Jump to content

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி


Recommended Posts

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி

 

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி

கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர்.

இவர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்த போதும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திய ஜனநாயக கட்சி உறுப்பினர் Alexandre Boulerice தெரிவித்துள்ளார்.

21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார் என கனேடிய ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

பிரஞ்சு சரளமாக பேச கூடிய குறித்த மாணவி scolaire de Montréal ஆணையத்தினால் விருதொன்றையும் பெற்றிருக்க வேண்டியவர் என குறிப்பிடப்படுகின்றது.

நாடு கடத்தலுக்கு எதிராக கனேடிய ஊடகங்கள் உட்பட ஐம்பத்திற்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக மாணவியின் தந்தை ரொபர்ட் ராஜரட்ணம் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கணிதத்தில் 94 வீத சித்தியை பெற்ற திறமையான இந்த மாணவியின் குடியுரிமை நிலை தொடர்பில் கவனம் செலுத்த அனுமதித்தால் அவரால் கனேடிய சமூகம் பெரிதும் பயன் பெறும் என்று நம்புவதாக scolaire de Montréal ஆணையத்தின் தலைவர் Catherine Harel-Bourdon மாணவிக்கு ஆதரவாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

scolaire de Montréal ஆணையத்தின் ஆணையர்கள், புதனன்று அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

லியோனி பவித்ரா மற்றும் அவரது குடும்பத்தின் நாடு கடத்தல் தொடர்பில் கனேடிய பிரதமர் கவனம் செலுத்துவதுடன் ஊடாக இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக கியூபெக் solidaire இன் அமீர் காடிர் தெரிவித்துள்ளார்.

கியூபெக் ஏற்றுக்கொண்டமை மற்றும் கற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கான சான்றிதழ்களை மாணவி பெற்றுள்ளார். இந்த நிலையில் கல்லூரி அவரை ஏற்றுக் கொண்டாலும் பவித்திரா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொது நிர்வாகத்தில் காணப்படுகின்ற முரண்பாடே இதற்கு காரணம் என Boulerice தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புகலிடம் கோரிய விண்ணப்பங்கள் தொடர்பில் மாகாண அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் வழங்கவில்லை என Heurtel அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை மாணவி மற்றும் குடும்பத்தினரின் நாடு கடத்தல் பிரச்சினை ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

http://www.samakalam.com/செய்திகள்/கனடாவில்-இருந்து-நாடு-கட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக நாடு கடத்த படுகிறார் என்பதை 
இனி கூகிள் பண்ணிதான் பார்க்கணும்.

செய்தி தயாரிக்க வரிசையாய் வாறன்கள் .........
எல்லாம் முன்பு ஒரு இடத்தில் இருந்து படிச்சு இருப்பாங்களோ ? 

Link to comment
Share on other sites

இந்தச்செய்தியை நான் பேஸ்புக்கிலும் பார்த்தேன். முதல்விடயம், இப்படி மாணவியின் படத்தை பிரசுரம் செய்வதற்கு அனுமதி பெறப்பட்டதா. அடுத்தது, நல்லாய் படிக்கும் மாணவி என்றால் நாடு கடத்தக்கூடாது, மொக்குப்பிள்ளை என்றால் நாடு கடத்தலாமா? எதற்காக நாடு கடத்தப்படுகின்றார்? 

உண்மையில் இப்படி யாருக்கு நடந்தாலும் அது மிகவும் மன உளைச்சலை தரும் கவலையான விடயம். ஆனாலும், திறமைசாலியானவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள். இலங்கை சென்றால் மீண்டும் கனடாவுக்கோ, யூகேயுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ கல்வி, தொழில் தகமைகளுடன் சுயமாகவே செல்லலாம். கனடாவைவிட்டுப்போனால் இந்த மாணவிக்கு இனி வாழ்க்கை இல்லையா? எமது ஊடகங்கள் விடயங்களை நல்லாய் மிகைப்படுத்தி எழுதுவதில் வல்லவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கலைஞன் said:

இந்தச்செய்தியை நான் பேஸ்புக்கிலும் பார்த்தேன். முதல்விடயம், இப்படி மாணவியின் படத்தை பிரசுரம் செய்வதற்கு அனுமதி பெறப்பட்டதா. அடுத்தது, நல்லாய் படிக்கும் மாணவி என்றால் நாடு கடத்தக்கூடாது, மொக்குப்பிள்ளை என்றால் நாடு கடத்தலாமா? எதற்காக நாடு கடத்தப்படுகின்றார்? 

