Jump to content

காதல் சொல்ல… வா…


Recommended Posts

காதல் சொல்ல… வா… – சிறுகதை

 

139315979915059873761753512486sirukathai.jpg

கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டில்தான் சந்தித்தான் வளவன். வழக்கமாய் சினிமாக்களிலும், கதைகளிலும் வருவது போல் மோதல் இல்லை. அந்த மழை நாளில், நனைந்து விடாமலிருக்க கல்லூரி பேருந்துக்குள்ளே நெருக்கியடித்து ஏறிக் கொண்டிருந்தனர் மாணவர்களும் மாணவிகளும். கூட்டத்தில் ஒருத்தியாகத்தான் நின்று கொண்டிருந்தாள் குழலி. மழைத்தண்ணீரின் ஈரத்தில் செருப்பு நழுவ, கீழே விழவிருந்தவளை, பின்னால் நின்று கொண்டிருந்த வளவன்தான் கைகொடுத்து நிலை நிறுத்தினான். உடனே, பாரதிராஜா படத்தில் வருவது போல் தேவதைகள் புடைசூழ “தந்தன.. தந்தன தாளம் வரும் வரும்..” என்றெல்லாம அவன் மனம் பாட்டு படிக்கவில்லை. அவளைத் தேடி அலையவில்லை. நண்பர்கள் மூலம் இருப்பிடம் அறிய முயற்சிக்கவில்லை.  அது தற்செயலான சம்பவம்தான் அவனைப் பொருத்தவரை. எதேச்சையாக கல்லூரி வளாகத்தினுள் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் தெரிந்தவர்கள் என்பது போல் ஒரு பரஸ்பர புன்னகை பரிமாற்றம். அத்தோடு சரி.  அந்த ஆண்டும் முடிந்துவிட்டது.  மூன்றாம் ஆண்டுதான் கல்லூரியில் நடந்த, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் என அனைத்திலும் அவனுக்கு ஈடாக மேடையேறி நின்றாள். பெயரைத் தெரிந்து கொண்டான். குழலி. நல்லாத்தானிருக்கிறது. மனதுக்குள் சொல்லிக் கொண்டான். சந்திக்கும் இடங்களில் ஒரு “ஹலோ.. ஹவ் ஆர்.. யூ..” மேடையேறிவிட்டால், வெல்லப்போவது நீயா? நானா? போட்டிதான் நிறைந்திருந்தது அவர்களுக்குள். கல்லூரி நாட்களின் கடைசி நாளில்தான் கை குலுக்கிப் பிரியும் போது தெரிந்து கொண்டான் அவளது முழுப் பெயரையும். “வண்டார் குழலி” என்பதை.

வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சியில், நினைப்பதும் நடக்கிறது. நினைக்காததும் நடந்து விடுகிறது.

நகரின், பிரசித்திப் பெற்ற வணிக நிறுவனமாய் இருந்தது அவனது தந்தை முருகுவேள் நடத்திக் கொண்டிருந்த அந்த நிறுவனம். நிறுவனத்தில் அமர்ந்து, வளவனின் தந்தை முருகுவேள் தன் தொழிலை, கவனித்துக் கொண்ட நேரத்தைவிட.  சங்கம்.. தேவையென தேடிவந்து கேட்பவர்களுக்கு தாராளமான நிதி உதவி, பள்ளி.. கல்விகளுக்கு தேவையானது.. இலக்கியவாதிகளுக்கு விருது வழங்குதல், அனைத்து அரசியல் வாதிகளிடமும் அதீத நெருக்கம், உள்ளூர் பத்திரிக்கைகளும், சேனல்களிலும் தான் கொண்டாடப்பட வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் முருகு. பங்கு சந்தை வீழ்ச்சி.. கடன் சுமை.. கொடுத்தவர்களின் அழுத்தம்… இரவோடு இரவாக உறவுகளும்.. நட்புகளும் எளிதாக அறிந்து கொள்ளமுடியாதபடி, கண்ணுக்கெட்டாத  தொலைவில் வளவனின் குடும்பம் புலம் பெயர்ந்தது.

மேல்படிப்பு கனவிலிருந்தவனுக்கு, குடும்பத்தை சுமக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி தந்திருந்தது வாழ்க்கை. பெரிய காரில், எப்போதும் பத்து பதினைந்து சக மனிதர்கள் என வலம் வந்த தந்தை முருகுவேள், முடக்கு வாதம் வந்தவன்போல் வீட்டுக்குள் முடங்கி கிடந்ததை  பார்க்கும் போதேல்லாம், “எப்படி வாழ்ந்த மனிதர் இப்படி விழுந்து கிடக்கிறாரே” என்ற கவலைதான் வரும் அவனுக்கு. விதியோ?

