Jump to content

வரப்போவது பெண் வேட்பாளர்களா, ‘டம்மிகளா’?


Recommended Posts

வரப்போவது பெண் வேட்பாளர்களா, ‘டம்மிகளா’?
 

மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் அண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் முற்போக்கானவையாகும். இருந்தபோதிலும், அவற்றை நிறைவேற்றுவது, இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.   

image_70cb854f7b.jpg

கட்சிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், எந்த இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இருந்தாலும், அவற்றுக்குப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பெரும் சவாலாகவே இருக்கின்றது.  

எனினும், இந்தப் பிரச்சினை சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கே மிகவும் சவாலானதாக இருக்கிறது. அவற்றிலும் குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளுக்கும் அடுத்ததாக மலையகக் கட்சிகளுக்கும் கலாசார காரணங்களினால், இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு, ஆரம்பத்தில் கடினமாக இருக்கும்.  

பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் இரண்டு சட்டங்கள், அண்மையில் நிறைவேற்றப்பட்டன. மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டம் ஆகியன அந்த இரண்டு சட்டங்களுமாகும்.   

அவற்றின் பிரகாரம், சகல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தத்தமது வேட்பு மனுப் பத்திரங்களில் உள்ளடக்கப்படும் வேட்பாளர்களில், குறைந்த பட்சம் 25 சதவீதம் பெண்களைக் கொண்டிருக்க வேண்டும்.  

சாதாரணமாக, எந்தவொரு கட்சியும் எந்தவொரு தேர்தலின் போதும் மிகச் சில பெண்களையே வேட்பாளர்களாக நியமிக்கின்றன. முஸ்லிம் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதே இல்லை என்று கூறுமளவுக்கு, அக்கட்சிகளின் வேட்பாளர்களில் பெண்கள் குறைவாகவே இருப்பர்.   

அக்கட்சிகளின் தலைவர்கள், பெண் வேட்பாளர்களை நிறுத்த விரும்பாமைதான் இதற்குக் காரணம் என்று கூற முடியாது. பிரதான காரணம், அந்தத் தேவை இருந்தாலும், பெண் வேட்பாளர்களைத் தேடிக் கொள்ள முடியாமையே ஆகும்.   

அந்தவகையில், சகல அரசியல் கட்சிகளும் பெரும் சவாலை எதிர்நோக்கி இருப்பதை விளங்கிக் கொள்ளலாம். இந்தப் பிரச்சினையால்,வேட்புமனுப் பத்திரங்களைத் தயாரிக்கும்போது, அரசியல் கட்சிகள் பல தந்திரங்களைக் கையாண்டு சட்டத்தையும் சட்டத்தின் நோக்கத்தையும் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகும்.  

ஆயினும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் அண்மையில் இரண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது, எந்தவோர் அரசியல் கட்சிப் பிரதிநிதியும் அவற்றை எதிர்க்கவில்லை.  

 மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டத்தினால் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திப் போடப்படுவதன் காரணமாக, கூட்டு எதிரணி உள்ளிட்ட சில கட்சிகள் அதை எதிர்த்த போதிலும், எவரும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை எதிர்க்கவில்லை. 

சிலவேளை, தம்மை மற்றவர்கள் பழைமைவாதிகள் என்றோ, அடிப்படைவாதிகள் என்றோ கருதலாம் என நினைத்துச் சிலர், இச்சட்டங்களை எதிர்க்காதிருந்திருக்கலாம். உண்மையிலேயே, இச்சட்டங்கள் முற்போக்கானவை எனப் பொதுவாகக் கருதப்படுவதனால், அவற்றைச் சிலர் எதிர்க்காதிருந்திருக்கலாம்.   

ஆயினும், அவை நிறைவேற்றப்படும் போதும், அவற்றை அமுலாக்கும்போதும் பெரும் சவாலாகிவிடும் என்பதும், சில பகுதிகளில் இது சாத்திமேயில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும்.   

இந்தப் பிரச்சினை அவ்வாறு சவாலாகிவிடுவதற்குப் பெண்கள், ஆண்களை விட, சமூக ரீதியில் பின்நிற்பதுதான் ஒரே காரணம் எனக் கூற முடியாது. பெண்களுக்குள்ளேயே அவ்வாறானதொரு நிலைமை இருப்பது உண்மையாயினும், பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதைத் தடுக்கும் சமூக, பொருளாதார, சமய மற்றும் கலாசார நம்பிக்கைகளும் முறைமைகளும் இருப்பது, இந்த நிலைமைக்குக் காரணங்களாகும்.   

