Jump to content

சர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்


Recommended Posts

சர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்

 
20171004_144215.jpg

யாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொழில் துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கிறார். எங்கள் தேசத்தின் வளங்களை உச்சமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிற விருப்புடையவர். புதிய விடயங்களை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஆர்வம் உள்ளவர். அவரது அனுபவமும், வயதும், பக்குவமும் அவர் பேச்சில் தெரிகிறது. Nutri food packers எனும் நிறுவனத்தை கிளுவானை வீதி, கோப்பாய், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வருகிறார்.
20171004_144804.jpg

தொழில் முயற்சியாளர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் சொல்வதைக் கேட்போம். நான் பிறந்த மண்  கொல்லங்கலட்டி தெல்லிப்பளை. காங்கேசன்துறை இராணுவமுகாமுக்கு அருகில் எங்களது வசிப்பிடம் அமைந்திருந்த காரணத்தினால் 1990 இலேயே வீட்டை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. 1995 வரையும் வலிகாமம் மேற்கு பகுதிகளான சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேசங்களில் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக வாழ்ந்து வந்தோம். பின்னர் 1995 இல் குடாநாட்டு இடப்பெயர்வு. அதனைத் தொடர்ந்து 2009 வரையும் வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வந்தோம். யுத்தகாலத்துக்கு முந்தைய என்னுடைய கடந்த காலத்தில் அரியாலையில் உள்ள  பழவகைகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் உற்பத்தித்துறை சார்ந்த பொறுப்பில் வேலை செய்தேன். பின், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையிலும் கடமையாற்றினேன். அதன் பிற்பாடு இடப்பெயர்வுடன் வன்னியில் சிறுவர் பாதுகாப்பு  நிறுவனமொன்றில் மாவட்ட முகாமையாளராகவும் கடமையாற்றினேன்.
20171004_144102.jpg

இறுதியுத்தத்திற்கு பிறகு யாழ்ப்பாணம் திரும்பிய பிற்பாடு கடந்த கால அனுபவங்களையும் வைத்து நாங்கள் ஏன் சொந்தமாக தொழில் தொடங்கக்கூடாது என்கிற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு எனது மகளும் உதவிக்கரமாக இருந்தார்.
20171004_154058.jpg

எனது மகளுடன் இணைந்து ஒரு குடும்ப வியாபாரம் போல் தான் சிறு உற்பத்தி முயற்சிகளை  2015 நவம்பரில் ஆரம்பித்தோம். பழங்கள், மரக்கறிகளை நீரகற்றி உலர்த்தி பதனிடும் முறையை நாங்கள் கையாள்கின்றோம். இப்பொழுது முருங்கை இலை மா, இராசவள்ளி மா, பாவற்காய் வற்றல், பாவற்காய் வடகம், வேப்பம்பூ வடகம் ஆகியவற்றை தயாரித்து வருகிறோம். இவற்றைப் பொதி செய்து  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம்.  2016 இல் இடம்பெற்ற யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் எமது உற்பத்திப் பொருட்களை பார்வைக்கு வைத்து இருந்தோம். அந்த நேரத்தில் தான் ஏற்றுமதிக்கான சில தொடர்புகளும் கிடைத்தன. நேரடியாக ஏற்றுமதியில் ஈடுபடாவிட்டாலும் ஏனைய முகவர்கள் ஊடாக ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றோம்.
20171004_144133.jpg