உண்மையில் இப்படி யாருக்கு நடந்தாலும் அது மிகவும் மன உளைச்சலை தரும் கவலையான விடயம். ஆனாலும், திறமைசாலியானவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள். இலங்கை சென்றால் மீண்டும் கனடாவுக்கோ, யூகேயுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ கல்வி, தொழில் தகமைகளுடன் சுயமாகவே செல்லலாம். கனடாவைவிட்டுப்போனால் இந்த மாணவிக்கு இனி வாழ்க்கை இல்லையா? எமது ஊடகங்கள் விடயங்களை நல்லாய் மிகைப்படுத்தி எழுதுவதில் வல்லவர்கள்.

ஊடகம்  தன் வாசகர்சளை ஈர்க்க வேண்டாமா பிறகு அவர்கள் தொழில் படுத்துடுமே 

Link to comment
Share on other sites

நிரந்தர குடியுரிமைக்கான கோரிக்கை நிராகரிப்பு – கனடாவில் இருந்து இலங்கை திரும்பியது ஒரு குடும்பம்:-

 

canada-ime.jpg
கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த, இலங்கையைச் சேர்ந்த, ஒரு குடும்பத்தின், நிரந்தர குடியுரிமைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.கனடாவின் மொன்றியல் பகுதியில் வசித்துவந்த, இந்தத் தமிழ்க் குடும்பத்தினர் நேற்று (3.12.17) நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், ஐக்கிய நாடுகள் சபைக்காக, கிழக்கு மாகாணத்தில் பணியாற்றி வந்தவரது குடும்பத்தினர் கடந்த 2012ஆம் ஆண்டு கனடாவில் அரசியல் தஞ்சம் அடைந்திருந்தனர். எனினும் நிரந்தர குடியுரிமை கோரியிருந்த அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதனால் நாடு கடத்தும் இந்த தீர்மானத்தை மீள பரிசீலிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம், அவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், அக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை மீள்திருத்தம் செய்யுமாறு கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட,  நாடுகடத்தப்பட்ட குடும்பத் தலைவர்,  ”கனேடிய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமாக உள்ள போதிலும், கனேடிய சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுகிறோம். கடந்த 5 வருடங்களாக கனடாவில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழந்தோம். நாம் இன்னமும் கனடாவை நேசிக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/52991

Link to comment
Share on other sites

இக் குடும்பம் அமெரிக்காவுக்கு சென்று பின் அங்கிருந்து கனடாவுக்குள் குடியேறி உள்ளனர். அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வீசாவினூடாக வந்து இருப்பின் நிரந்தர வதிவிட உரிமை அல்லது அகதி அந்தஸ்து கிடைப்பது அரிதிலும் அரிது

2009 இன் பின் சுற்றுலா வீசாவூடாக கனடாவுக்குள் வந்து அகதி அந்தஸ்து கோரிக்கை கேட்கும் பல இலங்கை தமிழர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படுகின்றது / ஏற்படப்போகின்றது. ஒவ்வொரு வருடமும் கனடாவில் இருந்து தாயகத்தை சென்று பார்த்து விட்டு வரும் எம்மைப் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நிலமை சரியில்லை என்று நிரூபிப்பது முடியாமல் போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

இக் குடும்பம் அமெரிக்காவுக்கு சென்று பின் அங்கிருந்து கனடாவுக்குள் குடியேறி உள்ளனர். அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வீசாவினூடாக வந்து இருப்பின் நிரந்தர வதிவிட உரிமை அல்லது அகதி அந்தஸ்து கிடைப்பது அரிதிலும் அரிது

2009 இன் பின் சுற்றுலா வீசாவூடாக கனடாவுக்குள் வந்து அகதி அந்தஸ்து கோரிக்கை கேட்கும் பல இலங்கை தமிழர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படுகின்றது / ஏற்படப்போகின்றது. ஒவ்வொரு வருடமும் கனடாவில் இருந்து தாயகத்தை சென்று பார்த்து விட்டு வரும் எம்மைப் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நிலமை சரியில்லை என்று நிரூபிப்பது முடியாமல் போகின்றது.