இந்நாட்டுப் பொருளாதாரத்துக்குப் பெண்கள் வழங்கும் பங்களிப்பைக் கவனத்தில் கொள்ளும்போது, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பொருத்தமற்ற அளவில், குறைவாக இருப்பது தெளிவாகிறது.   

இந்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணியைச் சம்பாதிப்பவர்களில் பெண்களே முதலிடத்தில் இருப்பதாகச் ‘சட்டம் மற்றும் சமூகம் பற்றிய நிறுவனம்’ தனது அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.   

2014 ஆம் ஆண்டு, வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், பணிப் பெண்களாகக் கடமையாற்றுவோர் சம்பாதித்த வெளிநாட்டுச் செலாவணியின் தொகை 600 கோடி டொலர் என அந்நிறுவனம் கூறுகிறது.   

இது இலங்கை நாணயத்தின் பெறுமதியின்படி, சுமார் 90,000 கோடி ரூபாய்கும் அதிகமாகும். ஆடை உற்பத்தி, தேயிலை, இறப்பர் மற்றும் இறப்பரினாலான பொருட்கள் உற்பத்தி ஆகியன அடுத்த படியான வெளிநாட்டுச் செலாவணியை தேடிக் கொடுக்கும் தொழில்களாகும். இந்த உற்பத்தித் துறைகளிலும், பிரதானமாகவும் கூடுதலாகவும் பெண்களே கடமையாற்றுகிறார்கள்.   

இந்நாட்டின் சனத்தொகையுடன், பெண்களின் அரசியல் பங்களிப்பை ஒப்பிட்டுப் பார்க்கும் போதும், அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டம் ஆகியவற்றினால், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முற்போக்கானது என்றே கருதப்படுகிறது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 52 சதவீதமானோர் பெண்களாவர்.  

உலகில் முதலாவது பெண் பிரதமரைத் தோற்றுவித்த நாடும் இலங்கையே. சிறிமாவோ பண்டாரநாயக்கவே 1960 ஆம் ஆண்டில், உலகில் முதலாவது பெண் பிரதமரானார். ஆயினும், இலங்கையில் நாடாளுமன்றம் உட்பட, எந்தவொரு மக்கள் பிரதிநிதிகள் சபையிலும் பெண்களின் விகிதாசாரம் 6.5க்கு மேல் அதிகரிக்கவில்லை.  

விகிதாசாரத்திலும் எண்ணிக்கையிலும் மிகவும் அதிகமான பெண் பிரதிநிதித்துவம் இதுவரை நாடாளுமன்றத்தில் மட்டுமே காணப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அவ்வளவு பலம்வாய்ந்த ஆளுமையுள்ளவர்கள் அவசியமாக இல்லாவிட்டாலும், அவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இதுவரை, நாடாளுமன்றத்துக்குச் சென்ற பெண் உறுப்பினர்களோ அல்லது ஆண் உறுப்பினர்களோ பலமான ஆளுமையுள்ளவர்கள் என்பது அதன் அர்த்தமல்ல.   

விகிதாசார ரீதியாக, நாடாளுமன்றத்தில் ஆகக் கூடுதலான பெண் பிரதிநிதித்துவம், 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின் தெரிவாகிய, தேசிய அரச பேரவையிலேயே இருந்துள்ளது.   

1972 ஆம் ஆண்டு, நிறைவேற்றப்பட்ட முதலாவது குடியரசு அரசமைப்பின் படி, நாடாளுமன்றம், தேசிய அரச பேரவையாக அழைக்கப்பட்டது. அதற்கான, முதலாவதும் இறுதியானதுமான தேர்தலே 1977 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலின்போது 11 பெண் உறுப்பினர்கள் தெரிவானார்கள்.   

அதைவிடக் கூடுதலான பெண் உறுப்பினர்கள், பின்னர் நடைபெற்ற பல தேர்தல்களின் போது, நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிய போதும், 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இரண்டாவது குடியரசு அரசமைப்பின்படி, நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 168 இல் இருந்து 225 ஆக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் பெண்களின் விகிதாசாரம் குறைந்துவிட்டது.   

இரண்டாவது குடியரசு அரசமைப்பின்படி, முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 13 பெண் உறுப்பினர்கள் தெரிவானார்கள். ஆயினும் பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் 5.7 ஆகக் குறைந்தே காணப்பட்டது. அதையடுத்து 2000 ஆவது ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தவிர்ந்த 2004, 2010 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போதும் 13 பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்கள்.  

image_8c0cd6479f.jpg

பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, மாகாண சபைகளின் நிலைமை இதைவிட மோசமானதாகும். உள்ளூராட்சி மன்றங்களின் நிலைமை அதையும் விட மோசமானதாகும். 

