Jump to content

”மீனவரின் பெயர்தான் மெட்ராஸ் என்று ஆனதா?” - சென்னை பிறந்த கதை


Recommended Posts

”மீனவரின் பெயர்தான் மெட்ராஸ் என்று ஆனதா?” - சென்னை பிறந்த கதை - பகுதி 1

சென்னை பிறந்த கதை

Chennai: 

சென்னை மாநகரின் பழைய பெயர் மெட்ராஸ். மதராஸ், மதராசபட்டினம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதரேஸ்படான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ் என்றும் இந்த நகரம் பலவாறாக அழைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் என இங்கு வந்து வாழ்ந்துவிட்டுப் போன பல இனத்தவரும் அவரவர் நாக்கு வசதிக்கேற்ப இந்த நகரத்தின் பெயரை வளைத்து வளைத்து அழைத்திருக்கிறார்கள்.

 

ஆனால் இறுதியில் மக்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்ட ’மெட்ராஸ்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜென்ட் விஜயநகர அரசின் பிரதிநிதியான சந்திரகிரி மன்னரிடமிருந்து வங்கக்கடலோரம் இருந்த பொட்டல் மணல்வெளியைக் குறைந்த விலைக்கு வாங்கினார். அங்கிருந்துதான் இந்த மாநகரத்தின் கதை தொடங்கியது. அங்கிருந்துதான் மெட்ராஸ் என்ற பெயரும் தொடங்கியது என்கிறார்கள். சந்திரகிரி மன்னர் எழுதித் தந்த சாசனத்திலேயே மதராசபட்டினம் என்ற பெயர் இடம்பெற்றிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஓர் ஆதாரம் மைலாப்பூரில் கிடைத்தது.

1927ஆம் ஆண்டு ஜூலை மாதம், மைலாப்பூரில் செயின்ட் லாசரஸ் தேவாலயம் கட்டுவதற்காக பழைய தேவாலயம் இருந்த இடத்தில் கட்டுமானப்பணி தொடங்கியது. அப்போது மண்ணுக்கு அடியிலிருந்து போர்த்துக்கீசிய எழுத்துகள் பொறித்த ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

மெட்ராஸ்

“இது மேனுவல் மாத்ரா மற்றும் அவரின் தாயாரின் கல்லறை,

வின்சென்ட் மாத்ரா மற்றும் லூசி பிரேக் ஆகியோரின் மகன். அவர்கள் இந்த தேவாலயத்தை தங்களின் சொந்தச் செலவில் 1637இல் கட்டினர்”

இதில் மாத்ரா என்று குறிப்பிடப்பட்டிருப்பது அப்போது இந்தப் பகுதியில் வசித்த ஒரு வசதியான போர்த்துக்கீசிய குடும்பத்தின் பெயர். இந்தப் பகுதியின் பல இடங்கள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்ததால், இந்தப் பகுதியே அவர்களின் பெயரில் மெட்ராஸ் என அழைக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது.

1820இல் பண்டல ராமசாமி நாயுடு என்பவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் வருவாய் முறைகள் குறித்து எழுதிய ஆவணம் ஒன்றில் மெட்ராஸ் என்ற பெயருக்கு வேறொரு புதுக் காரணத்தைக் குறிப்பிடுகிறார். ராமசாமி நாயுடுவின் மூதாதையர்களில் ஒருவரான பேரி திம்மப்பாதான் பிரான்சிஸ் டே இந்த நிலத்தை உள்ளூர் அரசரிடமிருந்து பெறுவதற்கு உதவியாக இருந்தவர். அப்போது இந்த இடத்தில் மீனவக் குப்பம் ஒன்று இருந்தது. அந்தக் குப்பத்தின் தலைவர் கிறிஸ்துவ மதத்தை தழுவியவர். அவர் பெயர் மாதரேசன். அவர் தனது வாழைத்தோட்டம் இருந்த இடத்தை தர மறுத்து தகராறு செய்தார். அவரிடம் சமாதானம் பேசிய பேரி திம்மப்பா, இந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் கோட்டை கட்டப் போகிறார்கள், பின்னர் அந்த நகரத்திற்கு மாதரேசன்பட்டினம் என உங்கள் பெயரையே வைத்துவிடுகிறோம் என்று சொல்லி இடப் பிரச்னையைச் சுமுகமாக முடித்ததாக பண்டல ராமசாமி நாயுடு குறிப்பிடுகிறார்.

மாதரேசன் கிறிஸ்தவ மீனவர் என்பதை விட, போர்த்துக்கீசிய குடும்பமான மாத்ராவின் மேல் கொண்ட நன்றிக் கடன் காரணமாக தனது பெயரை மாதரேசன் என்று வைத்துக் கொண்டார் என்பதே சரி என வாதாடுகிறார்கள் சில ஆய்வாளர்கள். கோபால் என்பதை கோபாலன் என்று தமிழ்ப்படுத்துவது போல மாத்ரா என்பதை தமிழ்ப்படுத்தி மாதரேசன் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆங்கிலேய கவர்னரான தாமஸ் மன்றோவின் மீது கொண்ட அன்பினால் நிறைய பேர் தங்களின் குழந்தைகளுக்கு மன்றோலப்பா என்று பெயர் வைத்த வரலாறு எல்லாம் உண்டு. ஆக எப்படிப் பார்த்தாலும், மாத்ரா குடும்பமே மெட்ராஸ் என்ற பெயருக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

சென்னை

மெட்ராஸ் என்பதன் மற்றொரு பெயரான சென்னைப்பட்டினத்திற்கும் இப்படிப் பல பெயர்க் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆன்மிகத்தில் அதிக நாட்டம்கொண்ட பேரி திம்மப்பா இந்தப் பகுதியில் இரண்டு கோவில்கள் கட்ட வழிவகுத்தார். சென்ன கேவசப் பெருமாள் என விஷ்ணுவுக்கும், சென்ன மல்லீஸ்வரர் என சிவனுக்கும் கோவில்கள் கட்டினார். அப்படித்தான் சென்னை கேசவரும், சென்ன மல்லீஸ்வரரும் இருக்கும் பட்டினம் சென்னப்பட்டினம் என்று வழங்கப்பட ஆரம்பித்ததாக ஒரு கருத்து நிலவுகிறது.

சென்னை

சென்னையின் பழைய கோவில்களில் முக்கியமானது காளிகாம்பாள் கோவில். முதலில் கோட்டைக்குள் இருந்த அம்மன் பின்னர்தான் தற்போது இருக்கும் தம்புசெட்டித் தெருவுக்கு இடம்மாறினாள். இந்த அம்மனுக்கு பக்தர்கள் செந்தூரம் பூசி வழிபட்டதால், சென்னம்மன் என்று அழைக்கப்பட்டாள். சென்னம்மன் இருக்கும் இடம் சென்னை என்று மாறியதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். செம் அன்னை என்பதுதான் சென்னை ஆனது என்பது அவர்கள் வாதம்.

நீண்டகாலமாக மெட்ராஸ், சென்னை என இந்த நகரத்திற்கு இருபெயர்களும் தொடர்ந்து புழக்கத்தில் இருந்துவந்தன. பின்னர் 1996இல் தமிழக அரசு இந்த மாநகரின் பெயரை சென்னை என அதிகாரபூர்வமாக அறிவித்தது. இருப்பினும் இன்னும் அந்தப் பழைய மெட்ராஸ் பலருக்கும் நினைவுகளில் நிழலாடிக்கொண்டேதான் இருக்கிறது

https://www.vikatan.com/news/coverstory/109765-the-story-of-chennai-series-1.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மெரினாவில் ஓர் அரண்மனை... மெட்ராஸின் ‘கடன்கார’ மகாராஜா! - சென்னை பிறந்த கதை - பகுதி 2

 
 

சென்னையில்க் இருந்த சேப்பாக்கம் அரண்மனை

 

 

மிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் பற்றி கதைகதையாகப் படித்திருக்கிறோம். கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் போன்றோரின் அரண்மனைகள் இன்றும் மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் காட்சிப்பொருளாக இருக்கின்றன. இதேபோல மெட்ராசில் ஒரு மகாராஜா வாழ்ந்தார், அவரின் அரண்மனை இன்றும் சென்னையில் இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

