Jump to content

மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்(MurderOnTheOrientExpress) - திரை விமர்சனம்


Recommended Posts

மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் - திரை விமர்சனம்

989641595980baf668efdjpg

திரைப்படம்

மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்

நடிகர்கள்

கென்னத் பிரனா, பெனலோப் க்ரூஸ், வில்லெம் டெஃபோ, டெய்ஸி ரிட்லி, ஜானி டெப், ஜூடி டென்ச்.

திரைக்கதை

மைக்கெல் க்ரீன்

இயக்கம்

கென்னத் பிரனா.

உலகம் முழுவதும் பிரபலமான பிரிட்டிஷ் எழுத்தாளர் அகதா கிரிஸ்டியின் 'மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே 1974ல் ஒரு முறை திரைப்படமாகவும் பல முறை தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்த கதை என்றாலும் வசீகரம் குன்றாத மர்மத்தைக் கொண்ட கதை.

ஜெருசலத்தில் ஒரு சிறிய திருட்டு வழக்கைத் தீர்க்கும் ஹெர்க்யூல் பொய்ரோ (கென்னத் பிரனா), சில நாட்கள் ஓய்வெடுக்க நினைக்கையில் ஒரு வழக்கை விசாரிக்க வருமாறு லண்டனிலிருந்து அவருக்கு ஒரு தந்தி வருகிறது. இஸ்தான்புல்லில் இருந்து பிரான்சின் காலேவுக்குப் புறப்படும் ஓரியண்ட் எக்ஸ்பிரசில் அவருடைய நண்பர் பூக்கின் (டாம் பேட்மேன்) உதவியால் இடம் கிடைக்கிறது.

அந்த ரயிலில் சாமுவேல் ராஷே (ஜானி டெப்) என்ற ஒரு தொழிலதிபரும் பயணம் செய்கிறார். தன்னை பழிதீர்க்க சிலர் நினைப்பதாகவும் தனக்குப் பாதுகாப்பளிக்கும்படியும் பொய்ரோவிடம் கோருகிறார் அவர். பொய்ரோ மறுக்கிறார். அன்று இரவே ராஷே கொல்லப்படுகிறார்.

அதே நேரத்தில் ரயில், ஒரு பனிச் சரிவில் சிக்கி தடம்புரண்டுவிடுகிறது. அதிலிருந்து ரயில் மீட்கப்படுவதற்குள் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் நிர்பந்தம் பொய்ரோவுக்கு. ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவர் மீதும் சந்தேகத்தின் நிழல் விழுகிறது. 1934ல் வெளிவந்த இந்த கதையின் முடிவு எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

நாவலில், கொலையைச் சுற்றியும் அதன் பின்னணியைச் சுற்றியும் கதை பின்னப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் படம் துப்பறிவாளரான பொய்ரோவைச் சுற்றியே நடக்கிறது. "என் பெயர் ஹெர்க்யூல் பொய்ரோ. அனேகமாக உலகில் நானே மாபெரும் துப்பறிவாளன்" என்று அறிவித்தபடி, கென்னத் பிரனா பொய்ரோ அறிமுகமாகும் காட்சியிலேயே படம் சூடுபிடித்துவிடுகிறது.

அகாதா கிரிஸ்டியின் நாவலைப் படித்துவிட்டவர்களுக்கு அதில் இருந்த முழுமை இதில் இல்லையென்றும் சிட்னி லூமே இயக்கத்தில் 1974ஆம் வருடம் வெளிவந்த படம் இதைவிடச் சிறந்த தயாரிப்பு என்றும் தோன்றக்கூடும்.

ஆனால், எந்த தயாரிப்புமின்றி படத்தைப் பார்ப்பவர்கள் உண்மையிலேயே அசந்துபோவார்கள். பெரிய ஆக்ஷன் காட்சிகள் கிடையாது. ஆனால், ரசிக்கத்தக்க வசனங்கள், ஓவியங்களுக்கு நிகரான காட்சிகள் ஆகியவை மூச்சை நிறுத்தச் செய்கின்றன.