அந்த நிலையிலேயே அவற்றின் பெண் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பதற்காகச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

நோக்கங்கள் எவ்வளவு முற்போக்கானதாக இருந்தாலும், செயற்படுத்துவது எவ்வளவு கஷ்டமானது என்பது அதன் மூலம் தெரிகிறது.  

இலங்கைப் பிராந்தியத்தில், பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ‘பப்ரல்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும், ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பு’க் கூறியுள்ளது. இந்த அமைப்பின், நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டி  ஆரச்சியை மேற்கோள்காட்டி, சட்டம் மற்றும் சமூகம் பற்றிய நிறுவனம் தனது மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.   

‘பிராந்தியத்தில் இலங்கையிலேயே மிகவும் குறைந்த பெண் பிரதிநிதித்துவம் காணப்படுகிறது. மாகாண மட்டத்தில் அது மூன்று சதவீதத்துக்கும் குறைவாக உள்ளதோடு, தேசிய மட்டத்தில் சுமார் ஐந்து சதவீதமாகும்.  ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, இன்னமும் புதிய நாடான ஆப்கானிஸ்தானிலும் சுமார் 28- 30 சதவீதப் பெண் பிரதிநிதித்துவம் காணப்படுகிறது. இந்தியாவில் தேசிய மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவ்வளவாக இல்லாவிட்டாலும், மாநில மட்டத்தில் ஆர்வத்துடனான பங்களிப்பைக் காண முடிகிறது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், முழு நாட்டுக்கும் சட்டமியற்றும் சபையான நாடாளுமன்றத்தில், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாகச் சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.   

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக இவ்வாறான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தபோதிலும் அவற்றை நடைமுறைப்படுத்த இன்னமும் நாட்டுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

பெப்ரவரி மாதம் நடைபெறுவதாகக் கூறப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போதே, அவற்றில் ஒரு சட்டம் பரீட்சித்துப் பார்க்கப்படப் போகிறது.  

நிறைவேற்றப்பட்டு இருக்கும் இந்த இரண்டு சட்டங்களும், மிகவும் சிக்கலானவையாகவே தென்படுகின்றன. எனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவும் தமது அதிகாரிகளுக்கு, இப்போது அதைப் பற்றிய விளக்கத்தையும் பயிற்சியையும் வழங்கி வருகிறது. ஒரு முறையாவது, அச்சட்டங்களில் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னரே மக்கள் அவற்றைப் பற்றிய தெளிவைப் பெறுவர்.   

இச்சட்டங்களின் பிரகாரம், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் முன்னர் போலல்லாது, இரண்டு வேட்பு மனுப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.   

இனிமேல், மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்கள், தொகுதிவாரி மற்றும் விகிதாசாரத் தேர்தல் முறைகளின் கலப்பு முறையொன்றின் கீழ் நடைபெறுவதே அதற்குக் காரணமாகும்.   

முதலாவது வேட்பு மனுப் பத்திரத்தில், தொகுதி வாரியாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படும். இரண்டாவது வேட்பு மனுப் பத்திரத்தில், ஒவ்வொரு கட்சியும் விகிதாசார ரீதியாகப் போட்டியிட்டு இருந்தால், பெறும் ஆசனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக நியமிக்கப்படப் போகும் வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படும்.   

முதலாவது, வேட்புமனுப் பத்திரத்தில் உள்ள பெயர்களில், 10 சதவீதம் பெண்களின் பெயர்களாக இருப்பது கட்டாயமாகும். இரண்டாவது பட்டியலில் உள்ள பெயர்களில் 50 சதவீதம் பெண்களின் பெயர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வேட்பு மனுப் பத்திரங்கள் நிராகரிக்கப்படும்.   

இந்தப் பட்டியல்களைத் தயாரிப்பது தொடர்பாகப் பெண் வேட்பாளர்களைத் தேடிக் கொள்வதில், மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கக் கூடும் என ஊகிக்கப்படும் முஸ்லிம் கட்சிகள் சிலவற்றின் தலைவர்களிடம் நாம் வினவினோம். “தொகுதிவாரிப் பட்டியலுக்கு, பெண்களைத் தேடுவதே மிகவும் கடினமாகும்” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,  
“ஏனெனில், இந்த வேட்பாளர்கள் வெற்றி பெறவே வேண்டும் என்ற நோக்கில்தான் ஒவ்வொரு கட்சியும் அவர்களைத் தேர்தலில் நிறுத்த வேண்டும். எனவே, அவர்கள் வெற்றி பெறும் ஆற்றலும், தெரிவு செய்யப்பட்டால் மக்கள் சம்பந்தப்பட்ட சபையின் உறுப்பினராகச் செயற்படும் ஆற்றலும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.   

