Jump to content

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு


Recommended Posts

 
கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு
 
 

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு

 
 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது.

நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/53101.html

 
 

உள்ளூராட்சித் தேர்தல்: ரெலோ தனிவழி

 

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று ரெலோவின் தலைமைத்துவக் குழுக் கூட்டத்தில் சற்றுமுன்னர் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/53097.html

  • ரெலோ­வும் வெளி­யே­றி­யது!
ரெலோ­வும் வெளி­யே­றி­யது!
 
 

ரெலோ­வும் வெளி­யே­றி­யது!

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் ரெலோ போட்­டி­யி­டாது என்று அந்­தக் கட்­சி­யின் தலை­மைத்­து­வக் குழுக் கூட்­டத்­தில் இன்று அதி­காலை முடி­வெ­டுக்­கப்­பட்டது.

‘‘இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி பிடி­வாத நிலைப்­பாட்­டில் உள்­ள­மை­யால், உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் அந்­தக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யி­ட­மு­டி­யாது’ என்று ரெலோ­வின் செய­லர் ந.சிறி­காந்தா, இன்று அதி­காலை ‘உத­யன் பத்­தி­ரி­கைக்­குத்’ தெரி­வித்­தார்.

உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லுக்­கான ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் குழப்­பம் ஏற்­பட்­டது. கடந்த ஞாயிற்­றுக்கிழமை நடை­பெற்ற கூட்­டத்­தில் எட்­டப்­பட்ட இணக்­கப்பாடுகளும் நேற்­றைய கூட்­டத்­தில் இல்­லா­மற்போ­னது.

நேற்­றைய கூட்­டம் குழப்­ப­க­ர­மான நிலை­யில், கூட்­டம் முடி­வுக்கு வரு­வ­தற்கு முன்­ன­தாக ரெலோ அமைப்­பின் பிர­தி­நி­தி­கள் கூட்­டத்­தி­லி­ ருந்து வெளி­யே­றி­யி­ருந்­த­னர்.

அந்­தக் கட்­சி­யின் தலை­மைத்­து­வக் கூட்­டம் வவு­னி­யா­வில் நேற்­றி­ரவு 10மணிக்கு ஆரம்­ப­மா­னது. இதில் 16 பேர் பங்­கு­பற்­றி­யுள்ளார்கள். கூட்­டம் இன்று அதி­காலை ஒன்­றரை மணி வரை­யில் நீடித்­தது.

‘இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை எதிர்­கொள்­வ­தில்லை என்று முடி­வெ­டுத் துள்­ளோம். இந்த முடிவை யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து இன்று மாலை அறி­விப்­போம். ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் இன்று நடை­பெ­றும் கூட்­ட­மைப்­பின் கூட்­டத்­தி­லும் பங்­கு­பற்­ற­மாட்­டோம்.’ என்று சிறி­காந்தா குறிப்­பிட்­டார்.

http://newuthayan.com/story/53128.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி எதை நினைக்கிறானே அதையே நீங்கள் செய்தால் ,உங்களுக்கும்  அரசியல்அராஐதந்திரத்துக்கும்  வெகுதூரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு "கூட்டமைப்பாக" சந்திக்கும் கடைசித் தேர்தல் இது என்று  "சம் " கூறியதாக கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது செய்தி வெளிவந்திருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

EPRLF பிரிந்த போது வேற்றுமையில் ஒற்றுமை காண்போம், ஒரு கட்சி வேளியேறினால் இன்னொரு கட்சி உள்ளே வரும் என்று கூவின சிறீகாந்தா என்ன செய்யப்போகிறார்.

EPRLF ஆச்சும் அரசியல் கொள்கைக்காக வெளியேறியது நீங்க...... ஆசன தொகுதிப் பங்கீட்டிற்காக வெளியேறி இருக்கிறீர்களே!

EPRLF & TELO ஆகிய இரண்டையும் பிரித்து தனித்தனியாக வெளியேற்றியது சம் & கோ வின் நரித்தனம்.

இனியாச்சும் ஒன்று சேருகின்ற வழியை பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 க்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்த அனைவருமே ஒன்று சேர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் ரெலோ அமைப்பும் கூடிப்பேச்சு!
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் ரெலோ அமைப்பும் கூடிப்பேச்சு!
 
 

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் ரெலோ அமைப்பும் கூடிப்பேச்சு!

 

ரெலோ அமைப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக்கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரனை சந்தித்து கலந்துரையாடினர்.

இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ரெலோ அமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் ஜெனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சந்திப்பில் உதய சூரியன் சின்னத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டள்ளது.

