Jump to content

ஐ.எஸ்.க்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இராக் அறிவிப்பு


Recommended Posts

ஐ.எஸ்.க்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இராக் அறிவிப்பு

 

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினருக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக இராக் அறிவித்துள்ளது.

இராக் படையினர்

இராக் படையினர்படத்தின் காப்புரிமைAFP Image captionநவம்பர் மாதத்தில், ராவா நகரை இழந்ததை தொடர்ந்து எல்லைப் பகுதியின் சில பகுதிகளே இஸ்லாமிய அரசு குழுவினரிடம் இருந்தன.

இராக்-சிரியா எல்லையின் முழுக் கட்டுப்பாட்டையும் இராக்கிய படைப்பிரிவுகள் பெற்றிருப்பதாக பாக்தாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஹைய்தர் அல்-அபாதி தெரிவித்திருக்கிறார்.

நவம்பர் மாதத்தில், ராவா நகரை இழந்ததை தொடர்ந்து எல்லைப் பகுதியின் சில பகுதிகளே இஸ்லாமிய அரசு குழுவினரிடம் இருந்தன.

இராக்கிற்கு அருகிலுள்ள சிரியாவில் இஸ்லாமிய அரசு குழுவினரை தோல்வியடைய செய்யும் நடவடிக்கையை முடித்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்த 2 நாட்களுக்கு பின்னர் இராக்கின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

_99137987__99136988_043479329-1.jpgபடத்தின் காப்புரிமைREUTERS Image caption”நம்முடைய ஒற்றுமையால் வெற்றியடைந்தோம்” - அபாதி

தங்களை கலிபேட் (மத ரீதியில் ஆட்சி புரியும் வாரிசாக) என பிரகடனம் செய்து, ஒரு கோடி மக்கள் மீது தங்களின் ஆட்சியை திணித்த இந்த ஜிகாதி குழுவானது, 2014ம் ஆண்டு சிரியாவிலும், இராக்கிலும் பெரும் பகுதியை கைப்பற்றியிருந்தது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இந்த குழு, கடந்த ஜூலை மாதம் இராக்கின் 2வது நகரான மொசூலையும், அதனுடைய நடைமுறை தலைநகராமாக விளங்கிய சிரியாவின் வட பகுதியில் இருக்கும் ரக்காவையும் இழந்தது.

சில இஸ்லாமிய அரசு ஆயுதப்படையினர் சிரியாவின் நாட்டுப்புறங்களுக்கு பிரிந்து சென்றுவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. பிறர் துருக்கி எல்லையை கடந்து தப்பிவிட்டதாக நம்பப்படுகிறது.

http://www.bbc.com/tamil/global-42292967

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.