Jump to content

ஒரே வருடத்தில் ரஜினி, தனுஷ், விஷாலுக்கு ரெண்டு படங்கள்... 2018 தமிழ் மூவிஸ் லிஸ்ட்..!


Recommended Posts

ஒரே வருடத்தில் ரஜினி, தனுஷ், விஷாலுக்கு ரெண்டு படங்கள்... 2018 தமிழ் மூவிஸ் லிஸ்ட்..!

 
 

பல புதுமுகங்களுக்கான அடையாளம், சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி என ஓரளவு ஆரோக்கியமானதாக அமைந்தது இந்த வருட தமிழ் சினிமா. மேலும் ரிச்சி, வேலைக்காரன், அருவி, பலூன் என இந்த வருடம் வெளியாகும் படங்களே வெயிட்டிங்கில் இருக்க, அடுத்த வருடத்துக்கான ப்ளே லிஸ்ட் தயாராகிவிட்டது. 2018ல் வெளியாக இருக்கும் அதிக எதிர்பார்ப்புள்ள படங்களின் பட்டியல் இதோ...

இமைக்கா நொடிகள்:

 

ஹாரர் பட வரிசையில் நல்ல வரவேற்பைப் பெற்றது  `டிமாண்டி காலனி'. இயக்குநர் அஜய் ஞானமுத்து மேலும் கவனம் குவிய அவரின் அடுத்த படமான `இமைக்கா நொடிகளி'ல் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா என இணைந்த கூட்டணியால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. கூடவே படத்தின் டீசர் வெளியான பின்பு சி.பி.ஐ அதிகாரி நயன்தாரா, ஆன் ஏரில் கொலை மிரட்டல் விடும் வில்லன், கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி என இன்னும் பரபரப்பு அதிகரிக்க படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

இறவாக்காலம்:

'There are no rewards or punishments, only consequences' படத்தின் டீசர் டிஸ்க்ரிப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வாக்கியம் கவனிக்க வேண்டியது. கூடவே இயக்குநர் அஸ்வின் சரவணனின் முந்தைய படமான `மாயா' நியோ நாயார் திரைக்கதையில் வெளியாகி அலரவிட்டதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. `இறவாக்காலம்' கண்டிப்பாக ஒரு த்ரில்லர், டீசரின் துவக்கத்தில் வரும் அன்று, முதல் பாதி கொண்டாட்டமாகவும், பின்பு அழுகையும் சோகமாகவும் மாறுவது என நிறைய கீ பாயின்ட்ஸ் மட்டும் கொடுத்திருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா கபி என நடிகர்களும் சரி, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு, ரான் ஈதன் யோகனின் இசை என டெக்னிக்கல் டீமும் சரி டீசரிலேயே நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருப்பதால், பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி. 

மெர்குரி:

படங்கள்

பல வருடங்கள் கழித்து வசனமே இல்லாமல் வர இருக்கும் படம் என்பது `மெர்குரி'யின் பெரிய ஸ்பெஷல். கார்த்திக் சுப்புராஜ் இயக்கம், ஆனால், தன் படத்தில் வழக்கமாக நடிக்கும் யாரையும் பயன்படுத்தாது பிரபுதேவா, சனத், இந்துஜா எனப் புது டீம் பிடித்திருப்பதும் ஃப்ரெஷ் பீல் கொடுக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பீட்சாவுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படம் இது. கூடவே திரு ஒளிப்பதிவு என டெக்னிக்கலி ஸ்ட்ராங்கான கூட்டணியும் அமைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

நரகாசூரன்:

`துருவங்கள் பதினாறு' படத்துக்கு பலத்த வரவேற்பு, `நரகாசூரன்' படத்துக்கான எதிர்பார்பையும் தூண்டியிருக்கிறது. `துருவங்கள் பதினாறு' ட்ரையாலஜியில் நரகாசூரன் செகண்ட் இன்ஸ்டால்மென்ட் எனவும் குறிப்பிட்டிருந்தது, படத்தின் டீசர் பார்த்தும் படத்தைப் பற்றி எந்த ஐடியாவும் கிடைக்காதது ரசிகர்களிடம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.  தீவிர வெயிட்டிங். அர்விந்த் சுவாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா சரண், ஆத்மிகா நடித்திருக்கும் இந்தப் படம் 2018ன் துவக்கத்திலேயே வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்கள்.