மதியோ? நிலைகுலைந்து போன குடும்பத்தை கரை சேர்க்க வேண்டும். தந்தையின் தொழில் அறிவு. தனயனின் உழைப்பு, களத்தில் இறங்கினான் வளவன்.

ஆயிற்று... வருடங்களும் ஆறு... ஏழுயென.. பழைய நிலை மீண்டு வரவில்லை என்றாலும், பஞ்சத்திலிருந்து மீண்டும் வந்து விட்டது குடும்பம்.

திருநெல்வேலியின், ஈரடுக்கு திருவள்ளுவர் மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருக்கும் போதே, வளவனின் மனதுக்குள் பழைய நினைவுகள். தாமிரபரணியாற்றின் நீரலைகளின் தடவலாக. தந்தை முருகுவின் தரிசனத்திற்காக உதவி வேண்டி வந்தவர்கள் காத்து கிடந்த அந்த நாள் நினைவுகள். விழிகளின் ஓரத்தில் கசிந்த நீர்த்துளிகள்… டிரைவர் பார்க்காத வண்ணம் துடைத்துக் கொண்டான் வளவன்.

காலை நேரத்து பனிக்காற்றின் மெல்லிய வருடல். அந்த நேரத்து மன நிலைக்கு மருந்திடுவது போலிருந்தது. தொலைவில் நெல்லையப்பர்

கோவில் கோவிலின் கோபுரம் நியான் ஒளி வெளிச்சத்தில். “டிரைவர், இங்கிருந்து நெல்லையப்பர் கோவில் சன்னதியைக் கடக்கும்வரை, எவ்வளவு மெதுவாக போக முடியுமோ அப்படி போனால் போதும். இப்போது போக்குவரத்து நெருக்கடி எதுவும் இல்லைதானே?” என்று சொன்னவனை, கூர்ந்து கவனித்த டிரைவர், பிறகு என்ன நினைத்துக் கொண்டாரோ.. ''சரிங்க தம்பி...'' என்றபடி காரின் வேகத்தைக் குறைத்தார்.

சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு, காந்தி சிலையின் பக்கம், ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு, மலரும் நினைவுகளோடு வீதியின் இரு திசைகளிலும் பார்வையை ஓடவிட்டவன் மனதில் ஏக்கம் குடிபுகுந்தது. “பரவாயில்லை.. நம்ம நெல்லை மக்களுக்கும் உடல் நல பராமாரிப்பில் அக்கறை வந்திருக்கிறது. இல்லையென்றால், இந்த அதிகாலை நேரத்தில் ஆண்களும்.. பெண்களும்.. இத்தனைக் கூட்டம் கூட்டமாக நடைபயிற்சியில் ஈடுபட்டிருப்பார்களா?” தன்னைக் கடந்து செல்பவர்களை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.

அது ஒரு கனாக் காலம். எவ்வளவு அழகானது.  அப்பாவின் புகழ் வீச்சால் பஜாரில் எங்கே நின்றாலும், தெரிந்தவர்கள் தெரியாதவர்களென எல்லா மனிதர்களும் நலம் விசாரித்ததும், காபி சாப்பிடுங்களேன் என உபசாரித்ததும். இங்கேதான் காரியமாணிக்கப் பெருமாள் கோவில் தெருவில் தன் வீடு இருப்பதாக, அவனிடம் குழலி சொன்னதாக ஞாபகம். அவளிடமிருந்து தொடர்பு எல்லைக்கு வெளியே போய் காலம் எத்தனை ஆயிற்று. அவளுக்கும் தனக்குமிடையே இருந்த பழக்க வழக்கமே முழுமையானது என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் சக மாணவர்களில் ஒருவனாகவும், பல நேரங்களில் சக போட்டியாளர்களாகத்தான் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறார்கள். குழலி, படிக்கிற காலத்தில் நல்ல படித்தவள். எதிலும் துடிப்பாக இருந்தவள். எதாவது போட்டித் தேர்வு எழுதி நல்ல வேலையில் அமர்ந்திருப்பாள். திருமணம்கூட ஆகியிருக்கும். ஒன்றோ… இரண்டோ குழந்தைக்கு தாயாகியிருப்பாள். மீண்டும் அவளை சந்திப்பது சாத்தியம்தானா? சந்தர்ப்பம் வாய்க்குமா? தனக்குத்தானே கேட்டுக் கொண்டான் வளவன்.