சென்னையில் அரண்மனையா? என ஆச்சர்யப்படுபவர்கள், அடுத்த முறை மெரினாவுக்குச் செல்லும்போது காமராஜர் சாலை சந்திப்பில் சற்றே உள்ளடங்கி இருக்கும் பழைய சிவப்பு கட்டடத்தை கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். அதுதான் சேப்பாக்கம் அரண்மனை. ஆற்காடு நவாப்பின் அதிகாரபூர்வ இல்லமாக இருந்த இந்த கட்டடத்தின் பின் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வட ஆற்காடு, தென்னாற்காடு, திருச்சி, திருநெல்வேலி, நெல்லூர் ஆகிய பகுதிகளை கர்நாடக நவாப் ஆட்சி செய்து வந்தார். இவரது தலைநகரம் ஆற்காட்டில் இருந்ததால் இவரை ஆற்காடு நவாப் என அழைத்தனர். உலகின் பல சாம்ராஜ்ஜியங்களில் நடந்ததுபோலவே ஆற்காடு நவாப்பின் அரியாசனத்துக்காகவும் அண்ணன் தம்பிக்குள் வெட்டுக் குத்து நடந்தது. 1749-ல் வெடித்த சகோதர யுத்தத்தில் ஒரு தரப்பை பிரெஞ்சுக்காரர்களும், மற்றொரு தரப்பை ஆங்கிலேயர்களும் ஆதரித்தனர். இதில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயர்கள் ஆட்டத்தில் ஜெயித்துவிட்டதால், அவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற வாலாஜா நவாபான முகமது அலி ஆற்காடு அரியணையில் ஏறினார். சென்னையில் தற்போது உள்ள வாலாஜா சாலைக்கு அன்னார்தான் காரணம்.

அரண்மையின் பழைய புகைப்படம்

வெள்ளைக்காரன் ஆதரவுடன் அரியாசனத்தைப் பிடித்துவிட்டாலும், நவாப்பின் கால்கள் லேசாக நடுங்கத்தான் செய்தன. தோற்றுப்போன இன்னொரு நவாப் எப்போது வேண்டுமானாலும் மீண்டு(ம்) வந்து நம்மை கபாப் போட்டுவிடக் கூடாது என ஆற்காடு நவாப் அலார்ட்டாக இருந்தார். இன்றைக்கு உயிருக்கு ஆபத்துள்ள அரசியல்வாதிகள் கமாண்டோ பாதுகாப்பு கேட்பதுபோல ஆங்கிலேயர்களிடம் பாதுகாப்பு கேட்டார். பக்கத்துல வந்துடுங்க நாங்க பாத்துக்குறோம் என்று ஜார்ஜ் கோட்டை தகவல் சொன்னதால், ஆற்காட்டை காலி செய்துவிட்டு மெட்ராசில் குடியேறத் திட்டமிட்டார்.

ஆங்கிலேயர்கள் வசிக்கும் ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே நவாபுக்காக அரண்மனை கட்டுவது என முடிவானது. அப்போதைய கவர்னர் பால்க் இதற்காக கோட்டைக்குள் நிலம்கூட ஒதுக்கிவிட்டார். ஆனால், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சிலர் கூடி நின்று கும்மி அடித்ததில், அந்த திட்டம் ஆரம்பத்திலேயே ஆட்டம்கண்டுவிட்டது. அப்படித்தான் பீச் பக்கம் கரை ஒதுங்கினார் கர்நாடக நவாப். நவாப் அரண்மனைக்காக சேப்பாக்கத்தில் 117 ஏக்கர் நிலம் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டது.

அரண்மனை கட்டும் பணி பால் பென்ஃபீல்ட் (Paul Benfield) என்ற கிழக்கிந்தியப் பொறியாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அவர் 1768-ல் கட்டி முடித்ததுதான் பிரமாண்டமான சேப்பாக்கம் அரண்மனை. பால் பென்ஃபீல்ட் மிகச்சிறந்த பொறியாளர் என்பதால், அவரை தனக்கு கட்டடம் கட்டும் பணிக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி நவாப், 1766-ல் கவர்னருக்கு ஒரு கடிதம்கூட எழுதினார். அந்தளவுக்கு நவாப்பின் நன்மதிப்பைப் பெற்ற பென்ஃபீல்ட் அந்த பெயரைக் காப்பாற்றும் வகையில் ஒரு அருமையான கட்டடத்தை கட்டித் தந்தார். இதுதான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் இந்தோ-சராசனிக் பாணி கட்டடம். இதில் இரண்டு பிளாக்குகள் இருந்தன. தெற்கில் இருந்த இரண்டு மாடிக் கட்டடம் கலஸ் மஹால் என்றும், வடக்கில் இருந்த ஒற்றை மாடிக் கட்டடம் ஹூமாயுன் மஹால் என்றும் அழைக்கப்பட்டது.

மெட்ராஸ் அரண்மனை

ஆடம்பரப் பிரியரான நவாப் முகம்மது அலி, அந்தக் கால விஜய் மல்லையா மாதிரி கடன் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். இதனிடையே 1795-ல் நவாப் முகம்மது அலி இறந்துவிட, அவரது மகன் உம்தத்-உல்-உம்ராவின் தலையில் கடன் சுமை இறங்கியது. இதுபோதாதென்று 1799-ல் சீரங்கப்பட்டினம் போரில் மைசூர் சுல்தானுடன் சேர்ந்துகொண்டு உம்தத்-உல்-உம்ரா சதி செய்த செய்தி வெளியானதும் கடுப்பாகிப் போன கிழக்கிந்திய கம்பெனி நவாப்பிடம் இருந்து கர்நாடக ஆட்சி அதிகாரத்தைப் பறித்துக்கொண்டது. நாடாற்ற நவாப்பாகிப் போன கவலையிலேயே அவர் தனது 53-வது வயதில் காலமாகிப் போனார். அதன்பின் சில பல அரசியல் திருப்பங்களை அடுத்து, 50 ஆண்டுகள் கழித்து 1855-ல் பிரிட்டிஷ் அரசு சேப்பாக்கம் அரண்மனையை ஏலம் விட்டது. ஆனால், இதை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு யாரிடமும் பணம் இல்லை. எனவே, அரசே இதை கையகப்படுத்தி, அரசு அலுவலகமாக மாற்றிவிட்டது. அன்றில் இருந்து இன்று வரை சேப்பாக்கம் அரண்மனை அரசு அலுவலகமாகத்தான் இருக்கிறது. இதனிடையே நாடு இல்லாத நவாப்புகளான வாரிசுகள் சேப்பாக்கம் மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டதுதான் தற்போது ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால்.

இதனிடையே 1860-ல், பிரபல கட்டடக் கலைஞரான ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Fellowes Chisholm) ஹூமாயுன் மற்றும் கலஸ் மஹால்களுக்கு இடையில் ஒரு கோபுரத்தை நிர்மாணித்தார். கர்நாடகப் பகுதி முழுவதையும் பிரிட்டீஷார் கைப்பற்றியதன் நினைவாக இது எழுப்பப்பட்டது. பின்னர் சிஸ்ஹோம், அரண்மனைக்கு முன்புறம், ஸ்காடிஷ் பாணியிலான பொதுப்பணித் துறை கட்டடம், வாலாஜா சாலையைப் பார்த்தபடி, இந்தோ-சராசனிக் பாணியிலான ஆவணக் காப்பகம் மற்றும் வருவாய்த்துறை கட்டடங்களைக் கட்டினார். இதனால் சேப்பாக்கம் அரண்மனை இந்த கட்டடங்களுக்குள் மறைய ஆரம்பித்தது. பின்னர் 1950களில் இப்போதைய எழிலகம் கட்டப்பட்டதும் கொஞ்ச நஞ்சம் தெரிந்த அரண்மனையும் முற்றிலுமாக மறைந்துவிட்டது.

அரண்மையின் புகைப்படம்

 

ஒருகாலத்தில் இன்றைய திருவல்லிக்கேணி காவல்நிலையம்கூட சேப்பாக்கம் அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறுகிறார்கள். குதிரைக்காரர்களுக்கும், விருந்தினர்களின் உதவியாளர்களுக்கும் உணவு பரிமாறும் இடமாக அது இருந்ததாம். அந்தளவுக்கு பரந்துவிரிந்து இருந்திருக்கிறது நவாப்பின் ஆடம்பர சேப்பாக்கம் அரண்மனை. இப்போதுமட்டும் நவாப் உயிருடன் இருந்திருந்தால் உல்லாசமாக பீச்சில் உலா வந்துவிட்டு, அருகில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சுற்றமும், நட்பும் சூழ ஜாலியாக கிரிக்கெட் பார்த்திருப்பார்.

https://www.vikatan.com/news/tamilnadu/110653-the-history-of-chennai-series-part-2.html

Link to comment
Share on other sites

ஆளுநருக்கு வீடு தேடிய கதை தெரியுமா?...- சென்னை பிறந்த கதை - பகுதி 3

 
 

ப்போதெல்லாம் காலை பேப்பரைத் திறந்தால் நிச்சயம் ஆளுநர் மாளிகையைப் பற்றி ஒரு செய்தியாவது கண்ணில்பட்டுவிடுகிறது. இந்தளவுக்குப் பரபரப்பாக இருக்கும் ஆளுநர் மாளிகையை யார் கட்டியது? யாருக்காக கட்டினார்கள்? எப்போது கட்டினார்கள்? இந்த கேள்விகளுக்கு விடை தேடிப் போனால் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் எதிரில் வந்து நிற்கின்றன.

