Jump to content

இந்தியா எதிர் இலங்கை ஒருநாள் போட்டி செய்திகள்


Recommended Posts

55 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி! - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

 

இந்திய அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

Dhoni_17431.jpg

 

Photo Credit:BCCI


விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணியின் இன்னிங்ஸை குணதிலகாவும், தரங்காவும் தொடங்கினர். அணியின் ஸ்கோர் 15 ஆக இருந்தபோது 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குணதிலகா பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, இரண்டாவது விக்கெட்டுக்கு தரங்காவுடன் ஜோடி சேர்ந்த சமரவிக்ரமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய பந்துவீச்சாளர்களை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, ரன் ரேட்டும் குறையாமல் பார்த்துக் கொண்டது. இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இந்த ஜோடியை சஹால் பிரித்தார். சமரவிக்ரமா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உபுல் தரங்கா, 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோனியின் அபார ஸ்டம்பிங்கில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தவந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், 44.5 ஓவர்களில் இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் 160 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி, கடைசி 8 விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு இழந்தது. இந்திய அணி தரப்பில் சஹால் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருப்பதால், இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும். 

https://www.vikatan.com/news/sports/111071-indvssl-sl-bowled-out-for-215.html

Link to comment
Share on other sites

ஷிகர் தவான் அசத்தல் சதம்! தொடர்ச்சியாக எட்டாவது ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி

 
 

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. 

Dhawan_20479.jpg

 

Photo Credit:ICC

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க வீரர் உபுல் தரங்காவின் 95 ரன்கள் உதவியுடன் 215 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி, சஹால் மற்றும் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கியது. கடைசி 8 விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு இழந்த இலங்கை அணி, 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இதையடுத்து, 216 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா விரைவில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஷிகர் தவானுடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. ஒரு முனையில் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 63 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது. 

 

ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்த பின்னர், வழக்கமான தாக்குதல் பாணி ஆட்டத்துக்குத் திரும்பிய தவான் 84 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இந்த போட்டியின் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தவான் 4,000 ரன்களைக் கடந்தார். 95 இன்னிங்ஸ்கள் மூலம் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த தவான், விராட் கோலி (93 இன்னிங்ஸ்கள்) அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது. தவான் 100 ரன்களுடனும், அவருக்கு உறுதுணையாக இருந்த தினேஷ் கார்த்திக், 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரை இந்திய அணி தொடர்ச்சியாக 8-ஆவது முறையாகத் தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்தவகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 13 தொடர்களை வென்றுள்ளது. 

https://www.vikatan.com/news/sports/111078-india-wins-third-odi-and-series-against-sl.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.