இன்று மாலைக்குள் ரெலோ கட்சி தனது இறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் தமது கட்சி இனிவருங்காலங்களில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்படாது என்றும் ரெலோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/53236.html

Link to comment
Share on other sites

EPRLF,TELO சந்திப்பு – தமிழரசுக் கட்சியுடன் கோபம்? TNAயில் இருந்து வெளியேற்றம்?

01.jpgகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து தாம் பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ள பங்காளிக்கட்சியான ரெலோ அமைப்பினர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்ரொரு பங்காளிக்கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரனை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

ரெலோ அமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்,கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் ஜெனா,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம்,கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சந்திப்பில் உதய சூரியன் சின்னத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டள்ளது. இன்று மாலைக்குள் ரெலோ கட்சி தனது இறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் தமது கட்சி இனிவருங்காலங்களில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்படாது என்றும் ரெலோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02-1.jpg03-1.jpg

http://globaltamilnews.net/archives/53323

Link to comment
Share on other sites

கூட்டமைப்பிலிருந்து விலகிய கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சந்திப்பு

கூட்டமைப்பிலிருந்து விலகிய கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சந்திப்பு

 

 
 
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி பிரிந்து சென்ற டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளும் மற்றும் புதிய ஜனநாயக தமிழரசுக் கட்சி, முன்னால் போராளிகளின் ஒரு பகுதியினர், பத்மநாபா அணி ஆகியன தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயத்தில் சந்திப்பில் ஈடுபட்டுள்ளன.

ஈ.பி.ஆர்.எல்.எவ் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து டெலொவும் இணைவதற்கான பேச்சுக்களில் இறங்கியுள்ளது.

இந்த நிலையிலேயே தற்போது கூட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப்பங்கீடு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு தகவல் தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=98163

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் இவர்களையும், இவர்கள் கட்சிகளையும் ஒன்றுக்குமே சேர்க்ககூடாது என்று கொந்தளித்த அதே இனம்தான், இன்று இவர்கள் பிரிகிறார்களே என்று கவலைப்படவும் செய்கிறது! காலம்தான் எத்தனை மாற்றங்களை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மீது திணிக்கிறது!

Link to comment
Share on other sites

கொள்கைகளுக்காக உயிரைக் கொடுத்த பல்லாயிரக்கணக்கானவர் வாழ்ந்த மண்ணில் வெறும் ஆசன பங்கீட்டுக்காக பிரிந்து அடிபடுகின்றனர்.

தமிழரசுக் கட்சியும் அதன் தானை தலைவரும் இந்த விடயத்தில் கூட ஒற்றுமையை முக்கிய விடயமாக கருதாமல் தமக்கே அதிகம் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும் அதே காரணத்திற்கா பிற கட்சிகள் பிரிந்து போவதும் கேவலமான அரசியலையே காட்டுகின்றது.

தமிழக அரசியல் கட்சிகளை கேவலமாக விமர்சிக்கும் நாம் அதை விட பலமடங்கு கேவலமான அரசியல்வாதிகளை கொண்டு இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு பேராதரவு கொடுக்கும் நிலை விரைவில்வரும்

Link to comment
Share on other sites

ரெலோ கட்சியின் அரசியற்குழு கூட்டம்

 

உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதா? பிரிந்து தனியாக தேர்தலை எதிர்கொள்வதா? என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக ரெலோ அமைப்பின் அரசியல் குழு தற்போது கூடி ஆராய்ந்து வருகின்றது.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு மாலை 5 மணி தொடக்கம் நடைபெற்று வருகின்றது.

ரெலோ கட்சியின் அரசியற்குழு கூட்டம்

இந்த சந்திப்பில் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா மற்றும், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை  ரெலோ அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் வி டுதலை கூட்டணி மற்றும் புளொட் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.

ரெலோ கட்சியின் அரசியற்குழு கூட்டம்

ரெலோ கட்சியின் அரசியற்குழு கூட்டம்

ரெலோ கட்சியின் அரசியற்குழு கூட்டம்

https://news.ibctamil.com/ta/internal-affairs/TELO-s-political-committee-meeting-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நிழலி said:

தமிழ் மக்கள் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு பேராதரவு கொடுக்கும் நிலை விரைவில்வரும்

இதை செய்திருந்தால் இன்னும் மக்கள் வாழ்க்கையாவது சிறப்பாக இருந்திருக்கும் இவர்களை நம்பி  இருந்தால் இன்னும் பல் ஆண்டுகள் வெறுமையாகவே கழியும்  கழிந்து போகும் எல்லோரும் குற்றம் சாட்டுவது   கட்சியில் உள்ள மூன்று பேரையும்  தான் 

கிழக்கில் இவர்களை ஓரளவு ஒதுக்கியாச்சு எனலாம்  நிலமை கருதி 

Link to comment
Share on other sites

தமிழரசுடன் மீண்டும் ரெலோ இணைவு ?