முருங்கையினுடைய எல்லாப் பகுதிகளுமே அதிகளவு ஊட்டச் சத்து நிறைந்தவையாகும். எங்களின் எல்லோரின் வீடுகளிலும் முருங்கை மரம் இருக்கிறது.   பெரும்பாலும் முருங்கை காயைத் தான் கறித் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் முருங்கை இலையின் மகத்துவத்தை பெரிதாக யாரும் உணரவில்லை. நாங்கள்   முருங்கை இலைகளை Yarl herbs export என்கிற நிறுவனத்திடமிருந்து  கொள்வனவு செய்து உலர்த்தி பதனிட்டு மாவாக்கி சுகாதாரமான முறையில் பொதியிட்டு சந்தைப்படுத்துகிறோம்.   வெளிநாடுகளில் இதற்கு நல்ல கிராக்கி உள்ளது.  புட்டு, இடியப்பம் அவிக்கும் மாவுடன் முருங்கை இலை மாவையும்  கலந்து விநியோகிக்கும் திட்டம் ஒன்றை நிறுவனமொன்று இங்கு ஆரம்பிக்க இருக்கிறது. ஆப்பிரிக்காவில் குழந்தைகளின் போசனைப் பெறுமானத்தை அதிகரிக்க கோதுமைமாவுடன், முருங்கை இலை மாவைக் கலந்து உபயோகப்படுத்துகிறார்கள். முருங்கை இலையில் புட்டு அவிக்கும் நடைமுறை இங்கே நிறைய காலமாக   இருக்கிறது. அன்னியச் செலாவணியை பெருமளவில் ஈட்டக் கூடிய ஒரு தொழில் துறையாக வளரக் கூடிய சாத்தியத்தை இது கொண்டுள்ளது. இது தொடர்பில் எங்களது விவசாய திணைக்களங்களோ சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களோ அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இன்னும் இங்கு ஏராளமான உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றன. அதன் மூலம் எம்மக்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
20171004_144137.jpg

பாகற்காயை வற்றல் போட்டு பெருமளவு ஏற்றுமதி செய்ய முடியும். இவற்றுக்கு வெளிநாடுகளில்  நல்ல மதிப்பு உண்டு. கடந்த வருடம் சந்தையில் நியாயமான அளவு பாகற்காய்களை 60 ரூபாவிற்கும் 80 ரூபாவிற்கும் இடையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.    ஆனால் இம்முறை எதிர்பார்த்த உற்பத்தி இல்லாமையால் சந்தையில் பாவற்காய் விலை சராசரியாக 160 ரூபாயாக இருந்தது. இதனால் பாவற்காயை உலர்த்தி பெறும் வருவாயை விட பாவற்காயை கொள்வனவு செய்யும் விலை அதிகமாக இருந்தமையால் இந்த ஆண்டு பாவற்காயை கொள்வனவு செய்ய முடியவில்லை.  இதனால் தொடர்ச்சியாக உலர்த்த்துவதற்கு பாவற்காயை பெற்றுக் கொள்வது சிரமமாக உள்ளது. தொடர்ச்சியான கிடைப்பனவு இல்லாதது எமது தொழிலுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. பருவகாலநிலை மாற்றம், வரட்சி, பீடைகளின் தாக்கம் காரணமாக விவசாய பொருள் உற்பத்தி இவ்வாண்டு  வீழ்ச்சி அடைந்துள்ளது.
20171004_144105.jpg

வேப்பம்பூ வடகம் போன்ற  பாரம்பரிய உணவுவகைகளையும் தயாரித்து வருகிறேன்.  பாகற்காய் வடகத்தை இங்கே அறிமுகப்படுத்தி அது நல்ல சந்தை வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளது.  மோர்மிளகாய்க்கும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு மிளகாயின் விலை மிகவும் உச்சமாக இருந்தபடியால் மோர்மிளகாய் உற்பத்தி செய்ய முடியவில்லை.
பொலிக்னைட் சீட்டினால் (வெப்பத்தை விரைவாக கடத்தி தக்க வைத்திருக்கும் ஒரு வகை மேற்கூரை) சுற்றி மூடப்பட்ட அறையில் வைத்து தான் முருங்கை இலைகள், பாவற்காய்கள், இராசவள்ளிக்கிழங்குகள்  உலர்த்தப்படுகின்றன. சூரிய சக்தியின் மூலம் இவற்றை திறம்பட உலர்த்த முடியும்.

இப்பொழுது எங்கள் தொழிலில் உள்ள பிரதான சவால், உற்பத்தி மூலப் பொருட்களை தடையற்ற விதத்தில் தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளும் பொறிமுறையை உருவாக்குவது தான். வரட்சியுடன் கூடிய காலநிலையை எதிர்கொண்டு மரக்கறி உற்பத்திகள் குறிப்பாக பாவற்காய் உற்பத்தியை மேற்கொள்ளும்  நோக்கில் பசுமைக் குடில்களை அமைத்துள்ளேன். கிளிநொச்சியில் 2 ஏக்கர் காணியை வாங்கி அங்கும் பயிரிடும் நோக்கில் உள்ளேன்.

