Jump to content

எங்கள் காலத்தில் தேசியவாதம்


Recommended Posts

எங்கள் காலத்தில் தேசியவாதம்
Ahilan Kadirgamar /

சிவப்புக் குறிப்புகள்

நவீன உலகத்திலிருந்து, பெருங்குழப்பமான தேசங்களின் இயல்பிலிருந்து பெறக்கூடிய பாடங்கள், அநேகமாக மறக்கப்படுகின்றன. ஆபத்தான தேசிவாத இயக்கங்களின் பிடியில் நாம் மீண்டும் சிக்கியுள்ளோம். அவ்வாறான கொள்கைகளுக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கும், பொருளாதார நெருக்கடிகள் பங்களித்திருக்கலாம் என்ற போதிலும், தேசியவாதத்தின் எழுச்சிக்கு, அதை மாத்திரம் குறிப்பிட முடியாது.   

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கிறுக்குத்தனமான வசவுரைகளாக இருக்கலாம்; ஐரோப்பாவிலுள்ள இனவாத அலையாக இருக்கலாம்; சீனாவிலும் இந்தியாவிலும், அபிவிருத்தியிலும் இராணுவமயமாக்கலிலும் அதிகரித்த தேசிய வேலைத்திட்டங்களாக இருக்கலாம், அவை அனைத்துமே, கலாசார தேசியவாதம், இனவாதம், வெளிநாட்டவர் வெறுப்பு ஆகியவற்றின் வரலாறுகளைக் கொண்டிருக்கும்.   

அவ்வாறான கலாசார தேசிய வாதத்திலிருந்து, இலங்கையும் கூட தப்ப முடியாமலிருக்கும். வெளிநாட்டுப் போர்களை ஆரம்பிக்கவோ அல்லது ஏனைய நாடு மீது படையெடுக்கவோ, இலங்கை சிறிய நாடாக இருந்த போதிலும், அழிவுதரக்கூடிய இந்தத் தேசியவாத அலையில் சிக்கி, எமது நாட்டைப் பிளந்தெடுக்க முடியும். பிளந்தெடுத்தல் என்பது மூலமாக, பிரிவினையை நான் குறிப்பிடவில்லை. மாறாக, அதிகரிக்கும் துருவப்படுத்தல்; வர்க்க, இன, சாதி, பாலின, சமய ஒடுக்குமுறை மூலமாக, ஆழமாகும் வன்முறையைக் குறிப்பிடுகிறேன். அவ்வாறான ஒடுக்குமுறையும் துருவப்படுத்தலும், சமூகத்தைப் பிரித்து, சமூக அரசின்மையையும் வன்முறையையும் நோக்கி எடுத்துச் செல்லும்.   

இராணுவ மயமாக்கல்   

தேசியவாதத்தினதும் இராணுவமயப்படுத்தலினதும் மோசமான வரலாறு, உலகம் முழுவதும் இடம்பெற்ற போர்களுடன் அதிகரித்தது. இலங்கையில்  சிவில் யுத்தம், இராணுவமயமாக்கலின் ஆபத்துக் குறித்து, கேள்வி கேட்கவாவது செய்திருக்க வேண்டும்.

ஆனால் நாங்கள், தெற்கில் “போர் நாயகர்கள்” என்ற கலந்துரையாடலிலும், வடக்கில் “தியாகிகள்” என்ற கலந்துரையாடலிலும் இன்னமும் சிக்கிக் காணப்படுகிறோம். இதனால், போருக்கு நாம் எப்படிச் சென்றோம் என்பதை, விமர்சன ரீதியாகப் பின்னோக்கிப் பார்ப்பதற்கு முடியாமலிருக்கிறோம்.   

எங்கள் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, வடக்கில் இன்னொரு கிளர்ச்சியோ அல்லது சிவில் யுத்தமோ, எட்டக்கூடிய தூரத்தில் இல்லை. அவ்வாறான ஆயுதமேந்திய போராட்டத்தைத் தாங்க முடியாதளவுக்கு, தமிழ்ச் சமூகம் பாதிப்படைந்தும் பலவீனமடைந்தும் காணப்படுகிறது. வடக்கின் அண்மைக்கால தேசியவாதக் கூச்சல்கள், முதுகெலும்பற்ற அரசியல் மேல்தட்டினரின் சந்தர்ப்பவாதக் கருத்துகளே ஆகும்.   