 

telo-2-1024x576.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் அரசுக் கட்சியுடன் ஆசனப் பங்கீடு தொடர்பில் முரண்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக இன்று அதிகாலை அறிவித்த ரெலோ, ஏனைய அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்திவருவதாக அந்தக் கட்சியின் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் நாளை பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரெலோவின் அரசியல் குழு, யாழ்ப்பாணம் நகர் கொட்டடியில் இன்று மாலை கூடிய ஆராய்ந்தது.  அந்தச் சந்திப்பின் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று மாலை என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்.

தமிழ் தேசி கூட்டமைப்புக்கு நேற்றைய நாள் கடினமாக அமைந்துவிட்டதாகவும் முரண்பாடுகள் தொடர்பில் கூடிப் பேசுவோம் எனவும் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் எந்தநேரமும் பேச்சு நடத்த ரெலோ தயார் என்பதை அவரிடம் நான் கூறினேன்.

எனினும் எமது முடிவில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கின்றோம்.  ஈபிஆர்எல்எப் உள்ளிட்ட தரப்புகளுடன் நாம் இன்று பேச்சு நடத்தினோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமாருடனும் நாளை பேச்சு நடத்துகின்றோம்.

எமது நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். தமிழ் அரசுக் கட்சியும் பேச்சுக்கு அழைத்தால் செல்வோம்’ என்று சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.

telo-3-1024x576.jpgtelo-1024x576.jpg

http://globaltamilnews.net/archives/53431

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கொள்கைகளுக்காக உயிரைக் கொடுத்த பல்லாயிரக்கணக்கானவர் வாழ்ந்த மண்ணில் வெறும் ஆசன பங்கீட்டுக்காக பிரிந்து அடிபடுகின்றனர்.

தமிழரசுக் கட்சியும் அதன் தானை தலைவரும் இந்த விடயத்தில் கூட ஒற்றுமையை முக்கிய விடயமாக கருதாமல் தமக்கே அதிகம் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும் அதே காரணத்திற்கா பிற கட்சிகள் பிரிந்து போவதும் கேவலமான அரசியலையே காட்டுகின்றது.

தமிழக அரசியல் கட்சிகளை கேவலமாக விமர்சிக்கும் நாம் அதை விட பலமடங்கு கேவலமான அரசியல்வாதிகளை கொண்டு இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு பேராதரவு கொடுக்கும் நிலை விரைவில்வரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் புரட்சிவாதி இப்பவும் எதாவது புரட்சி செய்வினம் என மக்கள் எதிர் பார்க்கினம்

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதை செய்திருந்தால் இன்னும் மக்கள் வாழ்க்கையாவது சிறப்பாக இருந்திருக்கும் இவர்களை நம்பி  இருந்தால் இன்னும் பல் ஆண்டுகள் வெறுமையாகவே கழியும்  கழிந்து போகும் எல்லோரும் குற்றம் சாட்டுவது   கட்சியில் உள்ள மூன்று பேரையும்  தான் 

கிழக்கில் இவர்களை ஓரளவு ஒதுக்கியாச்சு எனலாம்  நிலமை கருதி 

ஆனால் இதனால் சிங்கள கட்சிகள் தமிழருக்கு பாலும் தேனும் கொடுப்பினம் என்று தாயக மக்கள் ஒரு பொழுதும் நம்ப மாற்றார்கள் .....அப்படி சிங்களவர்கள் கொடுக்கப்போவதுமில்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

{ஆரம்­பமே இப்­படி அமோ­க­மாக இருக்­கும்­போது தேர்­தல் நெருங்க நெருங்க இன­வா­தம் இன்­னும் உச்­சம் பெறும் என்று துணிந்து எதிர்­வு­கூ­ற­லாம். இலங்­கை­யின் வர­லாற்­றில் இயல்­பா­கவே சிங்­கள இன­வா­தம் மேற்­கி­ளம்­பும்­போ­தெல்­லாம் தற்­காப்பு உத்­தி­யாக தமிழ் இன­வா­த­மும் முஸ்­லிம் இன­ வா­த­மும் மேற்­கி­ளம்­பு­வ­தும் தவிர்க்க முடி­யா­மல் நடந்தே வந்­தி­ருக்­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யா­னது.}

உதுதான் சிறிலங்காவின் ஜதார்த்தம்.....இதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது ...தமிழர்கள் எல்லாம் பெளத்தர்களாகவும் சிங்களவ்ர்களாகவும் மாறினால் சில சமயம் நீங்கள்கூறியது நடக்கலாம்....

