Jump to content

இலங்கை அணியின் புதிய விடியல் தனஞ்ஜெயா


Recommended Posts

இலங்கை அணியின் புதிய விடியல் தனஞ்ஜெயா

 

 

08CHPMUDHANANJAYA

தனஞ்ஜெயா டி சில்வா   -  PTI

 

இந்திய மண்ணில் அதிலும் 4-வது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கும் மேலாக எதிர்கொண்டு டெல்லி பெரோஷா கோட்லா டெஸ்ட் போட்டியை கடைசி நாளின் இறுதி மணித்துளிகள் வரை கொண்டு சென்று டிரா செய்து வியக்க வைத்துள்ளது இலங்கை அணி. பலவீனமான அணி என வர்ணிக்கப்பட்ட இலங்கை, இந்திய மண்ணில் 4-வது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை (295) குவித்தும் சாதனை படைத்துள்ளது.

இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியை காற்று மாசுபாட்டின் ஊடாகவே சந்தித்திருந்தது. காற்று மாசால் சில வீரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு களத்திலும், ஓய்வறையிலும் வாந்தி எடுத்தனர். ஒட்டுமொத்த அணியும் முகமூடி அணிந்து விளையாடிய போது வீரர்களின் உண்மைத்தன்மை குறித்து சில அதிகாரிகளும், முன்னாள் இந்திய வீரர்களும் கேள்விகள் எழுப்பினர். இதுகுறித்து ஒவ்வொருவரும் கருத்துக்களை அள்ளித் தெளித்த போது அது வார்த்தை போராக பார்க்கப்பட்டது. ஆனால் களத்தில் விளையாடிய வீரர்கள் தங்களது கடமையை தியாகம் செய்யாதிருப்பதை தவிர வேறு வழி காணப்படவில்லை.

ஒருவகையில் இது பெருமை அளிக்கக்கூடியதுதான். ஆட்டத்தின் இறுதி பகுதி ஒரு கட்டத்தில் யுத்தமாக பார்க்கப்பட்டாலும் கடும் சவால் அளித்த இலங்கை, இறுதி மணித்துளிகளிலேயே டிராவில் முடிக்க சம்மதம் தெரிவித்தது. 4-வது நாள் ஆட்டத்தில் 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் கடைசி நாளில் 87 ஓவர்களை சந்தித்து இந்திய பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட செய்துள்ளனர் இலங்கை பேட்ஸ்மேன்கள். இதில் 26 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தனஞ்ஜெயா டி சில்வாவின் பங்குதான் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. காற்று மாசுபாடு காரணமாக 2-வது நாள் ஆட்டத்தின் போது ஓய்வறையில் வாந்தி எடுத்த தனஞ்ஜெயா 2-வது இன்னிங்ஸில் வெறும் 5 ஓவர்கள் மட்டுமே வீசினார்.

ஆனால் 410 ரன்கள் இலக்கை விரட்டியபோது பேட்ஸ்மேனாக களத்தில் 257 நிமிடங்களை செலவிட்டு 119 ரன்கள் சேர்த்ததுடன் இந்திய அணியின் வெற்றிக்கு தடைக்கல்லாக மாறினார். 219 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என மட்டையை சுழற்றிய நிலையில் தசைப்பிடிப்பால் குனிந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் களத்தில் இருந்து அவர் வெளியேறினார். இப்படி ஒரு சூழ்நிலையில் இன்றைய காலக்கட்டத்தில் ரன்னர்ஸ் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அமைதியான, உறுதியான தாக்குதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை கலந்த வகையில் தனஞ்ஜெயாவின் இன்னிங்ஸ் இருந்தது.

அதேவேளையில் இதனை ஒரு காவியமான இன்னிங்ஸ் என்றும், தோல்வியில் இருந்து ஆட்டத்தை மீட்டெடுக்கும் வகையிலான பேட்டிங் எனவும் வர்ணிக்கலாகாது. மாறாக தனிப்பட்ட பேட்ஸ்மேனின் முயற்சியாகவே கருதவேண்டி உள்ளது. அதிலும் ரன்கள் சேர்த்தால் அழுத்தத்தை குறைக்கலாம் என்ற மனோபாவம் கொண்ட வீரரின் நிலையில் இருந்து. ஆடுகளமும் அவருக்கு கைகொடுத்தது. மாறாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எந்த உதவியும் ஆடுகளத்தில் இருந்து கிடைக்கவில்லை. அதேவேளையில் பந்துகளை திரும்ப விட்டு அதன் போக்கிலேயே சென்று எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார் தனஞ்ஜெயா. இந்த யுத்திதான் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது இரு முனை தாக்குதல்களையும், நவீன காலத்துக்கு தகுந்தபடி உத்வேகம் பெற்றுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சையும் எந்தவித அச்சுறுத்தலும், அலட்டலும் இல்லாமல் எதிர்கொண்டார் தனஞ்ஜெயா. ஒவ்வொரு பந்திலும் ரன் சேர்க்க முயன்றார். அது முடியாத வேளையில் தடுப்பாட்டத்தில் ஈடுபடவும் அவர் தவறவில்லை. முக்கியமாக பொறுமையாக காத்திருந்து தேவையான நேரங்களிலேயே பந்துகளை விரட்டினார். முழுநீளத்தில் வீசப்பட்ட பந்துகளை பிளாக் செய்தும், குறுகிய நீளத்தில் வந்த பந்துகளில் சிங்கிள் ரன்களையும் சேர்த்தார்.