ஆனால் முகநூலில் ஒரு விளம்பரம் உலா வருகிறது கனடாவில் குடியுரிமை பெற விருப்பமா விண்ணபியுங்கள் என்று வருது கன பேர் ஏமாந்ததாக செய்தி படித்தேன் ஆனால் இன்னும்  அப்படி ஏமாந்தவர்களை இன்னும் காண வில்லை பணத்தை இழந்த காரணத்தினால் சொல்லாமல் இருக்குறார்கள் என தெரியாது 

அந்த விளம்பரத்தில் சிலர் பத்வுகளை மேற் கொண்டதும் அழைப்பு வருவதாகவும் சுய விபரத்தை கேட்பதாகவும் சொன்னார்கள்  

பல லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க காத்திருக்கிறது கனடிய அரசு எனவும் கவர்சிகரமாக உள்ளது 

Link to comment
Share on other sites

30 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் முகநூலில் ஒரு விளம்பரம் உலா வருகிறது கனடாவில் குடியுரிமை பெற விருப்பமா விண்ணபியுங்கள் என்று வருது கன பேர் ஏமாந்ததாக செய்தி படித்தேன் ஆனால் இன்னும்  அப்படி ஏமாந்தவர்களை இன்னும் காண வில்லை பணத்தை இழந்த காரணத்தினால் சொல்லாமல் இருக்குறார்கள் என தெரியாது 

அந்த விளம்பரத்தில் சிலர் பத்வுகளை மேற் கொண்டதும் அழைப்பு வருவதாகவும் சுய விபரத்தை கேட்பதாகவும் சொன்னார்கள்  

பல லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க காத்திருக்கிறது கனடிய அரசு எனவும் கவர்சிகரமாக உள்ளது 

இலங்கை மற்றும் வேறு நாடுகளில் இருந்து கனடாவிற்கு நேர்மையான முறையில் வந்து தொழில் செய்யவும் நிரந்தர குடியுரிமை பெறவும் பல வழிகள் உள்ளன தனி.  Skilled worker எனும் முறையில் வருவதற்கு 347 தொழில்கள் உள்ளன. இதில் ஒன்றிலாவது அனுபவமும் கல்வி தகமைகளும் இருப்பின் விண்ணப்பிக்க முடியும். இதை விட பணம் இருப்பின் இங்கு முதலிடுவதற்கு முடியுமாயினும் வரலாம் (பல சீனர்கள்/ ஹொங்க்கொக் வாசிகள் இதை தெரிவு செய்கின்றனர்)

'உங்களுக்கு கனடாவில் நிரந்தர வதிவிட வீசா பெற்று தருகின்றோம்' என சொல்லி கடை பரப்பி இருக்கும் பல நிறுவனங்கள் செய்வதெல்லாம், விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்புது மட்டும் தான். அதிலும் ஆயிரம் பிழைகள் விடுவர். நான் இங்கு 10 வருடங்களுக்கு முன் இப்படியான ஒரு வழியில் தான் குடும்பமாக வந்தனான். விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்ததில் இருந்து நிரப்பி அனுப்பி நேர்முக கேள்விகளுக்கு பதில் சொல்லும் வரை எந்த நிறுவனங்களதும் /ஆட்களினதும் உதவிகளை பெறவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இலங்கை மற்றும் வேறு நாடுகளில் இருந்து கனடாவிற்கு நேர்மையான முறையில் வந்து தொழில் செய்யவும் நிரந்தர குடியுரிமை பெறவும் பல வழிகள் உள்ளன தனி.  Skilled worker எனும் முறையில் வருவதற்கு 347 தொழில்கள் உள்ளன. இதில் ஒன்றிலாவது அனுபவமும் கல்வி தகமைகளும் இருப்பின் விண்ணப்பிக்க முடியும். இதை விட பணம் இருப்பின் இங்கு முதலிடுவதற்கு முடியுமாயினும் வரலாம் (பல சீனர்கள்/ ஹொங்க்கொக் வாசிகள் இதை தெரிவு செய்கின்றனர்)

'உங்களுக்கு கனடாவில் நிரந்தர வதிவிட வீசா பெற்று தருகின்றோம்' என சொல்லி கடை பரப்பி இருக்கும் பல நிறுவனங்கள் செய்வதெல்லாம், விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்புது மட்டும் தான். அதிலும் ஆயிரம் பிழைகள் விடுவர். நான் இங்கு 10 வருடங்களுக்கு முன் இப்படியான ஒரு வழியில் தான் குடும்பமாக வந்தனான். விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்ததில் இருந்து நிரப்பி அனுப்பி நேர்முக கேள்விகளுக்கு பதில் சொல்லும் வரை எந்த நிறுவனங்களதும் /ஆட்களினதும் உதவிகளை பெறவில்லை.

