Jump to content

`என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி


Recommended Posts

`என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி

 
'நான் ஏன் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமைFACEBOOK

நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத்திய அரசு, மதவாதம், ஜி.எஸ்.டி., தமிழக அரசியல் சூழல், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், தமிழ்த் திரையுலகின் தற்போதைய சூழல் ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசினார் பிரகாஷ் ராஜ். அந்தப் பேட்டியின் முதல் பாகம் இது.

கேள்வி - சில காலமாக மிகத் தீவிரமாக உங்கள் கருத்துகளை சமூகவலை தளங்களிலும், பேட்டிகளிலும் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். என்ன காரணம்?

பதில் - நான் நீண்ட காலமாகவே என் எண்ணங்களைத் தெரிவித்து வந்திருக்கிறேன். அப்போது பெரிதாக யாரும் கவனிக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல, இப்போது இவ்வளவு தீவிரமாக வெளிப்படுத்துவதற்குக் காரணம், ஒரு கொலை. ரொம்ப மோசமான ஒரு கொலை. கௌரி லங்கேஷின் கொலை.

எங்களைச் செதுக்கியவர் கௌரி லங்கேஷின் அப்பா. இப்போதும் நீ மௌனமாக இருந்தால் அது தவறாகிவிடும் என்று என் மனசாட்சி சொல்லியது. எங்காவது ஒரு இடத்தில் கேள்விகளைக் கேட்க வேண்டுமென்று தோன்றியது. கேட்க ஆரம்பித்தேன்.

`கொலையை கொண்டாடுகிறார்கள்'

கௌரி லங்கேஷின் கருத்துகள் சில பிடிக்கும், சில பிடிக்காது. எல்லோருடைய கருத்துக்களையும் முழுமையாக ஏற்க முடியாது. அவங்க கருத்தைத் தெரிவிக்கும் விதம் சில சமயம் பிடிக்காது. நானே அவங்ககிட்ட பேசியிருக்கேன். இந்த மொழிதான் அவர்களுக்குப் புரியுமென்று சொல்லுவார். ஆனால், அதற்காக அவரைக் கொன்றுவிடுவீர்களா? ஒரு குரலை அமுக்குவதற்கான தைரியம் எங்கிருந்து வருகிறது?

அப்பேற்பட்ட கொலையை கொண்டாடுபவர்களைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடுகிறார்கள்.

இம்மாதிரி கொலையைக் கொண்டாடும் மனப்பான்மை எங்கிருந்து வந்தது?

கேள்வி - இம்மாதிரியான மனப்பான்மை எங்கிருந்து வந்ததாக நினைக்கிறீர்கள்?

பதில் - யார் தூண்டுகிறார்கள்? எல்லோரும் ஒரு முகமூடிக்குப் பின்னாடி இருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வரமாட்டேன். எந்தக் கட்சியோடும் உடன்பாடு இல்லை. என்னுடைய குருநாதர்கள் கனவு கண்ட சமுதாயம் வேறு. அது இல்ல இப்போது இருப்பது. இது எல்லாம் ஒருங்கிணைந்து நடக்கிறது. பத்து பேர் சேர்ந்து குரல் எழுப்பும்போதுதான் இது புரிகிறது.

பிரகாஷ் ராஜ்படத்தின் காப்புரிமைFACEBOOK

கேள்வி - இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி, பத்மாவதி பட விவகாரம் என பல விஷயங்கள் குறித்தும் கேள்வியெழுப்ப ஆரம்பித்திருக்கிறீர்கள்..