தனஞ்ஜெயாவின் நேர்த்தியான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் அஸ்வின், கவர் திசையிலும், டீப் பாயின்ட் திசையிலும் பீல்டரை நிறுத்தி புதிய வியூகம் அமைத்தார். ஆனால் இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனஞ்ஜெயா, ஸ்வீப் ஷாட்களை கையாண்டு இந்திய வீரர்களுக்கு டுவிஸ்ட் வைத்தார். ஆட்டத்தின் நடு செஷனில் நெருக்கமான பீல்டிங் தளர்த்தப்பட ஒவ்வொரு ஓவரிலும் இருமடங்காக ரன்களை சேர்த்தார். சந்திமாலுடன் இணைந்து 112 ரன்களும், ரோஷன் சில்வாவுடன் இணைந்து 58 ரன்களும் சேர்த்து இந்திய அணியை வெற்றிப் பாதையில் இருந்து திசை திருப்பினார் தனஞ்ஜெயா.

இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிப் பாதையை கடக்க வேண்டும் என்றால் முதலில் தனஞ்ஜெயாவை வீழ்த்தியாக வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை உருவானதாகவே கருதப்படுகிறது. காயம் காரணமாக அவர் வெளியேறிய போதிலும் அறிமுக வீரரான ரோஷன் சில்வா 154 பந்துகளை சந்தித்து 74 ரன்கள் சேர்த்ததுடன் வியக்கத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4-வது இன்னிங்ஸில் இந்திய மண்ணில் வெளிநாட்டு வீரர்களில் அதிக ரன்களை பதிவு செய்த தனஞ்ஜெயா மற்றும் 29 வயதான ரோஷன் சில்வாவின் ஆட்டம் இலங்கை அணி நிர்வாகத்துக்கு சிறந்த பாடம் கற்றுக்கொடுத்துள்ளது.

தனஞ்ஜெயா இதுவரை 11 டெஸ்ட்டில் விளையாடி 3 சதங்கள், 2 அரை சதங்களுடன் 846 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் அதற்குள் அவர் பலமுறை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு உள்நாட்டு சீசனில் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் இலங்கை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. இந்தத் தொடரில் தனஞ்ஜெயாதான் டாப் ஸ்கோரராக (365) திகழ்ந்தார். ஆனால் இதையடுத்து நடைபெற்ற தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் வெறும் 125 ரன்களே சேர்க்க, அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உள்ளூரில் நடைபெற்ற தொடரில் தனஞ்ஜெயா சேர்க்கப்படவில்லை. இத்தனைக்கும் அந்த அணிக்கு எதிராக அவர் 2 ஆட்டங்களில் 225 ரன்கள் சேர்த்திருந்தார்.

ஒருவழியாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 2-வது டெஸ்ட்டில் தனஞ்ஜெயாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டும், 2-வது இன்னிங்ஸில் 17 ரன்களும் சேர்க்க அடுத்த ஆட்டத்தில் வாய்ப்பு பறிபோனது. தற்போது இந்திய சுற்றுப்பயணத்தில் முதல் இரு ஆட்டங்களிலும் தனஞ்ஜெயாவுக்கு இடம் கிடைக்கவில்லை. டெல்லி ஆட்டத்தில் மட்டுமே களமிறக்கப்பட்டார். வழக்கமாக 6-வது வீரராக களமிறங்கும் அவர், இம்முறை 3-வது வீரராக களமிறக்கப்பட்டார். இது அவர், தன்னை களத்தில் நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. அவர் விளையாடிய விதம் இலங்கை அணிக்கு கிடைத்துள்ள புதிய வியடிலாகவே கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/article21295919.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.