Jump to content

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று!


Recommended Posts

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று!

 
 

 மறைந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதா

 
 

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவுக்கு சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால், சில காலத்தில் 'ஜெயலலிதா' ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர். அவரது அம்மாவுக்கு 'அம்மு'. அ.தி.மு.க-வினர் அனைவருக்கும் 'அம்மா'!

சர்ச் பார்க் கான்வென்ட் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார். 'எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்' என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார். 

ஜெயலலிதா நடித்த படங்கள் 115. இதில், எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.  'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற 'அரசிளங்குமரி' படப் பாடல்தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துகளை நாட்டுடைமையாக்கினார்.

 

2016-ம் ஆண்டு, தமிழக முதல்வராகப் பதவியில் இருக்கும்போதே, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/109806-death-anniversary-of-jjayalalitha.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தலைமையில் மவுன பேரணி

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை- முதல்வர் ஆகியோர் மவுன ஊர்வலமாக வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

 
ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி: எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தலைமையில் மவுன பேரணி
 
சென்னை:

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் எம்.ஜி.ஆர்.- அண்ணா சமாதிகளுக்கு நடுவில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அ.தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

அண்ணா சிலையில் இருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைதிப் பேரணி வாலாஜாரோடு, விருந்தினர் மாளிகை வழியாக சென்று மெரினா கடற்கரையை அடைந்தது.
 
201712051102370476_1_silentrally._L_styvpf.jpg

அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அமைதி பேரணியில் பங்கேற்றனர்.
 
201712051102370476_2_tribute._L_styvpf.jpg

ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரப்பி வழிந்தது. அவரது சமாதியில் பெண்கள் சிலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு சட்டை அணிந்து நினைவு நாளில் பங்கேற்றனர்.

அண்ணாசாலை முதல் எழிலகம் வரையிலும் கடற்கரை சாலை பகுதி முழுவதும் அ.தி.மு.க.வினர் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் டி.டி.வி.தினகரன் அணியினரும் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/05110229/1132725/Jayalalithaa-memorial-day-CM-edappadi-and-ops-silent.vpf

Link to comment
Share on other sites

தடுமாறிய தினகரன்... விழுந்த கலைராஜன்... திணறிய தங்க தமிழ்ச்செல்வன்... ஜெ.சமாதியில் நடந்த தள்ளுமுள்ளு

 
 

சென்னை அண்ணாசாலையிலிருந்து ஜெயலலிதா சமாதிக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாகச் சென்றார். 

28fe11c6-6044-4b11-b454-7a34300ccb77_131

 
 


ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளான இன்று, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினரால் துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் அ.தி.மு.க-வினர் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏற்கெனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க-வினர் பேரணியாகச் சென்று அண்ணா சாலையிலிருந்த ஜெயலலிதா சமாதிக்கு மரியாதை செலுத்தினர்.

db0d3d1c-d87f-429e-9164-45f4ad216080_142

அவர்களைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அவரின் ஆதரவாளர்களுடன் அண்ணா சாலையிலிருந்து பேரணியாகச் சென்றார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் அனைவரையும், ஜெயலலிதா சமாதிக்கு அனுமதிக்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். அதனால், காவல்துறையினருடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

48c39efe-3c56-497b-97b7-9c9ce696e972_140

ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்துவதற்காகத் தினகரன், கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக மூன்று பேரும் தடுமாறினர். இதில் மலர்க்கொத்தை வாங்கிய கலைராஜன் கீழே விழுந்தார். தினகரன் நிலைதடுமாறி ஜெயலலிதா சமாதியில் ஏறிவிட்டார். தங்க தமிழ்ச்செல்வன் திணறிக்கொண்டே இருந்தார். ஜெயலலிதா சமாதியில் நடந்த இந்தத் தள்ளுமுள்ளு சம்பவம் அங்கு சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

fa686155-ca3c-4c10-91f7-f211668131ef_142

மேலும் டி.டி.வி.தினகரன் மலர் வைத்து அஞ்சலி செலுத்தும்போது, ஆதரவாளர்கள் நெருக்கியதால், டி.டி.வி.தினகரன் மற்றும் முன் வரிசையில் நின்றிருந்தவர்கள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. பின்னர், மிகுந்த சிரமப்பட்டு டி.டி.வி.தினகரன் கூட்டத்திலிருந்து வெளியே சென்றார். இரு அணியினரும் பேரணியாகச் சென்றதால் அண்ணா சாலையில் செல்ல வேண்டிய பேருந்து மற்றும் வாகனங்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டன. அதனால், சென்னை நகரம் முழுவதும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால், பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர். 

