Jump to content

மதுசூதனன் தலை தப்பிய மர்மம்!


Recommended Posts

மிஸ்டர் கழுகு: மதுசூதனன் தலை தப்பிய மர்மம்!

 

 

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘ ‘மதுசூதன மல்லுக்கட்டு’ என்று கடந்த இதழில் நீர் சொல்லியிருந்தீர். அது முடிவுக்கு வந்துவிட்டதே’’ என்றோம். ‘ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டிவிட்டு, செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார்.

‘‘அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், ஆர்.கே. நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ‘அ.தி.மு.க வேட்பாளர் யாராக இருக்கும்’ என்பதுதான் அதிகமான பதற்றத்துக்குக் காரணமாக இருந்தது. ‘கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் வேட்பாளரை இறுதி செய்யும்’ என்று அறிவிப்பு வந்ததும், அது மதுசூதனனுக்கு கொஞ்சம் ‘கிலி’யை ஏற்படுத்தியது. ஆட்சிமன்றக் குழுவில் அவரும் உறுப்பினர் என்றாலும், எடப்பாடியின் ஆட்கள்தான் அதில் அதிகம். மேலும், ஜெயக்குமார் வேறு முட்டுக்கட்டை போட்டார். ஜெயலலிதா ஜெயித்த இந்தத் தொகுதியில் நிற்க 19 பேர் ஆசைப்பட்டு விருப்ப மனு செய்திருந்தார்கள். இவர்களில், ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருக்கும் எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேனும் அடக்கம். ‘யாருக்குக் கொடுப்பது’ என்பதைவிட, வாய்ப்பு கேட்கும் மற்றவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதே எடப்பாடியின் கவலையாக இருந்தது. ஆட்சிமன்றக் குழுவின் கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று முதலில் அறிவித்தாலும், தஞ்சை எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழாக் கூட்டத்தைக் காரணம் காட்டி வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்கள். ‘தஞ்சை விழா என்பது ஒரு காரணம்தான். வேட்பாளர் யார் என்று முடிவெடுக்க முடியாததால்தான் ஒத்திவைக்கப்பட்டது’ என்று கட்சிக்குள் பேசப்பட்டது.’’

p2bb_1512138708.jpg

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். ‘ஆட்சிமன்றக் குழுவில்தான் வேட்பாளர் தேர்வு’ என்று அறிவித்தாலும், வேட்பாளரை முடிவு செய்யும் இடத்தில் பன்னீரும் எடப்பாடியும் மட்டுமே இருந்தார்கள். ‘மதுசூதனனை எப்படியும் வேட்பாளராக்கிவிட வேண்டும்’ என்ற முடிவில் பன்னீர் இருந்தார். லோக்கல் பிரமுகர் என்ற பலத்தைத் தாண்டி, ‘கடந்த முறை வேட்பாளராக நின்றவர்’ என்ற கூடுதல் தகுதியும் மதுசூதனனுக்கு இருந்தது. எடப்பாடி தரப்பு கடந்த முறை தினகரனை வேட்பாளராக நிறுத்தியிருந்ததால், இந்த முறை உரிமைகோர முடியாத நிலையில் இருந்தது. இதையே தனக்குச் சாதகமாக்கியுள்ளார் பன்னீர். ‘அம்மாவால் அவைத்தலைவராக அறிவிக்கப்பட்டவர் மதுசூதனன். அவருக்கு வாய்ப்பு தராவிட்டால், கட்சியைவிட்டு வெளியேறுவார். அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டாலோ, தினகரனுடன் போனாலோ, நமக்குச் சிக்கல். எனவே, குழப்பம் ஏற்படாதவாறு முடிவெடுங்கள்’ என்று எடப்பாடியிடம் சொன்னாராம் பன்னீர். ‘ஆளாளுக்குக் கேட்கிறார்கள். மதுசூதனனுக்குக் கொடுத்துவிட்டால், மற்றவர்கள் அமைதியாகி விடுவார்கள்’ என்ற லாஜிக்கை உணர்ந்து எடப்பாடியும் சமாதானம் ஆனார். அதனால், மதுசூதனன் தலை தப்பியது.’’

‘‘ஓஹோ!’’