பதில் - அதற்கு வரும் பதில்களைப் பாருங்கள். இவர்கள் யாரும் என் கேள்விக்குப் பதில் கொடுக்கவில்லை. இப்படிக் கொண்டாடுபவர், என்னுடைய பிரதமர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு கட்சியைச் சேர்ந்தவரில்லை. ஓட்டுபோடாதவர்களுக்கும் அவர்தான் பிரதமர். ஒரு குடிமகனாக நான் அவரிடம் கேட்டேன்,

உங்களைப் பின்பற்றுபவர்கள் ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று கேட்டேன். எனக்கு ஆதங்கமாக இருக்கிறது. பிரதமர் அவர்களைக் கண்டிக்க வேண்டும். இப்படிப் பேசாதீங்க. ஒரு பெரிய தவறு நடந்திருக்கிறது. நீங்க கொண்டாடுவது தவறில்லை என்று நீங்க ஏன் சொல்ல மாட்டேங்கிறீங்க? நீங்க யார் மோடியைக் கேட்பதற்கு என்கிறார்கள். என் பிரதமரைக் கேட்பதற்கு எனக்கு உரிமை இல்லையா?

அடுத்ததாக ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்படுகிறது. அது தவறென்று சொல்லவில்லை. என்னைப் போல லட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்கள் கட்ட முடியும். ஆனால், சாதாரண தொழிலாளர்கள், பானை செய்பவர்கள் போன்றவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியை வரும் நவம்பர் மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசும்போது நீக்குவீர்களா என்றுதான் கேட்டேன். உடனே, நான் மோடிக்கு எதிரானவன் என்கிறார்கள். இந்துத்துவாவிற்கு எதிரானவன் என்கிறார்கள். இந்துத்துவாவுக்கும் ஜி.எஸ்.டிக்கும் என்ன சம்பந்தம்?

ஆளுங்கட்சி மீது சந்தேகம்

அடுத்ததாக பத்மாவதி பட விவகாரம். இந்த நாடு பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும், கலாசாரத்திற்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. என்னுடைய தனித்துவத்தை புண்படுத்தியிருக்கிறீர்களா என்ற அச்சம் வருவதிலோ, கேள்வி கேட்பதிலோ தவறில்லை. ஆனால், அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

இன்றைக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று அந்தப் படத்திற்கு தடை கோருகிறார்கள். தணிக்கை வாரியத்திடம் சென்று உங்கள் அச்சங்களைச் சொல்லுங்கள். அவர்கள் பார்த்து முடிவெடுத்த பிறகு இங்கு வாருங்கள் என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். அதெல்லாம் முடியாது, நான் தலையை வெட்டுறேன், கழுத்த வெட்டுறேன் அப்படிங்கிறீங்க.

இதெப்படி நீங்க சட்டத்தைக் கையில் எடுக்க முடியும். உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது. ஆனால், கேள்வி கேட்கும் முறை தவறு. அந்த முறை தவறாக இருக்கும்போது, ஓர் ஆளும் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காம, கலைஞனான எனக்குப் பாதுகாப்பு கொடுக்காமல் பேசாம இருந்தா எனக்கு சந்தேகம் வரத்தானே செய்யும்.

உங்களால் முடியாது என்றால் கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள். இதைக் கேள்வி கேட்கக்கூடாது என்றால் எப்படி? நான் கேட்கும் கேள்விக்கும் பதில் கொடுப்பதில்லை. நான் இந்துக்களுக்கு எதிரி என்கிறீர்கள். என் அம்மா கிறிஸ்தவர் என்கிறீர்கள். இந்த விவகாரத்தில் மதம், ஜாதி எங்கிருந்து வந்தது. அதனால்தான் கேள்வி கேட்கிறாய் என்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ்படத்தின் காப்புரிமைFACEBOOK

கேள்வி - ஆக, உங்கள் விமர்சனங்கள் எல்லாமே விஷயங்கள் சம்பந்தப்பட்டவைதானே தவிர, பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரானது அல்ல என்கிறீர்களா?

பதில் - ஆமாம். என் விமர்சனங்களை ஏன் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரானதாக எடுத்துக்கொள்கிறீர்கள்? நீங்க ஆட்சியில் இருக்கும்போது, நீங்கள் ஒரு கட்சியைச் சார்ந்தவர் இல்லை. எல்லோருக்குமான ஆட்சியைத்தான் நீங்க தரணும். ஒரு குடிமகனாக நான் உங்களைத்தான் கேள்வி கேட்பேன். இதுக்கு ஏன் கோபப்படுறீங்க?