Link to comment
Share on other sites

கயவர்களின் கைகளில் சிக்கியுள்ள தமிழரசுக்கட்சி அழிய வேண்டிய கட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் சுரேஷ், சிறிகாந்தா, கஜேந்திரகுமார் போன்ற சுயநலவாதிகளால் ஒன்றிணைந்து இயங்கவும் முடியாது பெரிதாக ஒன்றும் சாதிக்கவும் முடியாது. இவர்கள் உடும்புக்கறி ஆனந்தசங்கரியின் பின்னால் அலைவது மிகக் கேவலம். இது ஒன்றே இவர்கள் சில்லறைகள் என்பதை தெளிவுபடுத்துகின்றது. 

Link to comment
Share on other sites

  • ரெலோ முடிவில் மாற்றம் இல்லை!
ரெலோ முடிவில் மாற்றம் இல்லை!
 
 

ரெலோ முடிவில் மாற்றம் இல்லை!

கட்­சித் தலை­மைக்­குழு எடுத்த முடி­வில் இது­வரை (நேற்று மாலை) எந்த மாற்­றமு ­மில்லை. தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் பேச்சு நடத்­த­வும் தயார் என்று ரெலோ அமை ப்புத் தெரி­வித்­தது.

உள்­ளூ­ராட்சி மன்ற ஆச­னப் பங்­கீட்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புப் பங்­கா­ளிக் கட்­சி­க­ளி­டையே குழப்ப நிலமை ஏற்­பட்­டுள்­ளது. இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து தேர்­தலை எதிர்­கொள்ள மாட்­டோம் என்று நேற்­று­ அதி காலை ரெலோ அறி­வித்தது.

நேற்­றுக்­காலை ரெலோ­வின் முக்­கிய தலை­வர்­கள் தமிழ்க் கூட்­ட­மைப்­பில் இருந்து ஏற்­க­னவே பிரிந்­துள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை நீர்­வே­லி­யி­லுள்ள அலு­வ­ல­கம் சென்று சந்­தித்­தது.

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யு­டன் இணைந்து போட்­டி­யி­டும் புதிய கூட்­டணி அறி­விப்பு, ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டம் என்­ப­வற்­றைச் சிறிது காலம் தாம­திக்க வேண்­டும் என்று கோரி­யது. அதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். இணங்­க­வில்லை. ரெலோ திட்­ட­வட்­ட­மான முடிவை எடுக்­க­வில்லை.

கூட்­ட­ணிக்­கான ஏற்­பா­டு­கள் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­மை­யால் அதைத் தாம­திக்க முடி­யாது என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். சுட்­டிக்­காட்­டி­யது.

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யு­ட­னும் ரெலோ கலந்­து­ரை­யா­டி­யது. கூட்­ட­ணி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­க­ரி­யு­டன் நடந்த சந்­திப்­பில் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் போக்­குத் தொடர்­பா­கப் பேசப்­பட்­டது.

 

நேற்று மாலை புளொட் அமைப்பை ரெலோ சந்­தித்­தது. தமது கட்­சி­யின் மையக் குழு­வைச் சந்­தித்­துப் பேசாது எந்த முடி­வை­யும் எடுக்க முடி­யாது. அவ­ச­ர­மாக முடி­வு­களை எடுக்க முடி­யாது என்று புளொட் அமைப்­பின் தலை­வர் சித்­தார்த்­தன் ரெலா­வி­டம் தெரி­வித்­தார்.

அனை­வ­ரு­ட­னான சந்­திப்­பு­க­ளின் பின்­னர் யாழ்ப்­பா­ணம் கொட்­ட­டி­யில் ரெலோ­வின் கூட்­டம் நடை­பெற்­றது.
கூட்­டத்­தின் பின்­னர் ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் ந.சிறி­காந்தா ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­தார்.

