Jump to content

எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல! #HBDSilkSmitha


Recommended Posts

எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல! #HBDSilkSmitha

 
 

 

 

 

-கண்ணபிரான் இரவிசங்கர்

சிலுக்கு: இந்தப் பேரே.. பல பேருக்கு.. பலப்பல உணர்ச்சிகளைத் தரவல்லது!

*சிலருக்குக் கிளுகிளுப்பு
*சிலருக்கு ஒவ்வாமை
*சிலருக்கு அழகுணர்ச்சி
*சிலருக்கு நடிப்புத் திறமாடல்
*சிலருக்கோ.. இவை அனைத்தும் கலந்த கலவை!

சமூகம், இவள் கதையை "Dirty Picture" என்று பொய்யான பேரிட்டு எடுத்தாலும்,சிலுக்கு 'டர்ட்டி கேர்ள்' அல்ல என்பதை அன்பறிவுள்ள பெண்கள்/ ஆண்கள் இருவருமே கண்டு கொள்வார்கள்!

சிலுக்கு

அக்கால ரசிகர்கள் மட்டுமல்ல, இக்கால ரசிகர்களும் சிலுக்குக்கு உண்டு!அவள் உதிர்ந்து போய்ப் பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பையன்களும், யூட்யூப் படங்களைப் பார்த்தே, பெரும் சிலுக்கு விசிறிகளாக, கண்ணழகில் கட்டுண்டு கிடக்கிறார்கள்!ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான்!ரேவதி, அமலா, நதியா, ஷாலினி முதலிய பெண்களும்.. சிலுக்கின் ஸ்டைல், உடை அழகு, நடன அசைவு பற்றி இன்றும் வியந்து பேசுகிறார்கள்!

35 வயதிலேயே, உதிர்ந்த விட்ட ஒரு பெண் பூ..சூப்பர் ஸ்டார் ரஜினி, காதல் இளவரசன் கமல், நடிகர் திலகம் சிவாஜி என்று.. பலரும் இவள் ஒரேயொரு நடனக் 'கால்ஷீட்'டுக்காகக் காத்துக் கிடந்த தமிழ்ச் சினிமா மாயங்கள்!அப்படி என்ன கண்டு விட்டார்கள், இந்த மாய மலர் பொம்மல் பூவிடம்?

சில்க்சிலுக்கை, ஐட்டம் டான்சர் என்ற ஒரேயொரு குப்பிக்குள் அடைத்துவிட முடியாது!அப்படி எத்தனையோபேரை தமிழ்ச் சினிமா கண்டுள்ளது; ஆனால் "நீ இல்லா விட்டால் இன்னொருத்தி" என்ற அளவில் தான் அவர்களையெலல்லாம் வைத்தது! Super Starகள் யாரும் காத்துக் கிடப்பதில்லை! இன்றோ, கதாநாயகிகளே அது போல் நடனங்களை ஆடியும் விடுகின்றனர்! அப்பறம் ஏன் இந்தச் சிலுக்கு மாயை?

சிலுக்கு, கிளுகிளு கவர்ச்சிப் பொருள் மட்டுமே அல்ல!

விழி மொழிகள், உடல் மொழிகள், குழை மொழிகள்.. சிலுக்கின் பரிமாணம்!

இன்பம் காட்டும் இன்முகம், பாங்கு காட்டும் சோகமுகம் .. இப்படிப் பன்முக நடிப்பு!

 

சிலுக்கின் "முழு நடிப்புப் பரிமாணம்" காண, இரண்டே இரண்டு தமிழ்ச் சினிமாக்கள் போதும்!

1.அலைகள் ஓய்வதில்லை
2.அன்று பெய்த மழையில்

வண்டிச் சக்கரத்தில், 'வா மச்சான் வா - சிலுக்கோட கையால வாங்கிக் குடி" போன்ற பாடல்கள், குலுக்கும் சிலுக்கையே காட்டின; 

ஆனால், அதையும் தாண்டிய "நடிப்பைக்" காட்டியது, அலைகள் ஓய்வதில்லை!"எஸ்தர்" என்ற கிறித்துவப் பெண்ணாய், கணவனின் ஆணாதிக்கம் எதிர்த்து, காதல் கலப்புத் திருமணம் செய்து வைக்கும் சிலுக்கு!ரகசியப் போலீசில் "பாவா பாவா" என்று குழையும் மென்குரல் பெண்ணுக்குள்ளா, இத்துணை ஆணாதிக்க எதிர்ப்புக் குரல்? அது, மூன்றாம் பிறை வரைக்கும் கூடத் தொடர்ந்தது! சமூகக் கட்டமைப்புக்களை மீறும் பெண்மையின் துணிச்சலழகு!

அலைபாயுதே படத்தில், ஷாலினி அழகைக் Camera வடித்தது போலவே, சிலுக்கின் அழகையெல்லாம் திரட்டிக் காட்டிய ஒளிப்பதிவுப் படம், அன்று பெய்த மழையில்! 