ஆளுநர் மாளிகை

 

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னையில் கோட்டை கட்டி குடியேறிய ஆரம்ப நாள்களில், ஆளுநர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை அனைவரும் கோட்டைக்குள்தான் தங்கியிருந்தார்கள். அனைவரும் கோட்டைக்குள் இருந்த மெஸ்ஸில்தான் உணவு உண்பார்கள். காலப்போக்கில் கம்பெனி ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. மூத்த ஊழியர்கள் இங்கிலாந்தில் இருந்த தங்கள் குடும்பங்களை சென்னைக்கு இடம்மாற்றினர். இளம் ஊழியர்கள் பலருக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. எனவே மூத்த அந்தஸ்தில் உள்ள குடும்பஸ்தர்கள் தங்குவதற்கு தனித்தனி வீடுகள் கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரே இடத்தில் உணவு அருந்தும் பழக்கம் மெல்ல மறைய ஆரம்பித்தது.

கொஞ்சம் காசு வைத்திருந்த கம்பெனி ஊழியர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கி வேலி போட்டு, சிறிய தோட்டம் உருவாக்கிக்கொண்டனர். இதைப் பார்த்த மற்றவர்களும் பாரதி மாதிரி ’காணி நிலம் வேண்டும் பராசக்தி’ என்று ஆசைப்பட ஆரம்பித்து விட்டார்கள். முதல்கட்டமாக, கம்பெனி ஊழியர்கள் பொழுதுபோக்கவும், ஓய்வு நேரத்தில் விளையாடவும் ஒரு தோட்டத்தை உருவாக்குவதென முடிவானது. அதன்படி வெள்ளையர் நகரத்து மதில் சுவரையொட்டி, சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில், தற்போது சட்டக் கல்லூரி இருக்கும் இடத்தை, தோட்டமாக மாற்றி அதற்கு ’கம்பெனி தோட்டம்’ எனப் பெயரிட்டனர்.

சில ஆண்டுகளுக்கு இந்த கம்பெனி தோட்டம் நல்ல பொழுதுபோக்கு இடமாகவும், விளையாட்டுத் திடலாகவும் விளங்கியது. ஆனால், சீக்கிரமே பல்வேறு காரணங்களால் இந்தத் தோட்டம் அழியத் தொடங்கியது. கருப்பர் நகரத்துக்கு வடமேற்கில் அமைந்திருந்த இந்த தோட்டத்தை ஐரோப்பியர்கள் கல்லறைத் தோட்டமாக மாற்ற ஆரம்பித்ததும் இதற்கு மிக முக்கிய காரணம். எனவே, வேறொரு புதிய தோட்டம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதனையடுத்து, மெட்ராசுக்கு வரும் சிற்றரசர்களையும், முக்கிய பிரமுகர்களையும் வரவேற்று உபசரிக்க, விருந்தளிக்க சரியான இடம் கோட்டைக்குள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி லண்டன் நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், பெரிய செலவு வைக்காமல் ஏதாவது செய்துகொள்ளுங்கள் என்று ஒப்புதல் அளித்தது.

லண்டனின் ஒப்புதல் கிடைத்ததும் புதிய தோட்ட வீடு அமைக்கும் பணி வேகம் பிடித்தது. கூவம் நதிக்கரை ஓரத்தில் தற்போது அரசு பொது மருத்துவமனை அமைந்திருக்கும் இடத்தில் ஒரு புதிய தோட்ட வீடு கட்டப்பட்டது. பழவேற்காட்டில் இருந்த டச்சு ஆளுநர் 1688-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி படகு மூலம் இந்த தோட்ட வீட்டுக்கு வருகை தந்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன.

1686-ம் ஆண்டு முதல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் வில்லியம் கைஃபோர்ட் இந்த தோட்ட வீட்டில் தங்க ஆரம்பித்தார். அவரது உடல்நிலை குன்றி இருந்ததால், இயற்கையான சூழலில் அமைந்திருந்த இந்த தோட்ட வீட்டில் தங்க அவருக்கு அனுமதி கிடைத்தது. இப்படித்தான் கோட்டைக்குள் இருந்த ஆளுநர் முதல்முறையாக வெளியில் தங்கும் வைபவம் தொடங்கியது.

ஆளுநர் மாளிகை

அதற்கு பிறகு ஆளுநர்கள் கோட்டையிலோ தோட்ட வீட்டிலோ விருப்பப்படி தங்கிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு பின்னர், இப்படி சந்தோஷமாக தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த மெட்ராஸ் ஆளுநர்களுக்கு பிரெஞ்சுப் படைகள் மூலம் ஆபத்து வந்தது. 1746இல் மெட்ராசை பிரெஞ்சுப் படைகள் முற்றுகையிட்டபோது, கிழக்கிந்தியப் படைகள் கோட்டைக்குள் முடங்க வேண்டியதாகிவிட்டது.

குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, ஆளுநர்  ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோட்ட வீட்டை ஆயுதக் கிடங்காக மாற்றிவிட்டது பிரெஞ்சுப்படை. இங்கிருந்தபடி கோட்டையைத் தாக்கி வெற்றிகரமாக கைப்பற்றிய அவர்கள், அழகான அந்த தோட்ட வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். பின்னாளில் இதேபோல ஆங்கிலேயப் படை இந்த வீட்டை ஆயுதக் கிடங்காக பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு அது. இப்படியாக கம்பெனி ஊழியர்களின் இரண்டாவது தோட்டமும் இல்லாமல் போனதால், ஆளுநர் மீண்டும் கோட்டைக்குள் முடங்க வேண்டியதானது. எனவே, மீண்டும் ஆளுநருக்கு வீடு தேடும் படலம் தொடங்கியது.

 

https://www.vikatan.com/news/coverstory/111091-the-history-of-chennai-series-part-3.html

Link to comment
Share on other sites

அடமானத்தில் பிறந்த ஆளுநர் மாளிகை - சென்னை பிறந்த கதை! - பகுதி -4

 
 

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே விஸ்தாரமான தோட்ட வீட்டில் தங்கிக் கொண்டிருந்த மெட்ராஸ் ஆளுநர், பிரெஞ்சுப் படைகளின் முற்றுகை காரணமாக கோட்டைக்கே திரும்பினார். பின்னர் பிரெஞ்சுப் படைகளிடம் போராடி இழந்ததை மீட்டது கிழக்கிந்திய கம்பெனி. ஆனால், அந்த ஆனந்தம் நிறைந்த தோட்ட வீட்டை அவர்களால் மீட்டெடுக்க முடியவில்லை. இதனால் அடுத்து வந்த ஆளுநர் சாண்டர்ஸ் மீண்டும் பழைய கோட்டை அலுவலக வீட்டிலேயே தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. முன்னாள் ஆளுநர்கள் எல்லாம் ரம்மியமான சூழலில் வசித்துவிட்டுப் போயிருக்கையில், தான் மட்டும் இப்படி மீண்டும் ஓங்கி உயர்ந்த கோட்டைச் சுவர்களுக்குள் அடைப்பட்டதில் அதிருப்தி அடைந்தார் ஆளுநர் சாண்டர்ஸ். எனவே, ஆளுநருக்காக வாடகை வீடு தேடும் படலம் தொடங்கியது. 

ஆளுநர் மாளிகை

 
 

அப்போதுதான் இன்று அண்ணாசாலையில் அரசு பல்நோக்கு மருத்துவமனை இருக்கும் அரசினர் தோட்டத்தில் இருந்த ஒரு வீடு கண்ணில்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துக்கே நிதியுதவி அளிக்கும் அளவுக்கு பணவசதி படைத்த அண்டோனியோ தி மதீராஸ் என்ற செல்வச் சீமாட்டிதான் அந்த வீட்டின் உரிமையாளர். அவரிடம் இருந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள் கிழக்கிந்திய கம்பெனியினர். பின்னர் ஒரே ஆண்டில் அதாவது 1753-ல் அந்த வீட்டை ரூ. 12,250 கொடுத்து விலைக்கு வாங்கினர். அன்றைய சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு வாங்கியதால் இது ஒரு நல்ல டீல் என்றே கம்பெனி நிர்வாகமும் கருதியது. சில ஆண்டுகள் கழித்து அருகில் இருந்த நிலங்களையும் விலைக்கு வாங்கி ஆளுநர் இல்லத்தை விஸ்தரித்தனர்.