நான் கேட்ட கேள்விகளில் உண்மை இல்லை என்று சொல்லுங்க, உனக்கு என்ன தெரியும் என்று கேளுங்க. பதில் சொல்றேன். இவங்க டெக்னிகலா பேசறாங்க. நான் தெளிவா பேசுறேன். உங்களிடம் பதில் இல்லை. அல்லது உங்கள் பதிலுக்குப் பின்னால் ஏதோ திட்டம் இருக்கிறது.

கேள்வி - உங்கள் கருத்துகள் மிகக் கடுமையாக எதிர்கொள்ளப்படுகின்றன. தற்போதைய சூழல்தான் அப்படியிருக்கிறதா?

பதில் - இல்லை. ஒரு சினிமாவைத் தடுப்பது, சிந்தனையை முடக்குவது போன்றவை காலகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. நெருக்கடி நிலையின் போது நாம் பார்க்காததா? இன்னைக்கு ஊடகங்கள் பெரிய அளவில் இருப்பதால் உடனே தெரிகிறது. நெருக்கடி நிலையின்போது எனக்கு 10 வயசு. நான் எப்படி கேட்பேன். நீ காங்கிரஸா என்கிறார்கள்.

`நான் ஏன் இந்தி கற்க வேண்டும்?'

இந்தியை ஏன் திணிக்கிறீர்கள் என்கிறேன். கேட்கக்கூடாதா? கர்நாடகாவில் கன்னடம் இருக்கனும். தமிழனுக்கு தமிழ் இருக்கனும். மலையாளிக்கு மலையாளம் இருக்கனும். இந்தியை நான் ஏன் கத்துக்கனும்? இதைக் கேட்டா இந்திய எதிரி, மோடியின் எதிரி என்கிறார்கள், என்று குறிப்பிட்டார் பிரகாஷ்ர ராஜ்.

மேலும், தமிழக அரசியல் களம், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் மற்றும் சினிமா உலகில் நிலவும் பிரச்சனைகள் போன்ற பல அம்சங்கள் குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த பாகங்களில் வெளிவரும்.

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-42163038

Link to comment
Share on other sites

கமல், ரஜினியின் கொள்கைகள் என்ன? நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

 

நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

'நான் மோதிக்கு எதிரானவனா?' பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமைFACEBOOK

மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத்திய அரசு, மதவாதம், ஜி.எஸ்.டி., தமிழக அரசியல் சூழல், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், தமிழ்த் திரையுலகின் தற்போதைய சூழல் ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசினார் பிரகாஷ் ராஜ். அந்தப் பேட்டியின் இரண்டாம் பாகம் இது.

கேள்வி - நீங்கள் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வதால், பிரதமர் தரப்பிலிருந்து உங்களை, குறிப்பாக பிரதமர் உங்களிடம் பேசினாரா?

பதில் - இல்லை. அவர்கள் எல்லாம் பெரியவர்கள். எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தால் போதும். அதைவிட்டுவிட்டு என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது எனக்குக் கோபம் வருகிறது. என் சந்தேகம் சரியாக இருக்கிறது என்ற எண்ணம் வருகிறது. தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது.

நான் பேசுவதைத் திரிக்கிறார்கள். நடிகர்கள் சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னேன். உடனே, நடிகர்கள் சினிமாவுக்கு வரக்கூடாது என்று நான் சொன்னதாகத் திரிக்கிறார்கள். நான் எப்போது அப்படிச் சொன்னேன்?

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், அவர்கள் கொள்கைகளைப் பாருங்க. நீங்கள் விரும்பும் மாற்றத்தை அவர்கள் உருவாக்குவார்களா என்று பாருங்க. இதையெல்லாம் பார்த்து வாக்களியுங்கள்னு சொன்னேன். யாரும் வரக்கூடாதுன்னு சொல்லலை.