நீண்ட நாளைக்குப் பின், வளவனுக்குள் ஒரு ஏக்கம் வந்திருந்தது. இரவோடு இரவாக இங்கிருந்து புலம் பெயர்ந்து, நசிந்து கிடந்த குடும்பத்தையும் இந்தக் காலங்களில் சற்று நிமிர்த்தி வைத்தாகி விட்டது. இனி, ஒன்றிரண்டு நாட்களாவது, வாழ்ந்த மண்ணிலும், வாழ்ந்த நண்பர்களோடும் மீண்டும் வலம் வரவேண்டுமென்ற ஆசை. அவனது இந்த பயணத்தின் நோக்கமும் அதுதான். திருநெல்வேலிக்குச் செல்வதாக அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு, காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். பழைய நண்பர்களை இனிதான் தேடி கண்டு பிடிக்க வேண்டும். யாரேனும் ஒருவர் கிடைக்காமலா போய் விடுவார்கள் என்பது அவனது நம்பிக்கை. அதனால்தான் அன்று நண்பர்களோடு கூடி கும்மியடித்து தேர் இழுத்து உல்லாச பறவைகளாய் ஊரைச் சுற்றிய  அந்த நினைவுகளோடு வளவன் காரைவிட்டு இறங்கி அங்கு நின்று கொண்டிருக்கிறான். காலையிலேயே குளித்து பூச்சூடி.. திருநீற்று கீற்றுகளும்.. குங்கும தீற்றல்களுமாய் பளீச்சென்று சந்தி விநாயகனைத் தரிசிக்க வரும் நம்ம ஊர் பெண்களைப் பார்க்கும் போது, எதிர் மறையாக, அலுவலகம் செல்லும் பரபரப்பு, ஆட்டோவுக்குள் பிள்ளைகளை திணித்து வைத்து, பிரஷ் செய்து அனுப்பும் அப்பா அம்மாமார்கள் என தினத்துக்கும் பார்த்து.. பார்த்து, பழகி, என்ன இயந்திர வாழ்க்கையோ இதுவென அலுத்துப் போயிருந்தவனுக்கு, இந்த காட்சிகள் ஒரு புத்துணர்வைத் தந்தது.

மனதை எங்கெங்கோ சுழலவிட்டப்படி, தன்னை மறந்து நின்று கொண்டிருந்தவனை, அந்த குரல் தான் சுயஉணர்வுக்கு கொண்டுவந்தது. “ஏய் வளவன்… இங்க என்ன செஞ்சுகிட்டிருக்கே..” உற்சாகத்துடன் பழக்கப்பட்டதாய் குரல் இருந்தது. கேட்ட திசையில் பார்த்தான். குழலி… வண்டார் குழலியேதான்.

“ஓ..! வாட் எ சர்ப்ரைஸ். யா..” வளவனும் மெலிதாக சிலிர்த்துக் கொண்டான். சற்று முன்தான் பார்க்க முடியுமா? என்று தனக்குள் கேட்டுக் கொண்டவனைத் தேடிவந்து  காட்சித் தரும் தேவதையாய் நின்று கொண்டிருந்தாள் குழலி.

“ஆமா.. நீ எங்க இந்த காலை நேரத்தில்…”  பூஞ்சிரிப்பை மலர்த்தினாள் குழலி.

தான் இப்போதிருக்கும் நிலை. திருநெல்வேலி தேடி வந்திருக்கும் எண்ணத்தை வெளிப்படையாக எந்தவித போலி பூச்சுகளும் இல்லாமல் சொன்னான் வளவன்.

“அவ்வளவுதானே.. என் வீடு இருக்கு. என்ன காரை விடத்தான் தனியாக இடம் கிடையாது. தெருவில் வீட்டு வாசலில்தான் விட வேண்டும்… அத பார்த்துக்கலாம்…கிளம்பு.. கிளம்பு…” உற்சாகத்துள்ளல் நிறைந்து காணப்பட்டாள் குழலி.

இறைவனின் நாடகமா? ஏற்பாடா? பின் இணைப்பா…

வீட்டுக்குள் வேற்று மனிதர்களின் நடமாட்டமோ.. வாசமோ இருப்பதாகத் தெரியவில்லை. சின்னதாக இருந்தாலும் அத்தனை நேர்த்தியாக ஒவ்வொரு பொருளும் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தது. வாசலில் வண்ண கோலம்… துளசி மாடம்… அந்தக் காலத்து பழமையை நினைவுபடுத்தினாலும்… மனசுக்கான நிம்மதியை அந்த வீடு சுமப்பதாகவே தெரிந்தது. வந்ததுமே குழலிக் குறித்து கேட்க வேண்டாம் என்று கருதியவன் அமைதியாக இருந்தான். “டிரைவர் அண்ணா! கொல்லைப் புறமாய் போனால் குளித்து விடலாம். சீக்கிரம் வாங்க.. சுடச்சுட… சாப்பிடலாம்.. இப்போதைக்கு இட்லியும் சட்னியும்தான்.” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள் குழலி. கூடத்துக்கும், சமையல் கட்டுக்குமாய் விறுவிறுவென்று சுழன்று கொண்டிருந்தவனை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வளவன்.

