Jump to content

புலம் பெயர்தேசத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் 2017.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெருவெழுச்சியுடன் நடைபெற்ற சிட்னி மாவீரர் நாள் நிகழ்வு!

 

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. திங்கட்கிழமை 27 – 11 – 2017 அன்று நியுவிங்ரன் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுவெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.

   
சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கபட்ட மாவீரர் நினைவு மைதானத்தில், மாதிரி மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்புகள் செய்யப்படடு 200 வரையான மாவீரர்களின் கல்லறைகள் படங்களுடன் மாவீரர் குடும்பங்களின் வணக்க நிகழ்வுக்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

மாலை ஆறு மணிக்கு கப்டன் புவிராஜ் அவர்களின் தாயார் திருமதி விக்ரோரியா சண்முகம் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஆரம்பமான நிகழ்வில், அவுஸ்திரேலிய பூர்வகுடிமக்களின் கொடியை தமிழ்ச்செயற்பாட்டாளர் திருமதி சாம்பவி அவர்களும், அவுஸ்திரேலிய தேசியக்கொடியை மூத்த தமிழ்ச்செயற்பாட்டாளர் திரு. ஸ்கந்தகுமார் அவர்களும், தமிழீழ தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சிட்னி பணியக பொறுப்பாளர் திரு ஜனகன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து பிரதான ஈகச்சுடரை ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கைச் சமரின்போது வீரச்சாவடைந்த கப்டன் சந்தியா அவர்களின் சகோதரி திருமதி வாணி ஏற்றிவைக்க, சமநேரத்தில் அனைத்து மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கும் மாவீரர்குடும்பங்களைச் சேர்ந்தோர் மற்றும் உரித்துடையோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.

மொழியாகி மூச்சாகி என்ற துயிலுமில்ல பாடல் இசைக்கப்பட, அனைவரும் உணர்வெழுச்சியுடன் மாவீர்ர்களை நினைவுகூர்ந்தனர். அடுத்து நீண்ட வரிசையில் திரண்ட மக்கள் அனைவரும் மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து சிட்னி தமிழ் இளையோரால் மாவீர்களின் கனவுகளை பிரதிபலிக்ககூடிய வணக்க நடனம் ஒன்றை எழுச்சியுடன் படைத்தனர். இதில் மாவீர்களின் நினைவுகளை மீட்டியும் மாவீர்களின் கனவான தமிழீழ தாயகத்தை விடுதலையடையச் செய்வதே தமிழர்களின் தீர்வாகும் என்ற உறுதிமொழியுடன் அவ்வணக்க நடனம் நிறைவுபெற்றது.

நிகழ்வின் சிறப்புரையை பேர்த்தில் இருந்து வருகைதந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் திரு. அமல்ராஜ் வழங்கினார். மாவீரர்களின் நினைவுகளை சுமந்திருக்கின்ற இந்த நாளிலே, அவர்களின் கனவான தமிழர்களின் விடுதலைக்கான அடிப்படைகளான தமிழர்களின் தாயகம் தமிழர்களின் தேசியம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையிலான தீர்வை பெற்றுக்கொள்வதாகவே இருக்கவேண்டும் எனவும், எமது மாவீர்களின் விடுதலைப் போராட்டமானது தமிழர்களின் அரசியல் கோரிக்கையை வெளியுலகுக்கு கொண்டுவந்துள்ளது என்றும் அதனை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட பரிணாமத்தில் விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் தனதுரையில் அவர் குறிப்பிட்டார்.

அடுத்ததாக சிட்னி தமிழ் இளையோர்களின் இன்னொரு படைப்பான தமிழா இணைந்துகொள் என்ற நடனம் இடம்பெற்றது. அதில் தமிழர்கள் உலகெங்கும் பிரிந்து வாழ்ந்தாலும் அனைவரும் இணைந்தால் பலமாக தமிழர்களாக முன்னேறமுடியும் என்ற கருப்பொருளில் அந்நடனம் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியாக தேசிய கொடிகள் இறக்கப்பட்டதை தொடர்ந்து தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உறுதியேற்புடன் நிகழ்வு இரவு 8.30 மணிக்கு நிறைவுற்றது.

வேலைநாளாக இருந்தபோதும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டு மாவீரர்களின் நினைவுநாளில் கலந்துகொண்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.


sydney-maveeraar-271117-seithy%20(1).jpgsydney-maveeraar-271117-seithy%20(2).jpgsydney-maveeraar-271117-seithy%20(3).jpgsydney-maveeraar-271117-seithy%20(4).jpgsydney-maveeraar-271117-seithy%20(5).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=194616&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.