திமார்கள் சிலபேர் வந்து போவது போல தெரியுது .. கூத்தமைப்பு வெட்டியடுவதை பார்த்து புல்லரிக்கினமப்பா 
அண்ண சும்மு வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று வடக்கிற்கு புரியுதோ இல்லையோ கிழக்கிற்கு நன்றாகவே புரியும் 
ஆகவே சும்மா பழைய பானைக்குள்ள கையை விட்டு கிண்டாமல்  கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு என்ன வகையான அரசியலை கைவசம் வைத்திருகிறீர்கள் என்று ஒருக்கால் சொல்லுறீங்களோ .....?
போற போக்கைப்பார்த்தால் கிழக்கு மாகாண தமிழர்கள் தமிழ் தேசியத்திலிருந்து விடுபட்டு தங்களது தப்பிப்பிழைத்தலுக்கான அரசியலை கையிலெடுக்க வேண்டியநிலைக்கு தள்ளபட்டுவிட்டார்கள் 
நீங்கள் இப்படி வடக்கையே பிடித்து வைத்து சொறிஞ்சு  கொண்டிருங்கோ  

இன்னுமா நீங்கள் இவர்களை நம்பி இருக்குறீர்கள் ஐயோ ஹய்யோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது

 

 
 
 
வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென்று கூவித்திரிபவர்களினால், அதனைச் செய்ய முடியுமா என நான் சவாலாக கேட்கின்றேன், கூவித்திரிபவர்கள் இணைப்பதற்குரிய உண்மைக் காரணங்களை சொல்வதற்கு தயாரா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிரசு கட்சியின் முஸ்லீம் ஆதரவாளர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில், வடக்கின் மக்களாக எழுவோம் எனும் தொனிப்பொருளிலான தமிழ், முஸ்லீம் ஐக்கிய மாநாடு நேற்று (10) யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்ற கட்சி தமிழரசு கட்சி என பெருமையாக கூறுவேன். போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற காலகட்டத்திற்குள் வரும் போது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்று நாங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு நிகராக முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தினைக் குறித்தும் கவனம் செலுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை என்பதனை இங்கு வெளிப்படுத்தியாக வேண்டும்.

நீண்டகாலமாக இங்கிருந்து அநியாயமாக அகற்றப்பட்ட மக்கள் மீளவும் இங்கு வந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான ஆர்வத்தினைக் காட்டி இருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அவ்வாறான செயற்பாடு அமைந்திருக்கவில்லை. இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மை இனமாக இருப்பவர்கள் பலவிதமான பாரபட்சங்களுக்குள்ளாக்கப்பட்டு தமக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென உலகம் முழுவதிலும் தெரிவிக்கும் தமிழ் மக்கள், எண்ணிக்கையில் சிறுபான்மையாக சிறு சிறு இடங்களில் வாழும் மற்ற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது துரதிஸ்டவசமான விடயம்.

முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்படும், அநீதிகள், அழுத்தங்கள் எமக்குத் தான் அதிகமாக தெரிந்திருக்க வேண்டும். எமது அரசியல் ஜனநாயக அரசியலாக இருப்பது துரதஸ்டவசமானது, பெரும்பான்மை இன மக்களை சந்தோசமாக வைத்திருப்பதே அரசியல் தலைவர்களின் போக்காக இருக்கின்றது.

ஏனெனில், பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியிருக்கின்றோம் என்ற காரணத்திற்காகவே, அதனால் தான் எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களுக்கு ஜனநாயகத்தில் நியாயம் கிடைப்பது அரிது. வாக்குகளில் தங்கியிருக்கும் தலைவர்களுக்கு சிறுபான்மையினரின் குரல் கேட்காது. எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களின் குரல் கேட்காது.

இந்த நிலமை மாற வேண்டும். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், அநீதி யாருக்கு இழைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் இருந்து எழுந்த ஒரு கட்சி.

அண்மைக் காலமாக, தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் குறைந்துள்ளதென்பது உண்மை. இடைக்கால அறிக்கை ஏகமனதாக வழிநடத்தல் குழுவினால் செய்யப்பட்டது. இந்த அறிக்கை இவ்வாறு தான் இருக்க வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்த ஒரு விடயம்.

அரசியலமைப்பில் எடுக்கப்பட்ட அத்தனை தீர்மானங்களும் ஏகமனதாக எடுக்கப்பட்டவை. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதிலும், பௌத்த மதத்தினை உடைய பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் சட்டமாக இருக்க வேண்டும்.

