Jump to content

இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்


Recommended Posts

இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்

ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது:-

fgm.jpg

பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா? எதுவாக இருந்தாலும் இப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்- இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்.

கொழும்பு. அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது  பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும்ச(Female Genital Mutilation-FGM) டங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார்.

இலங்கையின் தலைநகரான கொழும்பிலுள்ள நம்பிக்கைக்குரிய வைத்தியர் ஒருவர் சிறிய தன்சீமின் யோனியின் மீது மேலோட்டமாக மழுங்கிய பிளேட் ஒன்றைக் கொண்டு செல்லுவார். அதன் பின் நாகியா தன்னுடைய உறவினர்களிடம் சடங்கு முடிவடைந்ததாகக் கூறக் கூடியதாக இருக்கும். எந்தவிதமான இரத்தப்போக்கோ அல்லது வலியோ காணப்படமாட்டாது. கடுமையான உடல் உளப்பிரச்சனைகளைத் தோற்றுவிக்கக் கூடிய எப்ஜிஎம் ஆனது அதிகமாக ஆபிரிக்க நாடுகளுடன் தொடர்புடையதாக இருப்பதுடன் இப்பழக்கத்தை முடிவுறுத்துவதற்காக சர்வதேசரீதியான முயற்சிகளுக்கு இட்டுச் சென்றுள்ளது.

ஆனால் பின் நோக்கிப் பார்க்கும் பொழுது, பல தலைமுறைகளாக  இலங்கையில் காணப்படும் தாவூதி போரா சமூகத்தைச் சேர்ந்த நாகியாவின் முஸ்லிம் குடும்பத்தில் பெண்கள் கத்னாவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த சடங்கானது பிளேட்டினால்; சின்னக் கீறல் இடப்படுவது முதற்கொண்டு பகுதியளவிலோ அல்லது முற்றாகவோ பாவத்தின் மூலமாகக் கருதப்படும் பெண்குறியான கிளிட்டோரஸ் நீக்கப்படுவது வரை பலவகையாக செய்யப்படுகின்றது. பட்டர் கத்தியைப் பாவிக்கும்படி வலியுறுத்துவதன் மூலம் நாகியாவினால், தன்சீமின் உடல் சிதைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

தன்னுடைய உண்மையான பெயரை வெளிப்படுத்த விரும்பாத நாகியாவும் தனக்கு நேர்ந்த  கத்னாவினால் பெரும் மனஅழுத்தத்திற்கும், வேதனைக்கும் உள்ளாகியிருந்தது மட்டுமன்றி பல தசாப்தங்கள் கடந்த நிலையில் இன்றும் அச்சம்பவத்தின் ஒவ்வொரு விபரத்தையும் நினைவுபடுத்திக் கூறக்கூடியதாக இருந்தது.

ஒரு அறையில் வைத்தியர், அவருடைய மனைவி மற்றும் ஒரு உதவியாளர் இருந்தனர். அவளுடைய கால்கள் விரிக்கப்பட்டு  இறுக்கமாகப் பிடிக்கப் பட்டிருந்த வேளையில் வைத்தியர் ஒரு பிளேட்டுடன் அவளை அணுகி எந்தவிதமான மயக்க மருந்தும் கொடுக்காமல் தாங்கொணாத வலியை ஏற்படுத்தினார்.

இந்த கொடுமை இடம்பெறும் போது நாகியாவின் விருப்பிற்குரிய சித்தி அவளை ஆறுதல் படுத்த  முயற்சித்தபடி அவளுக்கருகிலேயே நின்று கொண்டிருந்தார். குறித்த காலத்தின் பின்னர் குணமடைந்ததும் உறவினர்களும், நண்பர்களும் சடங்கு நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடக் குழுமிய வேளையில் நாகியாவுக்கு பலவிதமான பரிசு மழையும், கவனிப்பும் கிடைத்தன.

நாகியா தனக்கு நடந்ததைப் பற்றிய விபரங்களை ஒருபோதும் தன்னுடைய கணவனுடன் கதைத்ததில்லை. இலங்கையில் எப்ஜிஎம் பற்றிய 15 வாக்குமூலங்கள் சேகரிக்கப்படுகையில்தான் முதன்முதலாக இவர் தனது கதைகளை எழுதிப் பகிர்ந்து கொண்டார். இவ்வாக்குமூலங்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பல பராளுமன்றக் குழுக்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றிடம் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இப்பழக்கத்தால் பாதிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் செயற்பாட்டாளர்களினால் தொகுக்கப்பட்ட ஜூன் அறிக்கைதான் இந்தத் தீவில் இடம்பெற்று வரும் எப்ஜிஎம் நடைமுறை தொடர்பாக இலங்கையின் உத்தியோகபூர்வ அமைப்புகளிடம் கொடுக்கப்பட்ட முதலாவது சமர்ப்பிப்பாகும்.

