Jump to content

தமிழ்த் தேசியப் பேரவை – த.தே.பே TamilNational Council –T.N.C. உதயமாகியது….


Recommended Posts

தமிழ்த் தேசியப் பேரவை – த.தே.பே TamilNational Council –T.N.C. உதயமாகியது….

TNC.png

அகில இலங்கைதமிழ் காங்கிரஸ்
தமிழ்த் தேசியமக்கள் முன்னணி
தமிழர் சம உரிமை  இயக்கம்
மற்றும் பொதுஅமைப்புக்களிற்கும்
இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

முன்னுரை
தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டுதமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது.

 

 

1. பெயர் :  தமிழ்த் தேசியப் பேரவை -த.தே.பே. .(TamilNational Council–T.N.C.)

2. இலக்கு: மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவையினால் 10.04.2016 ஆந் திகதிவெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியைபெற்றுக் கொள்வதையும் இலக்காககொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த்தேசியப் பேரவை) செயற்படும்.

3. எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பொதுச்சின்னத்தைபெறமுடியாதநிலைஏற்பட்டுள்ளமையினால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்

4. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியப் பேரவை (TamilNational Council–T.N.C.) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு புதியசின்னம் பெறப்பட்டுமேற்படி இலக்கைஅடைவதற்காக செயற்படும்.

5. இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பொதுஅமைப்புக்கள் தமதுசுயாதீனத்தைபேணிக்கொள்ளமுடியும்.

மேற்படிவிடயங்களை வாசித்து விளங்கிக்கொண்டு அதனை ஏற்று 2017ஆம் ஆண்டுடி சம்பர்மாதம் 06ஆம் நாள் (06.12.2017)  இப்புரிந்துணர்வு உடன்படிக்கை இதன் கீழ் கையொப்பமிடும் அமைப்புக்களால் கைச்சாத்திடப்படுகின்றது.

அகில இலங்கைதமிழ் காங்கிரஸ்
தமிழ்த் தேசியமக்கள் முன்னணி
தமிழர் சம உரிமை  இயக்கம்
மற்றும் பொதுஅமைப்புக்களிற்கும்
இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

http://globaltamilnews.net/archives/53485

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ரிம்மில்ல(rim):10_wink: தான் ஒடுவம் என்று அடம் பிடிக்கினம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செயற்றிறன் மிக்கதும் துணிச்சலோடு பதவிகளுக்கப்பால், பதவிகள் மக்களது தேவைகளுக்கானதென்ற சிந்தனையுடைய தலைமையொன்றினது தேவையைக் கொண்டதான களச்சூழலில், பத்தோடு பதினொன்றாக இல்லாது கதிரைகளுக்காகக் கட்சிகள் குலைந்து காட்சிகள் மாறுவதும் கூடுவதுமாக இல்லாது தமிழரது நலனுக்கானதாக அமையவேண்டும். மாற்றுக் கட்சியை விமர்சிப்பதல்ல அரசியல். அந்த விமர்சனத்துக்குரிய விடயத்தை நிறைவேற்ற உழைப்பதே மாற்றுஅரசியலாக அமையவேண்டும். தமிழினம் அனாதராவாகத் தெருவோரம் வீசப்பட்ட காகிதமாக அலைந்துலையும் நிலையில் தமது கதிரைகளுக்கான பேரங்களில் மூழ்கியுள்ள தலைமைகள்(?) பட்டுணரும் வகையில் மக்கள் தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைக் கொண்டு சரியானப் பாடத்தைப் புகட்டவேண்டும். எதுவுமேயற்ற தீர்வுத்திட்டத்தைக் கொண்டாடும் தலைமையொருபுறம் படையினரது சுற்றிவளைப்பும் கண்காணிப்பும் மறுபுறமாக நசிபட்டு நலிவுற்றுள்ள மக்களுக்கான குறைந்தபட்ச ஆற்றுப்படுத்தலையாவது, அரசாங்கத்தைச் செய்ய வைக்கவேண்டும். அல்லது அனைத்துலகுவரை ஒவ்வொருவிடயத்துக்காகவும்; இழுத்துவரவேண்டும். வெறுமனே புலிகளால் கைநீட்டபட்ட அமைப்பு என்பதற்காக மக்கள் ஏமாளிகளா இனியும் இருக்கக் கூடாது. யாராக இருப்பினும் மக்களது நலனைப்பேணமுடியாதோர் ஒதுங்கியிருப்பதே மக்களுக்குச் செய்யும் பெரும் கைமாறாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று தசாப்த போராட்ட வாழ்வும், உயிர்பலிகளும், தியாகங்களும்      கடைசியில் இவர்களை வாழவைக்கத்தான் உதவியது என்பதுதான்  ஆறாத துயரம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னிக கூட்டமா வரும் சிங்கந்தான் சிங்கிளா வரும். தேர்தல் வரலைன்னா அவனவன் தன்பாட்டைபார்த்துக்கிட்டு இருந்திருப்பான்  தொடைநடுங்கிகளுக்கு தேர்தலை சந்திக்க மட்டும் கூட்டு சேரணுமெண்ணு புரியுது. அதுவும் தமிழினத்துக்காக அல்ல தனக்காக. இல்லென்னா இந்த ஞானம் பிறந்திருக்க சான்சேல்ல. தமிழினம் வரும்புவது எமது அரசியல்வாதிகள் அவரவர் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை  மட்டுந்தானே ஒழிய தனிப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களை கதிரைகளில் நிரப்புவதற்கல்ல. கட்சிகள் பல இருந்தாலும் ஒரு குடையின்கீழ் ஒரு கூட்டணியமைத்து ஒன்றுபடமுடியாத  கட்சிகள் கட்டுப்பணம் இழக்கப்போது உண்மை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.