https://www.vikatan.com/news/tamilnadu/109840-ttvdinakaran-rally-to-jayalalithas-memorial.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா நினைவு தினம்: பெரும்திரளாக மக்கள் அஞ்சலி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதியில் அதிமுக தொண்டர்களாலும், பொது மக்களாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இது குறித்த புகைப்படத் தொகுப்பு.அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதிBBC

அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதிஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குழுமிய மக்கள் கூட்டம்

  • ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குழுமிய மக்கள் கூட்டம்

  • கற்பூரம் ஏற்றி அஞ்சலிஜெயலலிதா முதலாமாண்டு நினைவஞ்சலிBBC

  • ஜெயலலிதா முதலாமாண்டு நினைவஞ்சலிஅஞ்சலி செலுத்த காத்திருந்த மக்களில் ஒரு பகுதிBBC

  • அஞ்சலி செலுத்த காத்திருந்த மக்களில் ஒரு பகுதிஅஞ்சலி செலுத்தும் பெண்கள்BBC

  • அஞ்சலி செலுத்தும் பெண்கள்அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதிBBC

  • அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதிஜெயலலிதா நினைவு தினம்: பெரும்திரளாக மக்கள் அஞ்சலிBBC

  • அஞ்சலி செலுத்த வந்த ஒரு பெண்

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-42233358

Link to comment
Share on other sites

“ஜெயலலிதாவுக்கு இரண்டு மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நடந்தன” ஜெயலலிதா தோழிகளின் நினைவலைகள்!

 

ஜெயலலிதா

மிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆகிறது. நாம் அறிந்த அவரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையைத் தாண்டி, ஜெயலலிதாவின்  நடனத்திறமை, புத்தக வாசிப்பு, சுயமரியாதை என அவர் வாழ்க்கையின் அதிகம் வாசிக்கப்படாத பக்கங்களைப் புரட்டுகிறார்கள் அவருடைய நெருங்கிய தோழிகள்.

சச்சு, திரைப்பட நடிகை.

 

“சிங்கம்போல் வாழ்ந்தவரை அவதூறாகப் பேசுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது!" 

ஜெயலலிதாவுடன் சச்சு


ம்முவைப் பற்றிப் பேசுறதுக்கு எவ்வளவோ இருக்கு. அவங்க தன் வாழ்க்கையில சந்திக்கிற எல்லாரையும், அவ்வளவு சீக்கிரத்துல மறந்துடமாட்டாங்க. அவங்ககூட படத்துல நடிச்சவங்களா இருக்கட்டும், கூடப் பழகினவங்களா இருக்கட்டும், ஒரே ஒருமுறைதான் பார்த்திருப்பாங்க என்றாலும்கூட அவங்களை எப்போதும் மனசுல வெச்சிருப்பாங்க. எந்த அளவுக்குன்னா, டி.டி சுந்தரம்னு ஒரு மேக்-அப் மேன் இருந்தாரு. ரொம்ப நல்ல மனிதர். சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர் எல்லாருக்கும் மேக்-அப் மேனாக இருந்தவரு. கடைசியா என்கிட்டதான் வேலை பார்த்துட்டு இருந்தாரு. நானும் ஜெயா அம்மாவும் ஒண்ணா நடிச்சிட்டு இருந்தப்போ, அவங்க சுந்தரம் அண்ணாவை மேக்-அப் ரூம்ல பார்த்திருக்காங்க. அதுக்கப்புறம் அவங்க முதலமைச்சரா ஆனதுக்குப் பிறகு சுந்தரம் அண்ணா பென்ஷனுக்கு அப்ளை பண்ணியிருந்திருப்பாருபோல. அந்த பென்ஷன் தொகையை முதலமைச்சரே தன்னோட கையால கொடுக்க நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. அப்போ தலைமைச் செயலகத்துல சுந்தரம் அண்ணாவைப் பார்த்ததும், 'நீங்க சுந்தரம்தானே, எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா?'ன்னு கேட்டுருக்காங்க. ஜெயா அம்மா இப்படி எல்லார் முன்னேயும் சுந்தரம் அண்ணாவைக் கூப்பிட்டுப் பேசினதும் அவருக்கு சந்தோஷம் தாங்கலையாம். இதை அவர் என்கிட்ட வந்து சொன்னதும், ரொம்பப் பெருமையாயிருந்தது. அவங்களோட ஞாபகத்திறன், அபாரம். 

