Jump to content

யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் நீதிபதி இளஞ்செழியன் விடைபெறுகிறாரா?


Recommended Posts

யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் நீதிபதி இளஞ்செழியன் விடைபெறுகிறாரா?

 

யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் நீதிபதி இளஞ்செழியன் விடைபெறுகிறாரா?

யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன்.அதற்கான மாற்றல் விரைவில் எனக்கு வரும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று(10) நடைபெற்ற வருடாந்த விருந்துபசார விழாவும் இடமாற்றலாகும் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழாவிலும் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்....

நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்த ஒன்றே நீதிமன்றக் குடும்பம். இந்த மூன்று தரப்பினரிடமும் ஒற்றுமை அவசியம். அதுவே எனது சேவையின் குறிக்கோளாகும்.
கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா.

அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது. யாழ்ப்பாணத்து வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டேன். அடுத்ததாக மட்டக்களப்புக்குச் செல்லவுள்ளேன்.

அந்த மாவட்ட மக்களுக்கு நான் சேவையாற்றவேண்டும் என மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/judge-illanseliyan-jaffna-courts

 

 

சிறிநிதி நந்தசேகரனுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கெளரவிப்பு….

srinithi1.jpg

சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரனுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை கெளரவிப்பு வழங்கப்பட்டது. பெரும் நெருக்கடியான காலப்பகுதியிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க வலயத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் சேவையாற்றியமைப் பாராட்டியே அவருக்கு இந்தக் கெளரவிப்பு வழங்கப்பட்டது.

2018 ஜனவரி 2ஆம் திகதி முதல் வவுனியா மாவட்ட நீதிபதியாக சிறிநிதி நந்தசேகரன் மாற்றலாகிச் செல்கிறார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் ஆகியோரின் தலைமையில் மேல் நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்களால் இந்தக் கெளரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரனை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மலர் மாலை, பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், நீதிபதி சிறிநிதி நந்தசேகரனின் சேவையைப் பாராட்டி கௌரவச் சின்னமும் மேல் நீதிமன்ற நீதிபதி இ. கண்ணன் வாழ்த்துப்பாவும் வழங்கிவைத்தனர்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். இதேவேளை, இலங்கையில் மிக நெருக்கடியான மோதல் மிகு பிரதேசத்தில் எல்லா இனக்குழுமங்களையும் நீதியின் முன் சமமாக நடாத்துவதில் ஒரு சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் பொறுப்புணர்வையும் துணிவையும் வெளிப்படுத்திய ஒரு முன்னுதாரணராக நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன் திகழ்கிறார் என அமெரிக்கா பாராட்டியிருந்தது. அதற்காக அவருக்கு ‘அமெரிக்காவின் வீரப்பெண்’ விருது அமெரிக்காவால் 2009 மார்ச் 24ஆம் திகதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

srinithi.jpg

http://globaltamilnews.net/archives/54325

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எந்த நோக்கத்தில் யாழ் வந்தார் எது நிறைவேற்றப்பட்டது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனால் இதுமாத்திரம் உண்மை 

சிறீலங்காவின் சட்டதிட்டங்கள் மற்றும் நீதி நிர்வாக அமைப்புப்பற்றியும் அதில் உள்ள ஓட்டை உடைசல்களைபற்றியும் குடாநாட்டுமக்களுக்கு இராணுவ ஆக்கிரமிப்பின்பின்பு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை அவர்களும் சட்டதிட்டங்கள் என்றால் விடுதலைப்புலிகளது நீதி நிர்வாக அமைப்புப்போல்தான் சிங்களத்தினதும் என நினைத்திருந்தனர் ஆனால் இப்போதுதான் சிறீலங்காவின் நீதிச்சட்டத்தில் எந்தவித குற்ற்ம்புரிந்தவனும் தண்டனையிலிருந்து தப்பிக்கவோ இலகுவில் விடுபடவோ அல்லது தண்டனையைப் பிந்தள்ளவோ முடியும்  தம்பிகளா பயப்பிடாமல் ஆவா சன்னா தாரா வாத்து கோழி இவைகல்பெயரில் ரவுடிக்கும்பலை நடத்துங்கோ எனச் சொல்லாமல் சொல்லிப்போடுப்போகப்போறர்.