கமல், ரஜினி மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு, அவர்களை மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு ரசிகனாக அவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன். அவர்கள் தங்கள் கொள்கைகளை இன்னும் சொல்லவில்லை. அவர்களுடைய தேர்தல் அறிக்கையைப் பார்ப்பேன்.

'நான் மோதிக்கு எதிரானவனா?' பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமைFACEBOOK

கேள்வி - நீங்கள் வைக்கும் விமர்சனங்களை வைத்து, மோடிக்கு எதிரானவர் என்ற முத்திரை உங்கள் மீது இருக்கிறது. இதை ஏற்கிறீர்களா?

பதில் -அவர்கள் அப்படி நினைத்தால் அப்படியே இருக்கட்டும். இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களை நான் கேள்வி கேட்கிறேன். நேற்று இருந்தவர்களை நான் கேட்க முடியாது. நான் ஜி.எஸ்.டி. பற்றியோ, இந்தி திணிப்பு பற்றியோ கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும். இதன் மூலம் நீங்கள் மோதியை கேள்வி கேட்கிறீர்கள் என்றால், ஆமாம் நான் மோதியைத்தான் கேட்கிறேன் என்று சொல்வேன்.

கேள்வி - கமல்ஹாசன் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், அவர் ட்விட்டரில் மட்டும் கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, இப்போது அரசியலுக்கு வர முடிவுசெய்துவிட்டார் என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.

பதில் -அவர் தன் கருத்துக்களைத் தெரிவிக்க ஒரு மேடை வேண்டுமல்லவா. நான் வருகிறேன் என்று அறிவித்துவிட்டார் அல்லவா. நான் தமிழ்நாட்டைத் தெரிந்துகொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே அறிவிக்க முடியாதல்லவா..

'நான் மோதிக்கு எதிரானவனா?' பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமைFACEBOOK

கேள்வி - தனது கருத்துகளைத் தெரிவிக்க சமூக வலைதளங்களை ஒரு மேடையாக கமல் பயன்படுத்துகிறார் என்கிறீர்கள். நீங்களும் இதைச் செய்கிறீர்கள். உங்களுக்கும் அப்படி ஒரு சிந்தனை இருக்கிறதா?

பதில் -எனக்கு ஆர்வமில்லை. நான் அவ்வளவு பெரிதாக சிந்திக்க முடியாது. எனக்கு முதலில் உண்மையான, நேர்மையான, அச்சமில்லாத குடிமகனாக வேண்டுமெனத்தான் ஆசை. எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. நிச்சயமாக இல்லை. இதைக் கேட்டுக்கொண்டே இருப்பது நல்லதுதான்.

கேள்வி -நீங்கள், கமல் போன்றவர்கள் சமூக வலைதளங்களில் தற்போதைய நிலை குறித்து வெளிப்படையாக பேசுகிறீர்கள். விஜய் போன்றவர்கள் சினிமாவில் சில கருத்துகளைச் சொல்கிறார்கள். ஆனால், வட இந்தியாவில் அப்படிப் பார்க்க முடியவில்லை. அரசியல் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிப்பதில் வட இந்திய நடிகர்களைவிட தென்னிந்திய நடிகர்கள் சற்று வெளிப்படையாக, தைரியமாக இருக்கிறார்களா?

பதில் -உண்மைதான். ஆனால், இங்கு ஒரு நடிகன் பேசுவதால், அங்கிருக்கும் நடிகனும் பேச வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. அதை யாரிடமும் வற்புறுத்த முடியாது. அந்த எண்ணம் அவர்களிடமே இருக்கவேண்டும். அதை ஒரு விதியாக முன்வைக்க முடியாது. ஏற்கனவே கேட்டுக்கொண்டிருப்பவர், திடீரென மௌனமானால் கேட்கலாம். கேட்கவேயில்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.