வால்கைரி, டன்க்ரிக் படங்களில் அசத்திய கென்னத் பிரனாவுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. இந்தப் படத்தை இயக்கியிருப்பதோடு, ஹெர்க்யூல் பொய்ரோவாகவும் வரும் கென்னத் பிரனா, பாத்திரத்தோடு மிகவும் பொருந்திப்போகிறார். அதேபோல, ராஷேவாக வரும் ஜானி டெப்புக்கு இது மிக முக்கியமான படம்.

ஆனால், சில காட்சிகள் உறுத்துகின்றன. ரயில் தண்டவாளத்தில் பனி குவிந்துவிடுவதால் ரயில் பயணம் தடைபடுவதாக நாவலில் வரும். ஆனால் இந்தப் படத்தில் பனிச்சரிவில் சிக்கி ரயில் தடம்புரண்டுவிடுகிறது. பத்துப் பதினைந்து பேர், பனியை அகற்றி மீண்டும் எஞ்சினை தூக்கி நிறுத்துவது நம்பும்படியாக இல்லை. படம் பிரதான கதைக்குள் நுழையவும் சிறிது நேரம் பிடிப்பது பலருக்கு சோர்வை ஏற்படுத்தக்கூடும்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article21037965.ece

Link to comment
Share on other sites

ரயில் பயணம்... ஒரு கொலை... கொலையாளி யார். மிரட்டுகிறதா சஸ்பென்ஸ் த்ரில்லர் #MurderOnTheOrientExpress

 
 

 

அகதா கிறிஸ்டியின் நாவல்களில் அதிகமுறை படமாக்கப்பட்டது மர்டர் ஆன் தி ஓரியன்ட் எக்ஸ்பிரஸ்தான். ரயிலில் பயணிக்கும் உலகின் டாப் மோஸ்ட் துப்பறிவாளர் ஹெர்க்யூ பொரோவுக்கு ஒரு புது கேஸ் வருகிறது. பனிப்பாறை ஒன்று விழுந்து ரயிலின் பாதையை மறித்து, ரயிலை தடம்புரள வைக்கிறது. அடுத்து ஒரு கொலை. அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது மர்டர் ஆன் தி ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் திரைப்படம். #MurderOnTheOrientExpress

 

Murder On The Orient Express

ஜானி டெப், ஜூடி டென்ச், பெனலோப் க்ரஸ், வில்ஹெம் டேஃபோ, மிச்சல் பெய்ஃபெர் என எக்கச்சக்க மல்ட்டி காஸ்டிங். அது போக, ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் அசத்தும் கென்னெத் ப்ரானாக் , கதையின் நாயகனான ஹெர்க்யூ பொரோ கதாபாத்திரத்தையும் , இயக்கத்தையும் ஒரு சேர கையாண்டிருக்கிறார். 

முட்டையின் அளவு முதல், கழுத்தில் இருக்கும் 'டை' வரை ஹெர்க்யூவிற்கு எல்லாமே பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும். ஜெருசலத்தில் நடந்த ஒரு திருட்டை தனக்கே உரித்தான பாணியில் கண்டுபிடிக்கிறார் ஹெர்க்யூ. இஸ்தான்புல்லில் ஓய்வு எடுக்க நினைக்கும் ஹெர்க்யூவிற்கு , அடுத்த அசைன்மென்ட் லண்டனில் இருக்க, நண்பர் பௌக் மூலம் ஓரியன்ட் எக்ஸ்பிரஸில் பயணிக்கிறார். (இது வெறும் இன்ட்ரோதான் பாஸ் ஸ்பாய்லர் எல்லாம் இல்லை). 

Murder On The Orient Express

சிலரை மட்டும்தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் பொழுது கண்டுபிடிப்பது கடினம். அப்படிப்பட்ட ஜீவன்தான் ஜானி டெப். ஆலிஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ், டெட் மேன் டெல்ஸ் நோ டேல்ஸ் படங்களிலேயே, ஜானி டெப் மிகவும் வயதானவர் போல் காட்சியளித்தார். இந்தப் படத்தில் அது தொடர்கிறது. ஐம்பது வயது ஆகிவிட்டாலும் டேக் கேர் ப்ரோ. இதில் இன்னும் சற்றே முறைக்கும் ரோல் அவருக்கு.