ஜெயா அம்மாவும்  நானும் சேர்ந்து நிறையப் படங்களில் நடிச்சிருக்கோம். அவங்க முதலமைச்சரா ஆகுறதுக்கு முன்புவரை நான் அவங்களை 'அம்மு'ன்னுதான் கூப்பிட்டுட்டு இருந்தேன். ஆனா, முதல்வரான பிறகு 'ஜெயா மேடம்'னு கூப்பிட்டேன். “சச்சு அம்மா, நீங்க ஏன் அப்படியெல்லாம் கூப்பிடுறீங்க?''ன்னு அவங்க கேட்டப்போ,  ''நம்மகூட பிறந்தவங்களாகவே இருந்தாலும் முதலமைச்சர் பதவிக்கான மரியாதையைக் கொடுக்கணும்மா''ன்னு சொன்னேன். அவங்க நெகிழ்ந்துட்டாங்க. 

2012 ல அவங்க வீட்டுல ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. நான், சோ உள்பட ஒன்பது பேர் அதுல கலந்துக்கிட்டோம். போயஸ் கார்டன்ல உள்ள  பழமையான ஒரு டைனிங் டேபிள்லதான் விருந்து நடந்துச்சு. சந்தியா அம்மா இருக்கும்போது அந்த டைனிங் ஹால் எப்படி இருந்துச்சோ அப்படியேதான் அந்த ஹால் இருந்துச்சு. அதை மட்டும் புதுப்பிக்கவே இல்ல. அம்மாவோட ஞாபகமா அதை அப்படியே வெச்சிருந்தாங்க. அம்மான்னா அவங்களுக்கு அவ்வளவு பிரியம். அந்த ஹால்ல நாங்க எல்லோரும் சந்திச்சிக்கிட்டபோது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. ஒவ்வொருத்தருக்கும் என்ன வேணும்னு பார்த்துப் பார்த்து அம்மு கவனிச்சிக்கிட்டாங்க. கூடப்பழகினவங்க மேல அம்மு வெச்சிருந்த பிரியத்தைப் பார்த்து நாங்க எல்லோரும் பூரிச்சிப்போயிட்டோம். 

வீட்டுக்குள்ளேயும் சரி, ஷுட்டிங் ஸ்பாட்லேயும் சரி, அவங்க யாரைப் பத்தியும் அநாவசியமா ஒரு வார்த்தை பேசமாட்டாங்க. எப்போதுமே அவங்க கையில ஒரு புக் இருக்கும். படிச்சிட்டே இருப்பாங்க. யாராவது அவங்களைக் கடந்து போகும்போது 'ஹாய், ஹலோ' மட்டும்தான் சொல்லுவாங்க. அப்படி வாழ்ந்த மனுஷியை இன்னைக்கு பலரும் அவதூறு பேசுறதைப் பார்க்குறப்ப மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. வாழும்போது சிங்கம்போல வாழ்ந்த ஒரு பெண்ணை இறந்த பிறகு அவதூறாக பேசுறதை சகிச்சுக்க முடியலை'' என ஆதங்கப்பட்டவரிடம், ஜெயலலிதா ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை என்ற கேள்வியை முன்வைத்தோம். 