“ஏனைய கட்­சி­க­ளு­டன் ரெலோ வெறும் கருத்­துப் பரி­மாற்­றங்­களை நடத்­தி­யது. இந்த நிமி­டம் வரை தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தில்லை என்ற நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளோம். எதிர்­கா­லம் தொடர்­பாக ஆரூ­டம் கூற முடி­யாது.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் கேட்டு கொண்­ட­தற்­கி­ணங்க இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் பேச்சு நடத்­தத் தயா­ராக இருக்­கின்­றோம். சந்­திப்பு நடந்த பின்­னரே மிகுதி தெரி­ய­வ­ரும்.
அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸூ­டன் நாளை (இன்று) சந்­தித்­துப் பேச­வுள்­ளோம்.”- என்று அவர் கூறி­னார்.

http://newuthayan.com/story/53446.html

Link to comment
Share on other sites

கடும் அதி­ருப்­தியில் ரெலோ சுரேஷ், சங்கரியுடனும் பேச்சு

p21-a17a6688611c1d428b5af710d2989960b49005fc.jpg

 

ஆசனப்பங்கீடு குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண சுமந்திரனுடனான பேச்சில் இணக்கம்
(ஆர்.ராம்)

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான ஆசனப் பங்­கீடு குறித்த விட­யத்தில் கூட்­ட­மைப்பில் அங்­கம் ­வ­கிக்கும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் பங்­காளிக் கட்­சி­யான ரெலோ­வுக்கும் இடையில் பெரும் முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான

 தொகுதிப் பங்­கீடு குறித்து யாழ்ப்­பா­ணத்தில் உள்ள தமி­ழ­ரசுக் கட்­சியின் அலு­வ­ல­கத்தில் மூன்று தினங்கள் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது. ஆனாலும் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. 

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமக்கு குறிப்­பிட்ட சபைகள் வழங்­கப்­பட வேண்டும் என்று ரெலோ கோரிக்கை விடுத்­துள்­ளது. ஆனால் இவ்­வாறு ரெலோவின் கோரிக்­கைக்கு இணங்க சபை­களை வழங்­கு­வ­தற்கு தமி­ழ­ரசுக் கட்சி இணக்கம் தெரி­விக்­க­வில்லை. இதனால் ஆச­னப்­பங்­கீட்டு விட­யத்தில் பெரும் முரண்­பாடு ஏற்­பட்­டதை அடுத்து கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெ ளியே­று­வது என்று ரெலொ தீர்­மா­னித்­தி­ருந்­தது.

வவு­னி­யாவில் அமைந்­துள்ள அக்­கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்­று­முன்­தினம் இரவு ரெலொவின் அர­சியல் குழுக் கூட்டம் இடம்­பெற்­றது. இரவு 9 மணி முதல் நேற்று அதி­காலை 1.30 மணி­வரை நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் தொகுதிப் பங்­கீட்­டுக்கு தமி­ழ­ரசுக் கட்சி இணங்­கா­மை­யினால் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெ ளியே­று­வது என்று முடிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்த கூட்­டத்தின் முடிவு குறித்து ரெலொவின் அர­சியல் குழு உறுப்­பி­னரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வினோ­நோ­க­ரா­த­லிங்­கத்­திடம் கேட்­ட­போது, ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் தமி­ழ­ரசுக் கட்­சியின் செயற்­பாடு கூட்­ட­மைப்­புடன் இணைந்து நாம் செயற்­பட முடி­யாத நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது. அதனால் எதிர்­வரும் தேர்­தலில் தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தில்லை என முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்தார்.

இந்த நிலையில் ஆச­னப்­பங்­கீட்டில் ஏற்­பட்ட முரண்­பாட்டை அடுத்து ரெலோ அமைப்­பா­னது புதிய கூட்­ட­ணியில் இணை­வது குறித்தும் தமது நிபந்­த­னை­களை தமி­ழ­ர­சுக்­கட்­சியை ஏற்க வைப்­பது குறித்து இரு­முனை நகர்­வு­களை நேற்று முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுடன் ரெலொ தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­துடன் ஏனைய தரப்­பு­க­ளையும் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினார்.

ஈ.பி.ஆர்.எல்.எப்.- ரெலோ சந்­திப்பு

ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் க.பிரே­மச்­சந்­தி­ர­னுக்கும் தமிழ் ஈழ விடு­தலை இயக்கம் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான சந்­திப்பு நேற்று புதன்­கி­ழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்­பாணம் நீர்­வே­லியில் அமைந்­துள்ள ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் கட்சி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பில் ரெலோ அமைப்பின் சார்பில் வட­மா­காண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் மாகா­ண­சபை உறுப்­பினர் கேவிந்தன் கரு­ணா­கரம் , முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வினோ­நோ­க­ரா­த­லிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் பிர­சன்னா ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இச்­சந்­திப்­பின்­போது, தமி­ழர்­வி­டு­தலைக் கூட்­டணி, ஈ.பி.ஆர்.எல். ஜன­நா­யக தமி­ழ­ரசுக் கட்சி உள்­ளிட்ட தரப்­புக்கள் இணைந்­துள்ள உதய சுரியன் சின்­னத்­தி­லான புதிய கூட்டில் இணைந்து உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் போட்­டி­யி­டு­வது ஆரா­யப்­பட்­டது.