இருந்தபோதிலும், தமிழ் அரசியல் வட்டத்தை, அவ்வாறான குறுகிய தேசியவாதக் கலந்துரையாடல் கைப்பற்றியிருப்பது என்பது, போரால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீளெழுச்சியைப் பாதிப்பதோடு, கோஷ்டிகளிலிருந்து வீட்டு வன்முறைகள் தினசரி வன்முறைகளில், மக்களை ஆழ்த்துகிறது.   

நாடென்ற வகையில் முழுமையாக, ஏற்றுக்கொள்ளத்தக்க வாழ்க்கை, சமூக நீதி ஆகியவற்றுக்கான மக்களின் எதிர்பார்ப்பென்பது, போர் வரலாற்றின் அடிப்படையிலான கலாசார தேசியவாதக் கருத்துகளால் மறைக்கப்பட்டுள்ளது. வடக்காக இருக்கலாம், தெற்காக இருக்கலாம், “போர் நாயகர்கள்” என்பதன் தெரிவுசெய்யப்பட்ட கொண்டாட்டம் ஆகியன, எமது சமூகத்தில் ஊன்றிப் போயுள்ள போரின் துயரங்களை அவமதிப்பதாகும்.   

“போர் நாயகர்கள்” மீதான கொண்டாட்டங்களும், “தியாகிகளின்” விமர்சனமற்ற கொண்டாட்டங்களும், இராணுவமயமாக்கல் பற்றி அவசியமாகத் தேவைப்படும் கலந்துரையாடலுக்கு, பிரதான தடங்கலாகும். தொடர்ந்து வந்த அரசாங்கங்களும், இராணுவமயமாக்கலை நீக்குவதற்கான தூரநோக்கை வெளிப்படுத்தியிருக்கவில்லை. மாறாக, இராணுவத்தைப் பாதுகாப்பவர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டன.   

மிகப்பெரிய இராணுவத்தின் உருமாற்றத்துடன், இராணுமயமாக்கலின் நிறுத்தம் காணப்பட வேண்டும். குறிப்பாக, இராணுவத்திலுள்ள இளைஞர், யுவதிகள் பலர், பொருளாதார வாய்ப்புகளுடன்கூடிய சாதாரண வாழ்க்கைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட, ஆயுதக்குழுக்களைச் சேர்ந்த முன்னாள் ஆயுததாரிகளின் வாழ்க்கை, தமிழ்ச் சமூகத்தால் கூடக் கைவிடப்பட்ட நிலையில், துயரகரமானதாக உள்ளது. இறந்தவர்களுக்கான அஞ்சலியென்பது, அரசியல் முன்னுரிமையான விடயமாக மாறியமைக்கும் நடுவிலேயே இந்நிலை காணப்படுகிறது. இந்தப் பின்னணியில், எமது அரசியல் கலாசாரத்திலிருந்தும் எமது உலகப் பார்வையிலிருந்தும் இராணுவமயமாக்கலை நீக்குதல் என்பது அவசியமானது. இதற்கு, தேசியவாதத்தை நிராகரித்தல் அவசியமாகிறது.   

வன்முறை   

தேசியவாதமென்பது, இறுதியில் வன்முறையையே பிரசவிக்கிறது. கொலனித்துவத்துக்கு எதிரான தேசியவாத இயக்கங்கள் போன்று, சில நேரங்களில் வன்முறை அவசியமானது என, சிலர் வாதிடக்கூடும். ஆனால், என்னுடைய கருத்து என்னவெனில், தேசத்திலும் தேசம் உருவாக்கலிலும் மாத்திரம், தேசியவாதம் மட்டுப்படுத்தப்படாது என்பதாகும்.

மாறாக, சமூகங்கள், பாடசாலைகள், ஏன் குடும்பங்களில் கூட வன்முறைகள் ஏற்படும். சமூகங்கள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு மேலாக, தேசத்தை முன்னிறுத்துவதால், தேசியவாதமென்பது ஜனநாயக விரோதமானது.   

உலகம் முழுவதிலும், அதேபோல் இலங்கையிலும், தேசியவாதத்தின் அண்மைக்கால எழுச்சியென்பது, முஸ்லிம்களுக்கு எதிரான அல்லது இஸ்லாத்துக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளது. தேசியவாதத்துக்கு, எதிரியொன்று தேவைப்படுகிறது.