“நான்கூடத்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏன், விளையாட்டுத்துறையில் இருக்கும் பல வீராங்கனைகள்கூடத்தான் திருமணம் செய்துகொள்வதில்லை. அதெல்லாம் அவங்கவங்க தனிப்பட்ட விஷயம். சொல்லப்போனா, குறிப்பிட்ட வயசுக்கு மேல சுயமா யோசிகக்கூடிய மெச்சூரிட்டி வந்துடும். அப்போ அவங்க யோசிச்சுப் பார்க்கும்போது அது சரின்னு தோணும். அவங்களுக்குத் துணை வேணும்னு நினைச்சதில்லை. அது அவங்களோட விருப்பம். அவங்க எப்பவோ எடுத்த முடிவை இப்போவரை விவாதத்துக்கு உட்படுத்துறது சரியில்லையே” என்கிறார் சச்சு.

சிவசங்கரி, எழுத்தாளர்

“தனக்கு சான்ஸ் வேணும்ங்கிறதுக்காகவெல்லாம், ஒருத்தரை தேடிப்போய் பார்க்கிறவங்க இல்ல அம்மு!"

ஜெயலலிதாவுடன் சிவசங்கரி


''ஜெயலலிதா என்னை, என் ஃபேமிலியில இருக்கிறவங்க கூப்பிடுற மாதிரி 'ஜிபு'னுதான் கூப்பிடுவாங்க. நான் அவங்களை 'அம்மு'ன்னு கூப்பிடுவேன். அம்முவை நான் மொத மொதல்ல சந்திச்சப்போ எனக்கு 13 வயசு, அவங்களுக்கு 9 வயசு. எங்க ரெண்டு பேருக்கும் நாலு வயசுதான் வித்தியாசம். நான் டான்ஸ் கத்துக்கிட்ட கே.ஜே. சரசா டீச்சர்கிட்ட அவங்களும் டான்ஸ் கத்துக்க வந்தப்போதான் எங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. என்னவோ தெரியல, முதல் நாள்லேருந்தே எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அப்போ என் பிறந்தநாளைக்கெல்லாம் அவங்க என் வீட்டுக்கு வருவாங்க. எனக்கு நல்லா நினைவுல இருக்கு, நாங்க ஃப்ரெண்ட்ஸாப் பழகின பிறகு வந்த என்னோட பிறந்தநாளைக்குக் கையில கிஃப்டோட பிங்க் பாவாடை, சட்டை போட்டுக்கிட்டு கார்ல வந்து இறங்கினாங்க. பெரிய ரோஜாப்பூ ஒண்ணு நடந்து வந்த மாதிரி இருந்துச்சு அவங்களைப் பார்த்தப்போ. 

எங்க டான்ஸ் மாஸ்டர் 'அந்த ராம செளந்தர்யம்'னு நாட்டியத்துல ஒரு பதம் ஒண்ணு சொல்லித் தருவாங்க. ஜெயலலிதா அதை ரொம்ப அழகா ஆடுவாங்க. அந்த நளினத்தை வார்த்தைகளால விளக்க முடியாது. 

அவங்க சினிமாவுல நடிக்கப் போனதுக்கப்புறம், எனக்குக் கல்யாணம் ஆகி போபால் போயிட்டேன். அதனால், கொஞ்ச காலம் நாங்க சந்திக்கவே இல்லை. நான் திருப்பி 1966-ல சென்னைக்குத் திரும்பி வந்ததுக்கு அப்புறம் மறுபடியும் எங்க நட்பு தொடர்ந்துச்சு. அப்ப நான் ஜெமினி ஸ்டுடியோவுக்குப் பின்னால இருக்கிற கதீட்ரல் கார்டன்ல இருந்தேன். ஷூட்டிங்ல ஒரு கேப் கிடைச்சா உடனே என் வீட்டுக்கு வந்துடுவாங்க. அவங்க, சமையல்கட்டு மேடையில உட்கார்ந்திருக்க, நான் சுடச்சுட தோசை வார்த்துத் தருவேன். 'உடம்பு சூடு பிடிச்சுக்கிச்சு'னு சொன்னாங்கன்னா அவங்க தலையில எண்ணெய் தேய்ச்சிவிட்டிருக்கேன். அந்தக் காலக்கட்டத்துல நாங்க அக்கா, தங்கை மாதிரிதான் இருந்தோம்.

