Jump to content

பென்டில் கில்(Pendle Hill)


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசி, நிச்சயம் எடுக்க வேண்டிய அழைப்பு

"‍ஹலோ"

"இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ"

"சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர்

""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்"

"எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்"

"சு..இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை .தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ"

"ஒவ்வொரு கடையும் ஒவ்வோன்றுக்கும் திரியாமல் நீர் வீட்டில சமைச்சிருக்கலாம்."

"நான் வேலையால் வந்து சமைக்க நேரமில்லை ,வேலைமுடிந்து முதல் வார நீங்களும் ஒன்றும் செய்ய மாட்டியள் "சொன்னவள் தொலைபேசியை துண்டித்தாள்.

கார் பார்க் பண்ணுவதற்காக இரண்டு மூன்று தரம் அந்த கடை தொகுதியை சுற்றிய பின்பு தொலைவில் ஒன்று கிடைத்து.

நல்ல கறி மணம் மூக்கை துளைக்க தொடங்கியது ,கடை தொகுதியை நெருங்கியவுடன்  இரும்பு தட்டுகளை தட்டும் ஒசை காதை செவிடாக்கியது .கடைக்காரர் போட்டிக்கு கொத்து ரொட்டி போடும் சத்தம் அது .ஆத்துக்காரி சொன்ன கடைகளில் இடியப்பம், புட்டு, கத்தரிக்காய் கறி போன்றவற்றை வாங்கி கொண்டு எனக்கு பிடித்த மட்டன் கொத்து வாங்க  கொத்து ரொட்டி கடைக்கு போனேன்.

அங்கும் இடியப்ப கடைக்கு நின்ற அளவு சனம் வரிசையில் நின்றனர். ,மட்டன் கொத்துக்கு ஒடர் கொடுத்து போட்டு  நின்றேன்.

புகையிரத நிலயத்திற்கு அருகாண்மையில் தான் இந்த கடைதொகுதி உள்ளது. கொத்து ரொட்டிக்கு ஒடர் கொடுத்து அது என்ட கைக்கு வரும்பொழுது குறைந்தது நாலு புகையிரமாவது வந்து போயிருக்கும். இந்தியாவிலா அல்லது சிறிலங்காவிலா நிற்கின்றேன் என்று எனக்கே ஒரு சந்தேகம் உண்டாயிற்று.

"வீட்டை போகமுதல் அநேகர் அங்கு உள்ள கடைகளுக்கு வந்து போனார்கள் .

"அண்ணே உங்கன்ட கொத்து ரெடி "என்று கடைச் சிப்பந்தி சொல்ல காசை கொடுத்து போட்டு வீட்டை போக வெளிக்கிட மீண்டும் அலைபேசி சினுங்கியது .நம்பரை பார்த்தேன் அதே சொப்பிங்லிஸ்ட் நம்பர்.

"‍ஹலோ"

"இங்க கடையிலிருந்து வெளிக்கிட்டியளே "

"இல்லை ஏன்"

"நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ  டைகர் பிரான்ட் அரிசியும்  வாங்கி கொண்டு வாங்கோ"

" மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது"

"ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்"

" என்ன"

" தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று"

"சரி சரி வேற என்ன கடையில வேணும் ,ஓஓஓ டைகர் பிரான்ட் அரிசி"

மாலு பண்னை தவிர எனையவற்றை கடைகளில் வாங்கி கொண்டு வீடு சென்றேன்.

இருபது வருடத்திற்கு முதல் இடியப்பம் வாங்குவது என்றால் இரண்டு நாட்களுக்கு முதலே ஒடர் கொடுக்க வேணும் அதுவும் சிலர் தங்களது வீடுகளில் வைத்துதான் செய்து கொடுப்பார்கள் கடைகளில் எடுக்கமுடியாது. தமிழ்கடைகளே இல்லை ஏன்றெ சொல்லலாம்.

மாலை ஆறு எழு மணிக்கே கடைத் தொகுதி வெறிச்சோடி போயிருக்கும் இன்று இரவு ஒன்பது மணிக்கும் திருவிழா போன்று மக்கள் நடமாடுவார்கள்.மசலா தோசை கூட ஒன்பது மணிக்கு எடுக்கலாம்.எங்கும் கறுப்பு தோல் மனிதர்கள் இந்தியாவா அவுஸ்ரேலியா என மீண்டும் மீண்டும் எண்ண வைக்கும்.