பிரகாஷ் ராஜ்படத்தின் காப்புரிமைFACEBOOK

கேள்வி - தற்போதைய அரசியல் களத்தை நீங்க எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் - எல்லோருக்கும் தெரிந்ததுதான். இன்றைக்கு நல்ல களம் இருக்கிறது. ரஜினி, கமல், சீமான், ஸ்டாலின் எனப் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தங்கள் கொள்கைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்க வேண்டும்.

கேள்வி -தமிழக அரசியல் களத்தில் தற்போது வெற்றிடம் இருப்பதாக பார்க்கிறீர்களா?

பதில் -இருக்கு. ஒரு மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கிறார்கள். இந்த நேரத்தில் மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது, மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் கொள்கைகளில் உண்மையாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார் பிரகாஷ் ராஜ்.

மேலும், தமிழ் சினிமா உலகில் நிலவும் பிரச்சனைகள் போன்ற அம்சங்கள் குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த பாகத்தில் வெளிவரும்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42176910

Link to comment
Share on other sites

'சினிமாக்காரர்கள் கறுப்புப் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும்': பிரகாஷ் ராஜ்

 

நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

பிரகாஷ் ராஜ்படத்தின் காப்புரிமைFACEBOOK

மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத்திய அரசு, மதவாதம், ஜி.எஸ்.டி., தமிழக அரசியல் சூழல், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், தமிழ்த் திரையுலகின் தற்போதைய சூழல் ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசினார் பிரகாஷ் ராஜ். அந்தப் பேட்டியின் கடைசி பாகம் இது.

கேள்வி - நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவது தொடர்பாக உங்களுக்கு திரையுலகில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதா?

பதில் -இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் நடந்திருக்கு, உனக்கு எதுக்கு பிரச்சனைனு சொல்றாங்க. உண்மையில் இதற்கு முன்பே கேட்டிருக்க வேண்டும். உண்மையாக இருக்கும்போது இழக்கத் தயாராக இருக்க வேண்டும். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு தவறு செய்து, படத்திற்குப் பிரச்சனை வந்தால், நான் காரணம். பழிவாங்குவதற்காகச் செய்தால், மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

கேள்வி -சினிமாத் துறை இன்னமும் அமைப்பு ரீதியான துறையாக இல்லை. பல பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுகொள்ளாமல், இவர்கள் நாட்டின் பிரச்சனைகள் குறித்து பேசுகிறார்கள் என்ற விமர்சனம் இருக்கிறது.

பதில் - அதற்கு தயாரிப்பாளர் சங்கம் இருக்கு. ஏன் தனி மனிதர்களை, நடிகர்களைக் கேள்வி கேட்கிறீர்கள். கமல்ஹாசனைப் பார்த்து, முதலில் உங்கள் துறையைச் சரி செய்யுங்கள், பிறகு அரசியலுக்கு வாங்கன்னு சொல்ல முடியாது. நாங்கள் உள்ளுக்குள்ளிருந்து போராடிக்கிட்டிருக்கோம்.

விஷாலும் நானும் வந்த பிறகு பல விஷயங்களுக்காக போராடிக்கிட்டிருக்கோம். வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை எதற்கு சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டும்? அரசியல் உலகத்திற்கான விஷயம். வீட்டிற்குள் இருக்கும் விஷயத்தை நான் ஒழுங்குபடுத்திக்கொள்வேன். அதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. நீங்கள் அதைப் பற்றிக் கேட்டால் பதில் சொல்வேன்.

பிரகாஷ் ராஜ்படத்தின் காப்புரிமைTWITTER

கேள்வி -சில நாட்களுக்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார், கந்துவட்டி காரணமாக. இது துறைக்குள் இருக்கும் ஒழுங்கின்மையைக் காட்டவில்லையா?