அவங்களும் நானும் பல இடங்களுக்குப் போயிருக்கிறோம். ஒரு தடவை, கோல்டன் பீச்சுக்குப் போயிருந்தோம். அப்போ, அங்க ஒரு ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தது. அதுல இருந்து ஒருத்தர் அம்முகிட்ட வந்து, ஒரு  டைரக்டரோட பேரைச் சொல்லி, 'அவரு  வந்திருக்காரும்மா' என்றார். இப்படி ரெண்டு தடவை வந்து சொல்லிப்பார்த்தார். அவரு ரொம்ப பெரிய டைரக்டர். ஆனா, அம்மு போகலையே. தனக்கு சான்ஸ் வேணும்ங்கிறதுக்காகவெல்லாம், ஒருத்தரைத் தேடிப் போய் பார்க்கிறவங்க இல்ல அம்மு. கொஞ்ச நேரத்துல அந்த டைரக்டரே நேர்ல வந்தது தனிக்கதை. அந்தளவுக்கு சுயமரியாதை உள்ளவங்க அவங்க. தமிழ்ல 'செம்மொழி'னு சொல்றோம் இல்லையா? அந்த மாதிரி அவங்க ஆங்கிலத்துல படிப்பாங்க.  அவங்க ரசனை எப்பவுமே உயர்வாதான் இருக்கும்'' என்கிற சிவசங்கரியின் வார்த்தைகளில் ஜெயலலிதா மீதான அபரிதமான மரியாதை தெரிகிறது.  

இந்துமதி, எழுத்தாளர்.

“ஜெயலலிதாவுக்காக தேவலோகப் பதவிகள் எல்லாம் காத்திருந்ததாம்!”

 

ஜெயாவை எனக்கு 1978 ஆம் வருஷத்திலேருந்தே இருந்தே தெரியும். நாங்கள் இருவரும் எம்.ஜி.ஆரின் அறிவுரையின் பேரில் பத்திரிகை ஒன்றைஇந்துமதி நடத்துவதாக இருந்தது. ஆக, 80 -களின் தொடக்கத்தில் பத்திரிகை ஆரம்பிப்பதற்கான அனைத்துக்கட்ட வேலைகளும் நடந்துகொண்டிருந்தபோது 'காவிரி தந்த கலைச்செல்வி' நாடகத்தை நடத்துவதில் மும்மரமாக இருந்த ஜெயா, அதை அரங்கேற்றிவிட்டு அப்படியே அரசியல் பக்கம் திரும்பிவிட்டார். ஆனாலும், எங்கள் நட்பு எப்போதும்போல தொடர்ந்தது. என்னுடைய வீடு உட்லான்ஸ் ஹோட்டல் பக்கத்தில்தான் இருந்தது. நான் தினமும் காலையும் மாலையும் போயஸ் கார்டன் சென்று அவரைச் சந்திப்பேன். இப்போது மீடியாவில், 'ஜெயலலிதாவுக்குக் குழந்தை பிறந்தது' என்ற செய்திகளைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது  அபத்தமானது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை இரும்பு மனுஷி என்றவர்கள் அப்போதே இதைப்பற்றி தைரியமாக முன்வந்து சொல்லியிருக்க வேண்டும். 

ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே குழந்தை இருந்திருந்தால் அந்தக் குழந்தையை ஏன் அவர் பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும்? ஒரு குழந்தை தன் தாயோடுதான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர். தாயின் அன்பிற்காக ஏங்கியவர். குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பியவர். இப்போது மீடியாவில் வரும் செய்திபோல உண்மையாகவே அவருக்குக் குழந்தை இருந்திருந்தால் நிச்சயமாக அந்தக் குழந்தையை அவர் தன்னோடுதான் வைத்து வளர்த்தெடுத்திருப்பார். எனக்குத் தெரிந்த வரையில், அவருக்குக் குழந்தை இருப்பதாகச் சொல்லப்படும் செய்திகள் அனைத்துமே அபத்தமானவை.