இவை எமது விவசாயிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நினைக்கிறேன். எவ்வளவுக்கெவ்வளவு தொழிநுட்பங்களும் இவ்வாறான முயற்சிகளும் பரவலடையுதோ அவ்வளவுகவ்வளவு எமது தேசத்தின் உற்பத்தி அதிகரிக்கும்.
20171004_144145.jpg

சந்தை விலை ஏற்றத்தாழ்வு, பருவகாலம் சீரின்மை, நிலையான வழங்கல் இல்லாமை தான் எதிர்நோக்கும் பிரதான சிக்கல்களாக உள்ளன.  இஸ்ரேல் நாட்டவர்கள்  பாலைவனமே தங்களுக்கு ஒரு வளம் (desert is a resouree) என்கிறார்கள். விவசாய ஆராய்ச்சிகளும், விவசாய வணிகமும் ஒரே தண்டவாளத்தில் செல்லும் ரயில் மாதிரி கைகோர்த்து பயணிக்கும் போது தான் பொருளாதாரத்தில் மேன்மை நிலையை அடையலாம்.

ஆனால், இங்கு விவசாய ஆராய்ச்சிகள் ஒரு நிலையிலும் விவசாய வணிகமும், அபிவிருத்தியும் இன்னொரு நிலையிலும் உள்ளன. இங்குள்ள அரச நிறுவனங்கள் பெரிதாக விவசாய வணிகத்தை முன்னெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. அண்மையில் தாய்லாந்துக்கு சென்று வந்தேன். அங்கு பனம்பொருள் உற்பத்தி மிகவும் விஞ்ஞானபூர்வமான தயாரிப்புடன் மேற்கு நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதியாகிறது.  அதுவும் பனையில் இருந்து பலவகையான பொருட்கள். பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தாய்லாந்தில் உள்@ர் மூலப்பொருட்களான மூங்கில்களை வைத்து பசுமைக்குடில்களை சிறப்பான முறையில் அமைத்து  உள்ளார்கள். இந்தியாவில் பசுமைக்குடில்களை அமைப்பதற்கு சவுக்கு மரத்தை பாவிக்கின்றார்கள்.

தென்னிலங்கையை பொறுத்தவரையில் ஒரு முயற்சியாளரின் வளர்ச்சிக்கு வங்கிகள், நிறுவனங்கள் என்று எல்லாமே நன்றாக துணை புரிகின்றன. எங்கள் பகுதிகளில் அந்த நிலை இன்னும் வரவில்லை. அவர்களோடு ஒப்பிடும் போது நாங்கள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றோம். பழ அபிவிருத்தி சபை சிறிமாவின் காலத்தில் இருந்தது. இங்கிருந்து மாம்பழங்களும் பெரும்தொகையில் ஏற்றுமதியானது. அந்த நிலை திரும்பவும் வர வேண்டும்.

எங்களது உற்பத்திப் பொருட்களை உள்@ரில் விநியோகம் செய்வது கொஞ்சம் கடினமாகவுள்ளது. எங்களுடைய பொருட்களின் விற்பனைக்கு யாழில் உள்ள TCT  நிறுவனம்  பெருமளவு உதவி செய்கிறது. எனது பொருளுக்கு மட்டுமல்ல உள்ர் உற்பத்தியாளர்கள் பலருக்கும் சந்தைவாய்ப்பை அந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

 எமது பிரதேசத்தில் கூட்டு முயற்சிக்கான பரந்த தளத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இளம் தொழில் முயற்சியாளர்கள் எம் பகுதிகளில் புதிதாக உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிலை தொடர வேண்டும். சரியான விலையில் மூலப்பொருட்களை பெற்று தொடர்ச்சியாக உற்பத்திகளை மேற்கொள்ளும் நிலைக்கு நாங்கள் வளர வேண்டும். அப்போது தான் சர்வதேச சந்தையிலும் ஒரு ஸ்திரமான நிலையை தக்கவைக்க முடியும்.

