Jump to content

தாய்நிலமும் தனையர்களும் (1986) கவிதையின் ஒரு பகுதி - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

1957ல் களபலியான திருமலை நடராசனில் இருந்து விடுதலைகாக உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் என் அஞ்சலிகள்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
 
1957ல் ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்துத் தியாகிகளுக்கும் அஞ்சலி மரியாதை செய்யவேண்டும் என்கிற கருத்தை கால்நூற்றாண்டுகளுக்கும் முன்னிருந்தே நான் கேட்டு வருகிறேன். வன்னியிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ”திருமலை தியாகராசன் முதல் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் கழபலியான அனைத்து அமைப்பு தியாகிகளுக்கும் அஞ்சலி” செலுத்தியே ஆரம்பித்திருக்கிறேன். எங்கும் எனக்கு எதிர்க்குரல் எழுந்ததில்லை. . இந்த கருத்தியலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே பலர் வாயிலாக நான் கேட்டிருக்கிறேன். 1986ல் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து அமைப்புத் தோழதோழியர்களாலும் நயந்து வாசிக்கபட்ட “தாய் நிலமும் தனையர்களும்” என்கிற என்னுடைய கவிதையில் சில அடிகள் இந்த நிலைபாட்டை பதிவு செய்கிறது.
.
“போத்துக்கீசரை போரில் எதிர்த்த”
சிங்கள நாட்டு இளவரசனுக்கு
தன்னுயிர் நோக்காது புகலிடம் தந்த
சங்கிலி மன்ன்னைப் பாடுவோம் அம்மா.
……………………………………………………..
அன்னியர்க் கெதிராய்
போர்களில் விழுந்த நம்
மூதாதையர்கள்
மீண்டும் சிறுவராய் உதித்துவந்தனரோ
பணிகள் முடிக்கும் சபதங்களோடு.
எத்தனை பேரைக் களபலியாக
மீண்டும் உன்னிடம் தந்தோம் அம்மா!
.
பல்கலைக்கழக முன்றலில் நின்று
தொடுவானங்களை எட்டிப் பிடித்த
எத்தனைபேரைக் களபலி தந்தோம்.
விமலதாசனை, ரவி சேகரனை
திருமலை தந்த கேதீஸ்வரனை
முல்லைத் தீவின் சிறீ எனும் தோழனை
பொன்பூச் சொரியும் நிழல்வாடிகளின்
நீழலில் நின்று
விடுதலைப்போருக்கு எம்மை அழைத்த
எத்தனை பேரை நாங்கள்ம் இழந்தோம்.
.
வெடிகுண்டின்மேல் விழுந்துபடுத்து
தோழரைக் காத்த
’வெத்திலைக் கேனி’ அன்புவைப்போல
இன்னொரு தோழனைக் காண்பது எப்போ?
.
காரைதீவுக் கடற்கரைப் போரில்
இரண்டாம் வன்னி நாச்சியாய் எழுந்து
வீரம் விழைத்த சோபா என்ற
தேவதை போல
மீண்டுமோர் தோழியைக் காண்பது எப்போ?
சாவகச்சேரியில் எதிரியை வேருடன்
கல்லி எறிந்த நீக்கிலஸ் போலவும்
வன்னிச் சிறுத்தை காத்தான்
போலவும் கொழும்பு வீதியில் போர் முரசறைந்த
மானவன் பரிபூரணைப் போலவும்
இன்னொரு தோழமை எய்துமோ வாழ்வு?
.
விடுதலைக்கு மூலைக் கல்லாய்
இவர்களைத் தானே நாங்கள் நாட்டினோம்
விடுதலைக்குத் திசை விண்மீனாய்
இவர்களைத்தானே நாங்கள் எரித்தோம்.
……………………….. ………………………… ………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………….
1986.
இயக்கங்கள் தங்கள் தங்கள் மாவீர்ர் தின்ங்களை தாம் நியமித்த நாட்களில் கொண்டாடுவது தொடரட்டும். ஆனால் எல்லோரும்கூடி பொதுவான ஒரு தியாகிகளுக்கு நன்றி கூறும் தினத்தை மே 17 அல்லது18 அல்லது 19ம் திகதிகளில்  கொண்டாடுவது வரலாற்றுக் கடமையாகும்.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.