‘இது இலங்கையில் நடைபெற்று வருகின்றது என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை’ என்று பாராளுமன்ற உறுப்பினரும், பொது சுகாதாரத்தில் தேர்ச்சி பெற்றவருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அவர்கள் தெரிவித்தார்கள்.

fgm2.jpg
இரகசிய நடைமுறை

‘சட்டத்தால் நெறிப்படுத்தப்படாமல் இருக்கும் இந்தப் பழக்கம் பற்றி,  இலங்கையில் ஆய்வுகளின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இது சம்பந்தமான பகிரங்க தகவல்கள் காணப்படவில்லையென்றும் பெர்னாண்டோபுள்ளே மேலும் கூறினார்.

இது குர்ஆனில் கூறப்படாத போதும் போரா சமூகத்தினர் கத்னாவினை ஒரு சமயக் கடப்பாடாகக் கருதுகின்றனர். இவை இரகசியமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருந்தபொழுதிலும் இலங்கையில் 3000 போரா மக்கள் காணப்படுகின்றனர். அதில் 70 அல்லது 90 சதவிகிதமான பெண்கள் இந்நடைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என சிலர் கூறிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது போரா சமூகத்தில் மட்டும் இடம்பெறும் ஒரு பழக்கமல்ல என்று இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கத்தின் கொள்கைப் பணிப்பாளர் மதுஷா திசாநாயக்க தெரிவித்தார். 2012ஆம் ஆண்டின் சனத் தொகை புள்ளிவிபரங்களுக்கு ஏற்ப 2 மில்லியன் மக்களைக் கொண்ட சோனகர் மற்றும் மலேயர் சமூகங்களைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தின் வாக்குமூலங்களை சேகரித்து வருகின்றார். இதில் சில குடும்பங்கள் பெண் குழந்தை பிறந்த 40வது நாளில் மருத்துவரீதியாக எதுவித தகுதியுமற்ற ‘ஒஸ்த்தி மாமி’ என்றழைக்கப்படும் பெண்களின் உதவியுடன் எப்ஜிஎம் இனை மேற்கொள்வதாகத் திசாநாயக்க கண்டறிந்துள்ளார்.

இலங்கை முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் மீது பரந்த செல்வாக்குள்ள அகில இலங்கை ஜாமியத்துல் உலமாவானது, 2008ம் ஆண்டு இந்த நடைமுறையானது கட்டாயமானது என பத்வாக் கொடுத்தது. இதன் ஒரு பிரதியும்; எப்ஜிஎம் பற்றிய சமர்ப்பிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

‘தங்களுடைய பெண் பிள்ளைகளை இந்த நடைமுறைக்கு உட்படுத்தும் தாய்மாரை இப்போதும் நாம் கொண்டிருக்கிறோம்’ என்று அவர்க மேலும் கூறினார். இதன் விளைவாக பெண்களுக்கு  ஏற்படும் உடல்நலப் பாதிப்பானது கடும் நோய்த்தொற்றில் தொடங்கி பிறப்புறப்பு திசுக்கள் வீங்குதல் உட்பட சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது வரை பல வகையானதாகும். பிரசவ நேரங்களில் சிக்கல் மற்றும் குறைபிரசவம் ஏற்படுவதற்கான அபாயம் அல்லது குழந்தை இறந்தே பிறத்தல் என்பனவும் எப்ஜிஎம்முடனும் தொடர்புடையனவாகும்.

பல பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உளரீதியிலான மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். ‘சிறுவர்களால் இதற்கு சம்மதம் வழங்க முடியாது. இது சிறுவர் உரிமைக்கு எதிரான விடயமாகும்’ என்று பெர்னாண்டோபுள்ளே கூறினார். பெண் சட்ட ஆக்குநர்களைக் கொண்ட சில குழுக்களுடன் இணைந்து சுகாதார அமைச்சுடனும், நீதி அமைச்சுடனும் ஒன்றுபட்டு இந்த நடைமுறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இவர் ‘எங்களால் சில சாதகமான மாற்றங்களைக் கொண்டுவர முடியுமென நாம் எண்ணுகிறோம்’ என்று தெரிவித்தார்.

பாதிப்புக்குள்ளான பெண்கள் பெர்னாண்டோபுள்ளை மற்றும் அவரது சக குழுவினருடன்  கலந்துரையாடும் பொழுது இந்தியாவில் ஒரு மில்லியனாயும், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலும் வாழும் ஷியா முஸ்லிம் பிரிவின் ஒரு பகுதியான தாவூதி போராக்களுக்குள் இருக்கும் பாரிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தாம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

அறிக்கை சமர்ப்பிப்புக்கு உதவி செய்த சட்டத்தரணி ஏமிஸா டெகல் ‘ எப்ஜிஎம் க்கு எதிரான போராட்டத்தை, இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பரந்துபட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாகவே காண்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

‘இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்டும் இத்தீங்கு விளைவிக்கும் கலாசார நடைமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கான ஒரு பாதையை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்’. டெகல் மேலும் கூறுகையில் எப்ஜிஎம் இனைத் தடை செய்வதினூடாக பெண்களுக்கு அவர்களின் மகள்களை பாதுகாக்க உதவும் அதே நேரத்தில் இது பற்றிய கலந்துரையாடல்கள் மெதுவாக ஆரம்பிக்கத் தொடங்குவதன் ஊடாக சமூகத்தில் உள்ள பெரியவர்களினால் ஏற்படுத்தப்படும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் எனத் தான் கருதுவதாகக் தெரிவித்தார்.

