Jump to content

EUவில் இருந்து பிரிந்து செல்ல, 45-55 பில்லியன் யூரோ – UK இணக்கம் – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்


Recommended Posts

EUவில் இருந்து பிரிந்து செல்ல, 45-55 பில்லியன் யூரோ – UK இணக்கம் – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்

 

uk-pm.jpg
ஐரோப்பிய  ஒன்றியத்தில் இருந்து  பிரிந்து செல்வதற்கு 45-55 பில்லியன் யூரோ வரையில் வழங்குவதற்கு பிரித்தானியா முன்வந்துள்ளது. இது குறித்து , அந்த அமைப்புடன் பிரித்தானியா  பிரிவினை உடன்படிக்கை  ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாக பிரித்தானியா இருந்த நிலையில், அதில் இருந்து வெளியேறுவது தொடர்பாக, டேவிட் கமரூன் பிரதமராக இருந்த போது பேச்சுக்கள் எழுந்தன.

இது குறித்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம்  திகதி  இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பில்  சுமார் 52 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தமையினால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியானது.

இதற்காக  முதற் கட்டமாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில்    பிரக்சிற்றின் முதல் நடவடிக்கையாக ஐரோப்பிய  ஒன்றிய  உடன்படிக்கை பிரிவு 50-ஐ கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி பிரித்தானியா பிரகடனம் செய்தது.

இதன்படி 2 ஆண்டுகளில், அதாவது 2019-ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  பிரித்தானியா வெளியேற வேண்டும்.

இந்த நிலையில் இதற்கான பேச்சுவார்த்தையை பிரி்தானிய பிரதமர் தெரசா மே ஆரம்பித்தனைத் தொடர்ந்து அயர்லாந்துடனான எல்லை விவகாரத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது.

இவற்றின் தொடர்ச்சியாக தெரசா மே, பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் செனறு அங்கு அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன்  பேச்சுவார்தை நடத்தினார். இதனையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரிவினை உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ஐரோப்பிய  ஒன்றியம் ஆணையகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பிரச்சினையில், அயர்லாந்து எல்லை உள்ளிட்ட பல அம்சங்களில் போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரிவினை உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஐரோப்பிய  ஒன்றியத்தில்  இருந்து பிரிந்து செல்வதற்கு 45-55 பில்லியன் யூரோவை வழங்குவதற்கு பிரித்தானியா முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய  ஒன்றிய தலைவர் ஜோன் கிளவுட் ஜங்கருடன் பிரசல்ஸ் நகரில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரித்தானிய பிரதமர் தெரசா மே, ‘அயர்லாந்துடனான எல்லையில் கடினமான நிலை (சிக்கல்) இருக்காது என்பதற்கு நாங்கள் உறுதி கூறுகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்தாலும், அங்கு வாழும் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொடர்ந்து அங்கு வசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரக்சிற்றின் அடுத்த கட்ட நடவடிக்கை எதிர்வரும் 14, 15ம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/53999

Link to comment
Share on other sites

18 மாதங்களாக நீடித்த இழுபறிக்கு பிறகு ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பிரிட்டிஷ் பிரதமர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் கூட்டாக அறிவிப்பு

09CHSKOBREXIT

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கரை பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்துப் பேசினார்.   -  படம்: ராய்ட்டர்ஸ்

சுமார் 18 மாதங்களாக நீடித்த இழுபறிக்குப் பிறகு பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து கடந்த 2016 ஜூனில் அந்த நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரெக்ஸிட் என்றழைக்கப்படும் இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து வரும் 2019 மார்ச் 29-ம் தேதி ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் பல்வேறு விவகாரங்களால் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உட்பட 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் விசா இன்றி எந்த நாட்டுக்கும் சென்று குடியேறலாம். அதன்படி பிரிட்டனில் சுமார் 30 லட்சம் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களும், இதர ஐரோப்பிய நாடுகளில் சுமார் 10 லட்சம் பிரிட்டிஷ் குடிமக்களும் வசித்து வருகின்றனர். ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகிய பிறகு இவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டிஷ் அரசுக்கு இடையே 18 மாதங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

மேலும் பிரிட்டனின் ஒரு பகுதியான வடக்கு அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான அயர்லாந்து இடையேயான கடல் பகுதியை இரு நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன. பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு குறிப்பிட்ட கடல் பகுதியை பிரிட்டன் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் என்பதால் அதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனிடையே அயர்லாந்து கடல் எல்லை விவகாரத்தில் வடக்கு அயர்லாந்தை சேர்ந்த ஐனநாயக ஐக்கிய கட்சிக்கும் பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. ஐனநாயக ஐக்கிய கட்சியின் ஆதரவில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருவதால் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மேவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாட்டை எட்டினர்.

இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் சென்றார். அங்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தொடர்ந்து அங்கேயே வாழலாம் என்றும், வடக்கு அயர்லாந்து- அயர்லாந்து கடல் எல்லை விவகாரத்தில் கடுமையான எல்லை கோட்பாடுகளை பின்பற்ற மாட்டோம் என்றும் பிரதமர் தெரசா மே உறுதியளித்தார்.

இதன்பின் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ழான் கிளாட் ஜங்கர் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் பல்வேறு விவகாரங்களில் விட்டுக் கொடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/world/article21378504.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நவீனன் said:

அப்போது, பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தொடர்ந்து அங்கேயே வாழலாம் என்றும், வடக்கு அயர்லாந்து- அயர்லாந்து கடல் எல்லை விவகாரத்தில் கடுமையான எல்லை கோட்பாடுகளை பின்பற்ற மாட்டோம் என்றும் பிரதமர் தெரசா மே உறுதியளித்தார்.

கிழவி எண்ணத்தை பூடகமா சொல்றாவோ தெரியலை நடைமுறைக்கு வரும்போதுதான் தெரியும் ஆனாலும் பவுன்ஸ் விலை விழவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

கிழவி எண்ணத்தை பூடகமா சொல்றாவோ தெரியலை நடைமுறைக்கு வரும்போதுதான் தெரியும் ஆனாலும் பவுன்ஸ் விலை விழவில்லை .

நாங்கள் ஐரோப்பிய யூனியனிலை இருந்து விலகின மாதிரி இருப்பம்/நடிப்பம். கூட்டம் கூத்துகளுக்கு வரமாட்டம். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

ஐரோப்பிய யூனியனை எதிர்க்க யாரும்(ரொனால்ட் ரம்பை தவிர  not usa ) தயாரில்லை போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.