Jump to content

இடைத்தேர்தல் நடக்குமா?


Recommended Posts

மிஸ்டர் கழுகு: இடைத்தேர்தல் நடக்குமா?

 
 

 

‘‘டிசம்பர் 21-ம் தேதி 2ஜி வழக்கின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றுதான், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் நடக்கிறது. ஒரே நாளில் தி.மு.க-வுக்கு இரண்டு அக்னிப் பரீட்சைகள்’’ என்றபடி வேகமாக உள்ளே நுழைந்தார் கழுகார்.

‘‘பரீட்சையின் ரிசல்ட் எப்படி இருக்குமாம்?’’ என்று கேட்டோம்.

தன் கையோடு கொண்டுவந்திருந்த துண்டுச்சீட்டு குறிப்புகளை நம்மிடம் தந்த கழுகார், ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறலாம் என்று டெல்லிக்கு மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது’’ என்றார்.

‘‘இன்னொரு பக்கம் ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில், ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை விடாமல் துரத்துகிறதே?’’

‘‘ஆம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குள் பணம் வந்த பாதையில் ப.சிதம்பரம் சிக்கியிருப்பதாக சி.பி.ஐ சொல்கிறது. கார்த்தி சிதம்பரத்துக்கு அந்தப் பிரச்னை இன்னும் தீராத துயரமாக இருக்கிறது. கார்த்தி சிதம்பரத்தைப் போதுமான அளவுக்கு இந்த விவகாரத்தில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை துரத்திவிட்டது. கடந்த வாரம் கார்த்தி சிதம்பரத்தின் மாமனார் கைலாசம் (தாய் வழிச் சொந்தம்), அவருடைய நண்பர்கள் சுஜய் சாம்பமூர்த்தி, ராம்ஜி நடராஜன், கொல்கத்தாவில் உள்ள மனோஜ் மோகன் ஆகியோரைக் குறிவைத்து ரெய்டு நடந்தது. சென்னை திருவான்மியூரில் ஸ்ரீராம் நகர் குறுக்குத் தெருவில் உள்ள சுஜய் சாம்பமூர்த்தியின் மீடியா மேக்னட் பிஸினஸ் சர்வீஸ், கார்த்தி சிதம்பரத்தின் நண்பர் ராம்ஜி நடராஜனுக்குச் சொந்தமான ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் பகுதியில் உள்ள டிராவல் மாஸ்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கார்த்தி சிதம்பரத்தின் மாமனார் சடையவேல் கைலாசத்துக்குச் சொந்தமாக தேனாம்பேட்டையில் உள்ள அஸ்வினி சவுந்தரா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், கொல்கத்தாவில் உள்ள மனோஜ் மோகன் என்பவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில்  கடந்த 1-ம் தேதி அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது. அதை வைத்து கார்த்தியை விசாரணைக்கு விரைவில் அழைப்பார்களாம்.’’

p44v_1512483747.jpg

“ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டமே கண்ணீரில் மிதக்கிறது. அரசுமீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களே?’’

‘‘மழையும், புயலும் கடலோர மாவட்டங்களின் மக்களுக்கு பழகிப்போன விஷயங்கள்தான் என்றாலும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒரே நாளில் காணாமல் போவது என்பது இதுவரை நடக்காதது. ‘அரசாங்கத்தின் அலட்சியத்தால்தான் இது நடந்தது’ என்று மீனவ மக்கள் நினைக்கிறார்கள். 30-ம் தேதியும் கனமழை என்ற வார்த்தையைப் பயன்படுத்தித்தான் முதலில் அறிவிப்பு வெளியிட்டனர். அன்று காலையில்தான், ‘புயலாக இது உருமாறியிருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் கன்னியாகுமரியை இந்தப் புயல் கடக்கும்’ என்று வானிலை மையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட நிர்வாகமும், அவசர அவசரமாக புயல் அறிவிப்பு செய்தியை விடுத்துள்ளது. முன்பே கடலுக்குள் சென்ற மீனவர்கள் வர முடியாமல் சிக்கிக் கொண்டார்கள். இதேபோன்ற குரலை கேரளாவில் அரசே எதிரொலித்தது. ‘ஹைதராபாத் வானிலை மையம் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுக்காததே சேதத்துக்குக் காரணம்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.’’

‘‘தேடுதல் விஷயத்தில் தமிழக அதிகாரிகள் மெத்தனம் காட்டினார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததே?’’

