Jump to content

தலைவர் இருக்கிறார் மீண்டும் வருவார்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கிறார்
மீண்டும் வருவார்..

இது எம் முதல்வனைக் கொண்டாடும் தருணம்

பகிருங்கள்....

என் தலைவனுக்கு
ஒரு பக்தனின் வாழ்த்துப்பா!!
---------------------------

காந்தள் மலர்க் காடுகளே!
எனக்கொரு கடி மலர் வேண்டும்
வெடிகளுக்குள் முளைத்தெழுந்த 
எம் வீரப் புதல்வன் பொன் அடிகளுக்கு 
அதைச் சாற்றவேண்டும்
நீடூழி வாழ்கவெனப் போற்றவேண்டும்

கதைகளிலே படித்துவந்த 
காவியத்து வேல் முருகன் 
சதை உடுத்தி வந்த நாள் இன்று
போர்க் கதை உயர்த்தி வா!!
போரில் வென்றுவா என 
மனம் பதை பதைக்கப் பிணமான
எதிரிகளின் சிதைகளுக்கு
தீ வைத்த தெய்வத் திரு வேந்தன்
தமிழின வாதை துடைத்த வரலாற்று நாயகனை
வாழ்த்த வேண்டும் வாருங்கள்

காந்தள் மலர்க் காடுகளே!
எனக்கொரு கடி மலர் வேண்டும்

கொஞ்சம் புதுவகையாய்
கலித்தொகையாய்
பொன்னகையாய்
தேனாய்
மேற்கந்தி வானாய்
தெவிட்டாத தமிழிலிருந்து
ஒரு சொல்லெடுத்துத் தாராய்
தமிழ்த்தாயே பாராய்!

பாராய்!!
அழகுடுத்தி மலர்ந்த அன்னை 
நிலத்தைக் 
களவெடுக்க வந்த கயவர்கள் 
எம் சிசுவின்
உடலெடுத்துத் தாரில் உள்நுளைத்து
அழுத்திப் பின் உரிந்த தோலில் 
ஒழுகும் குருதியில்
உயிர் இருக்கிறதா எனப் பார்த்தான்
அதை என் தலைவன் பார்த்தான்

இதைக் காண்கையில் 
உயிருள்ள எல்லோர்க்கும்
உடனே கோவம் வரும்

மடை திறந்த அருவியின் 
தடை அற்ற வேகம் போல் 
குருதி கொதிக்க
பகையை கொல்வதற்கு கோவம் வரும்
தனி ஈழம் அமைக்கும் வேகம் வரும்
அதைத்தானே அன்று எம் அண்ணன் செய்தான்

கண்ணியம்
காலகாலமாய் கிடந்த இருட்டறை உடைத்து
வெளிவந்தது
ஈழத்துப்பெண்ணியம்

அன்பாய்
எதிரியை அழித்துவிடும் அம்பாய்
பண்பாய்
பனிக்குளிரில் கிடந்தாலும் பழுதுபடா
'மாமத்'தின் பலமான என்பாய்
செவ்வாய் மலர்ந்து
எமக்காய் சேவைகள் செய்த ஆண் தாய்
உனைச் சீராட்டி வளர்த்ததால்
தலை நிமிர்ந்தது வேலுப்பிள்ளையின்
வல்வாய்

எம் தலைவா எங்கள்
இதயத்திலிருக்கும் நான்கு அறை
எவர்க்கும் இடமில்லை
அது நீ இருக்கும் அறை
என் தமிழா எடுத்து வா பறை
எட்டுத் திக்கும் எம் தலைவன் பெயரை உரை
எம் இனத்தின் வாத்தியமடா அது
ஒலிக்க அறை 'பறை'

ஒரு புயலுக்குப் பின் அமைதி இருக்கும்
அந்த அமைதிக்குப் பின் வானம் கறுக்கும்
அமைதியின் அர்த்தம் ஆர்ப்பரிப்பு என
அறியாதார் செவிகள் இதைக் கேட்டால்
உறைக்கும்

'ஸ்பாட்டன்'களின் வீரத்தை
இன்றுவரை பேசுகிறது உலகு
என் தலைவன் வீரம்
பிரபஞ்சத்தில் கடைசி உயிர் உள்ளவரை
பேசப்படும் அலகு

கடவுள் இருக்கிறார்!!

கடவுள் இருக்கிறார் என்பவர் ஒருபுறம்
இல்லை என்பவர் மறு புறம்
எவர் எதையும் பேசட்டும்
ஆனால் உற்சவம் மட்டும்
சிறப்பாய் நடக்கும்

எம் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த தலைவா!
ஈழத் தாயின் உன்னத புதல்வா
இன்று போல் ஈராயிரம் ஆண்டு
கடந்து வருகிற கார்த்திகை இருபத்தியாறில்
நீ மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டுதானிருப்பாய்
தமிழர் மனங்களில் உயர்ந்துகொண்டுதானிருப்பாய்

எம் உன்னத தலைவா நீ வாழ்க!!
என்றென்றும் உன் புகழ் வாழ்க!!

-அனாதியன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இல்லை, இனிமேல் வரமாட்டார் எனும் எடுகோளில்தான் எமது இனத்துக்கான அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கணும்,, தலைவர் இருக்கிறார்,மீண்டும் வருவார் என்பது இரண்டு வகைபேருக்கு மட்டுமே இனிப்பாயிருக்கும், ஒன்று கவிதை எழுதுபவர்கள், மற்றையது காசை அமுக்கியவர்கள்! இத்தனை ஆயிரம் போராளிகளை,தளபதிகளை,மக்களை இழந்த ஒரு போராட்ட தலைவன், தன்னை காப்பத்திக்க நினைச்சிருந்தால், கிளிநொச்சி கையைவிட்டுபோனவுடனேயே கடல் கடந்து ஓடியிருப்பார், கொள்கைகளை அடிக்கடி மாற்றும் ஒரு இனத்தில் பிறந்து அவர் ஒரு கொள்கைக்காக வாழ்ந்தார்...போயிட்டார். இப்போ இல்லை அவ்வளவுதான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கு: பல நாட்களுக்குப் பின் ஒரு சிறந்த கவிதையை மனப்பூரிப்புடன் படித்தது சுகம்.
 "ஸ்பாட்டன்" சிறந்த உதாரணம். அஞ்சா நெஞ்சம் படைத்த, எதற்கும் அடிபணியாத கிரேக்க நாட்டின் Spartan படை. கி.மு 6 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த சிறந்த போர்வீரர்கள்.
வழவனுக்கு:  நல்ல கருத்து ஆனால் காசை அமுக்கியவர்களுக்கு அல்ல இனிமேல் அமுக்க எண்ணுபவர்களுக்குதான் தலைவர் வருவார் என்பது இனிக்கும். அமுக்கியவர்கள் தலைவர் மீண்டும் வரக்கூடாது எனத்தான் விரும்புவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen, Text

உலகமெங்கும்  அடிவாங்கிய  தமிழ் இனம், திருப்பி அடித்த இடம் தமிழ் ஈழம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.