பதில் -கந்து வட்டி ஒரு பெரிய பிரச்சனைதான். நடந்தது மிகத் தவறான சம்பவம். இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் கறுப்பு - வெள்ளையாக முடிவெடுக்க முடியாது. ஒரு விவசாயி சாவு மாதிரிதான் இது. சினிமாவிற்குள் கறுப்புப் பணம் எப்படி வருகிறது? சினிமாவுக்குள் இருப்பவர்கள் கறுப்புப் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதை நிறுத்தினால்தானே, தயாரிப்பாளர் வெளியில் சென்று கறுப்புப் பணம் வாங்கி வருவதை நிறுத்துவார்?

இரண்டாவதாக, எல்லா வரியையும் செலுத்தி செயல்படும் சினிமா துறையில் சட்ட ரீதியாக பணியாற்றும் சூழல் இல்லை. படத்தை வாங்கும் திரையரங்குகள் தயாரிப்பாளர்களுக்கு கணக்குக் கொடுப்பதில்லை. அரசு வரி வசூல்செய்வதை ஒழுங்குபடுத்தினால், அது திரைத்துறைக்கு பாதுகாப்பாக அமையும்.

அதேபோல மக்களும் திருட்டு வி.சி.டியில் படம் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த சூழலுக்கு பலரும் காரணம். எல்லோரும் அதை யோசிக்க வேண்டும். திரையரங்குகளில் டிக்கெட் விற்பதை முழுவதும் கணினி மயமாக்க வேண்டும். ஒழுங்காக கணக்குக் கொடுக்க வேண்டும். இதைக் கேட்டால் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

திரையரங்கக் கட்டணம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களுக்கு சிரமம்தான். ஆனால், அவர்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு வருவதில்லை.

பிரகாஷ் ராஜ்

இதைக் கேட்டால் கெட்டவனாகிவிடுகிறோம். நீங்கள் சம்பளம் வாங்குவதைக் குறையுங்கள் என்கிறார்கள். அது அல்ல பதில். டிக்கெட்டை சரியான விலையில் விற்க வேண்டும். இணையத்தில் டிக்கெட் வாங்கினால் ஏன் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறீர்கள். ஐந்து டிக்கெட் வாங்கினால் 150 ரூபாய். இந்தக் காசு யாருக்கு போகிறது?

திரையரங்க உரிமையாளர்கள் விரைவில் டிக்கெட் கொடுப்பதை கணினிமயமாக்குவதாக சொல்லியிருக்கிறார்கள். நேரம் கேட்டிருக்கிறார்கள். கொடுத்திருக்கிறோம். அதற்கு மேல் போனால், அந்தத் தியேட்டருக்குப் படம் கொடுக்க மாட்டோம். திருட்டி விசிடி விவகாரத்தில், ஒரு தியேட்டர் பிடிபட்டால் அதன் நிர்வாகியை கைதுசெய்து விஷயத்தை முடித்துவிடுவார்கள். இப்போது திரையரங்க உரிமையாளர்களைப் பொறுப்பாக்குகிறோம். அவர்கள் இதை சரிசெய்யாவிட்டால், அவர்களைத் தடைசெய்வோம்.

நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால் திரையரங்குகளில் அதிக கட்டணம் என்கிறார்கள். அது சரியல்ல. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் திரையுலகில் வெறும் பத்து சதவீதம் மட்டும்தான். அவர்கள் மட்டுமே சினிமா அல்ல. 90 சதவீதம் பேர் சிறு தயாரிப்பாளர்கள். அவர்களைப் பற்றிப் பேசுவோம். பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு கட்டணமும் சிறிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு கட்டணமுமா திரையரங்குகளில் கொடுக்கிறீர்கள்?

திரையரங்குகள் ஒழுங்காகக் கணக்குக் கொடுத்தால், ஒரு நடிகருக்கான சந்தை என்னவென்று சரியாகத் தெரியும். அது தெரியவந்தால் அந்த நடிகருக்கு அதற்கேற்றபடி சம்பளம் அமையும். என் படம் எவ்வளவு ஓடுகிறதென்றே தெரியாது என்றால் எப்படி? என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.

பிரகாஷ் ராஜுக்கு பிடித்தவை:

பிரகாஷ் ராஜுக்கு பிடித்தவை

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-42192022

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.