Jump to content

கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளின் 15 சடலங்கள் தோண்டியெடுப்பு


Recommended Posts

கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளின் 15 சடலங்கள் தோண்டியெடுப்பு

 

மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோலிக்க மத அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

mannar-rc.jpg

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பொது மயானத்தில் இறந்த மக்களினதும், கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோரின் சடலங்கள்அடக்கம் செய்யப்பட்டு வந்தன.

rc-mannar1.jpg

கடந்த சில வருடங்களுக்கு முன் மன்னார் பொது மயானத்திற்கு அருகில் உயிரிழந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக மயானம் அமைக்கப்பட்டுள்ளது.

rc-mannar2.jpg

குறித்த மயானத்தில் கடந்த சில வருடங்களாக உயிரிழந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

rc-mannar3.jpg

இந்த நிலையில் மன்னார் பொது மயானத்தில் கடந்த பல வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, பொது மயானத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் அடக்கம் செய்யும் மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மன்னார் ஆயர் இல்லம் மேற்கொண்டது.

rc-mannar4.jpg

குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக மன்னார் ஆயர் இல்லம் சட்டத்தரணி வில்பட் அர்யூன் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

rc-mannar5.jpg

குறித்த வழக்கை விசாரணைக்குட்படுத்திய மன்னார் நீதிவான், மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்கலாக 15 சடலங்களை தோண்டி எடுத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கினார்.

rc-mannar6.jpg

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த 15  சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டன.

rc-mannar7.jpg

இதன் போது பொலிஸார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், நீதிமன்ற பணியாளர்கள், மன்னார் நகர சபை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

rc-mannar8.jpg

இதன் போது குறித்த 15 சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டு அருகில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக அமைக்கப்பட்ட மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27860

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோண்டுங்க தோண்டுங்க, சாதியும் மதமும் தலைக்கேறினால் இதில்லை இன்னும் தோண்டலாம். விளங்கிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“மதம்” என்கின்ற மதம் பிடித்த மந்திக் கூட்டம்

Link to comment
Share on other sites

சமரசம் உலாவும் இடத்திற்கு வேட்டுவைத்தது அருட்தந்தையர்கள் அல்ல. அருவருப்பான தந்தையர்.  :(:shocked: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும்போதும் இறக்கும்போதும்தான் மனிதன் மனிதனாக இருக்கின்றான் ....... இதன் இடையே வரும் சாதி மதத்தை ஏன் தூக்கி கொண்டாடுகின்றான் இந்த மனிதன் .........? பிறந்த குழந்தைக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட்டால் அவன் கிறிஸ்தவன் சுண்ணத்து செய்தால் அதன் பின் அவன் இஸ்லாமியன் என்று ஆகும் நிலையில் இதுவெல்லாம் தேவையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

“மதம்” என்கின்ற மதம் பிடித்த மந்திக் கூட்டம்

மன்னாரில் திருக்கேதிஸ் வரம் கோயிலுக்கு ஒரு பேனர் கட்ட விடாத கூட்டம் இவர்கள் ஆனால் சொல்லி கொள்வது  ................................... ஊருக்கு உபதேசம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்திலை தோண்டியெடுத்த உடலுக்கு மீண்டும் உயிரையா கொடுப்பாங்க திரும்பவும் னொண்டுபோய் இன்னொரு இடத்திலை தோண்டி புதைக்கத்தானேபோறாங்க. அதுகளை அமைதியா புதைச்ச இடத்திலேயே விட்டிடணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

rc-mannar2.jpg

கிறிஸ்தவம் கொஞ்சம் நாகரீகமான மதம் என நினைத்தேன். புதைகுழியில் கூட தராதரம் பார்க்கின்றார்கள். :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

rc-mannar2.jpg

கிறிஸ்தவம் கொஞ்சம் நாகரீகமான மதம் என நினைத்தேன். புதைகுழியில் கூட தராதரம் பார்க்கின்றார்கள். :(

 

வெளியில் நாகரீகமாக நம்ம அய்யர் வாளுகள் போல் நடித்து கொண்டு உள்ளுக்குள் பல மிருகம்கள் தூங்கும் இடம் சிலுவை யுத்தம்கள் மனித குலம் மிருகமாக மாறிய நேரம்கள் .  

Link to comment
Share on other sites

மிக மிக மோசமான மத, சாதி வெறியர்களின் கைகளில் மன்னார் மாவட்ட கிறிஸ்தவம் சிக்கியுள்ளது மிகவும் கவலையான நிலைமை. இவர்களில் கூல் கும்பலினது, சுமந்திரன் கும்பலினது அடாவடித்தனங்களின் சாயல்கள் வெளிப்படுகிறது. 

Link to comment
Share on other sites

On 12/5/2017 at 10:48 AM, நவீனன் said:

இதன் போது குறித்த 15 சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டு அருகில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் அடக்கத்திற்காக அமைக்கப்பட்ட மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போதனையில் சொல்லும் "உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி" என்பதற்கு நடைமுறையில் இது தான் உண்மையான அர்த்தம் என்று இந்த கிறிஸ்தவ மதகுருமார்கள் கிறிஸ்தவ மக்களுக்கு தங்கள் செயல்கள் மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

கிறிஸ்தவ மதத்தின் கேவலமான மூடநம்பிக்கைகளில் இதுவும் ஓன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.