வெளியே எதிரி இல்லாவிடின், எதிரியை உள்ளே தேடுகிறது. எங்களது காலத்தில் முஸ்லிம்கள், “ஏனையோர்” என்ற வகைக்குள் உள்ளடக்கப்படுகின்றனர். இந்த “எதிரி” மீது தான், வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.   

வன்முறையென்பது, தேசியவாதத்துடன் சேர்ந்தது. நவீன தேசங்களின் உருவாக்கத்தின் போது, அவ்வாறான வன்முறைகள் இருந்தன, விரிவுபடுத்துவதற்கான போர்களில் அவை இருந்தன. முன்னைய நூற்றாண்டுகளில் இடம்பெற்ற உலகப் போர்களில் அவை இருந்தன. தற்போது எங்கள் காலத்திலுள்ள தேசியவாத நடவடிக்கைகளில் அவை வேறு வடிவில் காணப்படுகின்றன.   

எதிர்ப்பு   

தேசியவாதமானது சமூகங்களை, தனது கலந்துரையாடலினதும் வன்முறையினதும் பலத்தால் ஆள முற்படுகிறது என்றால், அத்தேசியவாதத்துக்கான எதிர்ப்பும், அதே சமூகங்களிலிருந்து தான் வருகிறது. தமிழ் இலக்கியத்தின் முன்னணி விமர்சகர்களுள் ஒருவரான பேராசிரியர் க. கைலாசபதி, “தமிழ்ச் சமூகத்தின் கலாசார, மொழிச் சுயவுணர்வு” என்ற தலைப்பில், சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் 1979ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில், பின்வருவதைக் கூறினார்:   

“தமிழர்களில் கலாசார தேசியவாதம், இன்று முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. அதற்கு முன்னால், இரண்டு தெரிவுகள் உள்ளன. கலாசாரத் தனிமைப்படுத்தல், ஆதிக்க மனப்பாங்கையின் பாதையில் செல்வது. இல்லாவிடின், பெரும்பான்மையான சமூகத்துக்குப் பொருத்தமானதான விடயங்களைக் கண்டறிந்து, ஜனநாயக வாழ்க்கைக்கான தெரிவொன்றை மேற்கொள்வது.   

“இதில் தெரிவு, வெளிப்படையானதாகத் தெரியும். ஆனால் அதைச் செய்வதற்கு, ஒடுக்கமான இன நலன்களைக் கொண்டிருப்பதுவும், அதேபோல மனிதனால் மனிதனைச் சுரண்ட முடியாத சமூக ஒழுங்குமுறையொன்றை நோக்கிச் செல்கின்றதுமான, இரண்டு சமூகங்களும், தேசிய ரீதியில் போராடுவது என்பதுவும் தேவைப்படும்.”   

அந்த எச்சரிக்கை, தமிழ்ச் சமூகத்தால் செவிமடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, அதன் பின்னர் துயரமே ஏற்பட்டது. தசாப்தங்கள் கடந்தும், பேராசிரியர் கைலாசபதியில் சொற்கள், எங்களுடன் பேசுகின்றன; தமிழ்ச் சமூகத்துக்கு மாத்திரமன்றி, முழு நாட்டுக்குமே அவை பேசுகின்றன. எழுபதுகளைப் போலவே தற்போதும், கலாசார தேசியவாதம் மீளெழுச்சிபெற்று, ஆதிக்க மனப்பாங்குடன் நாட்டைத் துருவப்படுத்தும் ஆபத்துக் காணப்படுகிறது.    

தேசியவாதத்தின் இருநூறு ஆண்டுகால சூறையாடலுக்குப் பின்பு, தேசியவாதத்தில் முன்னேற்றகரமான ஒன்று கிடையாது என்பதில், நாம் தெளிவாக இருக்க வேண்டும். உண்மைதான், தேசியவாதமென்பது வன்முறையை விரைவுபடுத்துவதோடு, ஜனநாயகத்தை மறுப்படையச் செய்கிறது. அவ்வாறான தேசியவாத சக்திகளைச் சவாலுக்குட்படுத்தி, சமவுரிமைக்கும் சுதந்திரத்துக்கும் நாங்கள் போராடுகின்ற அதேவேளையில், சமூகங்களுக்கு இடையிலும் நாடுகளுக்கு இடையிலும் உறவுகளைக் கட்டியெழுப்பக்கூடிய மாற்று வழியிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எங்கள்-காலத்தில்-தேசியவாதம்/91-208325

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.