fgm1.png

மாற்றமடையும் நடத்தை

பாத்திமா, எப்ஜிஎம் இனால் பாதிப்புக்குள்ளான ஒருவர். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அவர் தனது பெண்குறிமூலம் சிதைக்கப்பட்டிருப்பதை தனது இருபது வயதிலேயே கண்டறிந்தார். அவரும் தன்னுடைய வாக்குமூலத்தை எப்ஜிஎம் அறிக்கைக்காக சமர்பணம் செய்தவர் என்றரீதியில் இதனைப்பற்றி வெளிஆட்களிடம் கூறினார் என்ற காரணத்துக்காகவே தான் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கலாம் என்று கூறினார்.

பாத்திமா அடுத்த தலைமுறையின் சிறுமிகளுக்காக வெற்றிகரமாகப் பிரச்சாரம் செய்திருக்கின்றார்.

‘ஒவ்வொரு பிள்ளையும் என்பதுதான் எனது கரிசனையாக இருந்திருக்கின்றது. ஒரு பிள்ளையின்  வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதாகும். ஒரு பிள்ளையின் சிதைக்கப்படாத எதிர்காலம், ஒரு பிள்ளையின் எப்ஜிஎம் இன்  விளைவுகளற்ற ஒரு வாழ்க்கை – அது மிகவும் பாரியது.’ அவருடைய தாய் இஸ்மத் மிகவும் ஆதரவு அளிப்பவராக இருக்கிறார். அவருடைய காலப்பகுதியில் கத்னா என்பது ஒரு விழுமியம் என்பதுடன் கலந்துரையாடப்படுவதொன்றல்ல. ‘என்னால் அதற்கெதிராகப் பேச முடிந்திருக்கவில்லை. எனக்கு எந்தவொரு ஆதரவும் இருக்கவில்லை’ என்று அவர் கூறினார்.

கத்னா செய்யப்படுவதன் மூலம் பெண் பிள்ளைகள் சுத்தமும், நல்லொழுக்கமும் கொண்டவர்களாக மாறி விடுகிறார்கள் என அவரிடம் கூறப்பட்டது. ஆனால் பாத்திமாவுடனான கலந்துரையாடலின் பின்னர் அவரின் கண்ணோட்டம் மாறிவிட்டது. மேலும் ‘செயற்படுவது மனம்தான். உடல் அல்ல என்பதனை அறிந்து கொள்ளும் வகையில் நான் எனது பிள்ளைகளை வளர்த்துள்ளேன்.’ என்றார்.

தன்னுடைய தலைமுறையோடு எப்ஜிஎம் இன் வலியும், இழிவான நடத்துகையும் நிறுத்தப்பட வேண்டும் என்று நாகியாவும் தீர்மானித்துள்ளார். அவரும், அவருடைய கணவரும் தங்களது மகளுக்கு அடையாளரீதியாகக் கூட, ‘பட்டர் கத்தி’ சடங்கு அவசியமில்லை என்று தீர்மானித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து ஏற்பட்ட பாரிய அழுத்தத்தை எதிர் கொண்டனர்.

‘எனக்கு நடந்தது பற்றி என்னால் கோபப்பட முடிந்தளவு என் பெற்றோர் மீது கோபப்பட முடியாது. ஏனென்றால் அவர்கள் காலாகாலமாக பின்பற்றி வந்த நடைமுறைகளேயே பின்பற்றினார்கள்’ என்று கூறினார். ‘இது எவ்வளவு பாரதூரமானது என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் எங்களுக்குத் தெரியும். தன்சீமின் முகத்தைப் பார்த்து சமூக அழுத்தத்தின் காரணமாக நான் இதனை அவளுக்குச் செய்தேன்  என்று கூறுவதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.’

பிரசுரம்:தொம்சன் ரொய்ட்டர்ஸ் பவுண்டேசன் – ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது:-

http://globaltamilnews.net/archives/51357

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

என்ன மதச்சடங்கோ தெரியவில்லை. இதில் ஏதாவது நன்மையிருந்தால்  அவர்கள் வயதுவரும்போது செய்துகொள்ளுவார்கள்தானே. சிறுமிகளையும் சிறுவர்களையும் கொடுமைப்படுத்துவது 21ம் நூற்றாண்டிலும் மதத்தின் பெயரால் தொடர்வதை கற்றறிந்த குமுகாயம் அனுமதித்தலாகாது.  அதனை நீக்குவதூடாக பெண்ணின் உடலைமட்டுமல்ல அவளது உணர்வையும் சிதைத்துவிடுதல் சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் காட்டுமிராண்டித்தனமான ஒர் பழக்கம். 
"ஒஸ்தி மாமி" எனப்படும் பெண்களே இலங்கையில் இவற்றை செய்கின்றார்கள்

2 நாட்களுக்கு முன்பு அல் ஜசீராவில்  வந்த கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. 

 

http://www.aljazeera.com/indepth/opinion/fgm-sri-lanka-nick-171218122855118.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.