Jump to content

தொண்­டமான், திகாம்­பரம் வந்­தாலும் கண்­டியில் நான்தான் தலைவன்


Recommended Posts

தொண்­டமான், திகாம்­பரம் வந்­தாலும் கண்­டியில் நான்தான் தலைவன்

 

 
 

சிங்­க­ள­வர்­க­ளுக்கு மாத்­திரம் எனக்கு சேவை செய்ய முடியும். எனினும் எமது கண்டி தோட்­ட­ப்புற தமிழ் மக்­களை பாது­காக்க எவரும் இல்லை. அவர்­க­ளுக்கு நான் தான் தந்­தை­யாகும். அதனால் நான் பல சேவை­களை செய்தேன். எனினும் நல்­லாட்­சியில் ஒன்றும் நடக்­க­வில்லை. நானே சேவை செய்தேன். எனினும் வாக்­குகள் அன்­னத்­திற்கு வழங்­கப்­பட்­ட­தாக கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே சபையில் தமி ழில் தெரி­வித்தார்.

mahinda.jpg

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மை ப்பு, தேசிய கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழி, நல்­லி­ணக்க மற்றும் ஒரு­மை ப்­பாடு அமைச்­சு­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான விசேட தெரி­வுக்­கு­ழு­க்களின் அறிக்கை மீதான குழு­நிலை விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

புதிய கிராமம் என்ற பெயரில் அமைச்சு இருந்­தாலும் மலை­ய­கத்தில் இன்னும் பழைய வீடு­களே உள்­ளன. இன்னும் கூட பழைய முறை­மையின் பிர­கா­ரமே மலை­ய­கத்தின் மீதான பார்வை உள்­ளது. நல்­லாட்­சியில் மலை­யக மக்­க­ளுக்கு எந்­த­வொரு பிர­தி­ப­லனும் கிடைக்­க­வில்லை. 

கல்வி, மல­சல கூட, சுகா­தார, வீதி பிரச்­சி­னைகள் உள்­ளன. தோட்ட இளை­ஞர்களின் பெறு­பே­றுகள் மிகவும் மோச­மாக உள்­ளன. தோட்ட மாண­வர்­க­ளுக்கு ஆசி­ரி­யர்கள் இல்லை. மாண­வர்கள் பாட­சா­லை­க­ளுக்கு வரு­வ­தில்லை. அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பும் இல்லை. தற்­போது தோட்­டப் ­புற இளைஞர், யுவ­திகள் கொழும்பு விற்­பனை நிலையங்­களில் கூலிக்­கா­ரர்­க­ளாக வேலை பார்க்­கின்­றனர். 

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் அப்­ப­குதி இளை­ஞர்­க­ளுக்கு எத்­தனை தொழில்­வாய்ப்­புகள் வழங்­கி­யுள்­ளீர்கள்? அமைச்சர் திகாம்­ப­ரத்தை நான் பாராட்­டு­கின்றேன். வீட­மைப்பு திட்­டத்தை சீரான முறையில் முன்­னெ­டுத்து வரு­கின்றார். எனினும் அடிப்­படை பிரச்­சி­னைகள் பல உள்­ளன. எமது ஆட்­சியின் போது முடி­யு­மான அள­விற்கு நாம் சேவை செய்து விட்டோம். நாவ­லப்­பிட்­டியை பொறுத்­த­வ­ரையில் நான் தலை­யிட்டு தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு கட்­டடங்­களை வழங்­கி­யுள்ளேன். எனினும் தற்­போது அங்கு ஆசி­ரி­யர்கள் இல்லை. மாண­வர்கள் வரு­வது இல்லை. இதற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். சிங்­கள பிர­தேசங்களில் பொறி­யி­யலாளர்கள், வைத்­தி­யர்கள் உரு­வா­கின்­றனர். எனினும் தோட்டப் பகு­தி­களில் இவ்­வாறு உரு­வா­கு­வ­தில்லை. கல்வி தொடர்பில் அமைச்சர் திகாம்­பரம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். 