குறிப்­பாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஆச­னப்­பங்­கீடு குறித்த பேச்­சுக்கள் திருப்­தி­க­ர­மா­ன­தாக அமை­யாத நிலையில் தமது கட்­சியின் உயர் பீடம் குறித்த தின­மன்றே நள்­ளி­ரவு தாண்­டியும் பல்­வேறு ஆராய்­வு­களை நடத்­தி­யி­ருந்­தது. அதன் பிர­கா­ரமே தாம் ஈ.பி.ஆர்.எல்.எப்.உட்­பட மற்றும் சில கட்­சி­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு ஆராம்­பித்­துள்­ள­தாக ரெலோ தரப்பில் குறிப்­பி­டப்­பட்­டது.

அத்­துடன் உதய சூரியன் தலை­மை­யி­லான கூட்­ட­ணியை உத்­தி­யோக பூர்­வ­மாக அறி­விப்­ப­தற்­கான ஏற்­பா­டா­கி­யுள்ள இன்று(நேற்று) ஊட­வி­ய­லாளர் சந்­திப்பு, புரிந்­து­ணர்வு கைச்­சாத்­திடும் நிகழ்வு ஆகி­ய­வற்றை காலம் தாழ்த்­து­மாறும் ரெலோ தரப்பில் கோரப்­பட்­டது.

இச்­ச­ம­யத்தில் பதி­ல­ளித்த சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், உங்­க­ளு­டைய கட்சி இறுதி முடி­வொன்றை எடுக்­காத நிலையில் ஏற்­க­னவே திட்­ட­மிட்டு நடை­பெ­ற­ருக்­கின்ற எமது கூட்­டணி தொடர்­பான விட­யங்­களை எவ்­வாறு திடீ­ரென பிற்­போ­டு­வது.குறித்த நிகழ்­வுக்­காக வட­கி­ழக்­கி­லி­ருந்து பல­த­ரப்­பி­னரும் சமு­க­ம­ளிக்க ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்ள நிலையில் நாம் எவ்­வாறு இடை­நி­றுத்­து­வது. ஆகவே எமது நிகழ்­வா­னது திட்­ட­மிட்­ட­படி நடை­பெறும் அதனை பிற்­போ­டு­வதை எம்மால் செய்­ய­மு­டி­யாது.

இருப்­பினும் நீங்கள்(ரெலோ) தீர்க்­க­மான தீர்­மா­னத்­தினை அறி­வி­யுங்கள். அதன் பின்னர் வேண்­டு­மானால் நாம் பேச்­சுக்­களை நடத்தி புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தினை கைச்­சாத்­திட முடியும். உங்­களின் கோரிக்­கைக்­காக எமது புதிய கூட்­ட­ணியின் பெயரை மட்டும் அறி­விப்­பதில் காலம் தாழ்த்­து­வது தொடர்பில் ஆராய்­கின்றேன் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து ரெலோ தனது இறு­தி­யான நிலைப்­பாட்டை மாலை கூடும் தலை­மைக்­குழு கூட்­டத்­தினை அடுத்து அறி­விக்கும் என்றும் தமது கட்சி இனி­வ­ருங்­கா­லங்­களில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டாது என்றும் குறிப்­பிட்ட நிலையில் சந்­திப்பு நிறை­வுக்கு வந்­தி­ருந்­தது.

த.வி.கூ - ரெலோ சந்­திப்பு

இத­னை­ய­டுத்து தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் வீ.ஆனந்த சங்­க­ரிக்கும், ரெலோ­விற்கும் இடை­யி­லான சந்­திப்பு முற்­பகல் 10.30இக்கு தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் யாழ்.தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது.

