Jump to content

ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு


Recommended Posts

ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு

Featured-image-3-696x464.jpg
 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளினதும் தலைவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் வழிநடத்தலால் விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்தது.

இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டாலும், அண்மைக்கால ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தால் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

இந்நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ஓட்டக்குவிப்பில் அசத்தி வருகின்ற சந்திமால், ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்காக தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இலங்கையின் சிறந்த ஒரு நாள் வீரராக விளங்கிய சந்திமாலுக்கு இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் அணியில் இடம் கிடைக்காமை என்பன குறித்து இந்தியாவின் க்ரிக் பஸ் இணையளத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

”ஒரு நாள் அணியில் இடம் கிடைக்காமை எனக்கு கவலையையோ, மன உளைச்சலையோ கொடுக்கவில்லை. ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு என்னிடம் ஒருசில குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் நான் மோசமாக விளையாடியிருந்தேன். துரதிஷ்டவசமாக குறைந்தளவு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தேன்.

இதனால் எனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது. ஆனாலும் நான் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளேன். எனவே எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளேன். எனக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சவாலாக இதை கருதுவதுடன், தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு போராடி ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

chandimal-oneday-300x200.jpgதினேஷ் சந்திமால் இதுவரை 134 ஒரு நாள் போட்டிகளில் நான்கு சதங்கள் மற்றும் 21 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 31.92 என்ற சராசரியுடன் 3,288 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.  

இந்நிலையில், டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் துடுப்பாட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

”உண்மையில் அவ்வாறு மிகப் பெரிய மாற்றம் எதையும் செய்யவில்லை. ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்துதான் எனது துடுப்பாட்டத்தில் மாற்றங்களை செய்தேன். ஒருசில சந்தர்ப்பங்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 30 ஓட்டங்களைப் பெற்று அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது எப்படியாவது அணிக்காக நீண்ட நேரம் விளையாடுவதற்கும், எஞ்சிய வீரர்களுடன் இன்னிங்ஸை கட்டியெழுப்புவதற்கும் தான் எதிர்பார்ப்பேன்” என்றார்.

chandimal-test-300x200.jpgஇந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் தொடர்ந்து சிறந்த துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தி வந்தார். இதன் பலனாக ICCயின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அவர் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இது சந்திமாலின் மிகச்சிறந்த டெஸ்ட் தரப்படுத்தல் பதிவாகவும் அமைகின்றது.

டெல்லியில் இடம்பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சிறந்த முறையில் ஆடிய அவர் நிலையாக நின்று 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது இன்னிங்சில் இக்கட்டான நிலையில் அணி இருந்தபோது பெறுமதி மிக்க 36 ஓட்டங்களை வழங்கினார்.

 

தனது அதிகூடிய டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையைப் (164) பெற்றுக்கொண்டமை குறித்து கருத்து வெளியிட்ட சந்திமால்,   

”உண்மையில் டெல்லி மைதானத்தில் விளையாடியதும், அங்கு நிலவிய காலநிலையும் எமக்கு சவாலாக இருந்தது. அவ்வாறான சூழ்நிலையில் எனது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஓட்டத்தை பெற்றுக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இது எனது சிறந்த இன்னிங்ஸாக அமையாது. எதிர்வரும் காலங்களில் எனது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸை விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

அத்துடன், இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியமை அணிக்கு மேலும் பலத்தை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்மெதிவ்ஸின் மீள்வருகையானது எமக்கு பலத்தை கொடுத்திருந்தது. அணியின் மிகப் பெரிய துரும்புச் சீட்டாக மெதிவ்ஸும், ஹேரத்தும் காணப்படுகின்றனர். அவர்களைப் பார்த்துத்தான் அணியில் உள்ள இளம் வீரர்கள் பல விடயங்களை கற்றுக்கொள்கின்றனர். எனவே மெதிவ்ஸின் பொறுமையான ஆட்டமானது, எந்தவொரு போட்டியின் முடிவையும் மாற்றும் வல்லமையுடையது” எனவும் சந்திமால் தெரிவித்தார்.

dinesh-angelo--300x200.jpgஇதேவேளை, இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுனரான திலான் சமரவீரவின் பங்களிப்பு குறித்து சந்திமால் கருத்து வெளியிடுகையில், திலான் சமரவீரவின் வருகையானது எனக்கு மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர் 5ஆம் இலக்க வீரராக களமிறங்கியவர். எனவே அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உண்டு. அவர் வலைப்பயிற்சிகளில் எமக்கு வழங்குகின்ற அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. அதிலும் குறிப்பாக அஷ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து நிறைய நுட்பங்களை எமது வீரர்களுக்கு சொல்லிக் கொடுத்தது மூன்றாவது டெஸ்டை சமநிலையில் நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது. அதற்கு திலானுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் வரலாற்று சிறப்பு மிக்க இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில், தனது இளம் வயதில் ஒரு நாள் சதம் பெற்ற பெருமையை சந்திமால் கொண்டுள்ளார்.

எனினும் இலங்கை ஒரு நாள் அணியில் இடமின்றி தவிக்கும் அவர் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு நாள் அணியில் இணைய வேண்டுமாயின் இளம் வீரர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டியையும், போராட்டத்தையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.