நான் அவரை எப்போதும் வீரமான, கம்பீரமான பெண்ணாகவே பார்த்திருக்கிறேன். தன் முன் இருந்த அனைத்துச் சவால்களையும் மன தைரியத்தால் எதிர்கொண்டவர். குடும்ப அமைப்பில் வாழ வேண்டும் என்றுதான் அவர் பல முறை விரும்பியிருக்கிறார். அவருக்கு இரண்டு, மூன்று முறை திருமண ஏற்பாடுகள்கூட நடந்தன. ஆனால், கடைசி நேரத்தில் அவை தடைபட்டுவிட்டன. கடைசி ஒரு மணி நேரத்தில்கூட அவர் திருமணம் நின்றிருக்கிறது. அப்போதெல்லாம் அவர் தவிப்பார். கண்ணீர்விட்டு அழுது துடிப்பார். அதுதான் அவருக்கு ஆண்கள் மீதான ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியது. அதுதான் ஆக்ரோஷமாக வெடித்தது. அதற்காக அவர் தன்னைத் தானே சிறைப்படுத்திக்கொண்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல நண்பர்களாலும் உறவினர்களாலும்கூட அவரை நெருங்க விடாமல் அவரைச் சிறைப்பிடித்தது எது என்றுதான் தெரியவில்லை. 

ஜெயலலிதா முதல்வரானதும் நான் அவரைத் தொலைபேசியில் அழைத்து, 'ஜெயலலிதாவின் ஆட்சி பொற்காலம்னு மக்கள் சொல்லணும்' என்றேன். அவருக்கும் அப்படி ஒரு சாதனை ஆட்சி நடத்த வேண்டும் என்று ஆசை இருந்தது. மிகவும் மென்மையான அவருக்கும், எனக்கும் ஜோசியத்தின் மீது நம்பிக்கை இருந்தது. அவர் ஜாதத்தை என்னிடம் கொடுத்து பார்த்துட்டு வரச் சொல்வார். நானும் பலமுறை அப்படிப் பார்த்து வந்திருக்கிறேன்.

ஒருமுறை மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரைப் போய் பார்த்தேன். அவர் ஒரு வேப்பிலையைக் கிள்ளிப்போட்டு அதைச் சுருட்டாக மாற்றிக் கொடுத்தார். 'எனக்கு எதற்காக சுருட்டு கொடுக்க வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'சுருட்டைப் பிடித்தவன் கடைசிவரை கீழே விடமாட்டான். அதேபோலதான் நீயும் என்னை விடக்கூடாது' என்றார். இதை என் வீட்டின் டிராயிங் ஹாலில் வைத்து, தொலைப்பேசியில் ஜெயாவிடம்  சொன்னபோது, 'அடுத்த முறை வேப்பிலையை பூசணிக்காயாய் மாற்றச் சொல்லேன் பார்ப்போம்' என்றார் நகைச்சுவையாக. அடுத்த முறை பங்காரு அடிகளார், வேப்பிலையைக் கிள்ளிப்போட்டு தாமரைப் பூவாக மாற்றிவிட்டு, ஜெயா என்னிடம் சொன்னதை அவர் அப்படியே சொன்னதும் எனக்கு ஆச்சர்யமாகிவிட்டது. அதோடு, 'ஜெயாவுக்கே தேவலோக தெய்வீகப் பதவிகள் எல்லாம் காத்துக்கொண்டிருக்கிறது' என்றும் சொன்னார். அதுமட்டுமல்ல, அவருக்கு நாட்டின் பிரதமராகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் ஜோதிடம் சொன்னது. எனக்கும் அவர் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்குள் எல்லாம் கடந்துவிட்டது” என்கிறார் இந்துமதி. 

https://www.vikatan.com/news/coverstory/109842-there-have-been-few-times-where-jayas-marriage-planned-jayas-friends-recalls-their-moments-with-her.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.