இதில் கேவலம் என்னவென்றால் கடந்தமாதம் மல்லாகம் நீதிமன்ற வளாகத்திலிருந்து அவாகுழுவில் சந்தேகநபர் ஒருவர் தப்பிச்சென்றார் அவருக்கு நீதிமன்றத்தில் வக்காளத்து வாங்கியவர் ஒரு பெண்  அப்புக்காத்து அதே ஆவா குழுவில் ரவுடி இவரது மகளது மார்பி லோ அல்லது இவரது மார்பிலோ கைவைத்தால்தான் தெரியும் நிலைமையின் தீவிரத்தை.

இன்னும்,ஒரு கொசுறு கூடிய விரைவில் நான் வாழும் நாட்டுக்கு ஆவா குழுவுடன் தொடர்புடையவர் எனச்சந்தேகித்து நீதிமன்றத்தில்; மின்னிறுத்தி பிணையில் வெளிவந்தவர் ஒருவர் வேலைவாய்ப்புக்கான வதிவிட உரிமை பெற்று வரவிருக்கிறார். இதற்கான விலை விச்ச ஒழுங்கு செய்பவர் வரவிருப்பவரது நெருங்கிய உறவுப்பெண்ணை மணமுடிக்கவுள்ளார் இதனடிப்படையிலேயே இந்த டீல் அதாவது ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது தொழில்வழங்குபவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் தமிழீழத்தேசிய செயற்பாட்டாளர்கள் என ஒரு சில அலங்காரப்பதவியில் அமர்ந்திருபோரும் அள்ளிவளங்குவோருமாகும் இந்தகேவலத்தில் நாடின் விடுதலைபற்றிய அரசியல் எந்தக்கேவலத்தில் புலம்பெயர் நாடுகளில் இருக்கு என யூகிக்கவும். செய்யுறதையும் செய்துபோட்டு ஈழத்தேசியவாதிகளாகவும் தாராள மனம்படைத்தவர்களாகவும் தங்களைக்காட்டிக்கொள்ளக்கூடாது.

வாள் கத்திகளோட ஊரில திரிவம் எப்படியாகுதல் ஒரு துருமணப்பேச்சுக்கால் எங்களை வெளிநாடுக்குக் கூப்பிடும் என பொடியள் இன்னும் இறுக்கமாக வாள்களையும் கத்திகளையும் குடாநாட்டுத்தெருக்களில் பிடிக்கவைக்க புலம்பெயர் புலிவால்கள் என தங்களைக்காட்டிக்கொள்வோர் முனைகிறார்கள்.

இவர்களும் யாழ்ப்பாணத்துப் பெண் அப்புக்காத்துக்கள் போன்றோரே.ஆவா சன்னா தாரா எல்லோரும் வாங்கோ வந்து புலம்பெயர் புலிவால்கள் எனச்சொல்லப்படுவோர் பொண்டாட்டிகளையும் பொம்பிள்ளைப்பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுங்கோ அப்பவாது இவர்கள் திருந்துவார்களா எனப்பாக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்யா கொலையாளிகளுக்கு தூக்கு விதிச்சதை தவிர்த்து, இளஞ்செழியன் ஐயா யாழ் நீதிபதியாக பொறுப்பேற்றதால் ஏற்பட்ட ஒரேயொரு நன்மை ..

பிக்குகள்காலில் விழுந்ததாலும், சிங்கள மெய்ப்பாதுகாவலரின் இறப்பிற்காக கதறி கதறி அழுததாலும்  சிங்களவர்களிடையே மிக பெரிய ஹீரோ ஆகிவிட்டார் என்பது!

மற்றும்படி, வாள்வெட்டுக்களும், கஞ்சா,போதை,கள்ளச்சாராய விற்பனைகளும் அப்படியே இருக்கு, அல்லது ஐயாவின் காலத்தின்பின் அதிகரிச்சிருக்கு என்றும் சொல்லலாம்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.