‘‘ஆழ்கடலில் மீனவர்கள் சிக்கிக்கொண்டதாகத் தகவல் வந்ததும், கடலோரக் காவல்படை விரைந்து செயல்படவில்லை. அதே போல், ‘கடற்படையும் மெத்தனமாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்தது’ என்ற வருத்தம் மீனவர்களுக்கு உள்ளது. கரை ஒதுங்கிய சில மீனவர்கள், ‘நாங்கள் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, இந்தியக் கடற்படையின் ரோந்துக் கப்பல் எங்களைக் கடந்துசென்றது. நாங்கள் அவர்களை சைகை காட்டி அழைத்தபோதும், கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதுதான் தமிழக மீனவ மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அங்கு சென்றபோது, குளச்சலில் மீனவர்கள் முற்றுகையிட அதுதான் காரணம். குமரியில் மக்கள் தவித்துக்கொண்டிருந்தபோது, கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருந்தது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. முதல்வர் வருகை தருவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.’’

‘‘அவர்களுக்கு விழாக்களும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும்தானே முக்கியம்?’’

‘‘குறிப்பாக, இடைத்தேர்தலை எடப்பாடியும் பன்னீரும் மானப் பிரச்னையாக நினைக்கிறார்கள். அனைத்து அமைச்சர்களையும், ஏற்கெனவே அவர்கள் பார்த்த ஏரியாக்களைப் போய்ப் பார்க்கச் சொல்லி முதல் உத்தரவு வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இரண்டு அணிகளின் நிர்வாகிகளையும் அரவணைக்கும் வேலையில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். தினகரனுக்காக அமைச்சர்கள் கடந்த முறை ஏராளமாக செலவு செய்துவிட்டார்கள். ஆனால், மக்களிடம் ‘தினகரன் பணம் கொடுத்தார்’ என்ற பெயர்தான் உள்ளது. அந்த நினைப்பை மாற்ற, இந்த முறையும் அமைச்சர்கள் கையிலிருந்து கரன்சிகள் இறங்கும் என்கிறார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘இந்தத் தேர்தலில் இரட்டை இலை தோல்வியைத் தழுவினால், தினகரனின் கை ஓங்கிவிடும் என்று அமைச்சர்கள் அஞ்சுகிறார்கள். மேலும் விஷால், தீபா எனப் பெரும்படையே  சுயேச்சைகளாகக் களத்தில் நிற்பதால், வாக்குகள் சிதறி தி.மு.க-வுக்கு சாதகமாகப் போய்விடக்கூடாது என்ற அச்சம் அ.தி.மு.க-வினரிடம் உள்ளது. அந்தக் காரணத்துக்காகவே செலவு செய்யவேண்டிய நெருக்கடியில் அமைச்சர்கள் உள்ளார்கள்.’’

‘‘விஷால் களம் இறங்குவதன் பின்னணி என்னவாம்?’’

‘‘கமல்தான் விஷாலைக் களத்தில் இறக்கியுள்ளார் என்று முதலில் தகவல் வந்தது. அதன்பிறகு, ‘தினகரன் மறைமுகமாக விஷாலை நிறுத்தி வாக்குகளைப் பிரிக்க முடிவுசெய்துள்ளார்’ என்றார்கள். ‘ஆர்.கே.நகரில் இருக்கும் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகள் மொத்தமாக மதுசூதனனுக்குப் போய்விடாமல் தடுக்கவே இந்த பிளான்’ என்று சொல்லப்பட்டது. ஆனால், ‘விஷால் நிற்பதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று தினகரன் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ‘இது தி.மு.க-வின் திட்டமாக இருக்குமோ’ என்று சில அமைச்சர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். விஷாலும், ஸ்டாலினின் மகன் உதயநிதியும் நெருங்கிய நண்பர்கள் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். இதை வைத்தே சந்தேகம் எழுந்தது. ஆனால், உண்மையில் விஷாலைத் தேர்தலில் நிற்கத் தூண்டியதே அவருடன் இருக்கும் ஒரு நபர்தான் என்கிறார்கள் விஷாலின் நண்பர்கள். அதோடு உதயநிதிக்கும் விஷாலுக்கும் இடையே சமீபத்தில் மனக்கசப்பு ஏற்பட்டதையும் அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.’’

‘‘தி.மு.க என்ன திட்டத்தில் உள்ளதாம்?’’

‘‘ஆர்.கே. நகரை எப்படியும் கைப்பற்றிட வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதால் ஸ்டாலின் குஷியாக உள்ளார். 89 எம்.எல்.ஏ-க்களும் ஆர்.கே. நகரில் களமிறங்க உள்ளார்கள். மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் அழைப்பு போய்விட்டது. நூறு ஓட்டுக்கு ஒருவர் என்ற ரீதியில் பொறுப்பாளர்களை நியமிக்கும் திட்டத்தில் தி.மு.க உள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தையும் விரைவில் நடத்த உள்ளனர்.’’

p44b_1512483722.jpg

‘‘தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டை வைகோ எடுத்துவிட்டாரே?’’