எங்கள் காலப்­ப­கு­தியில் வைத்­தி­ய­சா­லைகளை அர­சு­டை­மை­யாக்­கினோம். எனினும் நல்­லாட்­சியில் அந்த வைத்­தி­ய­சாலை­களில் வைத்­தி­யர்கள் இல்லை. அந்த வைத்­தி­ய­சா­லைகள் மீண்டும் கம்­ப­னி­க­ளுக்கே வழங்­கப்­ப­டு­கின்­றன. எனவே இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி ­னர்கள். எமக்கு நவ­லோக வைத்­தி­ய­சா­லைக்கு போக முடியும். எனினும் அப்­பாவி தோட்ட மக்கள் நிலைமை மிகவும் மோச­மாகும். நாவ­ல­ப்பிட்டி வைத்­தி­ய­சா­லை­களை மூடினால் தல­வாக்­­கலை வைத்­தி­ய­சா­லைக்கு போக வேண்டும்.

தேர்­தலின்  போது வராத அர­சியல் தலை­வர்கள் இல்லை. எனினும் தற்­போது எவரும் வரு­வ­தில்லை. அமைச்சர் திகாம்­பரம் நல்ல வீட்டு திட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ளார். இதன்­படி நாவ­ல­ப்பிட்­டியில் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் உள்­ளன. என்­றாலும் பத்து வீடு­களே வழங்­கப்­பட்­டுள்­ளன. தோட்ட மக்கள் லயன் அறை­களில் எவ்­வ­ளவு காலம் இருந்­துள்­ளனர்? 150 வருடங்கள் இருந்­துள்­ளனர். எல்­லோ­ருக்கும் வீடுகள் வழங்க வேண்டும். ஜனா­தி­பதி தேர்­தலில் அன்­னத்­திற்கு வாக்­க­ளித்­தனர். எனினும் நாமே அவர்­க­ளுக்கு சேவை செய்தோம். ஆனால் வாக்கு அன்­னத்­திற்­காகும். 

அத்­துடன் அமைச்சர் திகாம்­பரம் காலத் தில் பெரிய வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டும். கண்­டிக்கு அதி­க­மான வீடு­களை வழங்­குங்கள். அமைச்சர் பது­ளையை விட நுவ­ரெ­லி­யா­வுக்கு அதி­க­மாக வழங்க வேண்டும். அப்­போ­துதான் உங்­க­ளுக்கு வாக்கு கிடைக்கும். தற்­போது வீதிகள் தாரி­டப்­ப­டு­கின்­றன. எனினும் ஒரு மாதத்தில் உடைந்து விடு­கின்­றன. ஆனால் எனது காலத்தில் காபட் இட்­டேன். இன்னும் சேத­மா­காமல் உள்­ளது.

கல்வி அமைச்சர்  5000 தொழில்­வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்ளார். எனினும் தோட்­டப்­புற மக்­க­ளுக்கு எத்­தனை கிடைத்­தன? இரா­ஜாங்க அமைச்­ச­ருக்கே இல்லை என்றால் தோட்ட மக்­க­ளுக்கு எப்­படி கிடைக்கும்? அத்­துடன் கண்­டியில் 2 இலட்சம் தமிழர்கள் உள்­ளனர். இது­வரை ஒன்றும் செய்­ய­வி ல்லை.

தற்­போது ஒரு கிலோ அரி­சியின் விலை 100 ரூபா­. தேங்காய் விலை 65 ரூபா­. தோட்ட மக்கள் எப்­படி வாழ்­வது? தொண்­டமான், திகாம்­பரம் வந்­தாலும் கண்­டியில் நான்தான் தலைவன். எனக்கு சிங்­க­ள­வர்­க­ளுக்கு மாத்­திரம் சேவை செய்ய முடியும். எனினும் எமது தமிழ் மக்­களை பாது­காக்க எவரும் இல்லை.அவர்­க­ளுக்கு நான் தான் தந்­தை­. அதனால் நான் பல சேவைகளை செய்தேன். என்னுடன் வாருங்கள். அங்குள்ள குறைபாடுகளை காண்பிக்கின்றேன். சிறைச்சாலை அமை ச்சை பொறுத்தவரையில் இந்த அமைச் சுக்கு டி.எம்.சுவாமிநாதன் தகுதியற்றவர்  எனினும் அவர் மிகவும் கெளரவமான நல்ல மனிதர். இந்நிலையில் அமைச்சர் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள குறை பாடுகளை பார்க்க வேண்டும். சிறையில் இருந்து வெளியே வருபவர் நல்ல மன நிலையுடன் வர வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/27985

Link to comment
Share on other sites

இவரின் சகோதர ஐ.தே.க எம் பி(ஆனந்த அளுத்கமகே) மேற்கூறிய கூற்றுக்கு என்ன பதில் சொன்னார்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.