நாச்சியார்:

டீசரில் வந்த ஒரே வார்த்தை மூலம் டாக் ஷோவே வைக்கும் அளவுக்கு டாப்பிகல் சினிமாவாகியது பாலா இயக்கியிருக்கும் நாச்சியார். டீசர் பார்த்துவிட்டு படத்தில் இரண்டு ஜோதிகாவா, என்ன மாதிரியான கதைக் களம், வழக்கமான பாலா சினிமாவாக இருக்குமா? என சில கேள்விகள் எழுந்திருக்கிறது. எல்லாம் தெரிந்து கொள்ள பட ரிலீஸ் வரை காத்திருக்க வேண்டும்.

இரும்புத்திரை, சண்டக்கோழி 2:

Vishal

அறிமுக இயக்குநர் மித்ரன் சரவணன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் `இரும்புத்திரை'. விஷால், அர்ஜூன், சமந்தா இணைந்திருக்கும் படத்தின் மோஷன் போஸ்டரும், சில ஸ்டில்ஸ் மட்டும் வெளியாகியிருக்கிறது. அவற்றிலிருந்து, விர்சுவல் மீடியம் சார்ந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் எனத் தெரிகிறது. படம் பொங்கல் ரிலீஸாக வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து விஷால் நடித்துக் கொண்டிருக்கும் படம் `சண்டக் கோழி 2'. இயக்குநர் லிங்குசாமிக்கு இது கம்பேக் படமாக இருக்கும் என நம்பலாம். 

ஜுங்கா:

Junga

`இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் `ஜுங்கா' படத்தில் இணைந்திருக்கிறது கோகுல் - விஜய் சேதுபதி கூட்டணி. விஜய் சேதுபதியே தயாரிக்கும் இந்தப் படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு ஃப்ரான்ஸில் நடந்துள்ளது. படத்தில் அவரின் கெட்டப் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியான வேகத்தில் வைரலானது. காமெடி, ஆக்‌ஷன், லவ் என சரிசமமாக கலந்துகட்டி உருவாகிவருகிறது என சொல்லப்படுகிறது. சயீஷா, ப்ரியா பவானி ஷங்கர், யோகி பாபு ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். கோகுல் - விஜய் சேதுபதி கூட்டணி என்பதால் படத்திற்கு ரசிகர்களிடம் வேற லெவல் எதிர்பார்ப்பு உள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை:

செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஹாரர் படம் என்பதாலேயே `நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உண்டு. கூடவே, பத்து வருடங்கள் கழித்து இணைந்த செல்வா - யுவன் கூட்டணி, படத்தின் டீசர், டிரெய்லர்களின் மூலம் உருவான பரபரப்பு போன்றவை படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. ஜூன் 30ம் தேதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டும் சில சிக்கல்கள் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் தொடர்கிறது. டிசம்பர் மாதம் வெளியாவதற்கான எந்த தகவலும் இல்லை என்றாலும், படத்துக்கான எதிர்பார்ப்பு அப்படியே இருக்கிறது. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க ஜி!

தானா சேர்ந்த கூட்டம்:

TSK

பொங்கலுக்கு ரிலீஸாக ரெடியாகி வருகிறது `தானா சேர்ந்த கூட்டம்'. படம் `ஸ்பெஷல் 26' படத்தைத் தழுவி உருவாகி இருப்பதாக சொல்லப்பட்டாலும் படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்த உறுதியான தகவலும் வரவில்லை. சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கெனவே சொடக்கு, நானா தானா ஆகிய பாடல்கள் வெளியாகி ரிப்பீட் மோடில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எனை நோக்கிப் பாயும் தோட்டா, துருவநட்சத்திரம்:

ENPT

`அச்சம் என்பது மடமையடா' படம் வெளியாகும் முன்பே, தனுஷை வைத்து கௌதம் மேனன் துவங்கிய படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக்காக வெளியான மறுவார்த்தை பேசாதே எல்லாம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்க இந்தப் படம் வெளியாகும் முன் அடுத்த படமான `துருவநட்சத்திரம்' பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கௌதம். இன்னும் 10 - 15 நாட்கள் மட்டும் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது, அது முடிந்துவிட்டால், அடுத்த வருடம் முதலில் `எனை நோக்கிப் பாயும் தோட்டா' வெளியாக அதற்கு மூன்று வாரம் கழித்து `துருவநட்சத்திரம்' படம் வெளியிடும் திட்டமிருக்கிறது என்கிறார் கௌதம் மேனன். படம் மூணு பாகங்களாக வெளியிடும் திட்டமும் இருக்கிறதாம். 

வட சென்னை:

Dhanush

பொல்லாதவன், ஆடுகளம் தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் ட்ரையாலஜி இந்த வட சென்னை. முதலில் மூன்று பாகங்களாக இயக்க முடிவு செய்யப்பட்டு பின்பு ஒரே பாகமாக உருவாகிவருகிறது. ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி என பலத்த கூட்டணி இணைந்திருக்கிறது. வடசென்னையை சேர்ந்த ஒரு தாதா பற்றி கதைக்களம் கொண்ட இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. 

விஜய் 62 - விஸ்வாசம்:

Vijay62

விஜய் - முருகதாஸ் கூட்டணி `விஜய்62' மூலம் மூன்றாவது முறையாக இணைகிறது. `அங்கமாலி டைரீஸ்' பட ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் மட்டும் இந்தக் குழுவில் உறுதியாகியுள்ளார். ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஹீரோயினாக நயன்தாரா என சொல்லப்பட்டாலும் இன்னும் படக்குழுவினர் தரப்பிலிருந்து இது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. துப்பாக்கி, கத்தி போன்று இந்தப் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் - சிவா காமினேஷனில், வி சீரிஸின் நான்காவது படமாக தயாராகிறது `விஸ்வாசம்'. வழக்கமாக படம் முடித்துவிட்டு டைட்டில் வெளியிடும் இந்த டீம், இம்முறை தலைப்பை வெளியிட்டு, ஜனவரியிலிருந்து ஷூட்டிங் செல்ல உள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், குழுவினர் பற்றி எந்த தகவலும் வெளிவராத நிலையில், தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று மட்டும் கூறியிருக்கிறார்கள். ஒருவேளை இரண்டு படங்களும் தீபாவளி வெளியீடாக வந்தால் தல - தளபதி பட்டாசுதான்!

2.0:

2010ல் வெளியான எந்திரன் படத்தின் சீக்குவலாக உருவானாலும் 2.0 வேறு கதை, வேற களம் என்கிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன், ரஹ்மான் இசை, நிரவ் ஷா ஒளிப்பதிவு, ரசூல் பூக்குட்டி ஒலிக்கலவை என பிரமாண்ட டீம் இணைந்து பிரமாண்டமாக படத்தை உருவாக்கியிருக்கிறது. நிறைய 3டி படங்கள் 2டியில் எடுத்து 3டிக்கு கன்வர்ட் செய்யப்படும். ஆனால், 2.0 எடுத்திருப்பதே 3டியில்தான் என்பதால், ஆடியன்ஸுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017 தீபாவளி வெளியடாக எதிர்பார்க்கப்பட்ட படம், தள்ளிப் போய் 2018 ஜனவரி 26ல் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

காலா:

Kaala

 

`2.0'வுக்குப் பிறகு வெளியாக இருக்கும் படம், ரஜினி - ரஞ்சித் இணைந்திருக்கும் `காலா'. `கபாலி'யில் மலேஷியா போல இந்த முறை மும்பை பின்னணியில் உருவாகியிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை, முரளி ஒளிப்பதிவு என ஒரு சிலர் மட்டும் அதே கபாலி டீமில் இருந்து வந்துள்ளனர். ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டில், சயாஜி ஷிண்டே எனப் பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/109142-most-anticipate-movies-of-2018.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.