‘‘எடப்பாடியும் பன்னீரும் இந்த உடன்படிக்கையைச் செய்துகொண்ட பிறகுதான், ஆட்சிமன்றக் குழு கூட்டத்துக்கே வந்தார்கள். கூட்டம் 10.30 மணிக்கு  தொடங்கும் என்று அறிவித்தாலும், அதற்கு முன்பாகவே இவர்கள் அ.தி.மு.க அலுவலகம் வந்துவிட்டனர். கூட்டம் நடைபெற்றபோது, அமைச்சர்கள் சிலரும், ஆர்.கே. நகரில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த பாலகங்காவும் வந்திருந்தனர். ஆனால், கூட்ட அரங்குக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஜஸ்டின் செல்வராஜ், உடல்நிலையைக் காரணம் காட்டி வரவில்லை. மற்ற அனைவரும் வந்திருந்தார்கள்.’’

‘‘கூட்டத்தில் காரசார விவாதம் ஏதும் நடைபெற்றதா?’’

‘‘இல்லை. மதுசூதனனை நிறுத்தலாம் என்று பன்னீர் சொல்ல, அமைதியாக இருந்துவிட்டாராம் எடப்பாடி. மௌனம் சம்மதம் என்று அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு, லெட்டர்பேடில் வேட்பாளர் பெயரை பிரின்ட் செய்யுமாறு எடப்பாடி சொன்னதும், பிரின்ட் அவுட் எடுத்துவந்தார்கள். அதில் எடப்பாடியும் பன்னீரும் கையெழுத்திட்டனர். லெட்டர் பேடில் மதுசூதனன் பெயர் இருக்கிறது என்ற தகவல் அரங்குக்கு வெளியே நின்ற பாலகங்காவுக்குத் தெரிந்ததும், அவர் சோகமாக வெளியேறிவிட்டார். ஆனால், ‘நல்ல நேரம் பார்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும்’ என்பதற்காகத்தான் இரண்டு மணி நேரம் கூட்டத்தை இழுத்துக் கடத்தினார்கள்.’’

‘‘மதுசூதனனுக்கு சந்தோஷம்தானே?’’

p2b_1512138726.jpg

‘‘அவருக்கு ‘நிம்மதி’ என்றும் சொல்லலாம். கடந்த ஒரு வாரமாக தினமும் முதல்வர் வீட்டில் தவறாமல் ஆஜராகி யுள்ளார் மதுசூதனன். ‘வயதாகிவிட்டது. கடைசியாக எனக்கு  ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று வெளிப்படை யாகவே பேசியிருக்கிறார். இதுவும் எடப்பாடியின் மனமாற்றத்துக்கு ஒரு காரணம். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தன்னை வேட்பாளராக அறிவிக்கச் சொல்லி முதல்வருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். பாலகங்காவுக்காக அமைச்சர் ஜெயக்குமாரும் வைத்திலிங்கம் எம்.பி-யும் பேசியிருக்கிறார்கள். மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இவர்கள் அனைவரும் அப்செட்.’’

‘‘மதுசூதனன் போட்டியிட மாட்டார் என்று தினகரன் நினைத்ததாகச் சொல்கிறார்களே?’’

‘‘மதுசூதனன் நின்றால் போட்டி கடுமையாக இருக்கும் என்று நினைத்திருப்பார் தினகரன். தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக இதை தினகரன் பார்க்கிறார். தமிழகம் முழுவதிலுமிருந்து தனது அணியின் நிர்வாகிகளை சென்னைக்கு வருமாறு தினகரன் உத்தரவிட்டுள்ளார். தினகரன் பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்தித்தார் அல்லவா... தினகரன் தேர்தலில் நிற்பதைப் பற்றி பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம் சசிகலா. குறைந்த வாக்குகள் வாங்கினால் நிலைமை மோசமாகிவிடும் என்ற கவலையை சசிகலா பகிர்ந்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.’’

p2aa_1512138872.jpg

‘‘தி.மு.க ‘எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம்’ என்று உறுதியாக இருக்கிறதாமே?’’