‘‘கருணாநிதியைப் பார்க்க வந்தது, முரசொலி பவள விழாவில் பங்கெடுத்தது என வைகோவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தி.மு.க-வுக்கு சார்பானவையாகத்தான் இருந்தன. அரசியல் கூட்டணியைப் பொறுத்தவரை, ‘கட்சியின் அரசியல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்’ என்று வைகோ சொல்லியிருந்தார். மதுரை விமான நிலையத்திலும், கோவை விமான நிலையத்திலும் நடந்த ஸ்டாலின் - வைகோ சந்திப்புகள், இருவரின் நட்பை அதிகப்படுத்தின. ‘தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டைத்தான் ம.தி.மு.க எடுக்க வேண்டும்’ என்று அக்கட்சியின் முன்னணியினர் தொடர்ந்து வைகோவிடம் சொல்லிவந்தார்கள். ‘அ.தி.மு.க-வையும் பி.ஜே.பி-யையும் எதிர்க்கும் வலிமை  தி.மு.க-வுக்கே உள்ளது’ என்பது ம.தி.மு.க அரசியல் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கருத்தாக இருந்துள்ளது. எனவேதான், தி.மு.க-வை ஆதரிக்கும் முடிவை வைகோ எடுத்தாராம்.’’

‘‘ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?’’

‘‘வைகோவின் அறிவிப்பு வந்ததும், ‘இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணையும் இந்த நேரத்தில், ம.தி.மு.க-வும் அதில் தனது பங்கைச் செலுத்தும் வகையில் இணைந்திருப்பது பாராட்டுக்குரியது’ என்று சொன்னார் ஸ்டாலின். இதுதான் மறுநாள் வெளியான ‘முரசொலி’யின் தலைப்புச்செய்தி. அந்தளவுக்கு வைகோ ஆதரவை ஸ்டாலின் மதித்ததாகச் சொல்கிறார்கள். 7-ம் தேதியன்று ஆர்.கே. நகரில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வைகோவிடம் இந்தத் தகவல் சொல்லப்பட்டது. ஆனால், ‘அன்றைய தினம் இரண்டு திருமணங்களை நடத்தத் தேதி கொடுத்துள்ளேன்’ என்று வைகோ சொல்ல, கூட்டத்தின் தேதியையே மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டாலின் என்கிறார்கள்.’’

p44c_1512483790.jpg

‘‘சரி, ஆர்.கே. நகர் தேர்தல் நியாயமாக நடக்குமா?’’ என்ற கேள்வியைப் போட்டதும் சிரித்த கழுகார், ‘‘தேர்தல் நடக்குமா?’’ என்று திருப்பிக் கேட்டார். ‘‘தி.மு.க வெற்றிபெறும் சூழல் வந்தால், கடைசி நேரத்தில் தேர்தலை மீண்டும் நிறுத்த எடப்பாடியும் பன்னீரும் டெல்லிக்கு ரகசியக் கோரிக்கை வைப்பார்கள் என்று அதிகாரி ஒருவர் தகவல் தந்தார். டெல்லியிலிருந்து கிண்டி மாளிகைக்கு ஒருவர் வந்துள்ளார். அவர் பலரிடமும், ‘ஜனவரிக்குப் பிறகு பார்க்கலாம்’ என்று ஏதோ சூட்சுமம் வைத்துப் பேசுகிறாராம். ‘ஆர்.கே. நகர் தேர்தல் எங்கே சுமுகமாக நடக்கப்போகிறது? பழையமாதிரியே பிரச்னையில்தான் முடியும். இரண்டு முறை தேர்தல் நடப்பது நின்றால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற நிலை உருவாகும். அதனால், அரசு முடங்கிப்போகும். அப்புறம், அதிகாரம் இங்கேதான் வரும்’ என்று அவர் சொன்னாராம்’’ என்று சொல்லிவிட்டுப் பறந்து வானத்தில் வட்டமிட்டார் கழுகார்.

ஓவியம்: கார்த்திகேயன் மேடி
அட்டைப் படம்: ஆர்.ராம்குமார்
படங்கள்: கே.குணசீலன், வி.ஸ்ரீனிவாசுலு


p44a_1512483635.jpg

விவேக்குக்காக மாமனார் நடத்திய கிடாவெட்டு!

