Jump to content

புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும்


Recommended Posts

புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும்

 

புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும்
 
புலி அரசியலும் புலம்பெயர் சுயநலமும்
 

தமிழன் என்றால் திமிர்ப்பிடித்தவன், செயல்வீரன்ஈ வீரத்தின் சின்னமவன் என்றெல்லாம் தமிழனின் பெருமை அன்றுதொட்டு இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல்துறைகளிலும் தமிழன் வெற்றிநடைபோட்டு வருகின்றான்.

தமிழன் ஒரு செயலில் இறங்கிவிட்டால் இலக்கை அடையும்வரை கடுமையாகப் போராடுவான். எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை சமாளித்து எதிர்நீச்சல் போடவே முயற்சிப்பான். ஆனால், காட்டிக்கொடுப்புகளும், துரோகங்களுமே தமிழனின் வெற்றிப்பயணத்துக்கு வேலிபோடும் காரணிகளாக அமைகின்றன. 21ஆம் நூற்றாண்டிலும் அவை நீடிப்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, கனடா,சிங்கப்பூர், மலேசியா, பிரித்தானியா, நோர்வே உட்பட உலகின் 13 நாடுகளில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் எமது இன, மத, கலாசார, மொழிக்கட்டமைப்புகளை வைத்து இலாபமீட்டிக்கொள்ளும் ஒருதரப்பினரும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

ராஜித சொன்ன கதை

2014 நவம்பர் மாதம் 21ஆம் திகதி பொதுவேட்பாளராக களமிறங்கிய மஹிந்த படையணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் மைத்திரிபால சிறிசேன. ராஜித்த சேனாரத்ன உள்ளிட்டவர்களும் வெளியேறியிருந்தனர்.

அதன்பின்னர், ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்டோரும் இணைந்து, ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினர். அதன்போது உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, புலம்பெயர் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுவரும் பஸில் ராஜபக்­ஷ, புலம் பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் வைத்துள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தவே வந்துள்ளேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக கருதப்படும் ருத்ரகுமாரனுக்கு முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ""அன்பரே ருத்ரா'' என விளித்திருந்தார். எனவே, இவர்களுக்கிடையிலான உறவு எப்படியிருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசு புலம்பெயர் அமைப்புகளுக்கு எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை. ஆனால், மஹிந்த ஆட்சி காலத்தில் புலம்பெயர் அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டன. ஆனால், மறுபுறத்தில் கள்ளத்தொடர்பு பேணப்பட்டு வந்துள்ளது என்பதையே இக்கூற்றின் ஊடாக எடுத்துரைப்பதற்கு ராஜித்த முற்பட்டார்.

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் சிங்கள பேரினவாத சக்திகளால், புலம்பெயர் அமைப்புகள் தொடர்பில் இந்நாட்டு மக்கள் மனதில் விதைக்கப்பட்ட விசமத்தனமான எண்ணப்பாடுகளைக் களையும் வகையிலான பல உரைகளை அதன்பின்னர் ராஜித நிகழ்த்தியிருந்தார். இவர் மட்டுமல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர ஆகியோரும் இந்தப் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

 

Tamil-Diaspora.jpg

 

புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அந்த அழைப்பு உரிய வகையில் சம்பந்தப்பட்ட தரப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது இன்றளவிலும் வினாவாகவே இருக்கின்றது.

தமிழர் பிரச்சினை தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த தீர்வைப் பெறுவதற்காக தமிழர்கள் அறவழி, மறவழியென இருமுனைகளிலும் போராடினார்கள். ஆனாலும், தீர்வு இன்னும் கிடைத்தப்பாடில்லை. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில், அது இன்று இராஜதந்திர சமராக உருமாறியுள்ளது.

கடந்தகால அரசுகள் இழுத்தடிப்புச்செய்தாலும், புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை கண்டுவிடவேண்டும் என்பதில் நல்லாட்சி அரசு குறியாகவே இருக்கின்றது என்பதை கூறிதான் ஆகவேண்டும். ஆனால், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் இது தொடர்பில் தவறானதொரு விம்பம் உருவாக்கப்பட்டுவருகின்றது. எனவே, புதிய அரசமைப்பு திட்டமிட்ட அடிப்படையில் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சிங்கள மக்களும் ஏதோ தவறானதொரு விடயம் நடக்கப்போகின்றது என்பதை நம்ப ஆரம்பித்துவிட்டனர். எனவே, சந்தேகத்தை கலைப்பதற்குரிய நடவடிக்கையை தமிழர் தரப்பும், தமிழ் அமைப்புகளும் முன்னெடுக்கவேண்டும். அதுவே காலத்துக்கு தேவையான பொறிமுறையாகும். ஆனால், இன்று என்ன நடக்கின்றது?

இனப்பிரச்சினையை வைத்து அரசியல் இலாபம் அடையும் செயலில் சிலர் இறங்கியுள்ளனர். ஒரு சில தமிழ்க் கட்சிகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் சுயநல அரசியலை நடத்திவருகின்றனர். தமிழன் எக்கேடு கெட்டால் என்ன நமக்கு வயிறு நிறைந்தால் சரி என்ற இழிநிலை சிந்தனைக்குள் மூழ்கியுள்ளனர்.