இப்படி எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தபோது, கேப்டன் லாலி தலைமையில் மீண்டும் படையெடுத்து வந்தார்கள் பிரெஞ்சுப் பங்காளிகள். 1758-ல் மெட்ராஸைக் கைப்பற்ற முயன்ற பிரெஞ்சுப் படைகள், முதலில் ஆளுநரின் தோட்ட வீட்டை முற்றுகையிட்டார்கள். ஆனால் அது தோல்வியில் முடிந்ததால், ஆத்திரத்தில் ஆளுநர் வீட்டை முடிந்தவரை சேதப்படுத்தி விட்டார்கள். ஆத்திரத்தில் இருந்த ஆங்கிலேயப் படைகள் இரண்டு ஆண்டுகள் கழித்து பிரெஞ்சுப் படைகளைப் பந்தாடி பாண்டிச்சேரியை கைப்பற்றியது. கேப்டன் லாலி கைது செய்யப்பட்டு மெட்ராஸ் கொண்டு வரப்பட்டார். அவரை இங்கிலாந்து அனுப்புவதற்கான கப்பல் வரும்வரை, அவர் சேதப்படுத்திய தோட்ட வீட்டிலேயே ஒரு பாழடைந்த அறையில் சிறைவைக்கப்பட்டார். முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்தது லாலிக்கு. 

1798-ல் சரித்திரப் புகழ்பெற்ற ராபர்ட் கிளைவின் மகனான இளைய க்ளைவ் பிரபு, மெட்ராஸ் ஆளுநராகப் பதவியேற்றார். அவர்தான் ஆளுநர் இல்லம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுத்தவர். 1801-ல் சுமார் 3 லட்சம் ரூபாய்  செலவில் தோட்ட வீட்டை புதுப்பித்து அரசு இல்லமாக மாற்றினார். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து மேலும் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து, அரசு இல்லம் அமைந்த வளாகத்தில் ஒரு பிரமாண்ட நிகழ்ச்சிக் கூடத்தை கட்டினார். மைசூர் போரில் திப்பு சுல்தானின் தோல்வியை இந்த கூடத்தில்தான் பார்ட்டி வைத்து கொண்டாடினார் கிளைவ் பிரபு. இவர்தான் ஆளுநர்கள் தங்குவதற்கென நகருக்கு வெளியே இரண்டாவது அரசு இல்லம் தேவை என முடிவெடுத்தவர். அப்படி பிறந்ததுதான் இன்றைய ஆளுநர் இல்லமாகத் திகழும் ராஜ்பவன். ஆனால், கிளைவுக்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த இடத்தைப் கண்டுபிடித்து பயன்படுத்தியவர் கவர்னர் வில்லியம் லாங்ஹார்ன்தான். 

இன்றைய ராஜ்பவன் 1670-களில் கிண்டி லாட்ஜ் என்று அழைக்கப்பட்டது. புனித தோமையார் மலைக்கு இந்த வழியாகச் சென்ற கவர்னர் வில்லியம் லாங்ஹார்ன் கிண்டி காட்டுப் பகுதியின் அழகில் மனதைப் பறிகொடுத்ததால் இங்கு ஒரு வீடு கட்டி, அதனைச் சுற்றித் தோட்டம் அமைத்தார். வார இறுதி நாள்களில் இங்கு ஓய்வெடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் 1678-ல் ஒரேயடியாக இங்கிலாந்துக்கு புறப்பட்ட கவர்னர், சின்ன வெங்கடாத்ரிக்கு இந்த வீட்டை விற்றுவிட்டார். ஆங்கிலேயர்களுக்கு மெட்ராஸ் என்ற நிலப்பகுதியைப் பெற்றுத் தந்த பேரி திம்மப்பாவின் இளைய சகோதரர்தான் இந்த சின்ன வெங்கடாத்ரி. 

ஆளுநர் மாளிகை

சின்ன வெங்கடாத்ரிக்கு கிழக்கிந்திய கம்பெனியோடு சில பிரச்னைகள் வந்தபோது, கம்பெனியைச் சரி கட்டுவதற்காக இந்த வீட்டை அடிமாட்டு விலைக்குக் கொடுத்துவிட்டார். பின்னர் சில பல கைகள் மாறி கடைசியில் அரசு வங்கியிடம் அடமானத்துக்கு வந்தது இந்த வீடு. 1821-ல் இந்த வீட்டையும், இதற்கு அருகில் ஷாமியர் என்ற ஆர்மீனியரின் சொத்தையும் அரசாங்கம் வாங்கிக் கொண்டது. அப்போது ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்றோ, இடையூறு இல்லாமல் பொதுவிஷயங்களைக் கவனிக்க ஒரு இடம் தேவை என்று விரும்பியதால், இந்த வீடு வாங்கப்பட்டது.

தாமஸ் மன்றோ இங்கிருந்தபடி தனது அலுவல்களைப் பார்த்தார். இப்படித்தான் ஆளுநரின் அதிகாரபூர்வ இல்லம் என்ற கௌரவம் கிண்டி லாட்ஜுக்குக் கிடைத்தது. இவருக்குக் கோட்டைக்குள்ளேயும் ஒரு வீடு இருந்தது. பின்னர் ராஜ்பவன் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது. 

பின்னர் 1837-ல் கிண்டி லாட்ஜ், ஆளுநர் எல்பின்ஸ்டன் பிரபுவால் மீண்டும் விரிவாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்த வீட்டுக்கும் மவுன்ட் ரோட்டுக்கும் இடையில் சைதாப்பேட்டை வழியாக சாலை அமைத்தவர் இவர்தான். பரந்து விரிந்த அந்த கிண்டி மாளிகையில்தான் இனி வரப் போகும் ஆளுநர்கள் தங்க வேண்டும் என்றும், அண்ணாசாலையில் உள்ள பழைய அரசு இல்லத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும் அப்போதுதான் தீர்மானிக்கப்பட்டது. 

இப்படித்தான் பல்வேறு சுவாரஸ்யமான வரலாற்றுத் திருப்பங்களுக்குப் பிறகு சென்னைக்கு ஒரு பிரமாண்டமான ஆளுநர் மாளிகை கிடைத்தது.

 

 
 

https://www.vikatan.com/news/coverstory/111221-the-history-of-chennai-series-part-4.html

Link to comment
Share on other sites

மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய ’பார்ட்டி’ -சென்னை பிறந்த கதை! - பகுதி -5

 

விவேகானந்தர் இல்லம்

நியூ இயர் பார்ட்டிதான் தற்போதைய ஹாட் ட்ரெண்டிங் சப்ஜெக்ட். இன்னைக்கு மெட்ராஸ் மக்கள் பார்ட்டி கொண்டாட ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர். பக்கம் போனால் பார்ட்டியோ பார்ட்டிதான். ஆனால், கிட்டத்தட்ட 350 வருடங்களுக்குமுன் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், மெட்ராஸில் காலடி எடுத்து வைத்தபோது, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் எல்லாம் இல்லை. குளிர்தேசத்தில் இளம் சூடான மதுபானங்களை சுவைத்தபடி, காற்றில் தவழும் மெல்லிசைக்கு நோகாமல் டான்ஸ் ஆடி பார்ட்டி கொண்டாடிய பார்ட்டிகள், இப்படி வெயில் வறுத்தெடுக்கும் நாட்டிற்கு வந்ததும் உண்மையிலேயே நாக்கு தள்ளிப் போனார்கள்.