 

விடியற்காலை எட்டு மணிக்கு கடை தொகுதிக்கு மாலு பன் வாங்க சென்றேன்.சந்தனக்குச்சி வாசம்,அந்த பகுதியையே மணம் பரப்பிக்கொண்டிருந்தது.சீர்காழி கோவிந்தராஜனின் குரல் கணீர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது .ஊர்கடையில் விடியற்காலை பாண் வாங்க சென்ற ஞாபகம் வந்து போனது.

வந்த புதுதில் ஒரு தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் பொழுது சாமியறையில்  சந்தனகுச்சியை வைக்க அது பக்கத்து வீட்டுக்கு மணம் பரப்ப அந்த வீட்டுக்கார‌ பெண்மணி அழைப்பு மணியை அடித்து குறைப்பட்டுக்கொள்ள அன்றிலிருந்து சந்தன‌க்குச்சியை கொழுத்துவதை குறைத்து கொண்டேன்.

 

"‍ஹலோ மச்சான் என்ன  இந்த பக்கம்"

" தலைமயிர் வெட்ட வந்தனான்,வெட்டி போட்டு மதியத்திற்கும் எதாவது எடுத்து  கொண்டு போவம் என்று வந்தனான்"

" என்னடாப்பா நீங்கள் கில் டிஸ்ரிக்காரர் ,இந்த எரியா சரியில்லை என்றிட்டு போனீயள் எப்படியோ எங்கன்ட ஏரியாவுக்கு வரவேண்டித்தான் இருக்கு"

"பின்ன!! எங்கன்ட சனம் இப்ப சலூன் ,இறைச்சிகடை,மீன்கடை,சாப்பாட்டுக்கடை,பலசரக்குகடை என்று எல்லாத்தையும் எடுத்து நடத்தினமல்லோ? அதுதான் இங்க வந்தனான்,மற்றவங்களின்ட விலைகளைளோட பார்க்கும் பொழுது என்கன்ட ஆட்களிட்ட கொஞ்சம் மலிவு"

 

"  பெற்ரோல் காசு கொடுத்து வந்து வாங்கிறீயள் என்றால் எங்கன்ட சனத்தின்ட கடையில விசயம் இருக்கத்தான் செய்யுது போல.":10_wink::10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க வீட்டிலயும்  ஒவ்வொரு கடை சாமான் பில்லையும் மனிசி பறிச்சு பார்க்கிறவவோ .....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

உங்க வீட்டிலயும்  ஒவ்வொரு கடை சாமான் பில்லையும் மனிசி பறிச்சு பார்க்கிறவவோ .....!  tw_blush:

 

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

Link to comment
Share on other sites

வித்தியாசமான கடைக்கு..:rolleyes:  யாராவது கிரெடிட்கார்டு பாவிப்பினாமா.:grin:

19 minutes ago, putthan said:

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

 

வழமையான புத்தனின் கிறுக்கல்... தொடர்ந்து கிறுக்குங்கள்..tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ?:rolleyes:

விசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

மூண்டு/நாலு பியர் ரின் வாங்கினாலும்......ஒரு பியர் ரின் வாங்கின மாதிரி பில்லிலை காட்டுற ரெக்னிக் உங்கையும் இருக்கோ..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Supermarket இல் cash back வசதியை பயன்படுத்தினால் bank statement பார்க்கிறதை முறியடிக்கலாம். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர் ஒருவர் வழமையாக ஒரு supermarket இல் cash back எடுத்து தனது விளையாட்டை செய்து கொண்டிருந்தார், ஒருநாள் மனைவியுடன் supermarket சென்றபோது counter இல் இருந்தவர் வழமை போன்று receipt உடன் £ 30 ஐ சேர்த்து கொடுத்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.12.2017 at 5:20 AM, putthan said:

"நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ  டைகர் பிரான்ட் அரிசியும்  வாங்கி கொண்டு வாங்கோ"

" மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது"

"ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்"

" என்ன"

" தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று"

மனிசி... நினைச்சு, நினைச்சு...  தொலை பேசியில்   சொன்னதெல்லாத்தையும்....  
கடை கடையாய்... ஏறி  வாங்கியும், நல்ல பெயர் எடுக்க முடியாமல்,
கடைசியில்... தமிழ் பற்றை காட்ட வெளிக்கிட்டு... 
பேச்சு வாங்கினது மட்டுமில்லை, தண்ணியடிக்கிறதையும் சந்தடி சாக்கில  சொல்லிப் போட்டா... :grin:

கவலைப் படாதீர்கள் புத்தன். இதெல்லாம்... ஊர் உலகம் முழுக்க நடக்கறது தான்.
புலம் பெயர்நாடுகளில்... கிழமைக்கு கிழமை நடக்கும் கதையை.. அழகாக பதிந்தமைக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/12/2017 at 11:53 PM, கிருபன் said:

அவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ?:rolleyes:

விசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா!tw_blush:

integrate பண்ணுவோம் ஆனால் பண்ணமாட்டோம் அதுக்கும் ஒரு talent வேணும்:10_wink:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்  நன்றிகள்

On 04/12/2017 at 10:46 AM, குமாரசாமி said:

மூண்டு/நாலு பியர் ரின் வாங்கினாலும்......ஒரு பியர் ரின் வாங்கின மாதிரி பில்லிலை காட்டுற ரெக்னிக் உங்கையும் இருக்கோ..:cool:

அதை விட‌ பெரிய டெக்னிக் எல்லாம் இருக்கு வருகைக்கு நன்றி:10_wink:

On 04/12/2017 at 11:27 AM, MEERA said:

Supermarket இல் cash back வசதியை பயன்படுத்தினால் bank statement பார்க்கிறதை முறியடிக்கலாம். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர் ஒருவர் வழமையாக ஒரு supermarket இல் cash back எடுத்து தனது விளையாட்டை செய்து கொண்டிருந்தார், ஒருநாள் மனைவியுடன் supermarket சென்றபோது counter இல் இருந்தவர் வழமை போன்று receipt உடன் £ 30 ஐ சேர்த்து கொடுத்துவிட்டார்.

நன்றிகள் மீரா வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகளை அள்ளி வழங்கிய சகலருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் துணைவி கொடுத்து வைத்தவர் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.12.2017 at 5:20 AM, putthan said:

"‍ஹலோ"

"இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ"

"சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர்

""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்"

"எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்"

"சு..இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை .தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ

சாமான் சக்கட்டையள் வாங்கிறதுக்கு உவையள் ஒரு லிஸ்ற் ஒண்டு எழுதித்தருவினம். கனக்க இருக்காது...ஆனால் அதை வாங்கிறதுக்கு பெரிய நகரத்தையே சுத்தி வரவேணும்.
அது சரி பொண்டிலைத்தானே பென்டில் எண்டு மழுப்பி சுழியன் விளையாட்டு விட்டுருக்கிறீங்க.....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 04/12/2017 at 3:55 PM, தமிழ் சிறி said:

மனிசி... நினைச்சு, நினைச்சு...  தொலை பேசியில்   சொன்னதெல்லாத்தையும்....  
கடை கடையாய்... ஏறி  வாங்கியும், நல்ல பெயர் எடுக்க முடியாமல்,
கடைசியில்... தமிழ் பற்றை காட்ட வெளிக்கிட்டு... 
பேச்சு வாங்கினது மட்டுமில்லை, தண்ணியடிக்கிறதையும் சந்தடி சாக்கில  சொல்லிப் போட்டா... :grin:

கவலைப் படாதீர்கள் புத்தன். இதெல்லாம்... ஊர் உலகம் முழுக்க நடக்கறது தான்.
புலம் பெயர்நாடுகளில்... கிழமைக்கு கிழமை நடக்கும் கதையை.. அழகாக பதிந்தமைக்கு நன்றி. :)

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் தமிழ்சிறி

On 08/12/2017 at 1:41 AM, வல்வை சகாறா said:

புத்தனின் துணைவி கொடுத்து வைத்தவர் ;)

அநேகமான புலம்பெயர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாம்.:10_wink:

On 08/12/2017 at 1:01 PM, ஈழப்பிரியன் said:

புத்தனின் கதை ஒரு கொத்து ரொட்டி சாப்பிட்ட மாதிரியே இருக்கிறது.

நீங்கள் போன கடைத் தொகுதியில் எனது ஒன்றுவிட்ட அண்ணரின் மகன் அண்மையில் ஒரு சாப்பாட்டு கடை திறந்துள்ளார்.

எனது அண்ணனின் வீடும் பென்டில் கில் தான்.ஒரு தடவை பொழுதுபட்ட நேரம் கடைக்கு நடந்து போய் வந்தேன்.