ரெலோ வட­மா­காண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் மாகா­ண­சபை உறுப்­பினர் கேவிந்தன் கரு­ணா­கரம், கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் பிர­சன்னா இந்­தி­ர­குமார் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது ரெலோ தரப்­பினர் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது ஜன­நா­ய­க­மற்­ற­வ­கையில் செயற்­ப­டு­கின்­றது. ஆகவே நாம் அவர்­க­ளுடன் தொடர்ந்தும் பய­ணிக்க முடி­யா­த­வொரு சூழல் ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே நாம் தமி­ழர்­வி­டு­தலைக் கூட்­ட­ணி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வது தொடர்பில் சிந்­திக்­கின்றோம். எனினும் எமது தலை­மைக்­குழு கூட்­டத்தின் பின்னர் தீர்க்­க­மான முடி­வொன்றை எடுக்­க­வுள்ளோம் என்று குறிப்­பிட்­டுள்ளர்.

அதேச்­ச­ம­யத்தில் ஆனந்­த­சங்­கரி, நான் ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்து இழைக்­கப்­பட்டு வரும் அநீ­தி­களை தொடர்ச்­சி­யாக வௌிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கின்றேன். என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் நான் யாருக்கும் எதி­ராக அர­சியல் செய்­ய­வில்லை. வௌிப்­ப­டைத்­தன்­மை­யுடன் செயற்­ப­டு­வதே எனது நிலைப்­பா­டாகும். இப்­போது உரு­வாக்­கப்­பட்­டுள்ள கூட்­டணி வலுப்­பெற்று சிறந்த மக்கள் சேவையை முன்­னெ­டுக்க வேண்டும். அதுவே எனது எதிர்­பார்ப்­பாகும் என்று குறிப்­பிட்ட நிலையில் இச்­சந்­திப்பு நிறை­வுக்கு வந்­த­தது.

புளொட் - ரெலோ சந்­திப்பு

அத­னை­ய­டுத்து புளொட் தலைவர் சித்­தார்த்­த­னுக்கும் ரெலோ குழு­வி­ன­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு நடை­பெற்­றி­ருந்­தது. இச்­சந்­திப்­பிலும் மேற்­கு­றித்த குழு­வி­னரே பங்­கேற்­றி­ருந்த நிலையில் அக்­கு­ழு­வினர், தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செயற்­பா­டுகள் மோச­மா­ன­தாக இருப்­பதால் நாங்கள் அக்­கட்­சி­யுடன் தொடர்ந்தும் செயற்­பட முடி­யாது என்று தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம். அவ்­வா­றான நிலையில் நாங்கள் ஆனந்­த­சங்­கரி, சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் உள்­ளிட்­ட­வர்­களின் கூட்டில் பங்­கேற்­ப­தற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கின்றோம். அந்த அணியில் தாங்­களும் இணை­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­தனர்.

இச்­ச­ம­யத்தில் புளொட் தலைவர் சித்­தார்த்தன், நாங்கள் பிரிந்து செல்­வதால் இல்­லையா என்­பதை என்னால் ஒரே­வார்த்­தையில் கூறி­வி­ட­மு­டி­யாது. ஆசன ஒதுக்­கீட்­டினை மட்டும் மையப்­ப­டுத்தி அவ்­வா­றா­ன­தொரு முடி­வெ­டுப்­பது பொருத்­த­மா­னதா என்­பது எனக்­கி­ருக்கும் கேள்­வி­யா­க­வி­ருக்­கின்­றது. அதே­நேரம் எமது கட்­சியின் மத்­திய குழு இவ்­வி­டயம் தொடர்பில் ஒரு­த­டவை ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. அதன் பின்­னரே எமது இறுதி முடிவை அறி­விக்க முடியும் என்று குறிப்­பிட்ட நிலையில் அச்­சந்­திப்பும் நிறை­வுக்கு வந்­தது.

பிற்­போ­டப்­பட்ட சம்­பந்தன் - செல்வம் சந்­திப்பு

இதே­வேளை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும், ரெலோ தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதி தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­திப்பு இன்று(நேற்று) நடை­பெ­று­வ­தாக இருந்­த­போதும் ஏற்­க­னவே நிகழ்ச்சி நிர­லி­டப்­பட்­டதன் பிர­காரம் சம்­பந்தன் திரு­கோ­ண­ம­லைக்கு செல்ல வேண்­டி­யேற்­பட்­டதன் கார­ண­மாக குறித்த சந்­திப்பு எதிர்­வரும் 9ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் தொடர்பில் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­வ­தற்­கா­கவும் வேட்­பாளர் பட்­டி­யலை தயா­ரிப்­ப­தற்­கா­க­வுமே இரா.சம்­பந்தன் அங்கு சென்­றுள்­ள­தோடு மூன்று நாட்கள் அங்கு தங்­கி­யி­ருக்­க­வுள்ளார்.