தென்னிலங்கையில் என்ன நடக்கின்றது, சிங்கள மக்களின் மனோநிலை எவ்வாறு இருக்கின்றது, எதிர்ப்பலைகளை சமாளித்து எவ்வாறு தீர்வை பெறுவது, அதற்காக தமது தரப்பில் செய்யப்படவேண்டிய தியாகங்கள் எவை என்பதிலே தமிழர்களும், தமிழ்த் தலைமைகளும், தமிழ் அமைப்புகளும் கவனமாக இருக்கவேண்டும்.

ஆனால், அதற்கு மாறுபட்ட நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்றுவருகின்றன. சில தமிழ் அரசியல்வாதிகள் தென்னிலங்கை மக்களை அச்சமூட்டும் வகையிலேயே அறிக்கைகளை விட்டுவருகின்றனர். அரசியல் இராஜதந்திரம் என்பது அவர்கள் மத்தியில் கொஞ்சம்கூட இல்லையென்றே கூறவேண்டும். உணர்ச்சி அரசியல் காரணமாக சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளவே முற்படுகின்றனர்.

 இதற்கிடையில் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும், பற்றி எரியும் நெருப்பில் பெற்றோலை ஊற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர் என்ற போர்வையில், சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டை வலுவடையச்செய்கின்றனர்.

ஜெனிவாத் தொடர் சர்வதேச மாநாடுகள் ஆகியவற்றில் பங்கேற்று தமிழர்களுக்கு சார்பாக குரல்கொடுக்கலாம். அது கட்டாயம் செய்யப்படவேண்டிய நடவடிக்கையாகும்.
ஆனால், புலம்பெயர் தேசங்களில் இன்று என்ன நடைபெறுகின்றது? ஐக்கியம் இல்லை. பல தரப்பினரும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து செயற்படுகின்றனர். ஏன்! மாவீரர்களை வைத்துக்கூட பிழைப்பு நடத்துமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. தமிழர்களின் விடுதலைக்காக போராடிய வீரமறவர்களை மறக்ககூடாது என்பதில் நாமும் உறுதியாகவே இருக்கின்றோம். அவர்களை மதிக்கவேண்டுமே தவிர, வைத்து அரசியல் நடத்தக்கூடாது என கேட்டுக்கொள்கின்றோம்.

வெளிநாடுகளில் ஒன்றுகூடி பிரமாண்ட நிகழ்வுகளை நடத்துபவர்கள் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேசக்கரம் நீட்டினால் என்ன? இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான உதவிகளை வழங்கினால் என்ன? இப்படி பொருளாதார மட்டத்தில் பல உதவிகள் அவர்களுக்கு தேவைப்படுகின்றன. அதற்கான முதலீடுகளை செய்யலாம். ஒருசிலர் உதவுகின்றனர், அதை ஏற்கின்றோம். ஆனால், பெரும்பாலானோர் என்ன செய்கின்றனர்?

தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசியல் சூழ்நிலை முக்கியத்துவமிக்கது. சம்பந்தன் போன்ற தலைவர்கள் இருக்கும்போதே தீர்வை எட்டிவிடவேண்டும். இனி எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கூட்டாட்சி உதயமாகுமோ தெரியவில்லை. எனவே, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிங்கள மக்களை உசுப்பேற்றாத வகையில் தமிழர்களெல்லாம் ஓரணியில் திரண்டு அரசியல் தீர்வைபெற முயற்சிப்போம்.

மாறாக வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து, சுயலாப அரசியலை நடத்தினால் அது ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் ஆபத்தாகவே அமையும்.

அடுத்தாண்டில் உள்ளூராட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்போது சிங்கள, பௌத்த மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக மஹிந்த அணியும், சில கட்சிகளும் இனவாத ஆயுதத்தையே கையிலெடுக்கும். இதனால், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு தடை ஏற்படக்கூடும். அந்த தடையை உடைப்பதற்குரிய நடவடிக்கையை தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டுமே தவிர, அதை இறுக்கும் வகையில் செயற்படக்கூடாது.

இலங்கையை அண்மையில் புரட்டிப்போட்டது ஓகி புயல். இதனால், பெரும் சேதமும் ஏற்பட்டது. எனவே, புதிய அரசியலமைப்பு, அரசியல் தீர்வு என தமிழர்கள் இங்கு கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அவற்றை சீர்குலைக்கும் வகையில், ஓகி புயல்போன்று ஆபத்தை தரும் வகையில் எந்தரப்பும் செயற்படக்கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.

https://www.sudaroli.com/special-articles/item/2212-2017-12-04-10-02-47

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்களோடை நிக்கிற முசுலீமுகள்.... புதிய அரசியலமைப்பை ஏற்க மாட்டினம் என்று  சொல்லுறது....மற்றப்பக்கத்தாலை காணி பிடிக்கிறது.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.