 

கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான பிரான்சிஸ் டே, சென்னை என்ற இந்த நிலப்பகுதியை தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணமே இது கடலுக்கு மிக அருகில் இருக்கிறது என்பதால்தான். கூடுதலாக, கோட்டைக்கு அருகிலேயே கூவம் நதியும் (அந்த காலத்தில் உண்மையில் நதியாகத்தான் இருந்தது) இருந்ததால் இங்கு வீசும் காற்றில் குளுமை இருந்தது. அவர்களின் வணிகத்திற்கு கடலும், வாட்டும் வெயிலுக்கு மாலையில் வீசும் சில்லென்ற கடல் காற்றும் பெரும் உதவியாக இருந்தன. ஆனாலும் அவர்களுக்கு ஒரு பெரிய குறை இருந்தது. தங்கள் நாட்டில் இருந்ததைப்போல இங்கு தினமும் இரவில் பார்ட்டி கொண்டாட முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் ஐஸ் கட்டி கிடைக்காததுதான். இங்கிலாந்தில் இருந்து வரும் கப்பல்களில் வணிகச்  சரக்குகளுடன் சேர்த்து பார்ட்டிக்கான “சரக்கையும்” ஏற்றி வந்துவிடலாம். ஆனால் அதில் போட்டு மிதக்கவிட ஐஸ் கட்டிக்கு என்ன செய்வது? அப்படியே பாளம்பாளமாக ஐஸ் கட்டிகளை கப்பலில் ஏற்றி வந்தாலும், அதை எப்படி நாள்கணக்கில் பாதுகாத்து வைப்பது? இதெல்லாம் அன்றைய “குடி”மகன்களின் தலையாய பிரச்னைகளாக இருந்தன.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணப் பிறந்ததுதான் இன்றைய விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்படும் அன்றைய 'ஐஸ் ஹவுஸ்'. பார்ட்டிக்கு உதவும் கட்டடம் என்பதாலோ என்னவோ பிரமாண்டமான பிறந்தநாள் கேக் போல கட்டிவிட்டார்கள். இந்த கட்டிடம் தோன்றிய கதை ரொம்பவே சுவாரஸ்யமானது. இதைக் கட்டியவர் ஒரு மகாராஜா. சாதாரண மகாராஜா அல்ல, ஐஸ் மகாராஜா. அட, ஆமாங்க! அவரை அப்படித்தான் அந்தக் காலத்தில் எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெயர் ஃபிரெட்ரிக் டூடர் (Fredric Tudor). ஐஸ் கட்டி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்ததால் அவருக்கு இந்த பட்டப்பெயர் வந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த டூடர், தன் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு அப்படியே ஹாயாக ஊர்சுற்ற ஆரம்பித்தார். சும்மா உள்ளூரில் சுற்றாமல் வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றியதுதான் அவர் வாழ்வில் பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது. அப்படி ஒருமுறை கியூபா சென்ற டூடர், அங்கு சுட்டெரித்த சூரியனைப் பார்த்து மெர்சலாகி விட்டார். "அப்பப்பா.. என்னா வெயில்...என்னா வெயில்.. கொஞ்சம் ஜில்லுனு ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமே" என்று எண்ணியவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு அற்புதமான யோசனை கிடைத்தது. "அமெரிக்காவில் வீணாகப்போகும் ஐஸ் கட்டிகளை ஏன் கியூபாவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடாது?" என்பதுதான் அந்த அதிஅற்புத யோசனை. இதேபோல வெயில் பட்டையை உரிக்கும் நாடுகளின் பட்டியலை தயாரித்தார் டூடர். அதில் இந்தியாவும் இருந்தது. ஐஸ் வியாபாரியாக மாறிய டூடர், முதன்முதலில் 1833-ல் கிளிப்பர் டுஸ்கானி (Clipper Tuscany) என்ற கப்பலில் இந்தியாவிற்கு ஐஸ் கட்டிகளை அனுப்பி வைத்தார். இப்படித்தான் முதன்முதலில் இம்போர்டட் ஐஸ் ஜில்லென்று இந்தியாவிற்குள் வந்தது. ஐஸ் கட்டிகளை அனுப்பிவைத்தால் மட்டும் போதாது, அவற்றை பல மாதங்கள் பத்திரமாக சேமித்து வைத்து விற்பனை செய்ய ஏற்ற கட்டடங்கள் வேண்டும் என்பதை டூடர் உணர்ந்தார். அதற்காக இந்தியாவில் மூன்று கட்டடங்களைக் கட்டினார். பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய பெருநகரங்களில் கடலை ஒட்டி அவர் தனது ஐஸ் கிடங்குக்கான கட்டடங்களைக் கட்டினார். இதில் பம்பாய், கல்கத்தா கட்டிடங்கள், ஐஸ் கட்டியைப்போல காலத்தால் கரைந்து காணாமல் போய்விட்டன. சென்னையில் அமைக்கப்பட்ட ஐஸ் ஹவுஸ் கட்டடம் மட்டும் இன்றும் கில்லி மாதிரி நிற்கிறது. அதுதான் மெரினா சாலையில் இன்று விவேகானந்தர் இல்லமாக மாறி இருக்கிறது.

ஐஸ் ஹவுஸ் கட்டிடம் 1842-ல் கட்டப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து பெரிய கப்பல்களில் வரும் ஐஸ் கட்டிகளை சிறிய படகுகளில் இறக்கி கரை சேர்ப்பார்கள். பின்னர் அந்த ஐஸ் கட்டிகள் கடற்கரைக்கு மிக அருகிலேயே  (அப்போதெல்லாம் கடல் இன்னும் பக்கத்தில் இருந்தது) அமைந்திருந்த ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் சேமித்து வைக்கப்படும். வெயிலில் கரைந்து விடக்கூடாது என்பதற்காக சூரிய ஒளி உள்ளே புகாத வகையில் இந்த கட்டிடம் வட்டவடிவில் ஜன்னல்கள் ஏதுமின்றி பெரிய குடோன் போன்ற அமைப்பில் கட்டப்பட்டது. ஒரு பவுண்ட் எடையுள்ள ஐஸ் கட்டி நான்கு அணா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. வாங்கிச்செல்லும் ஐஸ் கட்டிகள் சீக்கிரம் கரைந்துவிடாமல் இருக்க, அவற்றின் மீது போர்த்தும் கனமான போர்வைகளையும் டூடர் விற்பனை செய்தார். 

டூடரின் ஐஸ் கட்டிகளுக்கு சென்னையில் நல்ல மவுசு இருந்தது. அந்தக் காலத்தில் கோட்டைக்குள் நடந்த பார்ட்டிகளில் எல்லாம் டூடரின் ஐஸ்தான் கோப்பைகளுக்குள் மிதந்து கொண்டிருந்தன. இதில் டூடருக்கு நல்ல லாபம் கிடைத்தது. இப்படியே சுமார் 40 ஆண்டு காலம், சென்னையில் இந்த ஐஸ் வியாபாரம் கனஜோராக நடைபெற்றது. 1880-களில் இந்தியாவிலேயே நீராவி முறையில் ஐஸ் கட்டி தயாரிக்கும் முறை அறிமுகமானதும், டூடரின் வியாபாரம் படுத்துவிட்டது.

இதனால் வியாபாரத்தை மூட்டைகட்ட முடிவு செய்த டூடர், ஐஸ் ஹவுஸ் கட்டடத்தை பிலிகிரி அய்யங்கார் என்ற மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞருக்கு விற்றுவிட்டார். வீடாகப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில்தான் அய்யங்கார் இதை வாங்கினார். எனவே அதற்கேற்ப வராண்டாக்கள், நிறைய ஜன்னல்கள் என அந்தக் கட்டடத்தில் பல மாற்றங்களை செய்து, அதற்கு கெர்னன் கேஸ்டல் எனப் பெயரும் வைத்தார். கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏழை மாணவர்களையும் பிலிகிரி அய்யங்கார் தங்க வைத்திருந்தார். ஆனால், எத்தனை ஜன்னல்கள் வைத்தபோதும் அந்த வீட்டில் காற்றோட்டம் போதுமான அளவு கிடைக்கவில்லை. கடைசிவரை, ஒரு நல்ல வீடாக இருக்கும் வாய்ப்பு அந்தக் கட்டிடத்திற்கு வாய்க்கவே இல்லை. இந்த சமயத்தில்தான் இங்கு வந்து தங்கினார் ஒரு தேசியப் பிரபலம். அவர்தான் இந்தியாவின் வீரத்துறவி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றிவிட்டு, பெரும் புகழுடன் 1897-ல் தாய்நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர், ஊருக்குச் செல்லும் வழியில் சென்னைக்கு வந்தார். அவருக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. நம்ம பிலிகிரி அய்யங்கார் விவேகானந்தரின் தீவிர சீடர் என்பதால் சுவாமிகள் தனது வீட்டில் சிறிது காலம் தங்க வேண்டும் என விண்ணப்பம் வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஐஸ் ஹவுசில் தங்க வைக்கப்பட்டார். இங்கு தங்கியிருந்த நாட்களில், விவேகானந்தர் எழுச்சிமிக்க ஏழு உரைகளை ஆற்றினார். சென்னைவாசம் முடிந்து ஊருக்குப் புறப்பட்ட விவேகானந்தரிடம், சுவாமிகளின் ஆன்மீகப் பணிகளுக்காக சென்னையிலேயே ஒரு நிரந்தர மையம் அமைக்க வேண்டுமென உள்ளூர் பக்தர்கள் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஐஸ் ஹவுஸ் கட்டடத்திற்குள்ளேயே ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுதான் மெட்ராசில் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளை. 1906-ல் பிலிகிரி அய்யங்கார் பரமபதம் அடைந்த பிறகு, ஒரு ஜமீன்தார் இந்த வீட்டை வாங்கினார். பின்னர் 1917-ல் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த வீட்டை அவரிடம் இருந்து வாங்கி, பிராமண விதவைகளுக்கான ஹாஸ்டலாக மாற்றியது. பின்னர் சில காலம் ஆசிரியர்கள் தங்கும் விடுதியாகவும், பி.எட். பயிற்சி மாணவர் விடுதியாகவும் இந்த வீடு செயல்பட்டது. இந்நிலையில் 1963-ல் சுவாமி விவேகானந்தரின்  நூற்றாண்டு விழா வந்தது. இதனையொட்டி, இந்த கட்டிடத்தின் பெயர் விவேகானந்தர் இல்லம் என தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. 1997-ல் இந்த கட்டடமும், அருகில் உள்ள நிலமும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு லீசுக்கு விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இங்கு சுவாமி விவேகானந்தர் மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் பற்றிய நிரந்தர கண்காட்சி அமைக்கப்பட்டது. இங்கு விவேகானந்தரின் அரிய புகைப்படங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப்படித்தான் கால ஓட்டத்தில், சிற்றின்பத்திற்கு உதவுவதற்காக கட்டப்பட்ட கட்டிடம் பேரின்பத்திற்கு வழிகாட்ட உதவும் இடமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.