தீசன்
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

http://www.nimirvu.org/2017/11/blog-post_30.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 02/12/2017 at 6:29 PM, நவீனன் said:

சர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்

 
20171004_144215.jpg

யாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொழில் துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கிறார். எங்கள் தேசத்தின் வளங்களை உச்சமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிற விருப்புடையவர். புதிய விடயங்களை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஆர்வம் உள்ளவர். அவரது அனுபவமும், வயதும், பக்குவமும் அவர் பேச்சில் தெரிகிறது. Nutri food packers எனும் நிறுவனத்தை கிளுவானை வீதி, கோப்பாய், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வருகிறார்.
20171004_144804.jpg

தொழில் முயற்சியாளர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் சொல்வதைக் கேட்போம். நான் பிறந்த மண்  கொல்லங்கலட்டி தெல்லிப்பளை. காங்கேசன்துறை இராணுவமுகாமுக்கு அருகில் எங்களது வசிப்பிடம் அமைந்திருந்த காரணத்தினால் 1990 இலேயே வீட்டை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. 1995 வரையும் வலிகாமம் மேற்கு பகுதிகளான சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேசங்களில் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக வாழ்ந்து வந்தோம். பின்னர் 1995 இல் குடாநாட்டு இடப்பெயர்வு. அதனைத் தொடர்ந்து 2009 வரையும் வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வந்தோம். யுத்தகாலத்துக்கு முந்தைய என்னுடைய கடந்த காலத்தில் அரியாலையில் உள்ள  பழவகைகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் உற்பத்தித்துறை சார்ந்த பொறுப்பில் வேலை செய்தேன். பின், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையிலும் கடமையாற்றினேன். அதன் பிற்பாடு இடப்பெயர்வுடன் வன்னியில் சிறுவர் பாதுகாப்பு  நிறுவனமொன்றில் மாவட்ட முகாமையாளராகவும் கடமையாற்றினேன்.
20171004_144102.jpg

இறுதியுத்தத்திற்கு பிறகு யாழ்ப்பாணம் திரும்பிய பிற்பாடு கடந்த கால அனுபவங்களையும் வைத்து நாங்கள் ஏன் சொந்தமாக தொழில் தொடங்கக்கூடாது என்கிற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு எனது மகளும் உதவிக்கரமாக இருந்தார்.
20171004_154058.jpg

எனது மகளுடன் இணைந்து ஒரு குடும்ப வியாபாரம் போல் தான் சிறு உற்பத்தி முயற்சிகளை  2015 நவம்பரில் ஆரம்பித்தோம். பழங்கள், மரக்கறிகளை நீரகற்றி உலர்த்தி பதனிடும் முறையை நாங்கள் கையாள்கின்றோம். இப்பொழுது முருங்கை இலை மா, இராசவள்ளி மா, பாவற்காய் வற்றல், பாவற்காய் வடகம், வேப்பம்பூ வடகம் ஆகியவற்றை தயாரித்து வருகிறோம். இவற்றைப் பொதி செய்து  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம்.  2016 இல் இடம்பெற்ற யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் எமது உற்பத்திப் பொருட்களை பார்வைக்கு வைத்து இருந்தோம். அந்த நேரத்தில் தான் ஏற்றுமதிக்கான சில தொடர்புகளும் கிடைத்தன. நேரடியாக ஏற்றுமதியில் ஈடுபடாவிட்டாலும் ஏனைய முகவர்கள் ஊடாக ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றோம்.
20171004_144133.jpg