‘‘அ.தி.மு.க-வின் வாக்குகளை தினகரன் கணிசமாக உடைத்தால் தி.மு.க வெற்றிபெற்றுவிடும் என்று அக்கட்சியினர் நம்புகிறார்கள். தி.மு.க-வுக்கு கூட்டணிக்கட்சிகள் வரிசையாக ஆதரவு கொடுத்து வருவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளரை முதலில் அறிவித்து, பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது தி.மு.க. பழைய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், முதலில் ஆதரவு தெரிவித்தது. புதிய கூட்டணியினரான விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் ஆதரவை அறிவித்துவிட்டன. வியாழக்கிழமை கோவை விமான நிலையத்தில் ஸ்டாலின் - வைகோ சந்திப்பு நடந்தது. அப்போது, வைகோவின் ஆதரவை ஸ்டாலின் கேட்டதாகவும், ‘டிசம்பர் 3-ம் தேதி நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவை அறிவிக்கிறேன்’ என்று வைகோ கூறியதாகவும் சொல்கிறார்கள்.’’

‘‘ஆர்.கே. நகரில் தே.மு.தி.க நிற்காததற்கு என்ன காரணம்?’’

‘‘மூன்று மாதங்களுக்கு முன்பே தே.மு.தி.க அந்த முடிவுக்கு வந்துவிட்டது. ‘ஆர்.கே. நகரில் கடந்த முறை பணப் பட்டுவாடா நடைபெற்றதால்தான் தேர்தல் நின்றது. ஆனால், பணம் கொடுத்தவர்கள்மீது ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த முறையும் அதுபோலவேதான் நடக்கும். எதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்ய வேண்டும்?’ என்று கட்சி நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டுதான் சிங்கப்பூருக்குப் பறந்துள்ளார் விஜயகாந்த். 10 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் தமிழகம் திரும்புகிறார்.’’

p2_1512138841.jpg

‘‘எல்லா கட்சிகளும் முடிவெடுத்துவிட்டாலும், பி.ஜே.பி தரப்பு மௌனமாக இருக்கிறதே?’’

‘‘ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிப்பு வெளியான மறுதினமே பி.ஜே.பி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சிலர், ‘தமிழிசை சௌந்தர்ராஜனே ஆர்.கே. நகரில் நிற்கட்டும்’ என்று சொன்னார்கள். ஆனால், ‘வாக்கு வங்கியே இல்லாத ஆர்.கே நகரில் மாநிலத் தலைவரை நிறுத்தி, தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்’ என்று தமிழிசையிடமே நேரடியாக சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.’’

‘‘கடந்த முறை கங்கை அமரனை நிறுத்தினார்களே?’’

‘‘இந்த முறை தன்னை வேட்பாளராக அறிவித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான் கங்கை அமரன் எங்கோ வெளியூர் கிளம்பிவிட்டார் என்று கிண்டலாகச் சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். அ.தி.மு.க-வை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுக்கவும் அவர்களுக்குக் கூச்சமாக இருக்கிறது. தேர்தலில் நின்று குறைவான வாக்குகள் பெற்றால், அடுத்து வரப்போகும் தேர்தல்களில் கூட்டணிக்கட்சிகளிடம் பேரம் பேசவும் முடியாது. குழப்பத்தில் இருக்கிறது பி.ஜே.பி.’’

‘‘நர்ஸ்கள் போராட்டத்தில் தமிழக அரசை நீதிமன்றம் காப்பாற்றிவிட்டதே?’’

‘‘ஆமாம். கடந்த முறை தமிழக  அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடியபோதும், நீதிமன்றம்தான் தலையிட்டது. ஆனால், நர்ஸ்கள் போராட்டத்தை தமிழக அரசு மிக மோசமாக ஒடுக்கியதாக அரசு ஊழியர்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 27-ம் தேதி நான்காயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகளுடன் பலர் வந்திருந்தனர். டி.எம்.எஸ் வளாகத்தில் இருந்த கழிவறைகள் அனைத்தையும் பூட்டினர். உள்ளே இருப்பவர்களை வெளியே விடாமல், வெளியில் இருப்பவர்களையும் உள்ளே விடாமல் தடுத்தார்கள். பேச்சுவார்த்தைக்குச் சென்ற 32 செவிலியர்களையும் ‘போராடுபவர்களுக்கு வேலை பறிபோனால், சிலர் தற்கொலை செய்துகொள்வார்கள். அந்தப் பழி உங்களையே வந்து சேரும். உங்களுக்கு தண்டனையும் கிடைக்கும்’ என்று அமைச்சர் தரப்பினரும், அதிகாரிகளும் மிரட்டியுள்ளார்கள். ‘எந்த முடிவும் எடுக்காமல், மிரட்டுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறது அரசு’ என்று அரசு ஊழியர்கள் கொந்தளிக்கிறார்கள்’’ என்ற கழுகார், சிறகடித்துப் பறந்தார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்சி
படங்கள்: தி.குமரகுருபரன், கே.ஜெரோம்