https://www.vikatan.com/news/coverstory/111769-the-history-of-chennai-series-part-5.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மெட்ராஸின் 'அடல்ட்ஸ் ஒன்லி' லைப்ரரி! சென்னை பிறந்த கதை! - பகுதி - 6

 
 

கன்னிமாரா நூலகம்

 

 

லக உருண்டையில் பரவிக் கிடக்கும் நாடுகள், அவற்றைக் கட்டியாண்ட அரசர்கள், அவர்களை சுற்றிச் சுழன்ற சூழ்ச்சிகள் என விறுவிறு வரலாறு புத்தகங்களை உள்ளடக்கியவை நூலகங்கள். அந்த நூலகங்களுக்கும் சில நேரங்களில் இப்படி விறுவிறுப்பான வரலாறுகள் இருப்பதுண்டு. அதிலும் குறிப்பாக, மெட்ராஸ் என்ற பொட்டல் நிலத்தில் புத்தி வளர்க்கும் நூலகங்கள் புகுந்த கதை ரொம்பவே சுவாரஸ்யமானது.

17-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியினர் மெட்ராஸில் காலடி வைத்தபோது, பொழுதுபோக்கவோ, அறிவை வளர்த்துக் கொள்ளவோ பெரிதாக எந்த வசதி வாய்ப்புகளும் இல்லை. முதன்முதலில் 1661-ஆம் ஆண்டு, நமக்கு ஒரு நூலகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மெட்ராஸில் இருந்த ஆங்கிலேயர்கள்  சிலருக்குத் தோன்றியது. இதற்கான முதல் முயற்சியைக் கையில் எடுத்தார் வில்லியம் வைட்ஃபீல்ட் என்ற பாதிரியார். அப்போதைய மெட்ராஸ் ஆளுநர், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரிடம் கலந்து பேசிய வில்லியம், அப்படியே கொஞ்சம் நிதி வசூலித்து... அதில் காலிகோ துணிகளை வாங்கி இங்கிலாந்து செல்லும் கப்பலில் ஏற்றி அனுப்பினார். அந்தத் துணியை விற்றுக் கிடைக்கும் பணத்தில், லண்டனிலிருந்து புத்தகங்களைத் தருவிக்க வேண்டும் என்பதுதான் அவரின் திட்டம். அதன்படி, சுமார் 28 பவுண்டுகள் விலை மதிப்புள்ள புத்தகங்கள் இங்கிலாந்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் புத்தகங்கள் கோட்டையில் மக்கள் பயன்பாட்டுக்காக அடுக்கிவைக்கப்பட்டன. இப்படித்தான் மெட்ராஸின் முதல் நூலகம் பிறந்தது.

மெள்ளமெள்ள இந்த நூலகத்தில் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. புத்தகம் வேண்டுவோர் ஒரு பகோடா பணம் (அப்போது புழக்கத்திலிருந்த நாணயம்) கொடுத்து தேவையான புத்தகத்தை இரவல் பெற்றுச் செல்லலாம். லாக்கையர் (Lockyer) என்ற பயணி 1703-ஆம் ஆண்டு சென்னைக் கோட்டைக்கு வந்திருந்தபோது இங்கிருந்த நூலகத்தைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அப்போது சுமார் 438 பவுண்டுகள் மதிப்புள்ள புத்தகங்களைக் கொண்டதாகக் கோட்டை நூலகம் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால், இந்த நூல்கள் முறையாக வகைபிரித்து அடுக்கிவைக்கப்படவில்லை. எனவே, தேவையான புத்தகத்தை சீக்கிரம் தேடி எடுப்பதே பெரிய சவாலாக இருந்தது. இந்தப் பிரச்னைக்கு 1720-இல் ஒரு பாதிரியார் தீர்வு கண்டிருக்கிறார். எந்தப் புத்தகம் எங்கிருக்கிறது என்பதை அறியும் வகையில் சிறப்பான கேட்லாக் ஒன்றைத் தயாரித்து அசத்தியிருக்கிறார். இதனால் மகிழ்ந்துபோன ஆளுநர், அந்தப் பாதிரியாருக்கு பல்லக்கில் பயணிக்கச் சிறப்பு அனுமதி அளித்ததாக ஆங்கிலேய ஆவணங்கள் சொல்கின்றன.

இப்படிப் பார்த்துப் பார்த்து வகைபிரித்த புத்தகங்களை, வடிவேலுவை கோவை சரளா புரட்டிப் புரட்டி எடுத்ததைப்போல, 1746-இல் கோட்டையை முற்றுகையிட்ட பிரெஞ்சுப் படைகள் மூலைக்கொன்றாகச் சிதறடித்தன. மீண்டும் மெட்ராஸ், ஆங்கிலேயர் வசம் வந்ததும்... மறுபடியும் நூலகம் சீராக்கப்பட்டது. லண்டனிலிருந்து ஆண்டுதோறும் புத்தகங்களை அனுப்பும் வழக்கம் ஒரு காலத்துக்குப் பிறகு முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இதனிடையே, புத்தக ருசி கண்ட வாசிப்பாளர்களின் வசதிக்கு ஏற்ப கோட்டைக்கு வெளியிலும் நூலகங்கள் முளைக்க ஆரம்பித்தன. 

கன்னிமாரா நூலகம்

1847-ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள், அரசு ஓரியன்டல் மானுஸ்கிரிப்ட் லைப்ரரி தொடங்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஏராளமான கையெழுத்துப் பிரதிகளும், அச்சடிக்கப்பட்ட புத்தகங்களும் இந்த நூலகத்தில் இடம்பெற்றிருந்தன. இங்கிருந்த கையெழுத்துப் பிரதிகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. புத்தகங்களை இங்கேயே உட்கார்ந்துதான் படிக்க வேண்டும். சிறப்பு நிபந்தனைகளுக்குட்பட்டு சில புத்தகங்களும், கையெழுத்துப் பிரதிகளும் மட்டும் இரவல் தரப்பட்டன.

சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர் மெட்ராஸில் ஆரம்பிக்கப்பட்டது அடல்ட்ஸ் ஒன்லி லைப்ரரி. பேரைக் கேட்டதும் எசகுபிசகாகக் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடாதீர்கள். நம்ம கன்னிமாரா லைப்ரரிதான் அது. 1860-களில் கேப்டன் ஜெசி என்பவர் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்துக்குள் ஒரு சிறிய நூலகம் ஒன்றை அமைத்தார். இதைப் பெரிதாக விரிவுபடுத்தி இன்னும் அதிகமானோர் பயனடைய வகை செய்ய வேண்டும் என விரும்பிய அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட், கன்னிமாரா பெரிய நூலகம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கிவைத்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் 22, 1890-இல் நடைபெற்றது.