இல்லாவிடின், அது பிரியோசனம் இல்லை. ஆனால், அது மட்டும் போதாது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் கூட, உண்மையான மன நிறைவுடன் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் அமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும். அது இலகுவான விடயம் அல்ல. மிகவும் கடினமான ஒரு விடயம்.

இருந்தாலும், இரண்டு வருடங்களாக ஏகமனதான தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றோம். இது மக்களுக்குத் தெரிய வேண்டும். வழிநடத்தல் குழு ஏதோ அறிக்கைகளை வெளியிடுகின்றதென மக்கள் நினைப்பது தவறு. இனி மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மக்களும் இணைந்து செயற்படுகின்ற போது தான் வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

வட, கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசப்படுகின்றது. வட, கிழக்கு இணைப்பு பற்றி பேசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம், அது வேறு விடயம். ஆனால், அது ஏற்படுத்தப்படுவதாக இருந்தால், வடக்கில் வாழும் மக்களின் விருப்பப்படி செய்ய முடியாது. கிழக்கில் வாழும் மக்களின் விருப்பத்துடனும் செய்யப்பட வேண்டும்.

வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமானதென யாராவது சொல்ல முடியுமா? நான் சவாலாக கூட கேட்கின்றேன். எமக்கு வட, கிழக்கு இணைப்பு வேண்டுமென கூவித்திரியும் எவராவது அதைச் செய்து முடிப்பார்களா? வட, கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது. அது உண்மை, அந்த உண்மையைச் சொல்ல அரசியல்வாதிகள் பயப்படுகின்றார்கள்.

வட, கிழக்கு இணைப்பு என்றுமே சாத்தியமற்றதென சொல்லக் கூடாது. நாங்கள் இணைந்து வாழ்வதாக இருப்பதென்றால், அது நடக்கும், இணைய வேண்டுமென்று கூறும் ஆட்கள் தான், அவர்களே சூழ்நிலைகளை இல்லாமல் செய்கின்றார்கள்.

ஏற்படக் கூடிய சூழ்நிலையையும் கட்டுப்படுத்துவதற்காக, முஸ்லீம் மக்களையும் அன்னியப்படுத்துகின்றார்கள். முஸ்லீம் மக்களையும் இணைத்து செயற்படுத்தாமல், இது தான் நடக்க வேண்டும். வட, கிழக்கு இணைய வேண்டுமென்று நினைக்கும் நாம் செய்வது வித்தியாசமான செயல்கள்.

ஆகையினால், மத்திய அரசின் இணக்கத்துடன் செய்ய வேண்டுமென்று சொல்கின்றோம். அதில் உறுதியாக இருக்கின்றோம். மக்களாட்சியாக முடிவுறுகின்ற போது, அந்தந்த பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு மாகாணங்களில் உள்ள மக்கள் வட, கிழக்கு இணைப்பதற்கு இணங்க வேண்டும். அவற்றினை நிவர்த்தி செய்யாது. வெறுமனவே கோசமாக வடகிழக்கு இணைப்பினைச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்றார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=98295

அவரை கொண்டு போய், தொப்பி போட்டு விட்டாச்சு போல கிடக்குது...

கிழக்கு முழுக்க தொப்பி...

தெற்குப்பக்கமா, தேரர்மார் விடமாடினம்... இனியென்ன வடக்கு தானே.... :unsure:

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

அவரை கொண்டு போய், தொப்பி போட்டு விட்டாச்சு போல கிடக்குது...

கிழக்கு முழுக்க தொப்பி...

தெற்குப்பக்கமா, தேரர்மார் விடமாடினம்... இனியென்ன வடக்கு தானே.... :unsure:

அப்படியாயின் மக்கள் என்ன செயீனம், தொப்பியின் கடையில் கொத்து ரொட்டியும் முட்டை அப்பமும் வேண்டி சாப்பிட்டு விட்டு தூக்கமா?

கள்ள காணி பிடிக்கிற திட்டம் நிறைவேறவில்லை என்றவுடன் இப்படி புது நாடகம்.

Link to comment
Share on other sites

10 hours ago, Nathamuni said:

அவரை கொண்டு போய், தொப்பி போட்டு விட்டாச்சு போல கிடக்குது...

அவர் தொப்பியைக் கழற்றி விட்டதால்தான் மாறிக் கதைக்கிறார்போல் தெரிகிறது... ! புதுத் தொப்பி எல்லாம் போடமுடியாது. போனால் போனதுதான்.!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.