முருங்கையினுடைய எல்லாப் பகுதிகளுமே அதிகளவு ஊட்டச் சத்து நிறைந்தவையாகும். எங்களின் எல்லோரின் வீடுகளிலும் முருங்கை மரம் இருக்கிறது.   பெரும்பாலும் முருங்கை காயைத் தான் கறித் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் முருங்கை இலையின் மகத்துவத்தை பெரிதாக யாரும் உணரவில்லை. நாங்கள்   முருங்கை இலைகளை Yarl herbs export என்கிற நிறுவனத்திடமிருந்து  கொள்வனவு செய்து உலர்த்தி பதனிட்டு மாவாக்கி சுகாதாரமான முறையில் பொதியிட்டு சந்தைப்படுத்துகிறோம்.   வெளிநாடுகளில் இதற்கு நல்ல கிராக்கி உள்ளது.  புட்டு, இடியப்பம் அவிக்கும் மாவுடன் முருங்கை இலை மாவையும்  கலந்து விநியோகிக்கும் திட்டம் ஒன்றை நிறுவனமொன்று இங்கு ஆரம்பிக்க இருக்கிறது. ஆப்பிரிக்காவில் குழந்தைகளின் போசனைப் பெறுமானத்தை அதிகரிக்க கோதுமைமாவுடன், முருங்கை இலை மாவைக் கலந்து உபயோகப்படுத்துகிறார்கள். முருங்கை இலையில் புட்டு அவிக்கும் நடைமுறை இங்கே நிறைய காலமாக   இருக்கிறது. அன்னியச் செலாவணியை பெருமளவில் ஈட்டக் கூடிய ஒரு தொழில் துறையாக வளரக் கூடிய சாத்தியத்தை இது கொண்டுள்ளது. இது தொடர்பில் எங்களது விவசாய திணைக்களங்களோ சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களோ அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இன்னும் இங்கு ஏராளமான உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றன. அதன் மூலம் எம்மக்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
20171004_144137.jpg

பாகற்காயை வற்றல் போட்டு பெருமளவு ஏற்றுமதி செய்ய முடியும். இவற்றுக்கு வெளிநாடுகளில்  நல்ல மதிப்பு உண்டு. கடந்த வருடம் சந்தையில் நியாயமான அளவு பாகற்காய்களை 60 ரூபாவிற்கும் 80 ரூபாவிற்கும் இடையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.    ஆனால் இம்முறை எதிர்பார்த்த உற்பத்தி இல்லாமையால் சந்தையில் பாவற்காய் விலை சராசரியாக 160 ரூபாயாக இருந்தது. இதனால் பாவற்காயை உலர்த்தி பெறும் வருவாயை விட பாவற்காயை கொள்வனவு செய்யும் விலை அதிகமாக இருந்தமையால் இந்த ஆண்டு பாவற்காயை கொள்வனவு செய்ய முடியவில்லை.  இதனால் தொடர்ச்சியாக உலர்த்த்துவதற்கு பாவற்காயை பெற்றுக் கொள்வது சிரமமாக உள்ளது. தொடர்ச்சியான கிடைப்பனவு இல்லாதது எமது தொழிலுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. பருவகாலநிலை மாற்றம், வரட்சி, பீடைகளின் தாக்கம் காரணமாக விவசாய பொருள் உற்பத்தி இவ்வாண்டு  வீழ்ச்சி அடைந்துள்ளது.
20171004_144105.jpg

வேப்பம்பூ வடகம் போன்ற  பாரம்பரிய உணவுவகைகளையும் தயாரித்து வருகிறேன்.  பாகற்காய் வடகத்தை இங்கே அறிமுகப்படுத்தி அது நல்ல சந்தை வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளது.  மோர்மிளகாய்க்கும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு மிளகாயின் விலை மிகவும் உச்சமாக இருந்தபடியால் மோர்மிளகாய் உற்பத்தி செய்ய முடியவில்லை.
பொலிக்னைட் சீட்டினால் (வெப்பத்தை விரைவாக கடத்தி தக்க வைத்திருக்கும் ஒரு வகை மேற்கூரை) சுற்றி மூடப்பட்ட அறையில் வைத்து தான் முருங்கை இலைகள், பாவற்காய்கள், இராசவள்ளிக்கிழங்குகள்  உலர்த்தப்படுகின்றன. சூரிய சக்தியின் மூலம் இவற்றை திறம்பட உலர்த்த முடியும்.