நீண்ட இழுபறிக்குப் பின், பணிகள் எல்லாம் ஒருவழியாக முடிந்து, 1896-ஆம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தவர் என்ற முறையில் லார்ட் கன்னிமாராவின் (அதற்குள் அவர் பதவியிலிருந்து போய் அடுத்த ஆளுநரே வந்துவிட்டார்) பெயரே நூலகத்திற்கு வைக்கப்பட்டுவிட்டது. ஆரம்ப காலத்தில் தேவையானோர் வந்து படித்துச் செல்லும் வசதி மட்டும்தான் இங்கு இருந்தது. பின்னர் 1930 முதல் புத்தகங்களை இரவல் கொடுக்கும் வழக்கம் தொடங்கியது. 17 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும்தான் புத்தகங்கள் இரவல் தரப்படும். அதனால்தான் அதை அடல்ட்ஸ் ஒன்லி லைப்ரரி என்று சிலர் வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார்கள். 17 வயது பூர்த்தியடைந்தவர் எனக் கல்லூரி முதல்வர், பேராசிரியர், கார்ப்பரேஷன் கவுன்சிலர், மாஜிஸ்ட்ரேட் ஆகிய யாரிடமாவது சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் ரூ.20 முன்பணம் கட்டினால், 3 புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதிக்கப்படும். அந்தப் புத்தகங்களை 15 நாள்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஒருவேளை, புத்தகத்தைத் தொலைத்துவிட்டால்... அந்தப் புத்தகத்தைக் கடையில் வாங்கி நூலகத்துக்கு அளிக்க வேண்டும். இதுதான் அன்றைய கன்னிமாரா நூலகத்தின் சட்டத்திட்டம். 

கன்னிமாரா நூலகம்

கன்னிமாரா நூலகம் வெள்ளிக்கிழமை தவிர, ஆண்டின் மற்ற அனைத்து நாள்களிலும் மக்கள் சேவை ஆற்றி வந்திருக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கும் நூலகம், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மாலை 5.30 மணி வரையிலும், மற்ற மாதங்களில் மாலை 6 மணி வரையிலும் திறந்திருப்பது அன்றைய வழக்கமாக இருந்திருக்கிறது. புத்தகங்கள் தவிர முக்கியமான நாளிதழ்கள், வார ஏடுகள், மாதப் பத்திரிகைகள் அனைத்தும் கன்னிமாரா நூலகத்துக்கு வந்துவிடும். இவற்றுக்கான பிரத்யேகப் பகுதியில் வாசகர்கள் அமர்ந்து நேரம் போவது தெரியாமல் பத்திரிகைகளை வாசித்த காலங்களுக்கு கன்னிமாரா சுவர்களே சாட்சி.

இவை தவிர, சென்னைப் பல்கலைக்கழக லைப்ரரி, தியோசபிக்கல் சொசைட்டிக்குள் அமைந்திருந்த அடையார் லைப்ரரி, மைலாப்பூர் ராணடே லைப்ரரி, ரிப்பன் மாளிகையில் இருந்த சுங்குவார் முனிசிபல் லைப்ரரி, நுங்கம்பாக்கத்தில் இருந்த மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி லைப்ரரி ஆகியவை அன்றைய மெட்ராஸ் புத்தகப் பிரியர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கின. 1929 முதல் 1934 வரை அறிஞர் அண்ணா கல்லூரியில் படித்த காலத்தில், நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் படிப்பதைப் பழக்கமாக வைத்திருந்தார். தங்கசாலையில் இருந்த பண்டிதன் ஆனந்தம் நூலகம், சென்னை செயின்ட் சேவியர் தெருவில் இருந்த மாநகராட்சி நூலகம், கன்னிமாரா நூலகம் ஆகிய மூன்றும்தான் அவர் அதிகம் அறிவுக் கொள்முதல் செய்த இடங்கள். இந்த மூன்று நூலகங்களிலும் அண்ணா படிக்காத நூலே இல்லை என்று சொல்வார்கள். இது சற்றே மிகையாகத் தோன்றினாலும் சாதாரண அண்ணாவை, அறிஞர் அண்ணாவாக புடம்போட்டவை இந்த நூலகங்கள்தாம். அதனால்தானோ, என்னவோ தெரியவில்லை. தமிழகத்தின் பல இடங்களில் அண்ணாவுக்குப் புத்தகம் படிப்பதைப் போன்று சிலைகள் வைக்கப்பட்டிருக்கும்.

புத்தகங்களுடனான அண்ணாவின் அந்தப் பந்தம் மரணத்துக்குப் பிறகும் தொடர்கிறது. அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக ஓங்கி உயர்ந்து, அறிவுச் சுடரை பரப்பிக்கொண்டிருக்கிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/113045-the-history-of-chennai-series-part-6.html

Link to comment
Share on other sites

மெட்ராஸை மிரட்டிய தாவூத்! - சென்னை பிறந்த கதை பகுதி -7

 

ஜார்ஜ் கோட்டை

 

 

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். இதேபோல ஒரு தாவூத் அந்தக் காலத்தில் மெட்ராஸ் ஆட்சியாளர்களைப் படாதபாடு படுத்தியிருக்கிறார். வணிக நிறுவனம் என்ற பெயரில் காலடி எடுத்துவைத்து, பின்னர் ஒட்டுமொத்த இந்தியாவையே அடிமைப்படுத்திச் சூறையாடிய கிழக்கிந்திய கம்பெனியிடமே மிரட்டிமிரட்டிச் சுரண்டியவர் இந்த தாவூத். 

முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப், தனது ஆட்சிக்குட்பட்ட கர்நாடகப் பகுதிகளைக் கவனித்துக்கொள்ள நவாப் என்ற பதவியைப் புதிதாக உருவாக்கினார். அப்படி நியமிக்கப்பட்ட முதல் நவாப் ஜூல்பிகர் அலி கான். இந்த ஜூல்பிகரின் படைத் தளபதிதான் தாவூத் கான். தளபதி என்ற முறையில் நவாப்பின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்து அரசியல் நிலவரங்களை அறிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் தாவூத் கான்.

ஒருமுறை தாவூத் கான் மெட்ராஸைச் சுற்றிப் பார்க்க வரப் போவதாக ஜூல்பிகர் அலி கான், அப்போதைய கவர்னரான தாமஸ் பிட்டுக்குக் கடிதம் எழுதினார். ஒளரங்கசீப் படையின் முக்கியத் தளபதி வருகிறார் என்றால், பின்னணியில் ஏதேனும் சதி இருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட பிட், ஒருபுறம் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டே, மறுபுறம் நகரின் பாதுகாப்பை அதிகரித்தார். இத்தகைய பதற்றமானச் சூழலில், 1699-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி மெட்ராஸ் வந்தார் தாவூத். அவரை உரிய முறையில் வரவேற்று திருவல்லிக்கேணியில் ஸ்டைல்மேட் என்ற தோட்ட மாளிகையில் தங்கவைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் சாந்தோமிலும் ஒருவாரம் தங்கியிருந்தார். அந்த 7 நாள்களில் சாந்தோம் அவரது மனதைக் கொள்ளை அடித்துவிட்டது. எனவே, சாந்தோமை ஒரு பெரிய நகரமாக மாற்ற வேண்டும் என்று தாவூத் நினைத்தார். ஆனால், அவரது கனவை ஆங்கிலேயர்கள் பலிக்கவிடவில்லை. 

இதனிடையே 1700-ஆம் ஆண்டு கர்நாடக நவாப் ஜூல்பிகர் அலி கான், 'தட்சிண தேசத்து சுபேதாராக' தன்னைத்தானே நியமித்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து கர்நாடகச் செஞ்சி நாடுகளின் நவாப்பாக பதவி உயர்வு பெற்றார் தாவூத் கான். புதிதாக நவாப்பான தாவூத் கான், ஆங்கிலேயர்களிடம் மீண்டும் கெத்துக் காட்ட ஆரம்பித்தார். ஆற்காட்டிற்கு வந்த நவாப், ''நல்ல சரக்கா அனுப்பி வைங்கப்பா’' என்று கேட்டு கோட்டைக்கு ஆள் அனுப்பினார். இந்தச் சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், அவரைச் சந்திப்பதற்காக நிக்காலோ மானுச் என்ற வெனிஸ் நகரத்து வணிகரை நிறைய பரிசுப் பொருள்களுடன் அனுப்பினர். நிக்காலோ மானுச் அதற்கு பல ஆண்டுகள் முன்பே மெட்ராஸில் வந்து தங்கிவிட்டவர். அவருக்குப் பாரசீக மொழி நன்றாகத் தெரியும் என்பதாலும், முகலாயப் பேரரசுடன் தொடர்புடையவர் என்பதாலும் அவரைத் தூதராக அனுப்பினர்.

