Jump to content

சென்னை இறால் பிரட்டல்


Recommended Posts

Bild könnte enthalten: Essen
 

சென்னை இறால் பிரட்டல்

தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்த்தது)

மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

கொத்துமல்லி தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை பழ சாறு - 2 தேக்கரண்டி

உப்பு -தேவையான அளவு

மரசெக்கு கடலெண்ணய் - 3 மேஜைக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் தலா ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் 1 கப் ( சதுர துண்டுகளாக நறுக்கியது)

சின்ன வெங்காயம் - 100 கிராம் (அம்மிகல்லில் விழுதாக நசுக்கியது)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4 ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)

செய்முறை :

1.ஒரு வடச்சட்டியில் சின்ன வெங்காயவிழுதுடன், தக்காளி கொத்துமல்லித்தழை,கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி பின் மிக்ஸ்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.

2. அடுப்பில் வடச்சட்டியை வைத்து மரசெக்கு கடலெண்ணய் விட்டு நன்றாக காய்ந்ததும் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் விழுதையும் போட்டு வதக்கவும்.

3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின், அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

4. மேலும் இதனுடன், அரைத்து வைத்துள்ள கலவையைப் போட்டு வதக்கவும்.

5. மிளகாய்த்தூள், கொத்துமல்லித்தூள் சேர்த்து கிளறவும்.

6.இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாரு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும்.

7.பிறகு கழுவிவைத்த இறாலை இதனுடன் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

8.குறைவான தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும்.

9. வெந்ததும் சிறிது சிறிதாக மரசெக்கு கடலெண்ணய் விட்டு நன்றாக பொன்னிறமாக சிவக்க சிவக்க எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

 

https://www.facebook.com/TASTYSAMAYAL/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9 வது ....மரசெக்கு கடலெண்ணெய்க்கு நாங்கள் எங்க போறது. சப்பாத்தி, பானுக்கு சூப்பராய்  இருக்கும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

எங்காவது  தமிழ் கடைகாரரிடம் ஒரு சொல்லு சொல்லி பாருங்கள்.. ஒரு மாதத்தில் நீங்கள் போகும்போது தானாக கூப்பிட்டு சொல்வார்கள் மரசெக்கு கடலெண்ணெய்  வந்து இருக்கு என்று..:grin: ஆனால் அது என்ன எண்ணெய் என்பதுக்கு நான் பொறுப்பு இல்லை.:rolleyes:

 

சரி மரசெக்கு கடலெண்ணெய் என்றால் என்ன என்று தேடியபோது கிடைத்தது.

மரசெக்கு எண்ணெய் என்றால் என்ன ?

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ, கல்லாலோ செய்யபட்டிருக்கும். செக்கின் அடிபாகம் , மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் மூலம் இயக்கபடுகிறது. பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்.

செக்கில் கடலெண்ணெய் ஆட்டுவதற்கு கிணற்று தண்ணீர் ஊற்றி தான் (ஆட்டும்பொழுது ஏற்படும் வெப்பத்தைத்தணிக்க) சேர்த்து ஆட்டுவது வழக்கம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சிறிது சிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான அல்லது கல்லால் ஆன செக்குகளை சுழலவைப்பதின் மூலம் வேர்கடலையில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும். அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கிணற்று நீர் சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது . பின்னர் கிணற்று நீர் தனியாக பிரிக்கப்பட்டுவிடும். தண்ணீர் ஊற்றாமல் கடலெண்ணைய் ஆட்ட இயலாது என்பதே உண்மை.

இப்படி மர, கல் செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் கடலெண்ணைக்கு அபாரமான மணமும் குணமும் இருப்பது இயற்கை. இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மணம், மருத்துவகுணம் சுவை இதெல்லாம் அலாதி தான். .

மர, கல் செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும் ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத்திற்கு கெட்டு போகாமலும் இருக்கும். ஒரு முறை மர, கல் செக்கு எண்ணெய் சாப்பிட்டால்... அதன் ருசி கால காலத்திற்கும் மறக்காது. இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும்,
நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த கடலை எண்ணெயை அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காயவைத்து) உபயோகித்தனர்.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர். அதனால் தான் வெளிநாட்டில் கூட இதை
" King of Oil " என்று அழைக்கிறர்கள்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழ கொழப்பாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள்,உயிர்சத்துக்கள்தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான ப்ரோடீன்கள் வைட்டமின்கள், தாது பொருட்கள் நார்சத்துக்கள், குளோரப்பில், கால்சியம், மக்னீசியம், காப்பர், இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவையுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன. உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .
சமையல் எண்ணெய்களை எப்படி சுத்திகரிக்கபடுகின்றன என்பதை பார்த்தால் உண்மையான நிலை தெரியவரும். பல உள்நாட்டு கம்பெனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் மூலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படும். அந்த வெப்பத்தால் இயற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் சில அதிசியமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .

இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில்

இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தையும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் காஸ்டிக்சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர்கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். இந்தக் காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக மாற்றி விடுகிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கி விடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்க பிளிச்சிங் பவுடர். பின் இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நீக்கி விட்டு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதியஅமிலம் (எண்ணெய்) கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதியாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார்கள்..சமையலுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்தும் பொழுது சூடுதாங்காமல் உருக்குலைந்து விடுகிறது. கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்..

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் இயற்கைக்கு மாறுவோம்.. இயற்கை உணவே! ஆரோக்கிய வாழ்க்கை!!!

 

https://www.facebook.com/TASTYSAMAYAL

1 hour ago, suvy said:

9 வது ....மரசெக்கு கடலெண்ணெய்க்கு நாங்கள் எங்க போறது. சப்பாத்தி, பானுக்கு சூப்பராய்  இருக்கும்....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.