இப்பொழுது எங்கள் தொழிலில் உள்ள பிரதான சவால், உற்பத்தி மூலப் பொருட்களை தடையற்ற விதத்தில் தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளும் பொறிமுறையை உருவாக்குவது தான். வரட்சியுடன் கூடிய காலநிலையை எதிர்கொண்டு மரக்கறி உற்பத்திகள் குறிப்பாக பாவற்காய் உற்பத்தியை மேற்கொள்ளும்  நோக்கில் பசுமைக் குடில்களை அமைத்துள்ளேன். கிளிநொச்சியில் 2 ஏக்கர் காணியை வாங்கி அங்கும் பயிரிடும் நோக்கில் உள்ளேன்.

இவை எமது விவசாயிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என நினைக்கிறேன். எவ்வளவுக்கெவ்வளவு தொழிநுட்பங்களும் இவ்வாறான முயற்சிகளும் பரவலடையுதோ அவ்வளவுகவ்வளவு எமது தேசத்தின் உற்பத்தி அதிகரிக்கும்.
20171004_144145.jpg

சந்தை விலை ஏற்றத்தாழ்வு, பருவகாலம் சீரின்மை, நிலையான வழங்கல் இல்லாமை தான் எதிர்நோக்கும் பிரதான சிக்கல்களாக உள்ளன.  இஸ்ரேல் நாட்டவர்கள்  பாலைவனமே தங்களுக்கு ஒரு வளம் (desert is a resouree) என்கிறார்கள். விவசாய ஆராய்ச்சிகளும், விவசாய வணிகமும் ஒரே தண்டவாளத்தில் செல்லும் ரயில் மாதிரி கைகோர்த்து பயணிக்கும் போது தான் பொருளாதாரத்தில் மேன்மை நிலையை அடையலாம்.

ஆனால், இங்கு விவசாய ஆராய்ச்சிகள் ஒரு நிலையிலும் விவசாய வணிகமும், அபிவிருத்தியும் இன்னொரு நிலையிலும் உள்ளன. இங்குள்ள அரச நிறுவனங்கள் பெரிதாக விவசாய வணிகத்தை முன்னெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. அண்மையில் தாய்லாந்துக்கு சென்று வந்தேன். அங்கு பனம்பொருள் உற்பத்தி மிகவும் விஞ்ஞானபூர்வமான தயாரிப்புடன் மேற்கு நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதியாகிறது.  அதுவும் பனையில் இருந்து பலவகையான பொருட்கள். பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தாய்லாந்தில் உள்@ர் மூலப்பொருட்களான மூங்கில்களை வைத்து பசுமைக்குடில்களை சிறப்பான முறையில் அமைத்து  உள்ளார்கள். இந்தியாவில் பசுமைக்குடில்களை அமைப்பதற்கு சவுக்கு மரத்தை பாவிக்கின்றார்கள்.

தென்னிலங்கையை பொறுத்தவரையில் ஒரு முயற்சியாளரின் வளர்ச்சிக்கு வங்கிகள், நிறுவனங்கள் என்று எல்லாமே நன்றாக துணை புரிகின்றன. எங்கள் பகுதிகளில் அந்த நிலை இன்னும் வரவில்லை. அவர்களோடு ஒப்பிடும் போது நாங்கள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றோம். பழ அபிவிருத்தி சபை சிறிமாவின் காலத்தில் இருந்தது. இங்கிருந்து மாம்பழங்களும் பெரும்தொகையில் ஏற்றுமதியானது. அந்த நிலை திரும்பவும் வர வேண்டும்.

எங்களது உற்பத்திப் பொருட்களை உள்@ரில் விநியோகம் செய்வது கொஞ்சம் கடினமாகவுள்ளது. எங்களுடைய பொருட்களின் விற்பனைக்கு யாழில் உள்ள TCT  நிறுவனம்  பெருமளவு உதவி செய்கிறது. எனது பொருளுக்கு மட்டுமல்ல உள்ர் உற்பத்தியாளர்கள் பலருக்கும் சந்தைவாய்ப்பை அந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

 எமது பிரதேசத்தில் கூட்டு முயற்சிக்கான பரந்த தளத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இளம் தொழில் முயற்சியாளர்கள் எம் பகுதிகளில் புதிதாக உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிலை தொடர வேண்டும். சரியான விலையில் மூலப்பொருட்களை பெற்று தொடர்ச்சியாக உற்பத்திகளை மேற்கொள்ளும் நிலைக்கு நாங்கள் வளர வேண்டும். அப்போது தான் சர்வதேச சந்தையிலும் ஒரு ஸ்திரமான நிலையை தக்கவைக்க முடியும்.