ருமானவரித் துறையினரின் அதிரடிச் சோதனைகளால், இளவரசியின் மகன் விவேக் ஏகப்பட்ட நெருக்கடிகளுக்கு ஆளானார். திருமணம் ஆனபிறகு வந்த தன் மனைவியின் முதல் பிறந்த நாளைக்கூட கொண்டாட முடியாத அளவுக்குச் சிக்கல்கள் சூழ்ந்தன. பிரச்னைகளிலிருந்து மீளவும், இனிமேல் ஏதும் கஷ்டங்கள் வராமல் இருக்கவும், குலதெய்வத்துக்கு கிடா வெட்டி வழிபாடு செய்தார் விவேக்கின் மாமனார் பாஸ்கர். இதற்காகக் கடந்த 4-ம் தேதி, மாமனாரின் ஊரான பட்டுக்கோட்டைக்கு அருகேயுள்ள கல்யாண ஓடைக்கு வந்தார் விவேக். 

இதற்காக 3-ம் தேதியே விவேக் தன் மனைவியுடன் திருச்சியிலிருந்து காரில் தஞ்சாவூர் வந்தார். பைபாஸ் சாலையில் அவருக்கு வரவேற்பு கொடுத்து,  50 கார்கள் அணிவகுக்க பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர் அவரின் ஆதரவாளர்கள். அன்று தன் நெருங்கிய நண்பரான சிவா என்பவர் வீட்டில் தங்கினார் விவேக். மறுநாள் காலை 11 மணிக்கு கல்யாண ஓடை வந்த விவேக்குக்கு ஊர் எல்லையில் மாலை அணிவித்து, பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அழைத்துச் சென்றனர். கிடாவெட்டு, சிறப்பு வழிபாடுகளுக்குப்பிறகு அனைவருக்கும் தடபுடல் விருந்தும் வைக்கப்பட்டது.

‘‘இது மருமகனுக்குப் பிரச்னை தீர்க்கும் வழிபாடு மட்டுமில்லை. விவேக் நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கான வேண்டுதலும்தான்’’ என்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். தன் வீட்டு நிகழ்ச்சியானாலும், ஆதரவாளர்கள் இல்ல விழா என்றாலும், விவேக் வருவதும் தெரியாது; போவதும் தெரியாது. அப்படி இருந்தவர் இப்படி மாறியிருப்பது, அவர் குடும்ப வட்டாரங்களிலேயே பலரைக் குழப்பியிருக்கிறது. 


p44_1512483667.jpg

dot_1512483681.jpg டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு வந்த சோமநாதன் ஐ.ஏ.எஸ்., பிரதமரின் நேரடிப் பார்வையில் பணி செய்தவர். இப்போது திட்டங்கள், வளர்ச்சி மற்றும் சிறப்பு அமலாக்கத் துறையின் செயலராக இருக்கிறார். அவருக்குத் தலைமைச் செயலகத்தின் இரண்டாவது மாடியில் அறை. இதே மாடியில்தான் நிதித்துறைச் செயலாளர் சண்முகத்தின் அறையும் இருக்கிறது. விரைவில் உடல்நிலையைக் காரணம் காட்டி சண்முகம் வெளியேற, அவரது அறையில் சோமநாதன் உட்காரப்போகிறாராம்.

dot_1512483681.jpg தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீட்டிங்குகள் நடத்துவதில் ஆர்வம் காட்டுவார். இப்போது அதிகாரிகள் லெவலில் பல்வேறு துறையினரை அழைத்து தினமும் பல மீட்டிங்குகளை நடத்தி வருகிறார். ‘‘இப்படி மீட்டிங்குகளை அடிக்கடி போடுவதால், அதற்கு ஃபைல் ரெடி பண்ணவே நேரம் சரியாகிவிடுகிறது. அதிகாரிகளை வேலை செய்யவிட்டால்தானே?’’ என்று அதிகாரிகள் முணுமுணுக்கிறார்கள். 

dot_1512483681.jpg சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளத்துக்காக மாதம் 45 கோடி ரூபாய் தமிழக அரசு கொடுக்கவேண்டியிருக்கிறது. தேவையில்லாத இடங்களில் அதிக பணியாளர்களை முந்தைய நிர்வாகம் சேர்த்துவிட்டதுதான் காரணமாம். அதனால், அங்கு வேலை பார்த்த பணியாளர்களில் 50 சதவிகிதம் பேரை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டனர். இன்னும் சிலரை மாற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன.

dot_1512483681.jpg உயர் கல்வித்துறைச் செயலர் சுனில் பாலிவால் புது நியமனங்கள் விஷயத்தில் கறாராக இருப்பதால், ஆளுங்கட்சியினரும் மீடியேட்டர்களும் நொந்து நூடுல்ஸ் ஆகிக்கிடக்கிறார்கள்.

dot_1512483681.jpg கடந்த 2-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு விழாவுக்குச் சென்றார். அருகேயுள்ள தனியார் கல்லூரி வளாகம் ஒன்றைப் பார்வையிடவே இந்த நிகழ்ச்சிக்கு அவர் சென்றதாக சேலம் அ.தி.மு.க-வினர் பேசிக்கொள்கிறார்கள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.