குழலியின், அப்பா அம்மாவின் மரணம். அதன்பின், மனைவிச் சொல்லே மந்திரமென நடந்து கொண்ட உடன்பிறப்புகள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, போனால் போகட்டும் இந்த சிறிய வீட்டை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். ''வாழப் பயந்தவனுக்கு பக்கத்தில் பத்துபேர் இருந்தாலும் பயம் போகாது. துணிந்தவனுக்கு எதுவும் தேவையில்லை. அவர்களின் துணிவே போதுமானது.'' குழலி விசயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

பிறந்து வளர்ந்த ஊர். இந்த மண்ணில் இருக்கும் ஒவ்வொரு கல்லும் எனக்குத் தெரியும். அவைகளுக்கும் என்னைத் தெரியும். பின் நான் பயப்படவேண்டும். பக்கத்திலிருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியை. மாலையில் பத்து பதினைந்து பிள்ளைகளுக்கு டியூசன் மிஸ். கள்ளம் கபடமற்ற அந்த பிஞ்சு மழலைகளுடன் ஒவ்வொரு நாளின் பெரும்பகுதியும் கழிந்து விடுகிறது. பிறகு எனக்கென்ன கவலை?  கல்யாணமாகியிருந்தால் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு மட்டுமே அம்மாவாக இருந்திருப்பேன். இப்ப எத்தனை குழந்தை செல்வங்களுக்கு அம்மாவாக தெரிகிறேன் பாருங்கள். சொல்லிவிட்டு கலகலவென சிரிக்கும் குழலியைப் பார்க்கும் போது, வளவன் நினைத்துக் கொண்டான், அன்று மேடையில் துணிச்சலான கருத்துக்களைச் சொல்லும் போது மட்டுமல்ல, இன்று, நிஜ வாழ்க்கையிலும் குழலி துணிச்சலான பெண்தான்.

எதோ ஒரு வேலையின் பொருட்டு குழலி வெளியே சென்றிருந்தாள். எதாவது புத்தகங்கள் கிடைத்தால் பொழுதை கழிக்கலாம் என்ற நினைப்பில் வளவன் தேட ஆரம்பித்தான். மரப்பீரோவில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த டைரிகள். கதவை சற்று விசையாக இழுத்தபோது வரிசையிலிருந்து ஒரு டைரி கீழே விழுந்தது. எடுத்துப் பார்த்தான். அது, அவர்களின் கல்லூரி காலத்தின் கடைசி வருடத்திற்கானது. அனிச்சையாக ஒரு பக்கத்தை திருப்பினான். கல்லூரியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் அவர்கள் இருவரும் கலந்து கொண்டதையும், முதல் பரிசு அவளுக்கு கிடைத்திருந்த போதும், வளவனின் கவிதைவரிகள் கொண்டிருந்த சிறப்பை பாராட்டி அந்த வரிகளை  சிலாகித்தும் எழுதியிருந்தாள். தொடர்ந்து அவள் இப்படி எழுதியிருந்தாள், “வளவன் என் போட்டியாளன்தான். ஆனால், பொறாமைக்காரனில்லை. வஞ்சமும் இல்லை. வழிதலும் இல்லை.” இதுபோதும் எந்த பெண்ணுக்கும் அவனை பிடித்துவிட.”  டைரியின் கடைசி இரண்டு பக்கங்கள் முழுவதும் வளவனைப் பற்றியே குறிப்பிட்டிருந்தாள் குழலி.

''கல்லூரி முடிந்த பின் உன்னை நான் இதுநாள் வரை மீண்டும் காணவில்லை. இப்பவெல்லாம் உன்னை அடிக்கடி பார்க்க ஆசைப்படுகிறேன். கேள்விப்படுகிறேன். வியாபார நொடி. வேறு இடம்தேடி குடும்பம் நகர்ந்துவிட்டதாக. நம்புகிறேன். நீயும் நானும் ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்போம். அப்போது, கொஞ்ச நாட்களாகவே நான் உன்னிடம் சொல்லத்  தவித்த, சூழலால் சொல்ல தவிர்த்த அந்த ஒற்றைச் சொல்லை நிச்சயம் சொல்லுவேன். நான் நிச்சயம் காத்திருப்பேன். காலம் காத்திருக்குமா?''

ஊர் திரும்பும் நேரம். காரின் பின் இருக்கையில் அமர்ந்தவன் பக்கமாய் வந்து நின்றாள் குழலி. அவளைப் பார்த்து சிரித்தபடியே கூறினான் வளவன், “குழலி! இப்போதாவது சொல்லலாமா அந்த ஒற்றைச் சொல்லை…” நாணம் படர கால்விரல்களால் தரையில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் அந்த நவநாகரீக நங்கை.

http://www.dinamalarnellai.com

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.