சுமந்­திரன் - செல்வம் சந்­திப்பு

இதே­வேளை ஆசனப் பங்­கீடு தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடான நிலைமை குறித்து கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை நேற்று மாலை ரெலோவின் தலைவரும் பிரதி குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலாநாதன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது ஆசனப்பங்கீடு தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ள இடங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன மாற்றுவழியை எடுக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முன்மொழிவுகள் தொடர்பிலும் ரெலோவின் முன்மொழிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் சுமந்திரன் பேசுவது என்றும் ரெலோ உறுப்பினர்களுடன் செல்வம் அடைக்கலநாதன் கலந்துரையாடுவது என்றும் இதன்மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக்காண முயல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆசனப்பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பேசுவதற்கு ரெலொவின் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-07#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் இற்கு கூட்டமைப்பிற்குள் என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை தனது கட்சி ஆதரவாளர்கள் கலந்துரையாடல் & வேட்பாளர்கள் பட்டியல் தான் முக்கியமாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் தொடர்பில் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­வ­தற்­கா­கவும் வேட்­பாளர் பட்­டி­யலை தயா­ரிப்­ப­தற்­கா­க­வுமே இரா.சம்­பந்தன் அங்கு சென்­றுள்­ள­தோடு மூன்று நாட்கள் அங்கு தங்­கி­யி­ருக்­க­வுள்ளார்.

 

25 minutes ago, MEERA said:

சம் இற்கு கூட்டமைப்பிற்குள் என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை தனது கட்சி ஆதரவாளர்கள் கலந்துரையாடல் & வேட்பாளர்கள் பட்டியல் தான் முக்கியமாக இருக்கிறது. 

தமிழ் மக்களின் அபிலாசைகளை விற்று அரசியல் நடத்தும் சம்பந்தனுக்கு வாக்கு போடும் மோசமான திருகோணமலைத் தமிழர்களை சந்திப்பது தானே அவரது முதல் வேலையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Rajesh said:

 

தமிழ் மக்களின் அபிலாசைகளை விற்று அரசியல் நடத்தும் சம்பந்தனுக்கு வாக்கு போடும் மோசமான திருகோணமலைத் தமிழர்களை சந்திப்பது தானே அவரது முதல் வேலையாக இருக்கும்.

அப்படியாயின் சுமந்திரனுக்கு வாக்களிக்கும் யாழ்ப்பாண தமிழருக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்,?

திருகோணமலையின் நிலமை சற்று வித்தியாசமானது, தமிழரின் வாக்குகள் பிரிக்கப்பட்டால் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமலே போய்விடும், அங்கு ஒரு முஸ்லிமினதோ அல்லது சிங்களவரினதோ பிரதிநிதான் தேர்வு செய்யப்படும் நிலையே ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் எவ்வாறான விளைவுகள் வரும் என்பதை உங்களால் ஊகிக்க முடியும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

20 minutes ago, MEERA said:

அப்படியாயின் சுமந்திரனுக்கு வாக்களிக்கும் யாழ்ப்பாண தமிழருக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்,?

சுமந்திரனுக்கு, மாவைக்கோ, சரவணைபவனோ  யாழ் மக்கள் வாக்களிக்கவில்லை. அவர்கள் மூவரும் ஒரு மாபெரும் சதித்திட்டத்தின் ஊடாக கள்ளவோட்டின் (விருப்புவாக்கு மாறாட்டத்தின் மூலம்) தெரிவானவர்கள்.

மேலும் உதவாக்கரை என்று 50 வருடங்களாக அறியப்பட்ட சம்பந்தனை தொடர்ந்து தெரிவு செய்யும் விவேகமற்ற திருகோணமலைத் தமிழருடன் முதன்முறையாக களமிறங்கிய சுமந்திரனுக்கு வாக்களித்த அற்பசொற்ப யாழ் தமிழரை ஒப்பிடுவது மடமைத்தனம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.

21 minutes ago, MEERA said:

திருகோணமலையின் நிலமை சற்று வித்தியாசமானது, தமிழரின் வாக்குகள் பிரிக்கப்பட்டால் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமலே போய்விடும்

தமிழரின் உரிமைகள் அனைத்தையும் அடகுவைத்து  பிழைப்பு நடத்தும் சம்பந்தன் போன்ற உதவாக்கரைகளின் பிரதிநிதித்துவம் இருப்பதைவிட இல்லாதிருப்பது ஒட்டுமொத்த தமிழினத்துக்கு நன்மையானது என்பது வரலாற்று உண்மை.

திருகோணமலை மக்கள் இப்போதாவது நல்லதொரு மாற்று பிரதிநிதித்துவத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் தமது கறைகளை கழுவமுடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.