அசோக்குமார் என்ற ஒளிப்பதிவு இயக்குநருக்கு நன்றி! சிலுக்கு, வில்லியா? நாயகியா? அன்பா? அழகா? என்று ஒவ்வொரு காட்சியும் நகர்த்தும் ஒளிமிகு படம்!

*பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் ஆகட்டும்..சில்க் ஸ்மிதா
*இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் ஆகட்டும்..
*மோகன்லால் போன்ற பிறமொழி நாயகர்கள் ஆகட்டும்..
அனைவரும், சிலுக்கு எனும் சிற்பத்தைத் தங்கள் பாணியில் செதுக்கியே உள்ளார்கள்!

சொல்லப் போனால், தமிழ்ச் சினிமா தராத நிம்மதியும் தன்மானமும்.. மலையாளச் சினிமா தந்தது சிலுக்குக்கு!அவள் கடித்துப் போட்ட ஆப்பிள்களை ஏலம் எடுப்பதும், ஒரே பாடலில் தோன்றி.. கதாநாயகியை விட அதிகச் சம்பளம் வாங்குவதுமாய், தமிழ்ச் சினிமா ரசிகர்கள் அதீதம் காட்ட..

மலையாள உலகமோ, சிலுக்கின் "கவர்ச்சி உள்ளிட்ட நடிப்பைக்" கூராக்கி, அவள் தன்மானம் கெடாமலும் கொண்டாடியது!

சிவாஜி படங்களில் கூட, சிலுக்கின் நிலை சிரிப்பை வரவழைக்கும்:-) . "நடிகர் திலகம்" என்ற நயன் மிகு மதிப்பால், மொத்த படக்குழுவும் எழுந்து நிற்கும் போது, சிலுக்கு மட்டும் எழாமல் அமர்ந்திருக்க..

"திமிர் புடிச்சவ" என்ற சொல்லுக்கிடையே, "நான் எழுந்து நின்னா, குட்டைப் பாவாடை உடையில், சிவாஜி சாருக்குக் கூச்சமா இருக்குமேன்னு தான் எழுந்து நிக்கலை"-ன்னு அப்பாவியாய்ச் சொன்ன சிலுக்கு! சிவாஜியே விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு!:)

CPmKG0cWsAAh2UU.jpg

இப்படி, தன் கூச்சம் கடந்தவள், பிறர் கூச்சம் உணர்ந்த "மென்மை"! 

அதான் சிலுக்கு! இதே மென்மைச் சிலுக்கு தான், நடிக்க வரவில்லையென்றால், நக்சலைட் ஆகியிருப்பேன் என்றும் சொன்னது!

"சீனு, முள்ளு குத்தினா, ஊசி போடணுமா?" என்று கமலிடம் அப்பாவிக் குரலில் கேட்கும் அதே சிலுக்கு தான்,கமலின் வயதான அப்பா கையில் முத்தம் குடுத்துத் திகைக்கவும் செய்தது! 

"உன்னை விட பெரிய கலைஞரை எனக்கு அறிமுகப்படுத்து" என்று கமல் அப்பா கேட்க, கமல் அறிமுகம் செய்தது, சிலுக்கு என்ற பெண்ணையே!

உடலுக்குள் அடைபட்ட உள்ளம்! அவள் உடலே அவள் செய்தி!அவள் உள்ளமோ அன்பர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்!

Unwept, Unhonoured, Unsung என்றோர் ஆங்கிலக் கவிதை!

சிலுக்கின் தனிமையும், வாழ்க்கை முடிவும் அப்படித் தான் ஆகிப் போனது!

அவள் Celluloid இன்பத்தில் பங்கு போட்டுக் கொண்ட திரையுலகம், அவள் துயர இறப்பில் கலந்து கொண்ட சிறுபான்மை மிக மிகச் சிறுமையே!

ஐயன் வள்ளுவன்.. பெண்ணின் "கண்சக்தி" குறித்துப் பேசுவான்! அது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ, சிலுக்கின் கண்களுக்குக் கச்சிதப் பொருத்தம்!

கொடும்புருவம் கோடா மறைப்பின் - நடுங்கஞர்

செய்யல மன் இவள்கண்!

ஏய் புருவங்களே நீர் வாழ்க! இவள் கண்ணுக்குத் திரைபோட்டு என்னைக் காப்பாற்றுங்களேன்?

ஐயன் வழியில், நாமும் முடிப்போம், நகைச்சுவையாக!

எல்லாச் சிலுக்கும் சிலுக்கல்ல - ‘ஆண்’றோர்க்கு
ஸ்மிதா சிலுக்கே சிலுக்கு!

விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதாவுக்கு.. நினைவாலே சிலை செய்து, மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், சிலுக்கு!

https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/73959-about-veteran-tamil-cinema-actress-silk-smitha.html/rs=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.