நிக்காலோ மானுச் இரண்டு பித்தளைத் துப்பாக்கிகள், கண்ணாடிகள், 50 பாட்டில் ஃபிரெஞ்சு பிராந்தி, உயர் ரக துணிகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பரிசுப் பொருள்களை எடுத்துக்கொண்டு தாவூத்தைச் சந்திக்கப் போனார். ஆனால், பிக் அப் பண்ண ஆடி கார் வரும் என்று எதிர்பார்த்தவருக்கு மாருதி ஆம்னி அனுப்பியதைப்போல ஆகிவிட்டது இந்தப் பரிசு. இதெல்லாம் ஒரு பரிசா என அலட்சியமாக வாங்கி வைத்துக்கொண்ட தாவூத், மெட்ராஸுக்குப் புதிய கவர்னரை நியமிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி ஆங்கிலேயர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். கூடவே மெட்ராஸுக்குப் பதிலாகச் சாந்தோமைப் பெரிய நகரமாக மாற்றியமைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதை எல்லாம் கேள்விப்பட்ட ஆளுநர் பிட், நம்ம விஜயகாந்த் பாணியில் 'ஆத்திரங்கள் வருது மக்களே’ என்று கொதித்துக் கொந்தளித்திருக்கிறார்.

ஆளுநர் பிட்டின் ஆத்திரத்தை அதிகரிக்கும் வகையில், சில மாதங்கள் கழித்து சுமார் 10,000 பேர் கொண்ட படையோடு சாந்தோமுக்கு மீண்டும் வந்தார் தாவூத். இந்த முறை எல்லிஸ், டெவன்போர்ட் ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் சில பரிசுகளை எடுத்துச்சென்று  தாவூத்தைத் தாஜா செய்ய முயற்சி செய்தனர். ஆனால், தாவூத் இதனை நிராகரித்துவிட்டார். இதனால் கடுப்பாகிப்போன ஆளுநர் பிட், போருக்குத் தயார் என்ற ரீதியில் கானுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். மிரட்டிப்  பணிய வைக்கலாம் என்று நினைத்த கானுக்கு இது சற்றே ஆச்சர்யத்தைக் கொடுத்தது. எனவே, கம்பெனியின் பரிசுகளை ஏற்றுக்கொள்வதாகவும், அவர்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதாகவும் சொல்லி சமரசத்துக்கு முன்வந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு தடபுடல் விருந்து தயாரானது. 

தாவூத் இப்ராஹிம் விலங்குகளிடம் பாசம் காட்டினார்

சாந்தோமிலிருந்து ஜார்ஜ் கோட்டை வரை கிழக்கிந்தியப் படை வீரர்கள் வரிசைகட்டி நின்று கானுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க, 21 குண்டு மரியாதையும் அளிக்கப்பட்டது. கோட்டைக்குள் நுழைந்த கானை ஆளுநர் பிட் ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் விருந்து நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு 600 வகை பதார்த்தங்கள் கானுக்காகக் காத்திருந்தன. இந்த விருந்தை வெகுவாக ரசித்த கான், மாலை 6 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அடுத்தநாள் ஒரு கப்பலைச் சுற்றிப்பார்க்க தாவூத் விரும்பினார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கான் ஃபுல்லா தண்ணி அடித்துவிட்டுத் தானே ஒரு ‘சரக்கு’ கப்பல்போல தள்ளாடிக் கொண்டிருந்ததால், அவரைக் கிளப்பி அழைத்துவர முடியவில்லை. இப்படி எல்லாம் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் தாவூத் கானை சீராட்டி, பாராட்டி, ’தண்ணீரில்’ குளிப்பாட்டி வழிக்குக் கொண்டுவர படாதபாடுபட்டனர்.

ஆனால் குடிகாரன் பேச்சு, விடிந்தால் போச்சு என்பதை நிரூபித்தார் கான். எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு படையோடு கோட்டை நோக்கி வந்துவிட்டார். இந்த முறை சில பரிசுப் பொருள்களைக் கேட்டார் கான். இந்தக் குடிகாரன்கூட இனி குடித்தனம் நடத்த முடியாது என முடிவுக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனி, கான் கேட்டதை கொடுக்க மறுத்துவிட்டது. ஆத்திரமடைந்த கான் கோட்டையை முற்றுகையிட்டார். மதராசபட்டினத்துக்கான கடல்வழிப் பொருள் வருகையைத் தடுத்து நிறுத்தினார். இந்தப் பகுதியில் கடற்கொள்ளையர்கள் அதிகமாகிவிட்டதால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுத்ததாக அரசாங்க ஆணை ஒன்றையும் பிறப்பித்தார். 1702, பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியான இந்த ஆணையால் மதராசபட்டினத்தின் வணிகம் முடங்கிப்போனது.

ஆணை வெளியான அடுத்த நாளே எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் கானின் ஆள்கள் கொள்ளையடிப்பதாக ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவி பீதியை அதிகரித்தது. மக்கள் அங்கும் இங்கும் ஓடி ஒளிய ஆரம்பித்தனர். கறுப்பர் நகரத்தையும், தங்கசாலையையும் எடுத்துக்கொள்ளப் போவதாகவும் கான் அதிரடியாக அறிவித்தார். இதுபோன்ற அதிரடிகளால் நிலைகுலைந்துபோன கிழக்கிந்திய கம்பெனி, கானுடன் சமரசமாகப்போக முடிவெடுத்தது. இந்தச் சமரசத்துக்கு கான் கேட்ட விலை ரூ.30 ஆயிரம். அப்புறம் ஒருவழியாகப் பேரம் பேசி ரூ.25 ஆயிரத்தைக் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். ஆனால், அது முற்றுப்புள்ளி அல்ல... கான் கமாதான் போட்டார் என்பது சில ஆண்டுகளில் நிரூபணமாகிவிட்டது.

1703-ஆம் ஆண்டு தாவூத், இலங்கையின் கண்டி அரசர் இரண்டாம் விமலதர்மசூர்யாவிடமிருந்து சுமார் 50 போர் யானைகளை விலைக்கு வாங்கினார். இந்தத் தகவல்களெல்லாம் ஆங்கிலேயர்களைத் தொடர்ந்து அச்சத்திலேயே வைத்திருந்தது. இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பேராசை பிடித்த கான், 1706-இல் மீண்டும் சாந்தோமுக்கு வந்து தேவையானவற்றைக் கேட்டு வாங்கிக் கொண்டார். இப்படி ஆங்கிலேயர்களைத் தொடர்ந்து மிரட்டி வைத்திருந்த தாவூத், 1708-ஆம் ஆண்டு திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கத்திவாக்கம், சாத்தங்காடு ஆகிய 5 கிராமங்களை ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார். இது ஒன்றுதான் கானால் ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்த நன்மை. பின்னர் 1710-ஆம் ஆண்டு முகலாயப் பேரரசு, ‘உங்கள் சேவை எங்களுக்குத் தேவை’ என்று சொல்லி, கூடுதல் பொறுப்புகள் கொடுத்து கானை டெல்லிக்கு அழைத்துக்கொண்டது. பின்னர் மராட்டியர்களுக்கு எதிரான ஒரு போரில் தாவூத் இறந்து, அவரது உடலை ஒரு யானையின் வாலில் கட்டி நகர் முழுவதும் இழுத்துச் சென்றார்கள் என்ற தகவலை கேட்டதும்தான் ஆங்கிலேயர்கள் நிம்மதியாகத் தூங்கினர்.

 

மனிதர்களை இப்படிப் பாடாய்படுத்திய கான், மிருகங்களிடம் அன்பு காட்டியிருக்கிறார். தாவூத் கான் இரண்டு நாய்களைச் செல்லமாக வளர்த்துவந்தார். குற்றவாளிகள் மீது இந்த நாய்களை ஏவி கொடூரத் தண்டனை கொடுப்பார் என நேரில் பார்த்தவர்கள் பதைபதைப்புடன் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல தாவூத் ஒரு குரங்கையும் பாசத்துடன் வளர்த்தார். அது இறந்துபோனதைத் தாங்க முடியாமல், அதன் பாதுகாவலர்களாக இருந்த இரண்டு பேருக்கு மரண தண்டனை வழங்கியதாகக் குறிப்புகள் உள்ளன. அதுமட்டுமன்றி அந்தக் குரங்கின் நினைவாக ஒரு படமும் வரையச் செய்தாராம் நம்ம பாசக்கார தாவூத். மொத்தத்தில் வரலாற்றில் ஒரு வித்தியாசமான மனிதராக வாழ்ந்து மறைந்தார் தாவூத் கான்.

https://www.vikatan.com/news/tamilnadu/113262-the-history-of-chennai-series-part-7.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.