p2a_1512138805.jpg

* ஆர்.கே. நகர் தேர்தலில் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தாலும், அவர்கள் தி.மு.க மேடையில்  ஏறமாட்டார்களாம். தனியாக தங்கள் கட்சி சார்பில் பிரசாரம் செய்வார்களாம்.        ‘தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் இல்லாத கூட்டணி அமைப்போம்’ என்று இரண்டு ஆண்டு களுக்குமுன் தீர்மானம் போட்டதால் இந்த நிலைப்பாடு.

* ‘மதுசூதனன் ஜெயித்து எம்.எல்.ஏ-வாக வேண்டுமானால் ஆகட்டும், பரவாயில்லை. ஆனால், அவரை அமைச்சர் ஆக்கக் கூடாது’ என்று முதல்வர் எடப்பாடியிடம் சொன்னாராம் மூத்த அமைச்சர் ஒருவர். இது மதுசூதனன் காதுக்கே வந்துவிட்டது.

* டாஸ்மாக் பார் வைத்திருப்பவர்களை அதிக வரி கட்டச் சொல்லி உத்தரவு போட்டதோடு, ‘பணம் கட்டாவிட்டால் உரிமத்தை ரத்து செய்வோம்’ என்றும் அரசு சொல்லியுள்ளது. ‘டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் இருப்பது எங்களது இடத்தில்தான். அதிக நெருக்கடி கொடுத்தால் கடையையும் சேர்த்து மூடிவிடுவோம்’ என்று பார் உரிமையாளர்கள் இதை எதிர்த்து மிரட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

* சென்னை மாநகராட்சியின் மொத்த ‘வரும்படி’யையும் தீர்மானிப் பவர், அமைச்சரின் உறவினரான கொங்கு பெல்ட் பிரமுகராம். ‘யாருக்கு எந்த கான்ட்ராக்ட்? எந்த அதிகாரியை மாற்றலாம்?’ என்பதெல்லாம் இவர் கை காட்டுகிறவர்களுக்கே சாதகமாகிறதாம்.

* பலரையும் புறக்கணித்துவிட்டு, ‘இவர் சேவை எனக்கு வேண்டும்’ என்று ஒற்றைக் காலில் நின்றாராம் அமைச்சர் வேலுமணி. அதன்பிறகே, கோவை கமிஷனராக நியமிக்கப்பட்டார் பெரியய்யா. இவரின் சேவைக்காக ஏற்கெனவே அங்கே இருந்த அமல்ராஜை திருச்சிக்குத் திடீரென்று தூக்கி அடித்தார்கள். 

* மத்திய உளவுத்துறையின் சென்னை பொறுப்பில் இருப்பவருக்கும், டெல்லியில் இதே துறையின் ‘ஸ்பெஷல்’ பதவியில் இருப்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். இருவரும் போனில்கூடப் பேசிக்கொள்வதில்லையாம்.

* நாமக்கல் மாவட்டத்தில் ‘மேட்டூர்’ என்கிற அடைமொழியுடன் கூடிய பிரபல தாதாவைக் கண்டால் தொழிலதிபர்கள் அலறுகிறார்கள். தாதாவின் நெட்வொர்க் சேலம், நாமக்கல் என்று விரிவாகிக்கொண்டே போகிறது. ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் வசூலிப்பது என்று கொடி கட்டிப் பறக்கிறார் இந்த தாதா. இவரைப் போலீஸார் நெருங்கினால், எதிர்பாராத இடத்திலிருந்து போன் வருகிறதாம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விரித்த சடைமுடி தொடுத்து முடிக்குமுன் எடுத்த  சபதம் முடித்தவளே    
    • தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.    தமிழ் வர்த்தகர் மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர். கொள்கை அரசியல்   அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.   அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.   அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும்.  நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907
    • அல்..வாயான்  ..என்பதை வைத்து ...அல்லாவின் ஆள் என்றொருவர் முதல் ஒரு திரியில் குறிப்பிட்டார்.. இப்ப நீங்கள்  புளட்  என்கிறியள் .. நான் ஏங்கைசாமி என் தலையை மோதுவன்...😁...சத்தியாமாச்    சொல்லுறன்........... தான்.
    • தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750.  இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.