ஏற்கெனவே பல்வேறு மக்கள் பிரதிநிதித்துவ சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஆண், பெண் உறுப்பினர்கள், திறமையானவர்கள் என்று இதனால் அர்த்தமாகாது.   

தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறையின்படி நிறுத்தப்படும் குறிப்பிட்ட ஒரு வேட்பாளர், அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், முக்கிய தலைவர்களாக இல்லாவிட்டால் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் எந்தவொரு கட்சிக்கும் இல்லை.   

எண்ணிக்கையில் கூடுதலான வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்றே சகல கட்சிகளும் எதிர்பார்க்கும். எனவே, ஒரு கட்சியின் வேட்பாளர்களுக்கு வேண்டுமென்றால், தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு வேட்பாளரைப் புறக்கணித்து, அவரைத் தோல்வியுறச் செய்யலாம்.   

விருப்பு வாக்குகளுக்கான போட்டியினால் இது பரவலாக நடைபெறுகிறது. கடந்த பொதுத் தேர்தலின்போது, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரோசி சேனாநாயக்கவுக்கு, அதுவே நடந்தது என்று கூறப்படுகிறது.   

ஆனால், தொகுதி வாரித் தேர்தலின் போது, குறிப்பிட்ட தொகுதியொன்றுக்கு போட்டியிடும் ஒரு கட்சியின் வேட்பாளர் தோல்வியடைந்தால், கட்சிக்கும் ஒரு தொகுதி குறைந்துவிடும். அந்தத் தொகுதியில் பெறப்படும் குறைந்த வாக்குகளின் காரணமாக, இரண்டாவது பட்டியல் மூலம், ஓர் உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் போகலாம்.   

இலங்கையின் வரலாற்றில் இதுவரை, இரண்டு முஸ்லிம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் அன்ஜான் உம்மாவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரபுமே அவர்களாவர்.  

 மாகாண சபைகளில் அன்ஜான் உம்மா மட்டுமே இருந்தார். உள்ளூராட்சி மன்றங்களில் 1952 ஆம் ஆண்டு, கொழும்பு பிரதி மேயராகவிருந்த ஆயிஷா ரவூபும் காத்தான்குடி பிரதேச சபையில் சல்மா ஹம்ஸாவும் மட்டுமே இருந்துள்ளனர்.  

மலையகக் கட்சிகளின் மூலம், இதுவரை ஒரே ஒரு பெண் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் சபைகளில் அங்கம் வகித்துள்ளார். மத்திய மாகாண சபைக்குத் தெரிவான அனுஷா சிவராஜா அந்த உறுப்பினராவார். வடக்கு கிழக்கிலிருந்தும் ரங்கநாயகி பத்மநாதன், விஜயகலா மகேஷ்வரன், அனந்தி சசிதரன் போன்ற ஒரு சிலர் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர்.  

 இது தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்நோக்கப் போகும் பிரச்சினையின் அளவைக் கோடிட்டுக் காட்டுகிறது. சிங்களப் பெண்களும் மிகக் குறைவாகவே இதுவரை மக்கள் பிரதிநிதிகளாக இருந்தபோதிலும், அவர்களுக்கு அதற்கான கலாசார ரீதியான தடைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.  

“முஸ்லிம்களுக்கே இந்த விடயத்தில், கலாசார பிரச்சினைகள் கூடுதலான தடையாக அமையும். அதற்கு மேலதிகமாக, இலங்கையின் அரசியல் கலாசாரத்துக்கும் அவர்கள் தாக்குப் பிடிப்பது கஷ்டமாக இருக்கும்” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் கூறுகிறார்.   

எனினும், “நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி, காத்தான்குடி பிரதேச சபைக்குப் பலமானதோர் மகளிர் அணியைப் போட்டியில் நிறுத்தவுள்ளது” என்று அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் கூறுகிறார்.   

“நாட்டில் சகல கட்சிகளும் பெயரளவிலான ‘டம்மி’ பெண் வேட்பாளர்களையே நிறுத்தும்” என முஸ்லிம் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான ஹசன் அலி கூறுகிறார்.   

அனேகமாக, அதுவே நடக்கக் கூடியதாகத் தெரிகிறது. இது சம்பந்தப்பட்ட சட்டங்களின் நோக்கத்தையே முறியடிப்பதாக அமையும். ஆனால், சட்டம் தொடர்ந்து இருக்கப் போகிறது. எனவே, காலப் போக்கில், சகல சமூகங்களில் இருந்தும் பலமான பெண் அரசியல்வாதிகள் உருவாகவும் கூடும்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வரப்போவது-பெண்-வேட்பாளர்களா-டம்மிகளா/91-208452

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.