ஏன் தனியாக போனனநீ? இரவில் அடிச்சுப் போடுவாங்கள் என்று ஒரு பயம் காட்டி வைத்திருந்தார்.

கடையின் பெயரை சொன்னால் நான் போய் உங்கன்ட பெயரை சொல்லி டிஸ்கவுண்ட்டில் கொத்துரொட்டி வாங்கலாம்...:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் தினமும் சுமாராக இருந்தாலும் அதை பரிமாறும் பாங்கில் அதன் சுவையே மாறிவிடும். புத்தனின் எழுத்துப் பரிமாறல் படிப்பவர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று உணவுகளைச் சுவைக்க வைத்து விட்டது. உங்கள் கிறுக்கல்களைத் தொடருங்கள். சுவைக்கக் காத்திருக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடமுறையில் நடப்பதை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி..எந்த வகையிலும் திருத்த முடியாதவர்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நான் கனடாவில் வசிக்கவில்லை 

ஏற்கனவே நான் தெருவில் நடந்தால் கண்களை அங்கும் இங்கும் அலையவிடுவன் 

எதுக்கும் இவைகளை ருசிக்க ஒருதரம் கனடா வரவேண்டும்தான்
மற்றப்படி பென்ரில் கில் ல்லுக்கு அடிக்கடி வந்தால்

என்னுடைய பெண்டில் என்னைக் கில் பண்ணிவிடுவாள்

உங்கள் கொத்தின் வாசனை பொங்கலுக்குப் போட்ட ஏலக்காயையும் தாண்டி இதமாக இருக்கு
ஆனால் கண்டபடி இவைகளை வாங்காதையுங்கோ
இவை இதயத்துக்கு இதமானவையில்லை.

Link to comment
Share on other sites

On 12/3/2017 at 6:17 AM, putthan said:

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

நீங்கள் சுழியன் அல்லோ???tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2017 at 12:21 AM, Kavallur Kanmani said:

சமையல் தினமும் சுமாராக இருந்தாலும் அதை பரிமாறும் பாங்கில் அதன் சுவையே மாறிவிடும். புத்தனின் எழுத்துப் பரிமாறல் படிப்பவர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று உணவுகளைச் சுவைக்க வைத்து விட்டது. உங்கள் கிறுக்கல்களைத் தொடருங்கள். சுவைக்கக் காத்திருக்கிறோம்

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...கிறுக்கல் தொடரும்

On 12/12/2017 at 1:14 AM, யாயினி said:

நடமுறையில் நடப்பதை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி..எந்த வகையிலும் திருத்த முடியாதவர்கள்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...

On 15/01/2018 at 7:51 AM, Elugnajiru said:

நல்ல காலம் நான் கனடாவில் வசிக்கவில்லை 

ஏற்கனவே நான் தெருவில் நடந்தால் கண்களை அங்கும் இங்கும் அலையவிடுவன் 

எதுக்கும் இவைகளை ருசிக்க ஒருதரம் கனடா வரவேண்டும்தான்
மற்றப்படி பென்ரில் கில் ல்லுக்கு அடிக்கடி வந்தால்

என்னுடைய பெண்டில் என்னைக் கில் பண்ணிவிடுவாள்

உங்கள் கொத்தின் வாசனை பொங்கலுக்குப் போட்ட ஏலக்காயையும் தாண்டி இதமாக இருக்கு
ஆனால் கண்டபடி இவைகளை வாங்காதையுங்கோ
இவை இதயத்துக்கு இதமானவையில்லை.

இது அவுஸ்ரெலியா கனடா அல்ல நண்பரே ,வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் 

On 15/01/2018 at 4:04 PM, nunavilan said:

நீங்கள் சுழியன் அல்லோ???tw_blush:tw_blush:

அதே...tw_blush:tw_blush:.வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பெண்டில் ஹில் பகுதியில் ரெயில் ஸ்டேசனுக்கருகே நிறையத் தமிழர் கடைகளுள்ளன.  அந்தப்பகுதியில் பல மாதங்கள் தங்கிய அனுபவம் எனக்குமுள்ளது.  லண்டனோடு ஒப்பிடும்போது   உணவுப் பொருட்களுக்கு  விலையதிகம்.
 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2017 at 11:53 PM, கிருபன் said:

அவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ?:rolleyes:

விசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா!tw_blush:

சிட்னித் தமிழர்களில் பலர் மருத்துவர்களாக, பொறியியாளர்களாக, கணக்காளர்களாக, கணணி வல்லுனர்களாக, அரசாங்க ,தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகிறார்கள். பெரும்பாலும்  திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9 முதல் மாலை 5 மணிவரைதான்  வேலை.  வேலை முடிந்து வீடு வர 6 ,7 மணியாகிவிடும். பலர் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் மிகவும் கவனம். சிறந்த உயர்பாடசலைக்கு அனுமதிகள் பெற நடக்கும் பரீட்சைக்கும்(6ம்  வகுப்பு), பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சைக்கும் (12ம் வகுப்பு) தனியார் கல்விநிறுவனங்களில் பிள்ளைகளை கொண்டு செல்லவும், வீட்டில் கற்பிக்கவும் பெற்றோர்கள் நேரத்தினை செலவிடுகிறார்கள்.  பெரும்பாலும் வீட்டில் கணவரும் மனைவியும் அரசாங்க, தனியார்நிறுவனங்களில் வேலை.  பிட்டு ,இடியப்பம் போன்றவை குறைந்த விலையில் கடைகளில் பெறக்ககூடியதாக இருப்பதினால் மாலைநேரங்களில் , வேலை முடிய சாப்பாட்டுக் கடைகளுக்கு செல்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/01/2018 at 12:39 AM, karu said:

சிட்னியில் பெண்டில் ஹில் பகுதியில் ரெயில் ஸ்டேசனுக்கருகே நிறையத் தமிழர் கடைகளுள்ளன.  அந்தப்பகுதியில் பல மாதங்கள் தங்கிய அனுபவம் எனக்குமுள்ளது.  லண்டனோடு ஒப்பிடும்போது   உணவுப் பொருட்களுக்கு  விலையதிகம்.
 

கரு, 

நான் முதன் முதல் லண்டனில் உழுந்து வடை வாங்கிய காலத்தில்...வடையின் விலை...ஐம்பது பென்ஸ்!

வடையின் அளவு....கழுத்தில் போடக்கூடிய அளவு!

நான் கடைசியாக வடை வாங்கிய போது....வடையின் விலை....ஐம்பது பென்ஸ்!

வடையின் அளவு.....மோதிர விரலில் போடக்கூடிய அளவு!

 

அவுசில் வடை அளவு பெரிதாக அதிகம் மாறவில்லை!

ஆனால் விலையை...அடிக்கடி கூட்டிக்கொண்டு போகின்றார்கள்!

 

புத்தன்...உள்வீட்டு ரகசியங்கள் எல்லாம்....அவிட்டு விடுகிரியள் போல கிடக்குது!

கதையோட்டம்....வழமை போல....புத்தன் ஸ்டைல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

சிட்னித் தமிழர்களில் பலர் மருத்துவர்களாக, பொறியியாளர்களாக, கணக்காளர்களாக, கணணி வல்லுனர்களாக, அரசாங்க ,தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகிறார்கள். பெரும்பாலும்  திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9 முதல் மாலை 5 மணிவரைதான்  வேலை.  வேலை முடிந்து வீடு வர 6 ,7 மணியாகிவிடும். பலர் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் மிகவும் கவனம். சிறந்த உயர்பாடசலைக்கு அனுமதிகள் பெற நடக்கும் பரீட்சைக்கும்(6ம்  வகுப்பு), பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சைக்கும் (12ம் வகுப்பு) தனியார் கல்விநிறுவனங்களில் பிள்ளைகளை கொண்டு செல்லவும், வீட்டில் கற்பிக்கவும் பெற்றோர்கள் நேரத்தினை செலவிடுகிறார்கள்.  பெரும்பாலும் வீட்டில் கணவரும் மனைவியும் அரசாங்க, தனியார்நிறுவனங்களில் வேலை.  பிட்டு ,இடியப்பம் போன்றவை குறைந்த விலையில் கடைகளில் பெறக்ககூடியதாக இருப்பதினால் மாலைநேரங்களில் , வேலை முடிய சாப்பாட்டுக் கடைகளுக்கு செல்கிறார்கள். 

பிரித்தானியாவிலும் இதே நிலைதான். ஆனால் சாப்பாட்டுக் கடைகளில் வேலை முடிய கூட்டம் அலை மோதுவதில்லை. ஒரு சில கடைகளில் மிகவும் மலிவாக இருந்தாலும் தரமான சாப்பாடு என்று சொல்வதிற்கில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.