ரயிலில் வெவ்வேறு கதாபாத்திரங்கள். ரேச்சட் (ஜானி டெப்), இளவரசி ( ஜூடி டென்ச்), பிலார் ( பெனலோப் க்ரஸ்) எனத் திரையில் தோன்று ஒவ்வொரு கதாபாத்திரமுமே பிரபலமான நடிகர்கள்தான் என்பதால், யார் மீதும் சந்தேகம் கொள்ள முடியாத நிலையில் பயணிக்கிறது ரயிலும் திரைக்கதையும். ஹெர்க்யூவின் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளரான பேட்ரிக் டாய்ல், படத்தின் த்ரில்லருக்கு ஏற்றபடி இசையமைத்திருக்கிறார். 

 

 

ரயில் பயணம்... கொலை. கொலையை யார் செய்திருப்பார்கள் என்ற விசாரணை என்கிற நாவலேதான். ஆனால் ஏனோ பிற்பகுதியில் போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. சில, ரீமேக்குகள் காலத்தின் கட்டாயம்.  ஜானி டெப், ஜூடி டென்ச், கென்னெத் ப்ரானாக் என ரசிக்க படத்தில் பல விஷயங்கள் இருக்கின்றன.1974ல் வெளிவந்த பாகத்தைப் பார்த்துவிட்டு, தன் ஹீரோ ஹெர்க்யூவாக நடித்த ஆல்பெர்ட் ஃபின்னி மீசை வைக்கவில்லை என்பதை மட்டும்தான் குறையாகச் சொன்னாராம் கிறிஸ்டி. அகதா கிறிஸ்டி இப்போது இருந்திருந்தால், சந்தோஷப்பட்டிருப்பார். கென்னெத் மீசையை அவ்வளவு அழகாக வைத்திருந்தார். அதிலும் அதைப் பாதுகாக்க அவர் வைத்திருந்த கருவி எல்லாம் அல்ட்டி.  

Murder On The Orient Express

அட்டகாசமான காஸ்டிங், அசத்தலான ஒளிப்பதிவு, அந்தக் காலகட்டத்திற்கு கொண்டு செல்லும் கலையாக்கம் எனப் பல இருந்தும், படம் சில இடங்களில் சலிப்புத் தட்டுகிறது. க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படம், அதுவும் ஒரு துப்பறியும் நிபுணர்தான் படத்தின் மையம் என்பதால் விறுவிறுப்பு மிஸ்ஸாவது பெரிய மைனஸ். கொலைக்கான ஒவ்வொரு லீட் கிடைக்கும் போதும் அடுத்து விறுவிறுப்பாக நகரப் போகிறது என நிமிர்ந்து உட்காரும் போதெல்லாம், 'அங்க உனக்கென்ன வேல' என்கிற ரேஞ்சில் உரையாடும் போது படத்தின் வேகம் சுருண்டு பாய் போட்டுப் படுக்கிறது.

 

இருந்தாலும் at the end people always see there is right or wrong என்கிற தர்க ரீதியான கருத்தை படத்தின் க்ளைமாக்ஸோடு இணைத்த விதமும், அந்த எமோஷனலான கடைசிக் காட்சியும் சூப்பர். அகதா கிறிஸ்டியின் நாவலின் பெர்ஃபெக்ட் அடாப்டேஷன் 1974ல் வெளிவந்த வெர்சன்தான் என்பதை நினைவுறுத்துகிறது இந்த சினிமா. நாவலையோ, பழைய வெர்சனையோ படிக்காத, பார்க்காத நபர்கள், தாராளமாய் ஓரியன்ட் எக்ஸ்பிரஸுக்கு ஒரு விசிட் அடிக்கலாம். 

https://cinema.vikatan.com/hollywood-news/108971-murder-on-the-orient-express-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.