தீசன்
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

http://www.nimirvu.org/2017/11/blog-post_30.html

இவரும் ஒரு பிழை விடுகிறார்.அதாவது தனது தொடரபு விபரங்களை பகிர்ந்தால் யாரும் உற்பத்தியபளர்கள் தொடர்பு கொள்வாரகள் தானே.

Link to comment
Share on other sites

38 minutes ago, சுவைப்பிரியன் said:

இவரும் ஒரு பிழை விடுகிறார்.அதாவது தனது தொடரபு விபரங்களை பகிர்ந்தால் யாரும் உற்பத்தியபளர்கள் தொடர்பு கொள்வாரகள் தானே.

 

On 2.12.2017 at 6:29 PM, நவீனன் said:

சர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்

 
 
20171004_144804.jpg


தீசன்
நிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-

http://www.nimirvu.org/2017/11/blog-post_30.html

 

இந்த படத்தில் விபரம் இருக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி போல் தெரிகிறது...சந்தைப்படுத்தல் சுமுகமாக அமைய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நல்ல முயற்சி போல் தெரிகிறது...சந்தைப்படுத்தல் சுமுகமாக அமைய வேண்டும்.

நெத்துக்கு... நேர்ந்து விட்ட...  ஆட்களுக்கும், இது பயன் அளிக்குமா   அண்ணை.  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

நெத்துக்கு... நேர்ந்து விட்ட...  ஆட்களுக்கும், இது பயன் அளிக்குமா   அண்ணை.  :unsure:

கூடுதலாய் பயன்படுமெண்டு நினைக்கிறன்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2017 at 5:23 AM, தமிழ் சிறி said:

நெத்துக்கு... நேர்ந்து விட்ட...  ஆட்களுக்கும், இது பயன் அளிக்குமா   அண்ணை.  :unsure:

என்னத்தை கேட்கிறியள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 08/12/2017 at 10:02 PM, நவீனன் said:

 

 

இந்த படத்தில் விபரம் இருக்கிறது..

நன்றி நவீனன் இணைப்பிற்க்கு.:):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரனுக்கு  மேலும் அவர் ஐரோப்பிய தரகட்டுப்பாட்டு  பொதியிடல் முறைகளை இங்கு வந்து அறிந்து போவது நல்லது. முருங்கையிலை எம்மவர்களை விட  இங்கு பாரிய சந்தை உண்டு . எப்பவுமே தட்டுபாடு முருங்கையிலைக்கு தாய்லாந்தில் இருந்து லண்டன் வரும் முருங்கையிலை தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை .

கனடாவுக்கு தென் அமெரிக்க நாடுகள் பூர்த்தி செய்கின்றன . அவுசில் நேரடியாக விவசாயம் ஐரோப்பிய சந்தை எப்பவுமே வெற்றிடம் உண்டு முருங்கைஇலைக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரனுக்கு  மேலும் அவர் ஐரோப்பிய தரகட்டுப்பாட்டு  பொதியிடல் முறைகளை இங்கு வந்து அறிந்து போவது நல்லது. முருங்கையிலை எம்மவர்களை விட  இங்கு பாரிய சந்தை உண்டு . எப்பவுமே தட்டுபாடு முருங்கையிலைக்கு தாய்லாந்தில் இருந்து லண்டன் வரும் முருங்கையிலை தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை .

கனடாவுக்கு தென் அமெரிக்க நாடுகள் பூர்த்தி செய்கின்றன . அவுசில் நேரடியாக விவசாயம் ஐரோப்பிய சந்தை எப்பவுமே வெற்றிடம் உண்டு முருங்கைஇலைக்கு .

ஆர் எங்கையிருந்து கொண்டுவந்தாலும் யாழ்ப்பாணத்திலை இருந்து இறக்குமதியானது எண்டு சொல்லிப்பாருங்கோ....டபுளுக்கு றிபுள் விலை குடுத்து சனம் வாங்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.