நன்றி தகவலுக்கு 

எங்கள் ஊரில் கனடாவில் கோழிப்பண்ணைக்கு ஆட்கள் தேவையென ஒரு சில பொடியங்கள் கிட்ட தட்ட 40 பேருக்கு மேல் காசு கொடுத்தார்கள் போவதற்கு வாங்கினவன் தன்ற வேலையெல்லாம் முடித்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி கொண்டிருக்கிறான் ஒருவன் தன்ற அரச வேலையை எழுதிக்கொடுத்து விட்டு வந்து வேலை இல்லாமல் நிற்கிறான் இதை கேள்விப்பட்டதும் ஒருத்தனிடன் கனடாவிலுள்ள நண்பனை அழைத்து கேட்ட போது அவன் அப்படி ஒன்றும் இல்லை காசை கொடுத்து ஏமாந்திராதீர்கள் என்றான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி தகவலுக்கு 

எங்கள் ஊரில் கனடாவில் கோழிப்பண்ணைக்கு ஆட்கள் தேவையென ஒரு சில பொடியங்கள் கிட்ட தட்ட 40 பேருக்கு மேல் காசு கொடுத்தார்கள் போவதற்கு வாங்கினவன் தன்ற வேலையெல்லாம் முடித்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி கொண்டிருக்கிறான் ஒருவன் தன்ற அரச வேலையை எழுதிக்கொடுத்து விட்டு வந்து வேலை இல்லாமல் நிற்கிறான் இதை கேள்விப்பட்டதும் ஒருத்தனிடன் கனடாவிலுள்ள நண்பனை அழைத்து கேட்ட போது அவன் அப்படி ஒன்றும் இல்லை காசை கொடுத்து ஏமாந்திராதீர்கள் என்றான் 

தனி உதை விட உங்கையே ஒரு கோழிப்பண்ணை தொடங்கினானால் பிச்சுக்கிட்டு போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

தனி உதை விட உங்கையே ஒரு கோழிப்பண்ணை தொடங்கினானால் பிச்சுக்கிட்டு போகும்.

ம்ம் அது விளங்குவதில்லை கனதுகளுக்கு கனடா என்றதுமே( ஐரோப்பிய நாடுகள் ) என்றதுமே வாயை பிளந்துகொண்டு எவ்வளவும்கொடுத்து எந்த வேலைக்கும் போக ஆட்கள் ரெடி இன்னொன்று சொந்தங்கள் வேற அவர அவுஸ் , கனடா லண்டன் பிரான்ஸ் என்று சொல்லி மார்தட்டிக்கொள்கிறார்கள் 

அ ண்மையில்  ஒருவர் இறந்து போனார் பல நாளாக உடல் இருந்தது ஆட்கள் வந்து சேர நாள் எடுத்தது  எல்லோரும் வெளிநாடு பாவம் அவர் இறந்தும் பல காட்சி பொருளாக பெட்டியிலே இருந்தார் சாவு அறிவித்தல் மட்டும்  சொல்லி முடிய பல நேரம் ஆச்சு ஆனால் சாவு வீட்டில் யாரும் போக இல்லை நெருங்கிய சொந்தங்களை தவிர  இப்படி இருக்குது நிலமை  இதுவும் வெளிநாட்டு வாழ்க்கையில் துரதிஸ்ரம் அண்ணtw_cold_sweat: 

Link to comment
Share on other sites

ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

போரின் போது கிழக்கு மாகாணத்தில் ஐ.நா அமைப்புக்காக பணியாற்றிய லோரன்ஸ்,  2012ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் கனடாவில் தஞ்சமடைந்திருந்தார்.

sri-lanka-deportation

எனினும் கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்பட்டதை அடுத்தே, இவரது குடும்பத்தினர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தும் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கனடிய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2017/12/04/news/27728

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
    • 40 இல் (பாண்டிச்சேரி உட்பட) எதுவும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,  வாக்குச்சாவடிக்குப் போய் போட்டால்தான் வாக்கை எண்ணுவார்கள்.😉  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.